Shadow

Tag: முருகன் மந்திரம்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

இது புதிது, கட்டுரை, புத்தகம்
அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள். நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. "இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது" என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் ச...
ஆபரேஷன் அரபைமா – முப்படையில் பணியாற்றிய இயக்குநரின் மிலிட்டரி ஆப்ரேஷன் படம்

ஆபரேஷன் அரபைமா – முப்படையில் பணியாற்றிய இயக்குநரின் மிலிட்டரி ஆப்ரேஷன் படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
பி. நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பற்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 7 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அரபைமா என்பது ஒரு வகை மீனாகும். அதன் குணநலங்களைப் பிரதிபலிக்கும்படியாக ஓர் இராணுவ ஆபரேஷனுக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவ்விழாவில் பேசிய இயக்குநர் பிராஷ், “நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் சினிமாவைக் கற்றுக் கொண்டேன்...
Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

Folk Marley Records – அந்தோணிதாசனின் ஆடியோ கம்பெனி

Songs, காணொளிகள், சமூகம்
பாடகரும் இசையமைப்பாளருமான அந்தோணிதாசன், கவனிக்கப்படாத நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கலைஞர்களுக்காக, ’ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் (Folk Marley Records)' என்னும் புதிய ஆடியோ கம்பெனியைத் தொடங்கியுள்ளார். நாட்டுப்புறக் கலைஞராகப் பாடகராகத் தென் தமிழகத்தில் அறியப்பட்டவர்கள் அந்தோணிதாசனும், ரீத்தா அந்தோணியும். தனது கடின உழைப்பால் அந்தோணிதாசன் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து மக்கள் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். கரகாட்டக் கலைஞர், நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என தனது கலைப்பயணத்தை வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். தான் கடந்துவந்த பாதையை மறக்காமல் தன்னைப் போலவே திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலமாக வெளிச்சம் பெறாத கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்கிற நோக்கி...
ஒங்கள போடணும் சார் விமர்சனம்

ஒங்கள போடணும் சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ஏக மனதாகச் சேர்ந்து அந்த இயக்குநரைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லக்கூடும்? அவற்றில் ஒன்றாக இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் குரலில், டைட்டில் கிரெடிட் வரும் பொழுது சொல்லப்படும் கதை சுவாரசியத்தைத் தூண்டுகிறது. அங்கிருந்து 'ஒரு கோடி ஒரு பேய்' என்றொரு ரியாலிட்டி ஷோவிற்குள் ஜாலியாய்ப் (!?) போகும் முதற்பாதி படம், இரண்டாம் பாதியில் சீரியசான பழிவாங்கல் கதையாக மாறுகிறது. படத்தின் ஆறுதல்களில் ஒன்று அல்லது ஒரே ஆறுதல், 116 நிமிடங்கள் எனும் படத்தின் கால அளவு தான். ஆனால், அதில் ஜித்தன் ரமேஷ்க்கு பில்டப் காட்சிகள் மட்டுமே 5 நிமிடத்துக்கு மேல் நீள்கிறது. அதுவும் கதைக்கோ, கதாபாத்திர வார்ப்பிற்கோ உதவாத காட்சி அது. அப்பொழுது வரும், 'இவனுக்கா இவ்ளோ பில்டப்?' என்ற வசனகர்த்தா முருகன் மந்திரத்தின் டைமிங் க...
“ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள்

“ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள்

சினிமா, திரைத் துளி
ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் “ஒங்கள போடணும் சார்”. ஜித்தன் ரமேஷுடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாகத் தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச் செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதைக் கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களைக் கிண்டல் கேலி செ...
வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கட்டுரை, சமூகம், சினிமா
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. ~~ கேள்வி 1:...