Shadow

கட்டுரை

யாவருக்குமான காமிக்ஸ்!

யாவருக்குமான காமிக்ஸ்!

கட்டுரை, புத்தகம்
பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம். ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர்.“ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் காமிக்ஸ்க்கு என தனியாக வச்சிருக்காங்க. உள்ள போனீங்கன்னா, காமிக்ஸ் படிச்சு தனியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குப் போனாலே மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதே போல், ஜப்பானிலும் 95% பேர் மாங்கா (ஜப்பானிய மொழியில் காமிக்ஸ்)-க்கு அடிமைகள். நம்மூர்ல எப்படி வாஷிங் மெஷின்க்கு பக்கத்தில் ந...
கலை உத்தியஸ்தர்

கலை உத்தியஸ்தர்

கட்டுரை, புத்தகம்
“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?” பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார். “ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?” “யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?” “யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?” சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார். “தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?” “ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?” “கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?” ‘பேராசானா?’ என யோசித்த ...
வேலா வளர்த்த தீ

வேலா வளர்த்த தீ

கட்டுரை, புத்தகம்
எழுத்தாளர் ஒருவர் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு ஒரு நாவலை எழுதினால், அதைப் படிப்பவன் கதி அதோகதிதான் போல! குற்றப் பரம்பரை நாவல் படிப்பவரின் அகம், புறம் இரண்டையும் பதற்றத்துக்கு உள்ளாக்கி விடுகிறது. கதைசொல்லியான வேல ராமமூர்த்தி, நாவல் தொடங்கிய சில பக்கங்களுக்குள்ளாகவே உங்களை கெதியாய்த் தயார்படுத்தி, தான் கொண்டு செல்ல விரும்பும் இடத்திற்குக் கொண்டு போய்விடுகிறார். வழியில் நிற்பதென்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை மறுக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாதளவுக்கு மிக நேர்த்தியாய் ஒரு வாழ்க்கைக்குள் உங்களைத் தூக்கிப் போட்டு விடுகிறார். இது சரியா தவறா என நிதானித்து யோசிக்க விடாமல் கடைசி பக்கம் வரை ஒரே மூச்சில் ஓட விடுகிறார். இருட்டுக்குள் ஓடும் அத்தகைய ஓட்டம்தான் அவர் வெளிச்சமிட்டுக் காட்டும் வாழ்க்கை முறை. அவ்வாழ்க்கையில் கரணம் தப்பினால் மரணம். அப்படி நேரும் சிறு பிசகால்தான் கொம்பூதியைச் சேர்ந்த சோலை என்பவன...
பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!

பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!

கட்டுரை
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்வது என்பது சவாலான விஷயமே! ஓடி ஓடிச் சம்பாதிக்கும் நாம், நமது குழந்தைகளின் மனதைப் புரிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், குழந்தைகள் சிறுவயது முதல் தங்கள் முக பாவனை, நடை, பேச்சு, செயல்களின் மூலம் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார்கள். விருப்பு, வெறுப்பு, செயல், புரிதல் தன்மை முதலியன குழந்தைகளைப் பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு, ஒரு சில குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கலாம்; அவர்களைக் கடிந்து வேறு ஒரு செயலைச் செய்யத் தூண்டும்போது மன அழுத்தத்தை விதைத்து அவர்களது சிறிய ஆசையையும் தேக்கி வைக்கிறோம். நம் அதிகாரத்தை உபயோகித்து அவர்களது ஆசைகளை நிராகரிக்கும்போது, நம் மேல் ஒரு வெறுப்பு, பயம் வர நாமே காரணமாகிறோம். அதிகாரத் தோரணையை விடுத்து, அன்புடன் அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கும்போது குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள். வளர...
பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்

கட்டுரை
மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி ஆர்த்ரேயாவும், மனோரதத்தில் நாம் பார்த்த சோழப் பேரரசுக்கு பங்கம் விளைவிக்காமல் கண் முன் கொண்டு வந்துள்ளனர். பூங்குழலியின் காதலர்களான கொள்ளிவாய்ப் பிசாசுகளையும்கூட மேடையேற்றி இருந்தனர். அதே போல், T.பாலசரவணனின் ஒளியமைப்பு நாடகத்துக்கு பெரும்பலமாக அமைந்தது. உதாரணம், கோடிக்கரையில் இருந்து இலங்கைக்கு வந்தியதேவனும் பூங்குழலி...
ஒரு கதையின் கதை | Krishnan Nambi

ஒரு கதையின் கதை | Krishnan Nambi

கட்டுரை, புத்தகம்
தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட ‘மருமகள் வாக்கு’ எனும் சிறுகதை. (ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்) அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பி...
லாஸ் வேகஸ்

