Shadow

கட்டுரை

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

கட்டுரை, புத்தகம்
சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு. அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.  நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் வருடாவருடம் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ஒரு கட்டத்தில் அனைவரைமே இவரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர். பிள்ளைகளின் பிரிவும், ஊராரின் அலட்சியமும் அவரை நொறுக்கி விடுகிறது. அந்த நிலைமையிலும் அவருக்கு ஊர்ப்பாசமும், ஊர்மக்கள்...
காவு வாங்கும் புகையிலை

காவு வாங்கும் புகையிலை

கட்டுரை, சமூகம்
அக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள் நிறைவாகிறது. அவர் இறக்கும் பொழுது அவர் வயது 24. திரைப்படங்களில் வரும் நாயகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, தனது தம்பியைப் படிக்க வைத்துள்ளார். திணறடிக்கும் ஏழ்மை நிலையிலும், விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பணமேதும் வாங்கிக் கொள்ளவில்லை முகேஷ். இன்று நாயகர்களாகத் திரையில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களை விட மிகவும் உயர்ந்தவர் முகேஷ்.ஓர் ஆண்டுக்கு சுமார் 1,30,000 பேர் இந்தியாவில், வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள். புகையிலை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோயின் தீவிரம் பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை. ‘புற்றுநோய் தானே.. வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அலட்சியமே மேலோங்கியிருக்கிறது. எதையும் தாங்கிக் கொள்ளலாம் என இளமை தரும் உடல்வலு காரணமாக இருக்கலாம்.சிகரெட் பிடிப்பவர்களின் அருகி...
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

கட்டுரை, மற்றவை
இந்த வர்ணஜாலங்களைக்கண்டுகளிக்க ஏதுவாகப்பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது.ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள். அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு!இந்தப் பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்து சொல்வது போல் இருக்கும். காலையில் கண் விழித்துப் பார்த்தால் மூடுபனியினால் போர்த்தப்பட்ட புல்வெளிகள், நீர்த்தெளித்து விட்டதைப்போல் சாலைகள், 'சில்'லென்ற அதிகாலைத் தென்றல், புகைமூட்டம் போல் இருக்கும் அடர்ந்த மூடுபனியில் பள்ளிக்குச் செல்...
இனியாவது ஒரு விதி செய்வோம்!

இனியாவது ஒரு விதி செய்வோம்!

கட்டுரை, சமூகம்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி, இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஒருவரின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுகள், விலைவாசி உயர்வு, மற்றும் இன்ன பிற செலவீனங்களை சமாளிப்பது கடினம் என்றாகி விட்டதால் கணவன் மனைவி என இருவருமே வேலைக்குப் போக வேண்டிது அவசியமாகிறது. இப்படி வேலைக்குப் போகும் பெண்களில் இரண்டு வகையினர். ஒரு சாரார் தாங்கள் கற்ற கல்வியின் பயனை அடைய வேண்டி, தாங்களே விரும்பி வேலைக்குச் செல்பவர்கள், மற்றவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்பந்தங்களுக்குப் பணிந்து வேலைக்குச் செல்கிறவர்கள். எது எப்படி இருந்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் கடினமானவையே.என்ன தான் கிடுகிடுவென்று காலம் மாறி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லிக்...
அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

கட்டுரை, சமூகம்
  கல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் தாயகம் திரும்புகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நிதர்சனம். படிக்க வந்தவர்கள் வேலை தேடி செட்டிலாகிறார்கள். வேலை கிடைத்தவர்கள்  மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் உழல ஆரம்பித்து,  இன்னும் சில வருடம் சில வருடம் எனத்  தள்ளிப் போட ஆரம்பித்து, திருமணம் முடியட்டும் எனக்  காத்திருந்து,  பிறகு குழந்தை, அப்பா, அம்மா, மாமனார், மாமியார் விஜயம் எல்லாம் முடிந்த பிறகு, சரி! ஊருக்குப் போய் விடலாம் என நினைக்க ஆரம்பிக்கும் போது , எனக்கு இங்கு தான் பிடித்திருக்கிறது  என கலங்கும் அன்பு மனைவியின்  கண்களை காணச் சகிக்காமல் அமைதியாக செட்டிலாகி விடுகிறவர்கள் ஒரு பக்கம், இப்படி வெளிநாட்டுச் சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டோ அல்லது அடிமையாகியோ செட்டிலாகி விடுகிறார்கள்.   ...
மேகமலை ஒரு பயணம்

