Shadow

கட்டுரை

சீமான் செய்த துரோகம்

சீமான் செய்த துரோகம்

அரசியல், கட்டுரை
“நான் எங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு துரோகம் செஞ்சிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் அந்தக் குற்றவுணர்விருக்கு. அவர் பகலவன்னு என்னுடைய கதையைதான் எடுக்கச் சொல்லிக் கட்டாயபடுத்தினார். அதை எடுத்திருந்தா மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நானும் படங்கள் இயக்கியிருந்திருக்கலாம். அன்னைக்கு ‘வாழ்த்துகள்’ படமெடுத்து பெரிய பொருளிழப்பைத் தந்துட்டன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒருவாரத்திலதான் என் தலைவன் பிரபாகரன்கிட்டயிருந்து அவசர அழைப்பு. நான் போனேன். போன அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை திசை மாறிட்டது.  அப்பதான் வாழ்த்துகள் படம் ஓடிட்டிருக்கு. அது வெற்றியடையலை என அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், “நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதைலாம்? நான் தலை குனிஞ்சிட்டே இருந்தன். நமக்கு தம்பி மாதிரி படமிருக்கணும். தரையில் அடிக்கணும்; திரையில் அடிக்கணும். ...
‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’

‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’

கட்டுரை, சமூகம்
மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தியது. செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய், தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள். அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் வருவான் உயிரோடு என்ற நம்பிக்கையில் காத்திருந்து, பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் கதறி அழுத அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை. எத்தனை முறை நடந்தார் எத்தனை மைல் நடந்தார் என்பதை யார் அறிவார்? இரண்டு வருடங்களுக்கு முன்பு மூவருக்கும் தூக்கு உறுதி என கோர்ட்டும் மத்திய அரசும் உத்தரவிட்டபோது இந்த தாய் எப்படி துடித்தாள் என்பதை அருகி...
“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

கட்டுரை, சமூகம்
என் இனிய தமிழ்மக்களே! 22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துலக தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. செங்கொடியின் வீரமரணத்திற்குப் பின் விடுதலை. இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர், இறுதியுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொணா வலியையும் வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப்போயிற்று. இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும் தமிழ்மனமும் இந்த 2014 பிப்ரவரியில் முதன்முறையாக தன்னிறைவு அடைந்தது. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து என்ற தீர்ப்பின் மூலமாக இத்தனை பெரிய இந்திய கண்டத்தில் தமிழர்கள் முன்வைக்கும் நீதியை நம்புவதற்கும், கோரும் கருணையைப் புரிந்து கொள்வதற்கும் ஜனாதிபதிகளாலேயே முடியாதபோது தமிழர்களின் உயிர்வலியை உணர்ந்த நீதியரசர் சதாசிவம் மற்றும் அவர் குழுவினர் இந்நாட்டின் மீதும் நீத...
ஏனோ தெய்வம் சதி செய்தது!?

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

கட்டுரை, சினிமா
இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் எவரும் சுப்பிரமணியை மறந்திருக்க வாய்ப்பில்லை.கமல், பாலு மகேந்திரா ஆகிய இருவருக்குமே தேசிய விருதினைப் பெற்றுத் தந்த படம். அப்பொழுது கொண்டாடப்பட்ட படங்கள் பலவும் இன்று பார்க்க நகைப்புக்குரியதாய்த் தோன்றுகிறது. ரசனைகளின் மாற்றத்தால் நிகழும் புரிதல்கள் இவை. ஆனால் அன்று போல இன்றும் ரசனை மாற்றங்களையும...
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

கட்டுரை, சினிமா, மற்றவை
“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை வரவழைத்த அதிசயத்தைப் பார்த்து தாமும் அதைச் செய்ய ஆசைப்பட்டார் பாலு மகேந்திரா. அன்றுதான் அவருக்கு இறவாப் புகழைப் பெற்று தந்திருக்கும் கருவியான கேமிராவை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்து சொல்லமுடியாத பரவசத்தை அடைந்துள்ளார். சினிமா ஆசை அவரை பூனே திரைப்படக் கல்லூரிக்குத் துரத்தியது. குறைந்த ஒ...
தமிழில் மோடி!

தமிழில் மோடி!

புத்தகம், மற்றவை
குஜராத் முதலமைச்சரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான திரு.நரேந்திர மோடியின் இளமைப்பருவம் முதல் அவரது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் கண்டிருக்கும் பல்துறை வளர்ச்சிகள் வரை விவரிக்கும் “நரேந்திர மோடி – நேர்மையும் நிர்வாகத் திறமையும்” என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மெளலி எழுதியிருக்கிறார். ஏராளமான அரிய புகைப்படங்களும், நேரடித் தகவல்களும் கொண்ட புத்தகத்தை நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திரு.நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அந்தப் புத்தகத்தை வெளியிட, தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்....
கர்ணனின் கவசம்

கர்ணனின் கவசம்

கட்டுரை, புத்தகம்
இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு. மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல். நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் காரணத்திற்காக 1000 வருடங்களாகக் கோபமாக இருக்கேன்’ என வாக்குமூலம் கொடுத்துக் கொண்டே உள்ளார்கள். ஜெர்மனியருக்கு ஏன் கவசம் தேவைப்படுகிறது எனத் தெளிவாகத் தெரிகிறது. துரியோதனனுக்கும் சகுனிக்கும் ஏன் கர்ணனின் கவசம் தேவைப்படுகிறதெனத் தெரியவில்லை. வஞ்சகமாக தானம் கோரிப் பெறவந்த...
இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

கட்டுரை, மற்றவை
பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும். கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.வடகிழக்கில் 'ஜோ' வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நக...
அமேசான் என்கிற ஆச்சர்யம்!