லாஸ் வேகஸ்

கட்டுரை
எந்த முகூர்த்தத்தில் எங்கள் ஊருக்கு ‘ஆல்பனி’ என்று பேர் வைத்தார்களோ தெரியவில்லை, வருடத்தின் முக்கால் வாசி நாட்களுக்கும் மேலாய்க் கொட்டும் பனியும், நடுங்கும் குளிருமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் டிசம்பர் மாதப் பனியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். போன வருட டிசம்பர் மாத பனியிலிருந்து சில நாட்களாவது தப்பிக்க என்ன செய்யலாமென யோசித்த போதுதான், குளிர் குறைவான லாஸ் வேகஸ் பயணத்திட்டம் உதித்தது. கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகளுக்கு இந்தப் பயணத்திட்டம் பிடித்துப் போக மகனுக்கு அத்தனை இஷ்டமில்லை. ”ஏம்ப்பா, சரியா டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் அன்னிக்கே கிளம்பனுமா? எனக்கு கிறிஸ்துமஸ் கிப்ஃட் இல்லையா?? அடுத்த நாள் போகலாமே....” என சுணங்கியவனிடம், “இதுதான் இந்த வருட கிறிஸ்துமஸ் பரிசு” என்று சொன்னதில் மிகவும் கடுப்பாகி விட்டான். ஒரு வழியாகப் பேசி, உனக்கான கிஃப்ட்டை இந்தவருடம் சாண்டா ஆன்லைனில...
அமானுஷ்யமும் மர்மமும்

அமானுஷ்யமும் மர்மமும்

நம்பினால் நம்புங்கள், புத்தகம்
அமானுஷ்யமும் மர்மமும் போல் ஈர்ப்பான விஷயங்கள் உலகத்தில் வேறெதுவுமில்லை. அதைப் பற்றிப் பேசவும் கேட்கவும் எப்பொழுதும் தயாராகவே இருப்போம். அதுவே செவி வழி கதையாக இல்லாமல் தனக்கேற்பட்ட அனுபவங்களை ஒருவர் தொகுத்தால்? அப்படித்தான், ஜேம்ஸ் வான் பிராக் தனது புத்தகமான, Ghosts Among Us என்பதில் ஆவிகள் உலகத்தினைப் பற்றிச் சொல்கிறார். புத்தகத்தில் திகிலான சம்பவங்களோ, புனைவுக்குரிய சுவாரசியங்களோ இல்லை. மரணத்தைப் பற்றியும், மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றியும் அலசுகிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஆவி மீடியம்களில் ஒருவரான ஜேம்ஸ். அவர் சந்தித்த எண்ணற்ற மனிதர்கள் பற்றியும், ஆவிகள் பற்றியும் சொல்லியுள்ளார். அனைத்துமே ஆச்சரியத்தையும், நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் வைக்கும் அனுபவங்கள் என்பதுதான் புத்தகத்தின் விசேஷம். மனிதர்களுக்கு நல்லது செய்யவே ஆவிகள் எப்பவும் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆவிகள் ...
சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு?

புத்தகம்
சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான "சந்துருவுக்கு என்னாச்சு?" என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் கேட்கிறான். தந்தை முன் கேள்விகள் கேட்க தருண் ஏன் தயங்க வேண்டும்? "எங்கம்மா போறோம்?" "தொரைக்கு எங்கன்னு சொன்னாத்தான் வருவீங்களோ?" 'உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை' என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைப்பதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் உச்சபட்ச உளவியல் வன்முறையாக இருக்கும். இத்தகை...
இலக்கியமும் இலக்கிய நிமித்தமும்

இலக்கியமும் இலக்கிய நிமித்தமும்

கட்டுரை
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து இலக்கிய மாநாடு – யாதுமாகி 2015 எனும் இலக்கிய நிகழ்வை ஃபிப்ரவரி 12, 13 தேதிகளில் நடத்தினார்கள்.பாரதி இலக்கியச் சங்கத்தை சிவகாசியில் நிறுவிய கவிஞர் திலகபாமா அவர்களின் முயற்சியில்தான் எழுத்தாளர்களும் மாணவர்களும் நேரடியாகச் சந்திக்கும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. எது குறித்து மாணவர்களிடம் பகிரப்பட வேண்டுமென எழுத்தாளர்களே தீர்மானித்ததாகச் சொன்ன திலகபாமா, “இன்றைக்கு, இலக்கியம் படைச்சு என்னத்த கிழிச்சீங்க என்ற கேள்வி பரவலாக நம் முன் வைக்கப்படுகிறது. இலக்கியம், வாழ்வியலை நோக்கி நகர்த்துகிறது; அனைத்து மக்களின் அரசியலையும் பேசுகிறது; மனிதர்களுக்கிடையே நிகழும் நுண்ணரசியலை ஆராய்கிறது. அதை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவே இந்நிகழ்வு” என்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்பொழுது, “இது போன்ற நிகழ்வுகளில், வந்...
மலாலா என் ஜானி மன்!

