Shadow

கட்டுரை

வியாசன் பறந்த வானில்

வியாசன் பறந்த வானில்

கட்டுரை, புத்தகம்
தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். "வெண்முரசு" என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது. அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். "என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் ...
இதே ஊர்தான்டா..!

இதே ஊர்தான்டா..!

அரசியல், கட்டுரை
ஒரு சுவரை ஆக்கிரமிக்க இரண்டு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டிதான் கதையின் மைய இழை. ஆனால் அது மட்டுமே கதை அல்ல. சுவரில் வரையப்படும் படமும் அதன் மூலம் கட்சியின் பெயரும் அதிகாரமும் அங்கேயே நிலை பெற செய்ய என்னென்ன அரசியல் நடக்கிறது அதில் எளிய மக்களின் நம்பிக்கைகள் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விலாவாரியாகப் பேசுகிறது மெட்ராஸ் படம். அது வெறும் சுவர் இல்ல.. அதிகாரம். காளியும் அவன் நண்பன் அன்பும் மைய கதாபாத்திரங்கள். அன்பு நடுவிலே கொலை செய்யப்படுவதால் காளியை கதாநாயகனாக கொள்ளவேண்டி இருக்கிறது. இரண்டு நாயகன்கள் போலவே இரண்டு நாயகிகளுக்கும் சமமான பாத்திரங்கள். காதல்? படத்தில் காதல் இருக்கிறது. வாழ்க்கையில் வருவது போல. இப்ப தான் அப்பா அம்மாக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று குழந்தை சாதாரணமாக சொல்லுமளவுக்கு இயல்பாக வருகிறது. ஆனால் படத்தைக் கொண்டு செல்வது காதல் அல்ல. காளி படித்த, நல்ல...
5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

கட்டுரை, சமூகம்
ஐந்து வயதாகும் K.L.தீரஜ், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் யூ.கே.ஜி. படிக்கிறான். தேசிய அளவில் மூன்று ரெக்கார்ட்கள் முன்னமே படைத்து, India Book of Records இல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீரஜ் தனது முதல் ரெக்கார்ட்டை, பிறந்த இரண்டு வருட ஒன்பது மாதங்களில் படைத்துள்ளான். இளவயதில் அதிக எண்ணிக்கையில் அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனின் முதல் ரெக்கார்ட். 215 தேசிய கொடிகளை, 2 நிமிடம் 15 நொடிகளில் அடையாளம் கண்டுள்ளார். தீரஜ் தனது இரண்டாவது ரெக்கார்டை, மூன்று வருடம் ஏழு மாதங்கள் என அவன் வயதிருந்த பொழுது படைத்துள்ளான். படைப்புகளைப் பார்த்து அதைப் படைத்த படைப்பாளர்களின் பெயர்களை, ஒரு நிமிடத்திற்குள் அதிகளவில் சொல்லியுள்ளான். அதே தினத்தில் தனது மூன்றாவது ரெக்கார்டையும் படைத்துள்ளான். தீரஜின் மூன்றாவது ரெக்கார்ட், உலக வரைப்படப் புதிரை மிக இளவயதில் விடுவித்துள்ளான். டாக்டர் ப...
தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

அரசியல், சமூகம்
சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர், தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை, திரைப்பட பூஜை, ஆடியோ வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகள், முன்னோட்ட விழா ஆகிய திரைப்பட நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து, மக்களின் சினிமா ஆர்வத்தை இன்னும் மங்காமல் காத்துக் கொண்டிருக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் திரைப்பட ஊடகவியலாளர்கள் என்ற உண்மை அறிவார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே! நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், தொலைக்காட்ச , இணையத்தளம், பண்பலை உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் இந்த சினிமா ஊடகவியலாளர்கள் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் திரையுலக பிரமுகர்கள் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி செய்திகளைக் கொடுத்து சினிமா உலகுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பத...
சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

