Shadow

சினிமா

துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்). ஆர்த...
பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

பயங்கரமான ஆளு – சஸ்பென்ஸ் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
பரிஷ்தா பிக்சர்ஸ் சார்பில் டி.கலியபெருமாள் தயாரிக்கும் படம் ‘பயங்கரமான ஆளு. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஹீரோவாகவும் நடிக்கிறார் அரசர் ராஜா. இவருக்கு ஜோடியாக ரிஷா நடிக்க, மற்றொரு ஹீரோயினாக சாரா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, போண்டா மணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு விறுவிறுப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படம் குறித்து இயக்குநரும் ஹீரோவுமான அரசர் ராஜாவிடம் கேட்ட போது, “நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்கக் கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்த...
கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை. நாயகனின் பயத்தைப் பார்த்து, 'ரொம்ப அப்பாவி' எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்சு...
காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் கா...
ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

ஜுங்காவிற்கு ஆசைப்பட்ட விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா வசூலில் மட்டும் வெற்றி பெறாமல், ஏராளமான இளம் ரசிகர்களைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்து, நசியும் நிலையில் இருந்த இந்தத் தொழிலையே மீட்டெடுத்தது’ என்று திரையுலகத்தை சேர்ந்தவர்கள் விஜய் சேதுபதிக்குத் தினமும் ஃபோனிலும் நேரிலும் வாழ்த்து சொல்லியபடியே இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கம் போல் விஜய் சேதுபதி தன்னுடைய கலைப்பயணத்தை அதேயளவிலான ஆர்வத்துடன் தொடர்கிறார். விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஒரு படத்தைத் தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா-விற்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி அவர்கள் என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொ...
களத்தூர் கிராமத்து மிதுன்

களத்தூர் கிராமத்து மிதுன்

சினிமா, திரைத் துளி
செப்டம்பர் 15 அன்று, “களத்தூர் கிராமம்” எனும் படம் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜா அப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் மிதுன் குமார். சினிமா பின்னணி உள்ள அவரது குடும்பம், “ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்” என்ற பேனரில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மகாநதி போன்ற படங்களைத் தயாரித்தவர்கள். தற்போது, மிதுன் “ஐராவத் என்டர்டெயின்மென்ட்ஸ்” எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அந்நிறுவனத்தின் மூலம், 16 வயதினிலே படத்தின் டிஜிட்டல் வெர்ஷனைக் கொண்டு வரவுள்ளார். டால்பி அட்மாஸ் 11.1 டிஜிட்டல் சரவுண்டில் அதி நவீன் தொழில்நுட்பத்தால் ரீஸ்டோர் செய்யப்பட்டுள்ள முதல் இந்தியப் படமிது என்பது, “16 வயதினிலே” படத்துக்குக் கிடைத்துள்ள புதிய அங்கீகாரமாகும். மிதுன் தான் டிஜிட்டல் வெர்ஷனின் ரீஸ்டோரேஷன் இயக்குநரும் கூட! ...
வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

வைரமுத்துவின் சத்தியமும் சாதியமும்

கட்டுரை, சமூகம், சினிமா
கவிப்பேரரசு அவர்களுக்கு வணக்கம், நான் பாடலாசிரியன் ஆனதன் பின்னணியில் வெறெந்தப் பாடலாசிரியைரை விடவும் உங்கள் பங்கு தான் அதிகம். ஏனெனில் வாழ்க்கை முழுவதும் இளையராஜா பாடல்களையே அதிகமாகக் கேட்கும் பாக்கியம் பெற்ற எத்தனையோ கோடி தமிழர்களில் நானும் ஒருவன். இளையராஜா பாடல்கள் என்றால் நீங்கள் இல்லாமல் எப்படி? உங்கள் பாடல்கள் என்றால் இளையராஜா இல்லாமல் எப்படி? ஆகையால், இளையராஜாவின் மெட்டுகளோடு உங்கள் வார்த்தைகளை, வரிகளை ரசிக்கத் தொடங்கிய அந்த ரசனை, உங்களின் அனைத்துப் படைப்புகளுக்கும் பாடல்களுக்குமாய் விரிந்தது. அப்படியாக நான் பாடலாசிரியனாக மாறியதன் பின்னணியில் நீங்கள் இருப்பதை நான் எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறேன். கருதுவேன். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் உங்களின் ஒரு பேட்டியை வாசிக்க நேர்ந்தது. அதில் இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதில்கள் என்னை இப்படி பின்வருமாறு எழுத வைத்தது. ~~ கேள்வி 1:...
குரங்கு பொம்மை விமர்சனம்

