Shadow

Tag: நிகில்

அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம்

அந்தரன் – மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் | த்ரில்லர் திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு.கி.சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் 'அந்தரன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வரும் 25 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இயக்குநர் சந்தோஷ் ராவணன், ''இந்தத் திரைப்படத்தின் கதையைத் தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனைப் படித்து, இரண்டு நாட்களில், 'கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது' என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, 'என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்குக் கதையைச் சொல்ல முடியுமா?' எனக் கேட்டார். கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் ...
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், 'தி ஹன்டர்' என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் (Cartel) தலைவனாகவும் வளர்கிறான். மாரியின் தொழிலைக் கெடுத்துக் கடத்தல் குழுமத்தின் தலைவனாகப் பார்க்கிறான் எடி. எடியின் முயற்சிகள் வெற்றி பெற்று, மாரியின் தந்தங்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்ல விடாமல் செய்துவிடுகிறான். எடியை எதிர்க்க, ஆண்டனி என்பவனை அழைத்து வருகிறான் மாரி....
Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் வெடிப்புற வேகமாகப் பயணிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் ராஜாராமனுக்கும், அவரது மகள் சிறுமியான நிலாவிற்குமான அத்தியாயம் பார்வையாளர்களை வசீகரித்துத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. சிறுமி ஆக்ரோஷமாகவும் அட்டகாசமாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார். ப்ரீத்தி முகந்தனிடம் கூட அந்த ஆட்டிட்யூட் மிஸ்ஸிங். அறிமுக இயக்குநர் சுப...
BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'பிளாஸ்ட்' திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ''இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழுச் சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால...
Battle விமர்சனம்

Battle விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஃபிக்ஸ் செய்து மைக்கேலாருக்கு ட்ரிப்யூட் செய்ய நினைத்துள்ளது இப்படக்குழு. படத்தில் நாயகன் ராப் பாடகர் என்பதே அதற்குக் காரணம்! மேலும் பாடல்கள் சமூக மாற்றத்திற்கும் பங்களிக்கும் என்றும் இயக்குநர் நாராயணன் பா நம்பியிருக்கிறார். படத்தின் கதை, நாயகனின் ராப் பாடல் மோகத்தில் தான் துவங்கிறது. ராப் பாடல் போட்டியில் எதிராளியைச் சுலபமாக வெல்கிறார் நாயகன் அர்ஜுன் பிரபாகரன். உடனே அவரை ஒரு இசை நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்குப் பாடுவதற்கு புக் செய்கிறார்கள். ‘நட்சத்திர ஜன்னல்’ பாடலில் வரும் சூரிய வம்சத்து சின்ராசு போல “டக்” என வளர்கிறார் நாயகன். நிற்க! இந்த வளர்ச்சிக்கு இடையில் அவருக்கு ஒரு காதலும் வருகிறது. சுப்பிரமணிய சிவா நடத்தும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் நாயகி ஆராத்யா மீது காதல் கொள்கிறார். காதல், இசை எனப் பயணிக்கும் நாய...
லீடர் விமர்சனம் | Leader review

லீடர் விமர்சனம் | Leader review

சினிமா, திரை விமர்சனம்
தனது மகளுக்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் ஒரு பாசமிகு தந்தையின் அதிரடி ஆக்‌ஷன் தான் லீடர். தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள சால்ட் எனும் ரெளடியைக் கண்காணிக்கிறார் காவல்துறை அதிகாரி இந்திரா. உண்மையைக் கண்டறிய சக்திவேல் எனும் மெக்கானிக்கின் மகளைக் கடத்தி துறைமுகத்திலுள்ள சந்தேகத்துக்குரிய கன்டெயினரைச் சாதுரியமாக மடக்குகிறார். அதனால் பெரும்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல், சால்டிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார், அவரால் எப்படித் தப்பிக்க முடிந்தது, உண்மையில் சக்திவேல் யாரென்பதற்கெல்லாம் பதில்தான் லீடர் படத்தின் கதை. லெஜண்ட் சரவணனின் முதற்படத்திலுள்ள அதே பிரம்மாண்டம் இப்படத்திலும் உள்ளன. ஆனால், இப்படத்தில் ஆடம்பர பிரம்மாண்டமாக இல்லாமல் கதைக்குத் தேவைப்படும் விஷுவலில் பிரம்மாண்டம் காட்டியுள்ளனர். நடிப்பிலும், முதற்படத்தை விட பல மடங்கு மெருகேறிப் படத்தில் கச்சிதமாகப் பொருந்தி...
நீளிரா விமர்சனம் | Neelira review

நீளிரா விமர்சனம் | Neelira review

சினிமா, திரை விமர்சனம்
நீளிரா = நீள் + இரா. நீண்ட இரவு என்பதைத் தலைப்புக் குறைக்கிறது. இலங்கையின் வடக்குப் பகுதியில், 1988 ஆம் ஆண்டு, திருமணம் செய்வதற்காக IPKF (இந்திய அமைதி காக்கும் படை) - இடமிருந்து அனுமதி வாங்குகின்றனர் ஓர் ஈழத் தமிழர் குடும்பத்தினர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவன்று, இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் அவ்வீட்டிற்கு வருகின்றனர். அவர்களைப் போராளிகள் தாக்க முற்படுகின்றனர். இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு, அந்நீண்ட இரவில் அந்தக் குடும்பம் படும் பெரும்பாடுதான் தான் நீளிரா படத்தின் கதை. 'யாரிடம் இருந்து எங்களைக் காப்பாற்ற வந்தீர்களோ, அவர்களுடன் இணைந்து கொண்டு எங்களை வதைக்கிறீர்கள்', 'எங்க ஒரு குடும்பத்துக்காவது அமைதியைக் கொடுங்களேன்' என்ற சவுக்கைச் சுழற்றும் வசனங்கள் படத்தில் இருந்தாலும், சோமிதரன் அதை வலிந்து திணிக்காததாலோ என்னவோ, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் ...
“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்