சமூகம்
செப்டம்பர் மாதத்தின் இன்னொரு காலைப் பொழுது.. பெரியம்மா வீட்டில் இருந்ததால் மகனைப் பற்றிய கவலை இல்லை. வீட்டில் வேலைகளை முடித்து, பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த மகளை பஸ்ஸில் ஏற்றி விட்டு நானும் ஆஃபீசுக்குக் கிளம்பினேன். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் வழக்கமான ட்ராஃபிக்குடன் குழந்தைகளை அழைத்துச் செல்லும் மஞ்சள் நிற பஸ்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள எல்லாச் சாலைகளிலும் கூடுதல் வாகன அணிவகுப்பு. இது போன்ற காலை பரபரப்பில் வண்டி ஓட்டுகையில் ரேடியோவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையான உரையாடல்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டே ட்ரைவ் செய்வது பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். காரை நிறுத்திவிட்டு அலுவலகத்தில் நுழையும் வரை எதிர்படுவோரைப் பார்த்துப் புன்னகைப்பதும், தெரிந்தவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக் கொண்டு கடந்து போவதும் எனக்கு அனிச்சையான ஒன்றாகி இருந்தது. பதிலுக்குக் கிடைக்கும் புன்னகையும், குட்மார்னிங்க...
ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, சினிமா
மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை. நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை அனுதாபமாகப் பார்த்து, ‘பார்றா இவர!’ என ஏளனம் பண்றார். அவங்களைத் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான், சின்ன படத்திலிருந்து ரஜினி படம்வரை வொர்க் பண்ணும் ஒரே ஆளுங்க. ஒரே விஷயத்தைச் செய்து பழக்கப்பட்டுட்டாங்க. நானோ off-beat சினிமா எடுக்கிறேன். ஆனா இங்க அனைவரையும் அவங்க வழக்கத்திற்கு இழுத்து, குதிரையை கழுதையா ஆக்கப் பார்க்கிறாங்க. ‘நல்...
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

கட்டுரை, புத்தகம்
ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால்,உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் பற்றிய புரிதல் உங்களுக்கும் அவசியம்.குறைவான ஆட்டிசப்பாதிப்பு உள்ள குழந்தைகளை சாதாரணப் பள்ளிகளுக்கு அனுப்புங்கள் என்று மருத்துவர்களும் தெரபிஸ்ட்களும் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இக்குழந்தைகளை பெரும்பாலான பள்ளிகள் சேர்த்துக் கொள்ள மறுத்துவிடுகின்றன. அதற்கு பள்ளி சொல...
“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்

“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்

அரசியல், சினிமா
16.06.2014 பெறுநர் உயர்திரு தலைவர் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், சென்னை. ஐயா, என்னைத் தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால் என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறே...
எங்கே போனாய் ரெனி!?

எங்கே போனாய் ரெனி!?

கட்டுரை, சமூகம்
மார்ச் மாதம் நான்காம் தேதி, மாலை நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். பதட்டமான குரலில் அம்மா, “எதிர் வீட்டு ரெனி காணாமல் போய் விட்டான். அவன் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். உனக்கு விஷயம் தெரியுமா?” என்றாள். “அப்படியெல்லாம் இருக்காது. இரண்டு நாள் முன்பு அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மே மாதத்தோடு கல்லூரிப் படிப்பு முடிந்து விடுமென்றும், கலிஃபோர்னியாவில் வேலை கிடைத்துவிடும் என்றும், அவனுக்கு அங்கே ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுக்க வேண்டும், புது கார் வாங்க வேண்டும் என்று பெருமிதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.. மேலும் லண்டனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளும் spring break என்று ஒரு வாரம் விடுமுறையில் வந்திருப்பதை எத்தனை மகிழ்ச்சியாகச் சொன்னார்? அப்படி எல்லாம் இருக்காது.. நீ யாரையோ நினைத்துப் பேசுகிறாய்” என்றேன் மகளிடம்,. கொஞ்ச நேரத்தி...
லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

கட்டுரை, மற்றவை
SPI சினிமாஸ் நிறுவனம் வழங்கும் லக்ஸ், ஒரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற ஒரு புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் திறக்கப்பாட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்கூடம் லக்ஸ் கதவைத் திறந்தவுடனே காற்றோட்டம் கொண்ட இடம், இத்தாலி நாட்டு மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. முன்கூட்டத்தில் உணவகம் உள்ளது. முன்கூட்டத்தின் ம...
நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

