Shadow

சினிமா

திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

திரிசங்கு சொர்க்கத்திலிருந்து மீண்ட ராஜா

சினிமா, திரைத் துளி
“12 வருடம் திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தேன். ரீமேக் படம் மட்டுமே எடுக்கிறேன் எனச் சொன்னாங்க. நான் நிஜமாவே படம் எடுக்கிறேனா? நான் இயகுநர்தானா என்றெல்லாம் சந்தேகமாக இருந்தது” என்று மிகவும் கலங்கிப் போயிருந்ததாகச் சொன்னார் மோகன் ராஜா. “எங்கண்ணனோட திறமை என்னென்னு எங்க குடும்பத்தினருக்கே மட்டுமே தெரிந்த விஷயம் இப்ப அனைவருக்கும் தெரிந்திருக்கு. இந்த வெற்றி எனக்கு ஆச்சரியம் தரலை. அதற்காக அவர் எப்படிலாம் உழைச்சாருன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும். இந்தக் கதை காம்ப்ளக்ஸ்ன்னா மைன்ட் கேம். நான், எங்கண்ணன் என்பதால் ஒத்துக்கிட்டேன். ஆனா கணேஷ் வெங்கட்ராம், ராகுல், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண் எல்லாம் எங்கண்ணனை நம்பி வந்தாங்க. இப்ப எங்க குடும்பத்தில் ஒருத்தராகிட்டாங்க. தம்பி ராமையா சார் கலக்கிட்டார். அவர் நடிச்ச கேரக்டருக்கு ரெஃபரன்ஸே கிடையாது. ஆனா ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிட்டார். சுரேஷ் சார், பாலா சார் ...
சகோதரர்களின் ஜெயம்

சகோதரர்களின் ஜெயம்

சினிமா, திரைத் துளி
தனி ஒருவன் ஈட்டிய வெற்றியில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர் ஜெயம் சகோதரர்கள். தனி ஒருவனின் வெற்றிக்கு முன்பே, ஜெயம் ராஜா தன் பெயரை மோகன் ராஜா என மாற்றிக் கொண்டார். இப்போது, தனி ஒருவனின் வெற்றிக்குப் பின்பு, ஜெயம் ரவியும் தன் பெயரை ‘தனி ஒருவன் ரவி’ என மாற்றிக் கொள்வாரா என்ற கேள்விக்கு, “ஜெயம் என்பது என் விசிட்டிங் கார்ட். எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கடைசி வரை நான் ஜெயம் ரவிதான். ஆனால் தனி ஒருவனுக்கு என் நெஞ்சில் இடம் கொடுத்துள்ளேன். தனி ஒருவன் - என் நெஞ்சில் பச்சை குத்தப்பட்ட முத்திரை போன்றது” என்றார் ஜெயம் ரவி. “மோகன் ராஜா என நான் பெயர் மாத்தியதற்கு நிறைய பேர் திட்டினாங்க. ஜெயம் ராஜா என்ற ப்ராண்ட் நேமை எப்படி நீங்க மாத்தலாம்னு கேட்டாங்க. எனக்குள்ள சினிமாவைத் திணிச்சது என் அப்பா. அவருக்கான ட்ரிப்யூட்தான் இந்தப் படம். இந்தப் படத்தில் அவர் பெயர் வ்ர்ணும்னு நினைச்சேன். ...
பாரதிதாசன்

பாரதிதாசன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம். இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார். பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார். இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்கிற கவிதை மிகவும் பிரபலமானது. 1937இல் முதன் முதலாக 'பாலாமணி' என்கிற படத்திற்குப் பாடல்கள் இயற்றினார். பிறகு 1940இல் 'காளமேகம்' என்கிற படத்தின் வசனம் - பாடல்கள் இவரால் எழுதப்பட்டது. எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத...
உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்

