Shadow

இது புதிது

மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும். காதல் தோல்வியில் இருக்கும் சக்திவேலன், அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தற்கொலை செய்து கொள்ளாதீங்க என ஒரு மெசேஜ் வருகிறது. அனிதா என்ற பெண் அனுப்பியிருக்கும் அந்த மெசேஜை படித்து மேலும் அவரிடம் பேச, அனிதா ...
பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் - பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார். கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து விளையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கந்தசாமி. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் சார்பில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இடம் பிடிக்கிறார். கிட்டானின் இந்த சாதனைப் பயணம் எத்தகையது என்பதைப் பற்றிய படம்தான் பைசன் காளமாடன். கிட்டானின் குலதெய்வம் காளமாடன் ஆவார். சீறிப் பாயும் கிட்டானின் திறம்பட்ட விளையாட்டைச் ச...
டியூட் விமர்சனம் | Dude review

டியூட் விமர்சனம் | Dude review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"தாலி முக்கியமில்லையா?""இல்ல. அதுக்குப் பின்னாடி இருக்கிற பொண்ணோட மனசுதான் முக்கியம்." Z தலைமுறையினருக்கான ஒரு கொண்டாட்டமான படத்தில், புனிதமென சினிமா அடைகாத்து வந்த தாலி சென்ட்டிமென்ட்டைச் சுக்குநூறாக அறுத்தெறிந்து விட்டுள்ளார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படத்தின் முதல் காட்சியே, நாயகன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குப் சென்று கோபாவேசத்தில் யதேச்சையாக அவளது தாலியை அறுத்துவிடுகிறான். அவனை அடி வெளுத்து விடுகின்றனர். படம் இப்படி நகைச்சுவையாகத் தொடங்கினாலும், படம் மிக அழுத்தமாகத் தமிழ் சினிமா வியந்தோதி வந்த தாலி சென்ட்டிமென்ட்டை அடி வெளுத்துள்ளது. அந்த 7 நாட்கள் அம்பிகா, சின்ன தம்பி குஷ்பு, புதுப்பேட்டை சோனியா அகர்வால் என இந்த தாலி பல பெண்களைக் காவு வாங்கியுள்ளது. நாயகன் அணிவிக்கும் ஐடி கார்டைப் தாலியாகப் பாவித்துக் கண்ணில் ஒத்திக் கொள்ளும் முன்னாள் காதலி, கல்யாணத்திற்குப் பின...
டீசல் விமர்சனம் | Diesel review

டீசல் விமர்சனம் | Diesel review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பார்க்கிங், லப்பர் பந்து முதலிய வெற்றிப்படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்' ஆகும். இயக்குநர் சண்முகம் முத்துசாமி கச்சா எண்ணெய் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான விஷயங்களை விவாத்துள்ளர். சென்னை கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நாயகன் ஹரிஷ் கல்யாணும், அவரது வளர்ப்பு தந்தை சாய்குமாரும் கச்சா எண்ணெய் கடத்தல் தொழிலில் கிங்-பின்னாக இருக்கிறார்கள். அவர்களது ஆதிக்கத்தைப் பிடிக்காத இன்னொரு கோஷ்டி அந்தத் தொழிலைக் கைப்பற்ற காவலதிகாரி வினய் உதவியுடன் இயங்குகிறது. அதே நேரம் கார்ப்பரேட் முதலாளி ஒரு தனியார் துறைமுகம் ஒன்றை அமைக்க காய் நகர்த்துகிறார். இந்தச் சூழலில் மீனவர்கள் நிலை என்ன ஆனது, அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆனது, கார்ப்பரேட் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா போன்ற கேள்விகள...
Kantara: Chapter 1 விமர்சனம்

Kantara: Chapter 1 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது. காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, பாங்காரா தேசத்து துறைமுகத்தை வரிகளற்று அனைவருக்கும் திறந்துவிடுகிறான். அவனது செய்கையால் கோபப்படும் குலசேகரன் எனும் பாங்காரா மன்னன் (காந்தாராவில் கொல்லப்பட்டவரின் பேரன்), காந்தாராவைத் தீக்கிரைக்காகிறான். கடவுள்களால் பாதுகாக்கப்படும் காந்தாராவின் எதிர்வினைதான் படத்தின் முடிவு. கனகவதியாக ருக்மிணி...
இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA

Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA

ஆன்‌மிகம், இது புதிது, சமூகம்
“ஷரதோத்சவ்” எனும் இலையுதிர்காலத் திருவிழாவைச் சென்னையில் 47 ஆவது ஆண்டாகக் கொண்டாடுகிறது SMCA. நந்தனத்திலுள்ள மந்திரா கார்டனஸில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை இவ்விழா கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, முதல்முறையாகக் கிராமப்புற வங்காளம் போலவே வடிவமைக்கப்பட்ட குடில்களுக்கு மத்தியில் நவராத்திரியைச் சென்னையில் கொண்டாடுகின்றனர். சக்தியின் தேவி – துர்கா மாதாவை வணங்கித் தொடங்கப் பெறும் இந்த விழா, இசைக் கச்சேரிகள், புகழ்பெற்ற கலைஞர்களின் மேடை அரங்கேற்றங்கள், உணவுத் திருவிழா, பல்வேறு போட்டிகள், குலுக்கல் முறை பரிசுகள் என பிரம்மாண்டமாய் ஐந்து நாட்கள் நிகழ்கின்றன. பல்வேறு சிறப்புமிக்க வணிக அரங்குகளும் நிறுவப்பட்டுள்ளன. SMCA - நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகி...
பல்டி விமர்சனம்

