Shadow

Tag: சிம்ம வாகனி

மர்மமாய் மறைந்த நதி

மர்மமாய் மறைந்த நதி

நம்பினால் நம்புங்கள்
சரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. யஜூர் வே...
வளரும் கலைஞர்கள்…

வளரும் கலைஞர்கள்…

சினிமா
கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. கோச்சடையான் - நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் முதல் ‘மோஷன் கேப்சர்’ படம் ஒரு தமிழ்படம், அதிலும் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் என்கிற வகையில் கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான மைல்கல். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். இனி இந்திய ச...
கூகுளாண்டவரின் ‘விலையில்லா இணையதளம்’

கூகுளாண்டவரின் ‘விலையில்லா இணையதளம்’

தொழில்நுட்பம்
உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியில் இருந்து உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரை தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள ஓர் இணையதளம் அவசியமாகிறது. என்னதான் ‘ப்ளாக்கர்’, ‘வேர்ட்ப்ரஸ்’ போன்றவைகள் இலவசமாய் தகவல் பக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் வசதிகளை அளித்தாலும். டபிள்யு டபிள்யு டபிள்யு டாட் பிச்சுமணி டாட் காம்  என சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமைதான். ஒரு இணையதளம் துவக்க என்னவெல்லாம் வேண்டும். முதலில் ஒரு நல்ல பெயராய்ப் பார்த்து பதிவு செய்ய வேண்டும். நம் கொடுப்பினையைப் பொறுத்து பேரை பதிவு செய்து கொண்ட பின்னர், நம் தளத்தை வலையேற்ற ஓர் இடம் பார்க்க வேண்டும். அந்த இடம்தான் சர்வர். நம் தகவல்களின் அளவு மற்றும் ட்ராஃபிக்கை பொறுத்து சர்வரில் இடம் வாங்கிக் கொள்ள வேண்டும். இவை இரண்டுமே காசு கொடுத்து வாங்க வேண்டியவை.  இந்த வெப் ஹோஸ்டிங் சர்வர் கம்பெனிகள் ஆளுக்குத் தகுந்தாற்போல காசு கறந்துவிடுவார்கள். விண்டோஸ் ஹோஸ்டிங்...
அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி – Air Droid (ஏர்-ட்ராய்ட்)

அசத்தலான ஆண்ட்ராய்ட் செயலி – Air Droid (ஏர்-ட்ராய்ட்)

தொழில்நுட்பம்
ஸ்மார்ட் ஃபோன்களின் வளர்ச்சியும் தீவிரமும் இன்னதெனத் தீர்மானிக்க முடியாத எல்லைகளை எல்லாம் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. கையகல ஸ்மார்ட் ஃபோன் மூலமாக நமது அன்றாடப் பணிகள் தொடங்கி நமது எல்லாவிதமான தேவைகளையும் விரல் நுனியில் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி வாய்புகளை இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் (ஆப்ஸ்) நமக்குத் தருகின்றன. விண்டோஸ், ஆப்பிள், ஆண்ட்ராய்ட் என மூன்று விதமான இயங்கு தள அலைபேசிகளுக்கென விதம்விதமான செயலிகள் இருந்தாலும், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் செயலிகளே அதிக அளவில் பிரபலமாய் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்ட்ராய்ட் அலைபேசிகளுக்கான வெளியாகி உள்ள ஒரு புதிய செயலியான ஏர்ட்ராய்ட் பற்றிப் பார்ப்போம். கணினியில் இருந்தபடியே நம் மொபைல் போன்களை கையாளுவது என்பது ஒரு கட்டத்தில் சாத்தியமே இல்லை என்றிருந்த நிலையை எளிதாக்கியிருக்கிறது ஏர்ட்ராய்ட் செயலி. நமது கணினியில் இருந்து கொண்டே நமது மொபை...
அமேசான் என்கிற ஆச்சர்யம்!

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

கட்டுரை, மற்றவை
வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர். அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்க...
ஔரங்கசீப்பின் உயில்

ஔரங்கசீப்பின் உயில்

கட்டுரை, சமூகம்
இந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை அடித்துக் கொள்ள இன்றுவரை யாருமில்லை. பெற்ற தகப்பனை சிறையில் அடைத்து சகோதரர்களை கொலை செய்து ஆட்சியைப் பிடித்தவர். தீவிரமான மதவாதி, தன் நம்பிக்கைகளை மீறுகிறவர்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழித்தவர். இத்தனை மோசமான  பின்புலம் இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையாய் வாழ்ந்த மனிதர். இவரது வாழ்க்கை வரலாற்றினை  மெளல்வி ஹமீதுத்தீன் என்பவர் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். அதன்  எட்டாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் எழுதிய  உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. . 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். எனினும் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை. என் இறுதிச் சடங்குகளை எ...
ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=fm7W4hZdi-w[/youtube] அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்      ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம் ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்      ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்உன் இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது; இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வசனம் மதுரம் சரிதம் மதுரம்      வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம் சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது; இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வேணுர்மதுரோ ரேணுர்மதுர:      பாணிற்மதுர: பாதௌ மதுரௌ ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியத...
ஹரிவராசனம் – தமிழில்

ஹரிவராசனம் – தமிழில்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube] எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம்" பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர். இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே இன்றும் சபரிமலையில் நடைசாத்தும் பொழுது தாலாட்டுப் பாட்டாக ஒலிபரப்பப்படுகிறது. கே. ஜே. யேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குரலும் அளவான இசையும் நம்மை மயங்கவைக்கிறது என்பது நிச்சயம். நான் ரசித்த இந்தப்  பாட்டு...
நெருப்பு சூறாவளி

