
இது வேற மாதிரி
எல்லோர் கண்களும் அவர்கள் மேலயே இருந்தது. ஒன்றாய் வந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்த நானும் அவர்கள் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஒட்டி உரசாமல் காற்று நுழையும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அந்த பெண் தலையில் துப்பட்டா சுற்றப்பட வில்லை. இடைவெளியில் மட்டும் இரண்டு வார்த்தைகள் மற்றும் ஒரு புன்னகையினை பகிர்ந்துக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாதி கூட புரிந்து விடும் போலிருந்தது. இவர்கள் கதை தான் புரியவில்லை. திரையரங்கு கலாச்சாரம் தெரியாத அப்பாவி கிளிகள் போல.இவர்கள் எப்பவும் இப்படி தான். எனது கல்லூரி கடைசி ஆண்டின் பொழுது இவர்கள் பள்ளியின் பால் வாசம் மாறாமல் கல்லூரியில் கால் எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்த சில நாட்களிலியே இவர்கள் ஐந்து வருட காதல் கல்லூரி முழுவதிற்கும் தெரிந்த ஒரு விஷயமாக...