பல்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...
காயல் விமர்சனம் | Kaayal review

காயல் விமர்சனம் | Kaayal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காயல் – காய்தல் – வாடுதல் திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை. காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது. தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவ...
பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

ஆன்‌மிகம், இது புதிது
என் மனதுக்குள் இருக்கும் நாராயணனே இந்த பிரபஞ்சமாகவும் வியாபித்து இருக்கிறார். முதலாழ்வார்கள் மூவராவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் 7 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலாப்பூரிலும் அவதரித்தவர்கள். இவர்களின் தாய் தந்தையர் பற்றிய குறிப்பு இல்லை. மூவருமே குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதல் மூன்று திருவந்தாதிகளை இவர்கள் படைத்தார்கள். ஆழமான தத்துவம், பக்தி நெறி மற்றும் இனிய தமிழால் இறைமையைப் போற்றியவர்கள். இவர்கள் மூவரையும் திருக்கோவிலுரில் இறைவன் இணைத்தார். அதன் பிறகு மூவரும் இணைந்தே பல திவ்விய தேசங்களுக்குச் சென்று பெருமானைப் பாடி மங்களாசாசனம் செய்தனர். திருக்கோவிலுரில், ஓரிரவு ஒரு வீட்டின் சிறு திண்ணையில் பொய்கையாழ்வார் ப...
மதராஸி விமர்சனம் | Madharaasi review

மதராஸி விமர்சனம் | Madharaasi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு. தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய 'கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)' இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் 'திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)' இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்...
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பணம் உறவுகளைப் பிணைத்து, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். காதல் திருமணம் புரிந்து கொண்டு, ஊரை விட்டு ஓடி வந்த காந்தி, மனைவிதான் உலகம் என வாழ்பவர். காந்தி தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி எவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் செல்கிறார். கதிரும் காந்தியும் சந்தித்துக் கொள்வதில் தொடங்கும் படம், கதிரின் வாழ்க்கையில் அச்சந்திப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு முடிகிறது. காட்சிரூபமாகக் கதைசொல்வதை விட வசனங்களின் மூலமே அனைத்தையும் சொல்லிவிடலாம் என்ற பாணியால், ஒரு ஃபீல்-குட் படத்திற்கான அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தும், படம் அதன் இலக்கை அடையத் தடுமாறியுள்ளது. ஒரு நல்ல ஐடியாவை எடுத்துக் கொண்டு, அதில் முழுத் திருப்தியுற்று, சுவாரசியமாகவோ நெகிழ்ச்சியாகவோ திரைக்கதைய...
Lokah Chapter 1: Chandra விமர்சனம்

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி நாச்சியப்பா கெளடாவிற்குச் சந்திரா மீது சந்தேகம் வருகிறது. மனித உடலுறுப்புகளை விற்கும் அமைப்பினர், சந்திராவையும் சன்னியையும் துரத்துகின்றனர். அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே படத்தின் முடிவு. இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கெளடாவாக சாண்டி மாஸ்டர் மிரட்டியுள்ளார்...
பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

பொய்கையாழ்வார் – அனேகனான ஏகனான ஓர் பரம்பொருள்

ஆன்‌மிகம், இது புதிது
ஒரு சாட்சியாக, பூமி, கடல், சூரியன் என அனைத்துமாக இருப்பது அவனே! முன்னொரு காலத்தில் ஒருநாள், திவ்விய பிரபந்த விளைநிலம் என்று சொல்லப்படும் திருக்கோவலூருக்குப் பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வாராகத் திகழும் பொய்கையாழ்வார் சென்றார். இரவு நேரமாகிவிட்டதால் ஓர் இல்லத்தின் முன்னிருந்த சிறிய திண்ணையில் படுத்துக்கொண்டார். சற்று நேரத்தில், பூதத்தாழ்வாரும் அங்கே வந்து சேர்ந்தார். ஒருவர் படுத்திருப்பதை அறிந்ததும், “எனக்கு இடமுண்டோ?” என்று கேட்டார். ‘இவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் வாருங்கள்’ என்று பொய்கையாழ்வார் எழுந்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கே வந்து, ‘எனக்கு இடமுண்டோ?’ என்று கேட்க ‘இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், நீரும் வாரும்’ என்று சொல்ல மூவரும் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஆழ்வார்கள் கோஷ்டிய...
வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"வசந்தத்திண்டே கனல் வழிகளில்" என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர்.நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் - P.கிருஷ்ண பிள்ளை கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 முதல் 1946 வரையாகும். சிறையில் இருந்தவாறே, தங்கம்மாவைக் காதலித்து மணம் புரிகிறார் P.கிருஷ்ண பிள்ளை. சாதி ஒடுக்குமுறை உச்சத்தைத் தொடும் ஒரு கிராமத்திற்குச் சென்று, மக்களை ஒருங்கிணைத்து அவர்களது உரிமையை மீட்கப் போராடுவதுதான் படத்தின் கதை. இக்கதையை மக்களுக்கு நினைவூட்டி, அனைத...