Shadow

சினிமா

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

சினிமா, திரைச் செய்தி
நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி. “திரைப்படக் கல்லூரியில் இருந்துவரும் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தை வைத்து இயக்குவதுதான் கனவாக இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும், அவர் அலுவலகம் இருக்கும் ராஜாபாதர் தெருதான் அவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கும். திரைப்பட கல்லூர் ம...
ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே நடித்திருந்தார். படத்தின் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன். இவர் பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைக்காலஜிக்கல் த்ரில்லர்’ படம் என்பதால், படத்தின் பின்னணி இசையும் இணைந்து படத்தில் கதை சொல்ல வேண்டும். அதை அற்புதமாகச் செய்துள்ளாராம் எல்.வி.கணேசன். இப்படம் வெளிவந்த பிறகு, எல்.வி.கண...
“பேய் இருக்கு!!”

“பேய் இருக்கு!!”

சினிமா, திரைச் செய்தி
சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர். பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை பலதரப்பட்ட பின்னணியுடையடவர்களுக்கு மின்னஞ்சல் செய்து, அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் “இருக்கு ஆனா இல்ல” படத்தின் இயக்குநர் கே.எம்.சரவணனைத் தேர்வு செய்துள்ளனர். 100 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயகி மனிஷா. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஷமீரையும் அப்படித...
ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

சினிமா, திரைச் செய்தி
ஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு. கன்னடத்தில் 38 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதற்படம் “பிரம்மன்”. கமல ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மம்மூட்டி என பலரை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர் இவர்தான். வாய்ப்புத் தேடிய இயக்குநர் சாக்ரடீஸின் கதை பிடித்துவிட, “ஹீரோ யார்” எனக் கேட்டுள்ளார். “சசிக்குமார்.” “அவரது கால்ஷீட் வாங்கிட்டு வாங்க. அதுவரை வெயிட் பண்றேன்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மஞ்சு. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி போன்ற படங்களில் பணியாற்றியிருந்த இயக்குநர் சாக்ரடீஸுக்கு, சசிக்குமாரைச் சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை. சசிக்குமாரின் ஆசிரியர்கள் இருவரை தூது விட்டிருக்கிறார். எடிட்டர் ராஜா முகமதுவும் சசிக்குமாரிடம் பேச 2 வருடக் காத்திருப்பு ஒருவழியாக முடிந்துள்ளது. “சசிக்குமார் ஒரு இரும்புக் கோட்டை போல! மற்றவர்களுடன...
“என் மூலதனம்” – கமல்

“என் மூலதனம்” – கமல்

சினிமா, திரைச் செய்தி
‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். “நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த ஒரு நடிகைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு லகர, ளகர உச்சரிப்பு சரியா வராது. ஆனா ஆண்ட்ரியா அச்சரம் பிசகாம உச்சரிக்கிறாங்க. முதல்முறையாக ஒரு ஆர்டிஸ்டுடன் வேலை செய்த திருப்தி கிடைத்தது. ஷூட்டிங்கின் பொழுது மொபைலில் ஏதோ கேட்டுட்டே இருப்பாங்க. என்னன்னு கேட்டப...
அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

சினிமா, திரைத் துளி
யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற "பேண்ட் பஜா பராத்" தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. பிரபல தெலுங்கு ஹீரோவான நானி நேரடியாக தமிழில் நடிக்கும் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் இசை அமைப்பாளர் தரன் குமார் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென்கிறார். படத்தின் இயக்குநரும் தன் நெருங்கிய நண்பருமான கோகுல் கிருஷ்ணா படத்தில் தமிழ் வாசம் தூக்கலாய் இருக்க வேண்டும் என்று கூறியதால் மூலப் படத்தை பார்க்காமல், அதன் பாடல்களைக் கேட்காமல் கதையை மட்டும் வைத்து புதிதாய் தமிழுக்கென பாடல்களை உருவாக்கியதாக தரன் குமார் நிருபர்களிடம் கூறினார். எங்களது கூட...
கணவரைத் தேடும் நயன்தாரா

கணவரைத் தேடும் நயன்தாரா

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'கஹானி' திரைப்படம் தமிழில் "நீ எங்கே என் அன்பே!" என்ற பெயரில் உருவாகி வருகிறது. காணாமல் போன தன் கணவனைத் தேடி நகருக்கு வரும் ஓர் அபலை பெண்னைச் சுற்றி நடைபெறும் பரபரப்பான இந்தக் கதையில் நயன்தாரா கதை நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று பெரும் புகழை பெற்ற இந்த பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகு ஊட்டி உள்ளார். சுவாரசியமான திருப்பங்களும், வித்தியாசமான கதைக் களமும் கொண்ட இந்தப் படம் இதன் ஹிந்தி பதிப்பான 'கஹானி' படத்துக்கு இணையாக பெயரும் புகழும் ஈட்டும் என இந்தப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முளா நம்பிக்கை தெரிவித்தார். வயா காம் 18 motion pictures தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெயிலர் வெளியீடு வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது....
கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