மேகமலை ஒரு பயணம்

கட்டுரை, மற்றவை
சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.  அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான், மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அனைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது. இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி, கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.காலை 11 மணியளவில் சின்னமன்னூரை அடைந்தோம்...
இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும். இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. இதன...
கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கட்டுரை, சமூகம்
“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.” இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன்.நம்மிடம் உள்ளது என்ன?“என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன பெரும் கொடை. சித்தர்கள் தான் உலகின் முதல் விஞ்ஞானிகள் என ஆதாரங்களுடன் நிருபித்தாலும்.. அதை சந்தேகிக்க தான் துணை புரிகிறது மெக்காலே கல்வித் திட்டம். நம்ம நம்பிக்கைகள் இப்படிப் பாதாளத்தில் இருக்க.. பாபா ராம்தேவ்வும், ஸ்ரீலஸ்ரீயும் அதில் நம்பிக்கை வைத்து கோடிகளில் உழல்கின்றனர். அப்படி நாம் கோடிகளில் உழலா விட்டாலும் கூட, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கி...
மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

கட்டுரை, சமூகம்
எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு.அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு.முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை எழுதணும்னு முடிவு பண்ணின உடனே, கொலதெய்வம் கூகிளாண்டவரை மனசுல நிறுத்தி அவர்கிட்ட கோரிக்கை வச்சிட்டா.. அவர் அள்ளிக்கோ, அள்ளிக்கோன்னு கொடுத்துருவார்.உதாரணம் - http://www.poemhunter.com/poems/alone/இதைப் போல நாலைந்து வெப்சைட்.. ஹைக்கூ கவிதைகள் உள்ள வெப்சைட்ல நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்து, மறுபடியும் கூகிளாண்டரை கும்பிட்டு ட்...
இது நம்ம ஊருங்க!!

இது நம்ம ஊருங்க!!

கட்டுரை, மற்றவை
நம்ம ஊர். அது என்ன ஊர்? "கோயம்புத்தூர்." கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்.கன்னியரின் இதழழகை கோவையென்பார்!கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு. திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன். தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்.இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி.அதனைக்கேட்டு முன்னவனே நாடாள...
கற்பழிக்கப்படும் மைனர்கள்

கற்பழிக்கப்படும் மைனர்கள்

கட்டுரை, சமூகம்
2007 - 5,045 2008 - 5,446 2009 - 5,336 2010 - 5,484 2011 - 7,112 2012 - 8, 541கடைசி ஆறாண்டில், இந்தியாவில் கற்பழிக்கப்பட்டுள்ள மைனர்களின் எண்ணிக்கை என National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை இது.*டெல்லியில் மட்டும் எப்பொழுதும் 300க்கு குறையாமல் போலீசாரிடம் வழக்குகள் பதியப்படுமாம். 2012 இல் 415 வழக்குகள் பதியப்பட்டிருக்காம்.*எப்பொழுதும் மத்தியப் பிரதேசம் தான் முதலிடமாம் (2008 இல் மட்டும் உத்திரப் பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது).2012 இல் கொல்லப்பட்ட மைனர்களின் எண்ணிக்கை: 1,597உத்திரப் பிரதேசம் - 449 மகாராஷ்டிரா - 201 பீகார் - 128 டெல்லி - 39 (ஜம்மு & காஷ்மீரில் மட்டும் எந்த மைனரும் கொல்லப்பட்டதாக வழக்கு பதியப் படவில்லை.)2012 இல் சிசுக்கொலை: 81மத்தியப் பிரதேசம் - 17 (2007 இல் 61) உத்திரப் பிரதேசம் - 14  மகாராஷ்டிரா - 11(200...
சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