நெருப்பு சூறாவளி

நம்பினால் நம்புங்கள்
காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீ பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ மிகவும் ஆபத்தான ஒன்று.   சமயங்களில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீ, நெருப்பு பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாய் மாறும். காற்றின் சுழற்சியால் செங்குத்தாய் உருவாகும் இத்தகைய தீப் பந்துகள்  சமயங்களில் 30 முதல் 200 அடி உயரமும், சுமார் 10 அடி அகலமும் கொண்ட சூறாவளியாக மாறிவிடும். காற்றின் திசை மற்றும் வேகத்தை பொறுத்து இவை அதிக நேரம் நீடிக்கும்.இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பம் மிகவும் அதிகமாய் இருக்கும். இதனால் இது பயணிக்கும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகிப் போகும்.மிகவும் குறுகிய நேரத்தில் பேரழிவை உண்டாக்கிடும் தன்மையுடையது நெருப்புச் சூறாவளி. மரங்கள் செடிகள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கு...
கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கட்டுரை, சமூகம்
“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.” இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன்.நம்மிடம் உள்ளது என்ன?“என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன பெரும் கொடை. சித்தர்கள் தான் உலகின் முதல் விஞ்ஞானிகள் என ஆதாரங்களுடன் நிருபித்தாலும்.. அதை சந்தேகிக்க தான் துணை புரிகிறது மெக்காலே கல்வித் திட்டம். நம்ம நம்பிக்கைகள் இப்படிப் பாதாளத்தில் இருக்க.. பாபா ராம்தேவ்வும், ஸ்ரீலஸ்ரீயும் அதில் நம்பிக்கை வைத்து கோடிகளில் உழல்கின்றனர். அப்படி நாம் கோடிகளில் உழலா விட்டாலும் கூட, மகிழ்ச்சியாகவு...
மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

கட்டுரை, சமூகம்
எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு.அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு.முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை எழுதணும்னு முடிவு பண்ணின உடனே, கொலதெய்வம் கூகிளாண்டவரை மனசுல நிறுத்தி அவர்கிட்ட கோரிக்கை வச்சிட்டா.. அவர் அள்ளிக்கோ, அள்ளிக்கோன்னு கொடுத்துருவார்.உதாரணம் - http://www.poemhunter.com/poems/alone/இதைப் போல நாலைந்து வெப்சைட்.. ஹைக்கூ கவிதைகள் உள்ள வெப்சைட்ல நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்து, மறுபடியும் கூகிளாண்டரை ...
இது நம்ம ஊருங்க!!

இது நம்ம ஊருங்க!!

கட்டுரை, மற்றவை
நம்ம ஊர். அது என்ன ஊர்? "கோயம்புத்தூர்." கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்.கன்னியரின் இதழழகை கோவையென்பார்!கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு. திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன். தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்.இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி.அதனைக்கேட்டு முன்...
சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

கட்டுரை, சமூகம்
சித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை தலைமுறையாக கொண்டு வரப்பட்டது. அது பின்னாளில் குடும்ப சொத்தாக கருதப்பட்டு, சுயநலத்துடன் மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் மெல்ல அழியத் தொடங்கியது. பின்னர் நல்லோர் சிலரால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சித்தமருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அந்தத் தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடையவும் தொடங்கியது. ஆயினும் இன்றும் கூட, சிலர் தங்களது சொத்துப்போல் சித்தமருத்துவத்தினைக் கருதுவது சித்தமருத்துவதிற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.சித்த மருத்துவ விழிப்புணர்வை மக்களிடையே இணையம் மூலமாக ஏற்படுத்தும் பதிவர்கள் பலர்  உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களில் பதிவர் சாமீ. அழகப்பனும் ஒருவர். அவரது தளத்தின் பெயர் மச்சமுனி.காம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான மச்ச முனி சித்தரின் பெயரால் ஒரு தளம் இயங்குகிறது என்பது ...
யார்.. யோகி..!!

யார்.. யோகி..!!

ஆன்‌மிகம்
சமீப நாட்களில் யோகிகள் என்ற பெயரில் வந்து இம்சிப்பவர்களின் எண்ணிக்கை கொசுத் தொல்லையை விடவும் மோசமானதாகிவிட்டது. மேலே பார்த்தேன் யோகியாய்ட்டேன். மொட்டை மாடில நின்னு கீழே பார்த்தேன், உணர்ந்தேன் உடனே யோகி ஆய்ட்டேன்ன்னு ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக் கொண்டு யோகியாகி விடுகிறார்கள். யோகத்தின் அடிப்படை கூட தெரியாத இந்த அசடர்களையும் நம்பிக் கொண்டு அவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டம் இருப்பதினால்தான் இவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாய் குடுமியும், குங்குமமும் வைத்துக் கொண்டு இரண்டு நாளில் ஞானம் தருவதாய் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.யோகம் என்பது எட்டாம் கிளாஸ் பாஸ். பத்தாங்கிளாஸ் பெயில் மேட்டர் இல்லை. வாழ்வியல் அனுபவம். ஒவ்வொரு நிலையாக உணர்ந்து தெளிந்து கடந்து போகிற நிலை. இப்படிக் கடந்து போகிற எவனும் தன்னைச் சுற்றிய ஒளி வட்டத்துக்கோ, காசு பார்க்கும் கார்ப்பரேட் தனத்துக்கோ விலை போவதில்லை. அப்படி...
அற்புதத்தில் ஒருவன்

அற்புதத்தில் ஒருவன்

அரசியல், கட்டுரை
'உதகையைத் தீ உய்த்த உரவோன்..''என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப...