
பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!
சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு. அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.
நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் வருடாவருடம் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ஒரு கட்டத்தில் அனைவரைமே இவரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர். பிள்ளைகளின் பிரிவும், ஊராரின் அலட்சியமும் அவரை நொறுக்கி விடுகிறது. அந்த நிலைமையிலும் அவருக்கு ஊர்ப்பாசமும், ஊர்மக்கள்...