உனக்கென்ன வேணும் சொல்லு – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> தீபக் பரமேஷ் >> ஜாக்குலின் பிரகாஷ் >> குணாலன் மோகன் >> மோர்ணா அனிதா ரெட்டி >> 'மைம்' கோபிதொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு நிறுவனம் – ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் >> தயாரிப்பு - ஷண்முகசுந்தரம் , K முகமது யாசின் >> இயக்கம் – ஸ்ரீநாத் ராமலிங்கம் >> கதை – M.R.K. & ஸ்ரீநாத் ராமலிங்கம் >> ஒளிப்பதிவு – மணிஷ் மூர்த்தி >> படத்தொகுப்பு – ஹரி ஹரன் >> இசை – சிவ சரவணன் >> கலை - C.H.மோகன்ஜி...
சீரியஸான ஹாரர் படம்

சீரியஸான ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
“இலங்கையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து, சிங்கப்பூரில் வேலை செய்து, இப்போ சென்னையில் படமெடுத்துள்ளார் ஸ்ரீநாத். இப்ப வர படமெல்லாம் காமெடி பேய்ப்படமாகத்தான் இருக்கு. ஆனா ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ சீரியஸான ஹாரர் படம். இவர்ட்ட இருந்து இப்படியொரு படம் எதிர்பார்க்கவே இல்லை” என்றார் பிரபு வெங்கட், மேலும், “நேத்து நானும், ரம்யாவும், என் பொண்ணு ஷிவானியும் படம் பார்த்தோம். காதை அடிக்கடி பயத்தில் மூடிக்கிட்டாங்க. ஹாரர் படத்துக்கு முக்கியமானது இசை. சிவசரவணன் கலக்கியுள்ளார்” என்றார் வெங்கட் பிரபு. படத்தொகுப்பாளர் ஹரிஹரன், இசையமைப்பாளர் சிவரசவணன், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என பலருக்கும் இதுவே முதல் படம். ஷண்முகசுந்தரம் தயாரித்துள்ள இப்படத்தை, ஆரா பிலிம்ஸ் மகேஷ் வெளியிடுகிறார். தொடர்ந்து நல்ல படங்களை வெளியிடவும் தயாராகயிருப்பதாக அறிவித்தார். விநாயக சதுர்த்திக்கு படம் வெளிவர உள்ளதென்ற மகிழ்ச்சி...
அதிபர் விமர்சனம்

அதிபர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்க...
தனி ஒருவன் விமர்சனம்

தனி ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை. ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் செய்திகளுக்குப் பின்னால் வேறு உண்மை இருக்கக்கூடும் என்ற புரிதலும், ஒவ்வொரு பெரிய குற்றத்துக்கும் முன் ஒரு சிறு குற்றமிருக்கும் என்ற உண்மையும் அவருக்குப் புரிய வருகிறது. ஆக, 100 குற்றவாளிகளை உருவாக்கும் ஒரே ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதுதான் அவர் வாழ்வின் ஒரே லட்சியம். சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத...
பாபநாசம் சிவன்

பாபநாசம் சிவன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. 'தாராபுரம் தாம்பரம் உன் தலையில் கனகாம்பரம்' என்பது போன்ற கவித்துவம் நிறைந்த பாடல்களெல்லாம் இவருக்கு எழுத வராது. தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் ...
வண்ண ஜிகினா விமர்சனம்