அரசியல்
அப்பா இறந்துவிட்டார். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது அந்த தகவல்.அந்தச் செய்தியின் தாக்கத்தை, அது தந்த உணர்வுகளை அதன் அடுத்தடுத்த கட்டத்தை உள்வாங்கவே முடியாமல் ஸ்தம்பித்த ஒரு நிலை. உடனே அம்மாவை, அக்காவை, தம்பிகளை, தங்கையைப் பார்த்தே ஆகவேண்டும் என்பது மட்டும் தோன்றியது. இச்சமயத்தில் அவர்களோடு நானிருக்க வேண்டும். அது மட்டுமே எங்கள் துயரத்தைத் தணிக்க முடியும். இப்படி ஏதேதோ தோன்றி மறைந்த துயர நிலை. கணவரும் குழந்தைகளும் தேற்றினாலும், தீராத துயரநிலை. உடனடியாக நான் மட்டும் இந்தியா கிளம்புவது என்று முடிவெடுத்து பயண ஏற்பாட்டைத் துவக்கினால், எனக்கு விசா வாங்கவேண்டும் என்பது நினைவுக்கு வர, எதுவும் தோணாமல் நான் மட்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரயிலில் நியூயார்க் போக முடிவெடுத்தேன். முதல் முறையாக கணவரின் துணையில்லாமல் நியூயார்க் பயணம். இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது, அங்கே யாரைப் பா...
கற்றதனாலாய பயன்

கற்றதனாலாய பயன்

கட்டுரை, சமூகம்
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'திருத்தப்பட வேண்டியவர்கள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நமது கல்வியமைப்பு, அதன் தேர்வு முறைகள், விடைத்தாள் திருத்தும் முறைகளில் நிலவும் அபத்தங்களைச் சொல்லும் கட்டுரை அது. இதன் நீட்சியாக, நமது கல்விமுறையின் இந்தப் பக்கங்களை ஒரு மாணவியாகவும், பின்னாளில் ஒரு கல்லூரி ஆசிரியையாகவும் கடந்து வந்த எனது அனுபவத் தெளிவுகளைப் பகிர்வது சரியாக இருக்கும் என்பதால் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். மாணவியாக இருந்த காலத்தில் பரிட்சை ஹாலில் சில மாணவ மாணவியர் செய்யும் திருட்டுத்தனங்கள், அது தொடர்பான குறும்புகள், அவர்களைக் கண்டுபிடிக்க, ஆசிரியர்கள் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் இப்போதும் நன்கு நினைவில் இருக்கிறது. பின்னாளில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது பல கல்லூரிகளுக்கும் தேர்வு மேற்பார்வையாளராகச் சென்ற போது எதிர் கொண்ட அனுபவங்...
தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.

தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.

கட்டுரை, சமூகம்
தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும் தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும் திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல்கடமையாக வைத்திருக்கிறது. இதனாலயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலக தமிழர்களின் அன்பும் ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற கலைநிகழ்ச்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டும் அல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. விஜய் டிவி எப்போத...
என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

கட்டுரை, சமூகம்
பொதுவாகவே எனக்கு யாரிடமாவது  பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம்.  ‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே  கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை "சைபர் க்ரைமில்" போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் காட்டுத்தீ போல் பரவும் புரளியை நிறுத்த, சைபர் க்ரைம்க்கு போவதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை.. போதாக்குறைக்கு, “மானநஷ்ட வழக்கு போட்டு.. 10 லட்சமாவது  வாங்குடே. ஐடியா சொன்ன என்னை மறந்துடாதே! எனக்கு 30% கொடுத்துடணும்”னு ஆசையை வளர்த்து விட்டார் கே.வி.ஆர் அண்ணன். அட.. பத்து லட்சம் வேணாம் ஒரு பத்தாயிரம் கிடைத்தால்கூட, ‘ஐ.. சூப்...
“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

கட்டுரை, மற்றவை
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள்.. பசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் “அம்மா உணவகம்” ஆரம்பித்தபோதே நீங்கள் ஏழைகளின் இதயங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டீர்கள். இப்போது “அம்மா திரையரங்கம்” கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குநராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என்போன்ற ஆயிரக்கணக்கான இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் இதயங்களில் என்றும் மறக்காத, மறக்க நினைக்காத வண்ணம் தனிப்பெரும் தலைவியாக குடிகொண்டு அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்துவிட்டீர்கள். “அம்மா திரையரங்கம்” என்ற இந்த திட்டம் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நிறுவப்படவேண்டும் என்பதே எங்கள் வே...