
ஒரு விஞ்ஞானியின் சீற்றம்
உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலைகள் தாக்குதலின் பொழுது தான் அவரது பேச்சைத் தீவிரமாக கவனிக்கத் தொடங்கினர் என நினைக்கிறேன். ஈரோடு விஞ்ஞானி, வால்பையனின் அண்ணன் என அறியப்பட்டவரின் அவசரம்டா என்ற வலைத்தளத்தில் உள்ள இந்தக் காணொளி மிகவும் பிரசித்தம் (பார்க்காதவர்கள்.. பார்த்து விடவும்). சும்மாதான்டா, கல்கிடா, அவசரம்டா, அவசரம்டா1, அவசரம்டா2, அவசரம்டா3, டாப் சேர் (Top Chair), கூகிள...
