சினிமா, திரைத் துளி
கூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான் "கள்ளப்படம்" . அறிமுக இயக்குநர் வடிவேல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆச்சர்யமான ஒரு புதுமையை செய்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகியோர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களில் அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்களே நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வேடத்தில் படத்தின் இயக்குனர் வடிவேலுவும், ஒளிப்பதிவாளர் வேடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஶ்ரீராம் சந்தோஷும், இசையமைப்பாளர் வேடத்தில் படத்தின் இசையமைப்பாளரான "கே" வும், எடிட்டர் வேடத்தில் படத்தின் எடிட்டரான கௌகினும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக லஷ்மி ப்ரியா நடிக்கிறார். "ஸ்க்ரிப்ட் நன்றாக வந்திருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதை உணரலாம். முன்னேறணும் என ஆசைப்படுவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்யமு...
ஹலோ கோச்சடையான்

ஹலோ கோச்சடையான்

சினிமா, திரைத் துளி
கோச்சடையான் ரிலீஸ் தேதி சொன்னாலும் சொன்னார்கள்.. ஆளாளுக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் பிரபல செல் போன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்பன் மொபைல் ரஜினி ரசிகர்களுக்காக கோச்சடையான் ஸ்பெஷல் எடிஷன் போன்களை சந்தைக்கு கொண்டுவருகிறார்கள். பத்து லட்சம் போன்களை தங்களுடைய 27000 அவுட்லெட் கடைகளின் மூலம் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோச்சடையான் முகமுடிகளும் கிடைக்கும். மொபைல் வெளியிடப்படும் முன், விளம்பரத்திற்காக தென்னிந்திய ரேடியோ ஸ்டேஷன்களில் 60000 நொடிகளையும், டி.வி. சேனலில் 600 நொடிகளும் விளம்பரத்திற்காக வாங்கியுள்ளது கார்பன். அதே போல், அனைத்து மொழி தினசரிகளிலும் மூன்று முழுப் பக்கங்களுக்கு விளம்பரம் தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கார்பன் மொபைலின் இயக்குநரான திரு. சுதிர் ஹசிஜா செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்....
ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

சினிமா, திரைத் துளி
காலத்தை வென்ற பல காதல் படங்களைத் தயாரித்த பெருமைக்குரிய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்பான "ஆஹா கல்யாணம்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் முடிவடைந்தது. தெலுங்குத் திரையுலகின் பிரபல கதாநாயகனான நானி நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற வகையில் "ஆஹா கல்யாணம்" படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்து இழுக்கும் வகையில் இளமைத் துள்ளளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நானி. மேலும் படத்தின் நாயகி வாணியுடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். அவரது உற்சாகமும்  ஈடுபாடும் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்றார். “இயக்குநர் கோகுல் கிருஷ்ணா, எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு என்ன வேண்டுமோ, அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும்தான் அ...
காதல் டாக்டராகிறார் சந்தானம்

காதல் டாக்டராகிறார் சந்தானம்

சினிமா, திரைத் துளி
மனநல மருத்துவரான சந்தானம் தன்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினையை ஒருவரியில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார். அது பிடித்திருந்தால் மட்டுமே ட்ரீட்மென்ட் கொடுக்கும் வித்தியாசமான டாக்டர். "கண்ணா லட்டு திண்ண ஆசையா" சேது சொல்லும் ஒரு "டபுள் ட்ராக்" ஒன்லைனர் பிடித்துப் போக அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என களமிறங்கி சந்தானம் கலக்கும் காமெடி பட்டாசுதான் வாங்ஸ் விஷன் தயாரிக்கும் "வாலிபராஜா". “இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். ஹீரோவின் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா காட்சிகள் கலகலன்னு இருக்கும்ல. அதுதான் முழுப் படம்” என்கிறார் இயக்குநர். படத்தில் சந்தானத்தின் பஞ்சுக்கும் பஞ்சமில்லை. ‘உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’, ‘மாடு முன்னாடி ப...
“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா. "குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் "டேப்"டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்" என்றார். "என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள். அவருடைய உலக அறிவு பிரம்மிப்பூட்டுகிறது. என் பார்வையில் அவர் ஒரு சரித்திர பேராசிரியராகவே தோன்றுகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  ஆகியோருடன் நடிப்பதும், ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி.வி. motion pictures த...
பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
சைவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பொதுவாகவே படத்தின் தலைப்புக்கு மிகவும் மெனக்கெடுபவர் அவர். அது போலவே, தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார். பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசிலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் இட்டு ள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ' பாஷா' அறிமுகப் படத்திலேயே இயக்குநரை பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைத்து விட்டார். 'என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமன்று. அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுத்து விடுபவர். என்னுடைய சைவம் படத்திலும், அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் உள்ளது. அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க ...
கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, பெளத்த மடாலயத்தில் வந்து அமரும் புறாவொன்றினால் ஞானதோயம் பெறுகிறான். நால்வருக்கும் இருத்தலைவிட அடையாளத்தை(!?) மீட்டெடுப்பது முக்கியமாகப்படுகிறது (பசங்களுக்கு தாங்கள் ‘மெஸ்’ நடத்துவதால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வே போராட வைக்கிறது. மெஸ் அவர்களது அடையாளமன்று). எட்டு வருடங்களுக...
யாமிருக்க பயமே!

யாமிருக்க பயமே!

சினிமா, திரைத் துளி
  'பயம்' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் 'யாமிருக்க பயமே'. விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் 'யான்' படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் 'யாமிருக்க பயமே'. இயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப...