மர்மமாய் மறைந்த நதி
சரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது.
மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது.
ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
யஜூர் வேதத...