கட்டுரை, சமூகம்
சித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை தலைமுறையாக கொண்டு வரப்பட்டது. அது பின்னாளில் குடும்ப சொத்தாக கருதப்பட்டு, சுயநலத்துடன் மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் மெல்ல அழியத் தொடங்கியது. பின்னர் நல்லோர் சிலரால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சித்தமருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அந்தத் தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடையவும் தொடங்கியது. ஆயினும் இன்றும் கூட, சிலர் தங்களது சொத்துப்போல் சித்தமருத்துவத்தினைக் கருதுவது சித்தமருத்துவதிற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.சித்த மருத்துவ விழிப்புணர்வை மக்களிடையே இணையம் மூலமாக ஏற்படுத்தும் பதிவர்கள் பலர்  உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களில் பதிவர் சாமீ. அழகப்பனும் ஒருவர். அவரது தளத்தின் பெயர் மச்சமுனி.காம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான மச்ச முனி சித்தரின் பெயரால் ஒரு தளம் இயங்குகிறது என்பது தமிழர்கள் ...
ஐவரிட்ட ஞானம்

ஐவரிட்ட ஞானம்

கட்டுரை, மற்றவை
மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?)விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார்.முதல் நாள் நாடகம் முடிந்ததும் என் நண்பரிடம் என் நடிப்புத் திறமையைப் பற்றிக் கேட்டேன்.“மாப்பிள்ளை மாதிரி பளபளன்னு இருந்தீங்க.”“அலோ நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க. நிச்சயதார்த்தம் தடைப்பட்டவுடன் நல்லா பதட்டப்பட்டேனா!?”“பதட்டமா? நீங்களா!! உங்களால் அதெல்லாம் முடியுமா? சீன் முடியுற வரை சிரிச்ச முகமா தான் இருந்தீங்க.”பதட்டப்படா விட்டாலு...
2500$ பெறுமானமுள்ள படம்

2500$ பெறுமானமுள்ள படம்

கட்டுரை, சினிமா, மற்றவை
சேட்டை படத்திற்கு, "ஆபாசம்.. நாராசம்.. கவிச்சி" என ஏகப்பட்ட அர்ச்சனைகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஒன்பதுல குரு' என சொல்கின்றனர். ஆனால் படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் சேட்டை ஹிந்திப் படமான 'டெல்லி-பெல்லி'யின் ரீ-மேக். அந்தப் படத்தின் அழகான வசனங்களை எல்லாம் வடிகட்டி மொன்னையான படமாக சேட்டையை எடுத்துள்ளனர்."This girl has given me blow job.. I am 21st century man, I have given her oral pleasure also" என வசனம் வரும் ஹிந்திப் படத்தில். அதே வசனத்தை பிரேம்ஜி தமிழில், "உங்க பொண்ணு என்னை ரேப் பண்ணிட்டா" என சொல்வார். காமெடி(!?)யாக இருக்குமோ?  மடுவில் ஆபாசத்தைக் கண்டவர்கள் மலையில் என்னக் காண்பார்கள்?காமெடி என்ற பெயரில் 'ஒன்பதுல குரு' படத்திலும், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திலும் நன்றாக கழுத்தறுத்திருப்பனர். இரண்டுமே வ...
என் காதலியின் தந்தை

என் காதலியின் தந்தை

கட்டுரை, புத்தகம்
மு.கு.: பல நேரங்களில் பல மனிதர்கள் || பாரதி மணிபாபா படத்தில் தான் முதன்முதலில் அவரைப் பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னைப் போல் தான் எமி ஜாக்சனுக்கும் அவரைப் பற்றி அபிப்ராயம்.பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றி சுகாவின் 'மாங்குலை இல்லாத கல்யாணம்' என்ற கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் 'பாட்டையா' என பாரதி மணியைக் குறிப்பிடுகிறார். பாட்டையா என்றால் எனக்கு என்னவென்று அப்பொழுது தெரியாது. அது இசை கட்டுரை என்பதால் கர்நாடக சங்கீதம் பாடுபவரை விளிக்கும் சொல்லென நினைத்துக் கொண்டேன். சுகாவின் அந்தக் கட்டுரையைப் படிக்கச் சொன்னது கவிஞர் பத்மஜா நாராயணன். அவர் சுகாவிற்கு நண்பர். எனக்கும் நண்பர். அதே போல் பாரதி மணிக்கும் நண்பர் எனத் தெரிய வந்தது."தினேஷ...