மலாலா என் ஜானி மன்!

புத்தகம்
மலாலாக்கு நோபல் பரிசு அறிவித்த நாளன்று மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மலாலா அமெரிக்கக் கைக்கூலி என பரவலான நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. ஊடகம் உயர்த்திப் பேசுமளவுக்கு மலாலா ஒன்றும் சாதிக்கவில்லை என்பது சிலரின் எண்ணம். உண்மை என்னவென்றால், மலாலா தாலிபானால் சுடப்படுவதற்கு முன்பே.. 2011 இல் பாகிஸ்தான் அரசின் தேசிய அமைதிப் பரிசைப் பெற்றவர். கூடவே, பாகிஸ்தான் அரசின் முதல் அமைதிப் பரிசைப் பெற்றவர் என்ற புகழும் மலாலாவுக்கே! அதன் பின் ஒன்பது மாதங்கள் கழித்தே மலாலா தாலிபானால் சுடப்படுகிறார். சுட்டதுக்குப் பொறுப்பும் எடுத்துக் கொண்டது தாலிபான். “மதச்சார்பின்மையை பரப்புவதில் முன்னோடியாக இருந்ததால்தான் மலாலா குறிவைக்கப்பட்டாள்” என எஹசுனுல்லா எஹஸான் என்ற TTP-இன் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்துள்ளார். (காலச்சுவடு பதிப்பகம் - தமிழில்: பத்மஜா நாராயணன் -  303 பக்கங்கள் -...
சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

புத்தகம்
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது! வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. அதுவும் மகாபாரதக் கதைகளைக் கேட்பதோ, படிப்பதோ எப்பொழுதும் பரவசமான ஒன்று. அதனால் தான் வியாசர் பறந்த வானில் பறக்க தைரியமாக முயல்கிறார் ஜெயமோகன். தெரிந்த கதைகள் தானெனினும், சொல்பவரின் கற்பனைக்கேற்ப புதிய நிறங்களைப் பெற்ற வண்ணமிருப்பதே பாரதத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு, ஐயப்பனின் சிறுகதைத் தொகுப்பான சக்கர வியூகத்திற்கும் ...
பூக்குழி – பெருமாள் முருகன்

பூக்குழி – பெருமாள் முருகன்

கட்டுரை, புத்தகம்
பூக்குழி என்பது பூக்களைக் கொண்ட குழி அல்ல. நெருப்புக் கங்குகளால் நிரப்பி, சாம்பல் பூக்காமல் கவனமாக விசிறப்பட்டு கனன்று கொண்டிருக்கும் குழி. மங்கல வழக்காய் பயன்படுத்தும் போதிலும் ஒருவிதமான அச்ச உணர்ச்சியை விதைக்கிறது. நாம் வாழ்ந்து வரும் சமகாலத்துக்கு சில பத்தாண்டுகள் முன் நடக்கும் காலமும் களமும்; நம் சமூகத்தில் இருக்கும் இறுக்கமான சாதிய மனோபாவத்தையும், அது யாரிடம், எங்கு, எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கலப்புமணம் புரிந்து கொண்ட இருவரின் வாழ்வனுபவமாக விவரிக்கிறது. காலமும் களமும் மாறியிருப்பினும் மனோபாவங்களில் பெரும் மாறுதல் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற வருத்துடனே ஆசிரியர் இந்நாவலை முன்வைக்கிறார். கலப்புமணம் புரிந்த குற்றத்துக்காய் மரணித்த தருமபுரி இளவராசனுக்கு இந்நாவலை சமர்ப்பித்திருக்கிறார். இரு வேறு சாதிகளைச் சேர்ந்த குமரேசனும் சரோஜாவும் மணம் முடித்து, குமரேசனின் ஊருக்கு தம்பதியாய...
பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

கட்டுரை
யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு ஏற்பட்ட இன்ஃபைனட் அனுபவங்களின் ஒரு சிறு துளிதான் அப்புத்தகம். ‘ஒரு துளி போதுமா பாட்டையா? கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிற இந்தக் காலத்தில் ஏன் இந்தக் கஞ்சத்தனம்? தளும்பும் நினைவுக் கடலில் இருந்து ஒரு டம்ளராவது இறக்கிட வேணாமா?’ என பலர் கேட்டுப் பார்த்தனர். ஆனால் பாரதி மணியோ, “I am one book wond...
நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

கட்டுரை, சமூகம்
கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இதுதான்.. மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஒருவனைப் பிடிக்க போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்ட அதிகாரி வில்சன் வெள்ளை இனத்தவர். வில்சன் தன்னுடைய வாக்கு மூலத்தில் அந்த இளைஞன் தன்னைத் தாக்கி தன் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தற்காப்புக்க...