குரங்கு பொம்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு 'குரங்கு பொம்மை' படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன். ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்...
ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

அயல் சினிமா, திரைத் துளி
2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான 'தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது. ‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது! ஜேன் கோல்ட்மேனும், மேத்யூ வானும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார். மேலும், ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரி, ஜெஃப் ப்ரிட்ஜஸ், மார்க் ஸ்ட்ராங், எல்டன் ஜான் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் தோ...
பட்டி கேக்ஸ் விமர்சனம்

பட்டி கேக்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
நம்முள் ஏதோ ஒரு திறமை இருக்கிறது. அந்தத் திறமையைக் கொண்டு தட்டினால் வெற்றியின் கதவுகள் திறக்குமா திறக்காதா எனத் தெரியாது. திறந்தால் பிரச்சனையில்லை. ஒருவேளை திறக்காமல் போனால்? இல்லை திறந்த இடத்தில் ஏமாற்றம் மிஞ்சி நின்றால்? வாழ்வையே வெறுத்துப் போகச் செய்யும் தோல்வியும் அவமானமும் தொடர்ந்து வந்தால்? இதற்கு மேலும், இந்தத் திறமையை நம்பிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற விரக்தி ஏற்பட்டால்? அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் திறமையின் கதவுகளுக்குப் பெரும் தலைவலியாக வந்து நின்றால்? இவை எல்லாவற்றிற்கும் மேல் உங்கள் உடலமைப்பே உங்களுக்கு எதிரியாக வந்து நின்றால்? இதில் ஏதோ ஓர் 'ஆல்' நம் மீது மோதிய அடுத்த நொடியே நாம் உடைந்து நொறுங்கியிருப்போம் அல்லது நம் திறமைக்கு ஒரு வந்தனம் வைத்துவிட்டு எந்தத் திறமையின் மீது காதலும் நம்பிக்கையும் கொண்டு அலைந்தோமோ, அந்தத் திறமைக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லாத ஓரிடத்தில் சமரசம் ...
தப்பாட்டம் விமர்சனம்

தப்பாட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்தின் நாயகன், 'பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர் எனும் அறிமுக நாயகன் ஆவார். தப்பாட்டம் ஆடுபவராக நடித்துள்ளார். வாழ்க்கையைத் தப்பாக ஆடினால் தோற்று விடுவோம் என்றும் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். படத்தின் காலமும் கதையும் 1984 இல் நிகழ்வதாகப் படம் தொடங்கும் பொழுதே சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சாராயக்கடையே கதியென்ன உள்ளார்கள். வேறு வேலையின்றிக் குடித்து விட்டு சலம்புவதுதான் நாயகனுக்கும், அவன் கூட்டாளிகளுக்கும் வேலை என்று முதற்பாதி முழுவதும் காட்டுகிறார் இயக்குநர் முஜிபூர் ரஹ்மான். தப்பாட்டத்தின் சிறப்பை வசனமாகக் கூட எங்கேயும் பதியாதது உறுத்துகிறது. நாயகனின் மாமாவாக இயக்குநரும் வேடம் ஏற்று நடித்துள்ளார். அவர் சாப்பிட்டு விட்டு பீடியைப் புகைக்க நினைக்கும் பொழுதெல்லாம், குடிக்காரர்கள் யாரேனும் வந்து அவரைத் தொந்தரவு செய்கிறார்கள் எனக் கதைக்குத் தேவையில்லாக் காட்சிகளை எல்லாம் ஒன்...