“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்

சினிமா, திரைச் செய்தி
லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, "லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றைச் சொன்னார். அந்தக் கதைக்காக சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்குத் தயார்ப்படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியை...
“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்

“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்

சினிமா, திரைச் செய்தி
லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, " நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988 ஆம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்தக் கடைக்குச் சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு சட்டை...
“நமது சகோதரர்களின் வலி நமது வலி” – வெற்றிமாறன் | நீளிரா

“நமது சகோதரர்களின் வலி நமது வலி” – வெற்றிமாறன் | நீளிரா

சினிமா, திரைச் செய்தி
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் த்ரில்லராக தயாராகி இருக்கும் ‘நீளிரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா 'நீளிரா' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.படக்குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா, ''என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப் பற்றி சோமீதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமீதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமீதரனின் 'நீளிரா' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் ந...
கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம்

கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம்

சினிமா, திரைச் செய்தி
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ராமானுஜம், "பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள பிரபலமான இசைக்கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம்" என்றார் நடிகர் கோதண்டம், "இந்தப் படத்தை 'ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்' என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார்.‌ பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடி...
நீளிரா – ஈழத்து மண்ணின், மக்களின், போர்ச்சூழலின் கதை

நீளிரா – ஈழத்து மண்ணின், மக்களின், போர்ச்சூழலின் கதை

சினிமா, திரைச் செய்தி
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களைப் பின்னணியாக கொண்டு சர்வைவல் த்ரில்லராக தயாராகி இருக்கும் ‘நீளிரா’ படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன. ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. 'நீளிரா' படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன், "சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. என...
சுந்தர்.சி, V.Z.துரை கூட்டணியில் மீண்டுமொரு படம்

சுந்தர்.சி, V.Z.துரை கூட்டணியில் மீண்டுமொரு படம்

சினிமா, திரைத் துளி
'மோ', மாயோன், மெட்ராஸ் மேட்னி, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றைத் தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர். சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார். 'இருட்டு', 'தலைநகரம் 2' படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார். திரைப்படம் குறித்து மேலும் பேசிய அவர், "சுந்தர் சி, துரை V.Z. கூட்டணியில் மீண்டும் உருவாகும் திரைப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும்" என்றார். யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிக...
Feel the Spark – இசையமைப்பாளர் ராலே ராஜனின் வைரல் பாடல்

Feel the Spark – இசையமைப்பாளர் ராலே ராஜனின் வைரல் பாடல்

Others, காணொளிகள்
சர்வதேச இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான ராலே ராஜன் (Raleigh Rajan) உருவாக்கியுள்ள “Feel the Spark” பாடல், இணைய தளங்களில் வைரலாகி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட இந்த ‘American Pop’ பாடல், வெளியான நான்கு நாட்களிலேயே 3.1 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சுயாதீனக் கலைஞராக (Independent Artist) இருக்கும் ராலே ராஜன், இந்தப் பாடலின் இசை மற்றும் வரிகளை தானே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இசைத் துடிப்பும் சர்வதேச தரமும் இணைந்துள்ள இந்தப் பாடல், இசை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இதில் இடம்பெற்றுள்ள நவீன ஒலியமைப்பு உலகளாவிய இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த வெற்றி குறித்து ராலே ராஜன், “உலகெங்கிலும் இருந்து கிடைக்கும் அன்பால் நான் மிகவும் ...
கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கர்ப்பிணியாக இருக்கும் அனுசுயாவைக் காளி தன் குலதெய்வமான நிறை சூலியை வழிபட அழைத்துச் செல்கிறான். அப்பயணம் கொட்டுக்காளியை நினைவுறுத்துவதாக உள்ளது. படம் தொடங்கியதுமே, ஓர் அமானுஷயத்திற்குத் தயார்ப்படுத்துகிறது சாந்தனின் பின்னணி இசை. P.G.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். குறிப்பாக இசையுடன் இணைந்து ட்ரோன்ஸ் ஷாட் ஏதோ ஒரு சம்பவத்திற்குப் பார்வையாளர்களைத் தயார் செய்து கொண்டே உள்ளது. கார்த்திக் தாமோதரனின் ஒலி வடிவமைப்பு, மலைக்காட்டில், ஓடை சலசலப்பில் இருக்கும் உணர்வைத் துல்லியமாக ஏற்படுத்த உதவியுள்ளது. இசையும் ஒலியும் ஏற்படுத்தும் ஓர் அழுத்தத்தில் இருந்து நாயகனின் நண்பன் குமாராக நடித்துள்ள பால சரவணனே காப்பாற்றுகிறார். இதற்கே, லப்பர் பந்து போல் தனித்துவமான பாத்திரப்படைப்பாக இல்லாவிட்டாலும், 'என்னையே இந்தக் குடும்பம் வேலை வாங்குது' என ஒப்பேத்தும் வசனத்தைக் கொண்டு மட்டுமே ரசிக்க வைக்கிறார்....