
போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review
ஒருவனின் பழிவாங்கும் உணர்வு, சம்பந்தமே இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. யாரோ ஒருவன், முன்னால் ரெளடி தனாவின் மகனைக் கொன்றுவிட, காவல்துறையினர்தான் அவனைக் கொன்று விடுவதாகத் தனா தவறாக நினைத்துக் கொள்கிறான். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் வெஞ்சினத்துடன் தேடித் தேடிக் கொல்வதுதான் போலீஸ் ஃபேமிலியின் கதை.தனாவாகப் பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான அனைவரது குடும்பத்தையும் கொன்றே தீருவது என்று ஆவேசமாக உள்ளார். அப்படி சிலரைக் கொன்றதும், வலியே இல்லாமல் இறந்து விடுவார்கள் எனக் குடும்பத்தாரை மட்டும் கொல்ல ஆணையிடுகிறார். ஏட்டு சுரேஷாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் காதல் சுகுமார். அவ்வளவு கனமான பாத்திரம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைத் தருமளவிற்கு சுகுமார் அனுகூலமான நடிப்பை வழங்கவில்லை. அனிதா எனும் கதாநாயகி...
