வண்ண ஜிகினா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கருப்பாய் இருக்கிறோமென்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் பாவாடை, தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள ஃபேஸ்புக்கில் போலியான அடையாளங்களுடன் கிஷோர் குமார் என்ற பெயரில் ஃப்ரொஃபைல் ஒன்றைத் தொடங்குகிறான். அவனது எண்ணம் ஈடேறி அவனுக்கொரு காதலி கிடைத்தாளா இல்லையா என்பதுதான் வண்ண ஜிகினாவின் கதை. கால் டாக்ஸி ட்ரைவர் பாவாடையாக விஜய் வசந்த். கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏஞ்சல் பிரியாவாக சானியா தாரா. காரணமேயின்றிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். வில்லனே தேவைப்படாத கதையில், கொதிக்கும் கொப்பறையில் தள்ளியது போன்ற ரியாக்ஷனுடன் படம் நெடுகே பொருந்தாமல் வருகிறார் ஆன்சன் பால். படம் எதைப் பற்றிப் பேச விழைகிறதோ, அதற்கு எதிர் திசையில் சென்று முடிகிறது. ஆனால் சுபமாய் முடிவது ஆறுதலான விஷயம். ‘கருப்பாக உள்ளவர்கள், சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர்’ என்பதுதான் படம் சொல்ல வ...
வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மே 5, 1959இல் வெளியான இப்படம் ஆகஸ்ட் 21, 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. சிவாஜியின் வீர கர்ஜனையை பெரிய திரையில் காணும் வாய்ப்பை மீண்டும் நல்கியுள்ளனர் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு. கப்பம் கட்ட மறுத்ததோடு, கொள்ளையில் ஈடுபட்ட தனது அமைச்சரையும் ஒப்படைக்க மறுத்து வெள்ளையரின் கோபத்துக்கு ஆளாகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். போர் மூள்கிறது. வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முதல் வீரன் கட்டபொம்மன் என்ற வாய்ஸ் ஓவரோடு படம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுத் திரிபைக் கணக்கில் எடுக்காமல், படத்தின் கதையை சக்தி கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புதினமாகப் பாவித்தால் படம் மகத்தான காவியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட கர்ணன், ஆயிரத்தின் ஒருவன் போல் இப்படம் தொடக்கம் முதல் கடைசி வரை ஈர்க்கவில்லை. காரணம், படம் ஒற்றை கருவை நோக்கமாகக் கொண்டு பயணிக்...
ஐ ஆம் ஜிகினா.!

ஐ ஆம் ஜிகினா.!

சினிமா, திரைத் துளி
கருப்பாக உள்ளவர்கள் சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர். இதைக் குறையாக நினைத்து, போலி அடையாளம் மூலம் மற்றவரைக் கவர நினைக்கும் இளைஞன் ஒருவனைப் பற்றியக் கதை தான் ஜிகினா. 'ஜிகினா' திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் நிறுவனம் மூலம் வெளியிட இருப்பதே எனக்கு மிகப் பெருமை. அதற்காக லிங்கு சாமி சாருக்கும், போஸ் சாருக்கும் நன்றிகள் பல. என்னுடையக் கதா பாத்திரத்தை இயக்குநர் ரவி நந்தா பெரியசாமி மிக அருமையாக வடிவமைத்துள்ளார். படம் பார்த்த பின்னர், அரங்கில் இருந்து வெளி வரும் ரசிகர்களிடையே என்னுடைய கதாப்பாத்திரம் பெரிய அளவுக்கு பேசப்படும் என்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கையோடு இருக்கிறேன். வளர்ந்து வரும் என்னைப் போன்ற நடிகர்களுக்கு கிடைக்கும் இத்தகையக் கதாப்பாத்திரம் மிகப்...
செல்வந்தன் விமர்சனம்

செல்வந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரடியாக தமிழில் வெளிவந்திருக்கும் மகேஷ் பாபுவின் முதல் திரைப்படம் இது. கோடீஸ்வரரான ரவிகாந்தின் ஒரே மகன் ஹர்ஷா. தனது சொந்த ஊரான தேவரக்கோட்டைக்குச் சென்று, அவ்வூரைத் தத்தெடுத்துக் கொள்கிறான். முன்பே அவ்வூரைத் தத்தெடுத்துக் கொண்ட மினிஸ்டர் வெங்கட் ரத்னமும், அவர் தம்பி சசியும், ஹர்ஷாவின் இந்தச் செயலால் கோபம் கொள்கின்றனர். கடைசியில் ஊர் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் படத்தின் கதை. ஹர்ஷாவாக மிகவும் அசால்ட்டாக நடித்துள்ளார் மகேஷ் பாபு. அவர் முகத்தில் ஒரு பேரமைதி நிலவுகிறது. ஆட்களைத் தூக்கிப் போட்டு துவம்சம் செய்யும்போது கூட அவர் முகத்தில் உக்கிரம் காணப்படுவதில்லை. அடியாட்கள் பவனி வர மாந்தோப்புக்குள் அவர் சைக்கிளில் நுழையும் காட்சி செம மாஸ். கோடீஸ்வரரின் மகனாகக் கச்சிதமாக கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். தன் கிராமத்து மீது மிகவும் அபிமானமுள்ள சாருவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மிகவும் அழக...