Shadow

Tag: Sathish S2

“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்

“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்

இது புதிது, சமூகம்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும். சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படு...
கருப்பு விமர்சனம் | Karuppu review

கருப்பு விமர்சனம் | Karuppu review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும். பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து பெற பேபிகண்ணனின் உதவியை நாடிச் சிக்கிக் கொள்கின்றனர். நான்கு மாதமாகியும் நகைகள் கிடைத்தப்பாடில்லை. கருப்புக்கு மிளகாய் அரைத்துப் பூசி நியாயம் வேண்டுகிறார் பினுவின் தந்தையாக நடித்துள்ள இந்திரன்ஸ். பினுவாக நடித்துள்ள அனகா மாயா ரவியும், இந்திரன்ஸும், தங்களது நடிப்பால் ...
இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana

இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana

OTT, சினிமா, திரைத் துளி
'வடசென்னை 2' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி அன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்துத் தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில், தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாகப் பதிலளித்து, இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்தப் பரபரப்பான அறிவிப்பைக் கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலகப் பயணத்தை பற்றிய உரையாடல் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றது. வடசென்னை பட...
29* விமர்சனம் | 29 Tamil movie review

29* விமர்சனம் | 29 Tamil movie review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை. இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் (5), கூதிர் காற்று, அறுந்த காற்றாடி (6), கவிழ்த்துப் போட்டா ரோஜாக்கள் (7), காதல் மனசின் அதிகபிரசங்கித்தனம் (8), நெருப்பின் நடனம் (9), சான்றோன் எனக் கேட்ட காதலி (10) என்பனவே அவ்வத்தியாயங்களுக்கு ரத்ன குமாரிட்ட தலைப்புகளாகும். அயோத்தி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரீத்தி அஸ்ரானி, 21 வயது பெண் விஜியாக இப்படத்திலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். The Wo...
சேயோன் படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்

சேயோன் படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்

சினிமா, திரைத் துளி
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் அன்று, அவர் 'சேயோன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.பாக்யஸ்ரீ போர்ஸை ‘சேயோன்’ குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்று மகிழ்வதுடன், இத்திறமைமிக்க நடிகை இந்த விறுவிறுப்பான திரைப்படத்தின் ஓர் அங்கமாக இணைந்திருப்பதால், படக்குழுவினர் ஒரு உற்சாகமான ...
29* – தன்னை யாரென உணர்தல்

29* – தன்னை யாரென உணர்தல்

சினிமா, திரைச் செய்தி
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் '29' திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்தியேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், "இந்தப் படத்தின் கதை காதலைப் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்தக் கதை என்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டது. இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலைப் பேசும் படைப்பாக '29' இருக்கும். தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்...
பரசுராம் ஜெயந்தியில் “மகா அவதார் பரசுராம்” அறிவிப்பு

பரசுராம் ஜெயந்தியில் “மகா அவதார் பரசுராம்” அறிவிப்பு

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது. ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றிப் படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், பரசுராம் ஜெயந்தான இன்று, "மகா அவதார் பரசுராம்" எனும் பிரம்மாண்டமான மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது.இந்தப் படம் டிசம்பர் 2027-இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது லட்சியமான "மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்"-ஐ அறிவித்து, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த யுனிவர்ஸின் அடுத்த குறிப்பிடத்தக்க படியாக மகா அவதார் பரசுராம் உரு...
“ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை” – கமல்ஹாசன்

“ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை” – கமல்ஹாசன்

அரசியல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்...
வடம் விமர்சனம் | Vadam review

வடம் விமர்சனம் | Vadam review

சினிமா, திரை விமர்சனம்
இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை. வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் அதைப் பிடித்து அடக்க வேண்டும். இது காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையேயான போட்டியாகக் கருதப்படுகிறது. அடக்கவே முடியாத காளைகளை வளர்ப்பதைக் கெளரவமாகவும் வீரமாகவும் கருதுபவர் ரத்தினவேல். அவரால் விரட்டி விடப்பட்ட, ஒற்றைக் கண் காளைக் கன்றைத் தன் அன்பாலும் பயிற்சியாலும், யாராலும் அடக்க முடியாத காளையாகப் மாற்றி விடுகிறார் வெற்றிவ...
டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம்