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

கட்டுரை, மற்றவை
வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர். அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்கும் வ...
டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

கட்டுரை, புத்தகம்
“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என இருமுறை வந்துவிட்டார். டயபாலிக்கின் பூர்விகம் இத்தாலி. அங்கே டயபாலிக் காமிக்ஸ்கள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கின்றனவாம். இத்தாலியைவிட அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் அத்தகைய விற்பனை சாத்தியமாக கிழக்கில் சூரியன் அஸ்தமித்தால்தானாச்சு.ஏஞ்சலா ஜிஸானி என்ற பெண்தான் டயபாலிக் கதாபாத்திரத்தை நவம்பர் 1962 இல் உர...
ஔரங்கசீப்பின் உயில்

ஔரங்கசீப்பின் உயில்

கட்டுரை, சமூகம்
இந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை அடித்துக் கொள்ள இன்றுவரை யாருமில்லை. பெற்ற தகப்பனை சிறையில் அடைத்து சகோதரர்களை கொலை செய்து ஆட்சியைப் பிடித்தவர். தீவிரமான மதவாதி, தன் நம்பிக்கைகளை மீறுகிறவர்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழித்தவர். இத்தனை மோசமான  பின்புலம் இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையாய் வாழ்ந்த மனிதர். இவரது வாழ்க்கை வரலாற்றினை  மெளல்வி ஹமீதுத்தீன் என்பவர் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். அதன்  எட்டாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் எழுதிய  உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. . 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். எனினும் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை. என் இறுதிச் சடங்குகளை எ...
தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

கட்டுரை, மற்றவை
பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக  கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுகிறதுநமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 பாகை சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாகத் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்களை மேற்கத்திய அறிவியல் சமூகம் வரையறுத...
முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

கட்டுரை, மற்றவை
சம்பூர்ணா, ஒரு காஃபி டேபிள் புத்தகம். இதில் கர்நாடக இசை கலைஞர் பத்மஸ்ரீ சுதா ரகுநாதனின் இசைப்பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு,  “சங்கீத கலாநிதி” விருது வழங்கப்பட்டது. இவரது ஆரம்பக்கால இசை வாழ்க்கையாக கருதப்படும், பத்மபூஷன் டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யையாக இருந்ததில் தொடங்கி, கடந்த ஆண்டு கர்நாடக இசை உலகத்தின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான ‘சங்கீத கலாநிதி’ பட்டம்பெற்ற வரை அனைத்து நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ளன. “கடும் உழைப்பே, புகழுக்கும் வெற்றிக்கும் விலையாகும். ஒவ்வொரு நிமிட வேலையிலும் முழு ஈடுபாடு, வெற்றியோ தோல்வியோ, எப்போதுமே தனது சிறந்ததைத்தான் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் அவசியம். நான் இந்நிலையை அடைந்ததற்கு, எனது ஒருமைப்பட்ட குவிமையமும், என்னைச் சுற்றியுள்ள சிறந்த ஆன்மாக்களும் கடவுளும் அளித்த ஆதரவே காரணம். இந்தப் ...
18 தீக்குச்சிகளும் யட்சியும்

18 தீக்குச்சிகளும் யட்சியும்

கட்டுரை, சமூகம்
ஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டையும் இயக்கியது மணிமாறன் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர். அரங்கம் நிறைந்திருந்தது. நின்று கொண்டும் சிலர் பார்த்தார்கள். இதற்கே படத்தை இரண்டு முறை திரையிட்டனர். முதற்படம் 18 STICKS. முதலில் ஆங்கிலக் குறும்படமோ என நினைத்தேன். நல்லவேளையாக தமிழ்ப்படம். அதுவும் ஈழம் சம்பந்தமான படம். 2009 இல் தன் குடும்பத்தை இழந்த யோகன், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். இறப்பது உறுதியாகிவிட்டது. அவரைச் சுற்றி கும்மிருட்டு. அவரிடம் ஒரு தீப்பெட்டி உள்ளது. அதில் 18 தீக்குச்சிகள் இருக்கின்றன. வீடியோ கேமிராவை இயக்கி விட்டு, ஒவ்வொரு தீக்குச்சியாகப் பற்ற வைத்தவாறு, தனது குடும்பத்திற்கு என்னானது என பேசத் தொடங்குகிறார். கேமிராவைப் பார்த்துப் பேசுகிறார். ...
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

கட்டுரை, மற்றவை
மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித...