
காலத்தின் மழையில் நனைகிறோம்
கொட்டும் மழையில்
குளிரும் நிலையில்
இரவு பிறந்து
பகல் மரிக்கும்
வேளையில்
தான் நிற்கும் இடத்திலிருந்து
எதிர்த்திசையில்
வந்துகொண்டு இருக்கும்
ஒவ்வொரு பேருந்தாய்
பார்த்துக்கொண்டே எவ்வளவு
நேரம் கழித்தாரோ தெரியவில்லை ...... !கையைக் காட்டி நிறுத்தினாலும்
தன்னுடன் காத்திருந்தோர்
வேகமாக ஓடி ஏறிக்கொண்டதும்
அவரை மட்டும் தனிமைப்படுத்தி
விட்டு சென்றுகொண்டே இருக்கின்றார்கள்
அதுவும் ஏனோ ?அவர் ஏறி இறங்க
நேரம் அதிகமாகும்
என்பதுதானே உங்கள்
கவலை
உங்களுக்கும் இது பிரதிபலிக்கும்
பின்னொருநாளில்
ஓய்வூத்தியத்தைப் பெற
நாட்களை எண்ணிக்கொண்டு
இருக்கும்பொழுதுநீயும் பேருந்திற்கு
காத்துக்கொண்டிருக்கும் பொழுதுநடக்கமுடியாமல் நாற்காலியில்
நாட்களை நகர்த்தும் பொழுதுவீட்டில் வெந்நீர் கேட்டு
பல நிமிடங்கள் கழித்துக்
கிடைக்கும்பொழுது
கழிவறைக்கு செல்ல
பிறரி...