டெக்ஸ்லா – பிரம்மாண்ட தொடக்கம்

சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய் - சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் வரவுள்ள 'டெக்ஸ்லா' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தில், ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் தயாராகும் இந்தத் திரைப்படத்தைக் கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணை தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோ காணொளி வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் அதிகாரப்பூர்வமான தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான திரு. சீமான், திருமதி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத்,...
வடம் | ஏரும் தெய்வம் எருதும் தெய்வம் | விமல் – நட்டி

வடம் | ஏரும் தெய்வம் எருதும் தெய்வம் | விமல் – நட்டி

சினிமா, திரைச் செய்தி
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர், ''நான் இந்தத் துறைக்குப் புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னைச் சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டைப் பற்றிச் சொன்னார். அது எங்களுக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாகச் சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையைச் சொன்னாரோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்த...
வடம் – Rural sports entertainer

வடம் – Rural sports entertainer

சினிமா, திரைச் செய்தி
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கேந்திரன், ''கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன். அப்போது அவர், ‘நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா?’ என்றார். ‘நான் நிச்சயமாக எடுக்கிறேன்’ என்று சொன்னவுடன் அவரும், அவரும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். இப்படத்த...
Couple Friendly விமர்சனம்

Couple Friendly விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எதிர்பாராத் தருணத்தில் வீசும் குளிர் தென்றலை அனுபவித்த உணர்வைத் தருகிறது இப்படம். ஷிவாக்கும் மித்ராவுக்கும் இடையேயான நட்பார்ந்த காதலைப் பார்வையாளர்களுக்குக் கவித்துவமாகக் கடத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் நிலையாமையைக் குறித்தும், நாளையென ஒன்றில்லை என்பதாகக் கருதி இன்றே வாழ்வைக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் படம் அழுத்தமாகப் பதிந்து அசரடிக்கிறது. தெலுங்குப் படத்தின் டப்பிங் போலிருக்கே என்ற எண்ணத்தை, ஓரிரு காட்சிகளுக்குள் மறையச் செய்து, படம் நம்மை அலேக்காக உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த மாயத்தைப் போட்டி போட்டுக் கொண்டு செய்துள்ளனர் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனும். கவிதை போல ரசித்து ரசித்து திரைச்சட்டகத்தை (frames) வைத்துள்ளார் தினேஷ். படத்தின் இயக்குநரான அஷ்வின் சந்திரசேகரும் ஒளிப்பதிவாளர் என்பதால், படம் ஒளிப்பதிவு ரீதியாக மிகவும் நே...
“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ்

“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ''ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். கூலி படத்திற்குப் பிறகு, ஊடகங்களைச் சந்தித்துப் பேசவேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களைச் சந்திக்கிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களைச் சந்திக்கிறேன். 'கூலி' திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது. இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வசூல் பற்றி நான் பேச வ...
இந்திரா விமர்சனம் | Indra review

இந்திரா விமர்சனம் | Indra review

சினிமா, திரை விமர்சனம்
குடித்து விட்டு போலீஸ் ஜீப்பினை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதால், இடைக்கால பணி நீக்கத்தில் உள்ளார் காவல்துறை அதிகாரியான இந்திரா. குடிப்பழக்கம் அதிகமானதால் கண் பார்வையையும் இழந்து விடுகிறார் இந்திரா. அவரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்ளும் அவரது காதல் மனைவி கயல் பூட்டிய வீட்டிற்குள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். வேலை, கண் பார்வை, காதல் மனைவி என அனைத்தையும் இழந்து வேதனையில் வாடும் கோபக்கார இந்திரா கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி கைக்கூடியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நாயகியாகக் கயலெனும் பாத்திரத்தில் மெஹ்ரீன் பிர்சாடா நடித்துள்ளார். குடிகார கணவனிடம் பாராமுகமாக இருப்பதும், கண்பார்வை இழந்த கணவனை அக்கறையாகப் பார்த்துக் கொள்வதும் எனச் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ-பேக்கில், வேலைக்காரப் பெண் மதியாக அனிகா நடித்துள்ளா...