
ஆக்கம் விமர்சனம்
'எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!'
என்ற கண்ணதாசனின் இந்த வரிகள் தான் படம் சொல்லும் கருத்து.
ஆக்கம் என்றால் முன்னேற்றம், வளர்ச்சி எனப் பொருள் கொள்ளலாம். அது, ஒரே சூழலில் வளர்ந்த இருவருக்கு எப்படி அமைகிறது என்பதோடு படம் முடிகிறது.
பலமுறை பார்த்துப் பழகிப் புளித்துப் போன கதை. வடச்சென்னையில் பிறந்து வளரும் ஒருவனுக்குச் சென்னையையே கலக்கும் ரெளடி/தாதா ஆகவேண்டும் என்று ஆசை.
படத்தின் ஒளிப்பதிவும், சில நுணக்கமான டீட்டெயிலிங்கும் அசர வைக்கின்றன. ஒரு மரண ஊர்வலத்தில் நாயகன் ஆடிக் கொண்டு வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்கேயே G.A.சிவசுந்தரின் ஒளிப்பதிவு உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஊர்வலம், தொழுகை நேரத்தில் மசூதியைக் கடக்கும் பொழுது அமைதி காக்கின்றது.
சொக்குவாக சத்தீஷ் ராவண். அன்றாடம் நாம் க...
















