Shadow

Tag: மாரி செல்வராஜ்

சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு..  – ரஞ்சித்

சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு.. – ரஞ்சித்

சினிமா, திரைத் துளி
புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது.முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் ப...
விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, போராடும் போராட்ட கதை

விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, போராடும் போராட்ட கதை

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, 'கர்ண...
சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சேரன் நடித்த ‘தமிழ்க் குடிமகன்’  திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
லட்சுமி  கிரியேஷன்ஸ்  தயாரிப்பில்  உருவாகியுள்ள  திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்.  இயக்குநர் சேரன் கதாநாயகனாக  நடித்துள்ள இந்த படத்தை  'பெட்டிக்கடை' , 'பகிரி'  ஆகிய படங்களை  இயக்கிய  இசக்கி கார்வண்ணன்  இயக்கியுள்ளார். முக்கிய  வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி,  துருவா, 'மிக மிக அவசரம்'  புகழ்  ஸ்ரீபிரியங்கா,  தீபிக்ஷா,  அருள்தாஸ்,  ரவிமரியா மற்றும் பலர்  நடித்துள்ளனர்.  இந்தப்  படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை  கார்த்திக்  மேற்கொண்டுள்ளார்.  ‘தமிழ்க் குடிமகன்’ திரைப்படத்தின்  இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள்  முன்னிலையில்  சென்னையில்  இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  முக்கிய அம்சங்கள் வருமாறு: படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது... ...
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...
கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சமூகம், சினிமா
சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது. 97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது "பெயர்" கொண்ட பேருந்தில் ஏறமாட்டோம் என மாற்று சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் கட்டுக்கு அடங்காததாலும், பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு எட்டாததாலும், பல்லவன், கட்டபொம்மன் முதலிய போக்குவரத்துக் கழங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் என பொதுப்பெயர் இடப்பட்ட்து. படத்தின் கதை நிகழும் காலம் இதுவே! கண்ணபிரானாக வரு...