
சீமான் செய்த துரோகம்
“நான் எங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு துரோகம் செஞ்சிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் அந்தக் குற்றவுணர்விருக்கு. அவர் பகலவன்னு என்னுடைய கதையைதான் எடுக்கச் சொல்லிக் கட்டாயபடுத்தினார். அதை எடுத்திருந்தா மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நானும் படங்கள் இயக்கியிருந்திருக்கலாம். அன்னைக்கு ‘வாழ்த்துகள்’ படமெடுத்து பெரிய பொருளிழப்பைத் தந்துட்டன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒருவாரத்திலதான் என் தலைவன் பிரபாகரன்கிட்டயிருந்து அவசர அழைப்பு. நான் போனேன். போன அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை திசை மாறிட்டது.
அப்பதான் வாழ்த்துகள் படம் ஓடிட்டிருக்கு. அது வெற்றியடையலை என அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், “நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதைலாம்? நான் தலை குனிஞ்சிட்டே இருந்தன். நமக்கு தம்பி மாதிரி படமிருக்கணும். தரையில் அடிக்கணும்; திரையில் அடிக்கணும். ...















