
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது. ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றிப் படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், பரசுராம் ஜெயந்தான இன்று, “மகா அவதார் பரசுராம்” எனும் பிரம்மாண்டமான மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது.

இந்தப் படம் டிசம்பர் 2027-இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது லட்சியமான “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்”-ஐ அறிவித்து, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த யுனிவர்ஸின் அடுத்த குறிப்பிடத்தக்க படியாக மகா அவதார் பரசுராம் உருவாகிறது. இது பிரம்மாண்டமான மற்றும் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கும் எனத் தெரிகிறது.
அனிமேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சினிமா பயணம், அதிநவீன தொழில்நுட்பத்தையும் நமது பண்பாட்டு வேர்களின் செழுமையையும் இணைத்துப் புதிய தலைமுறையினருக்கு விஷ்ணு அவதாரங்களின் காலமற்ற புராணக் கதைகளை உயிர்ப்புடன் கொண்டு வரும். ஏற்கனவே உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம், சக்திவாய்ந்த, வேரூன்றிய மற்றும் காட்சி ரீதியாக அற்புதமான சினிமாவை வழங்குவதில், ஹோம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து முன்னேறுவதற்கான மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.


