அலோபதியின் லிமிடேஷனை, பாரம்பரிய மருத்துவத்தோடு இணைத்து ஈடு செய்வதுதான் ட்ரைமெட் தொடங்ககப்பட்டதன் நோக்கம். தனது லட்சியப் பயணத்தில், மேலுமொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது ட்ரைமெட்.
சென்னையைச் சேர்ந்த வலி நிவாரண மருத்துவரான திரு. கார்த்திக் பாபு நடரஜானுக்கு, 'Pain Physician of the Year' எனும் விருது தரப்பட்டுள்ளது. இந்த விருது, 'அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் இன்டர்வென்ஷனல் பெயின் பிசிஷியன்ஸ் (ASIPP)'-இன் தலைவர் டாக்டர் லக்ஷ்மய்யாவால் 2017 ஆகஸ்ட்டில் தரப்பட்டது. இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் உள்ள சிறந்த வலி நிவாரண மருத்துவர்களுக்கு வருடந்தோறும் அளிக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் கார்த்திக் நடராஜன், World Institute of Pain-இன் இந்தியக் கிளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலி நிவாரண மருத்துவத்தையே முழு நேர தொழிலாகக் கொண்டவர்.
வலி நிவாரணம் என்பது மருத்துவத்தின் புதிய கிளையாகும். முதுகு வலி, மூட்டு வலி, விலா நழுவல், முழங்கால் கீல்வாதம் போன்ற பல நோய்களில் இருந்து இம்மருத்துவத்தினால் குணம் அடையலாம். மருந்துகளோ, பிசியோதெர...
ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் - விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது).
ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் இந்தத் தியரி எனினும், குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களது திறனை வளர்க்க இத்தியரியைப் பயன்படுத்தலாம்.
பல்திற அறிவாற்றலை (MI) எட்டாகப் பிரிக்கிறார் ஹாவெர்ட் கார்ட்னர். அவற்றைக் கொண்டு, குழந்தைகளது தனித் திறமையை அடையாளம் கண்டு எப்படி அவர்களது செயல்திறனை ஊக்குவிப்பது எனவும், அப்படி அடையாளம் கண்ட...
விறகு அடுப்பு, மண்ணெண்னை ஸ்டவ், ரம்பத்தூள் அடுப்பு, கரி அடுப்பு, கேஸ் சிலிண்டர், மைக்ரோவேவ் ஓவன், இண்டக்ஷன் ஸ்டவ் என அத்தனையும் பார்த்த ஒரே தலைமுறை என்பதில் எனக்கு எப்போதுமே பெருமைதான். அடுப்புகள் மாறியதால் சமைக்கும் நேரத்தோடு சமையலின் ருசியும் தரமும் குறைந்து போனதென்னவோ உண்மை. போதாத குறைக்கு உடனடி உணவுகள் என்கிற பெயரில் கெமிக்கல் குப்பைகள் நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன. என்ன செய்வது? எல்லோருக்கும் அவசரம். நேரமின்மை.
நாக்கிற்கு ருசியாக, மனதிற்கு இதமாக, உடலுக்கும் தீங்கு விளைவிக்காத ஆரோக்கியமான சமையல் என்பது வீட்டில் சமைத்தால்தான் உண்டு. நம்முடைய இந்திய உணவு வகைகள் எல்லாமே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள், பக்குவம், படிநிலைகள் எனச் சமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடியவை. இதை நினைத்தே பல பெண்கள் அயர்ச்சியாகி இன்ஸ்ட்ண்ட் உணவுகளை நாடுகின்றனர். வார இறுதியில் ஏதாவது ஒரு உணவகம் போய்ப் பிடித்த ...
ஆட்டிச விழிப்புணர்வு வாரத்தின் பொருட்டு, ஏப்ரல் 8 அன்று, ட்ரைமெடும் நியூரோக்ரிஷும் இணைந்து, The Future of Autism Care என்ற கருத்தரங்கை நிகழ்த்தினார்கள்.
ட்ரைமெட்-இல், மனம் மற்றும் மூளைப் பராமரிப்பிற்கான பிரத்தியேக சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளனர். ‘புத்தி (Buddhi)’ என்ற அந்தத் திட்டத்தின் கீழ், வித்யாசாகரிலுள்ள 7 முதல் 21 வயது வரையுள்ள 20 ஆட்டிச சிறுவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்தாற்போல் 7 நாட்கள், ஆயுர்வேதம் (Shriroabhyanga), Acupressure, Refloxology போன்ற 21 வகையான தெரபிகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.ட்ரைமெடின் இந்தச் சிகிச்சை முறையால், குறிப்பிட்டுச் சொல்லும்படியான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த ஆய்விற்கு ஒத்துழைத்த 18 பேரின் முடிவுகள் பின்வருமாறு:
Sleep
Appetite
Behavorial ProblemGood result
15
10
...
மாய வலி என்றால்?
அதற்கு முன் பார் போற்றும் தமிழரான S.ராமச்சந்திரனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ரிச்சார்ட் டாகின்ஸால், ‘நியூரோசைன்ஸின் மார்கோபோலோ’ எனப் புகழப்பட்ட ராமச்சந்திரனுக்கு, 2007இல் இந்திய அரசு “பத்ம பூஷன்” விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது. நரம்பியல் மற்றும் உளவியல் துறையில் இவர் எழுதிய புத்தகங்களின் மூலம் பலருக்கு ஆதர்சமாக விளங்கி வருகிறார். சான் டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
நியூரோகிருஷ் ஒருங்கிணைத்த செமினாரில் கலந்து கொண்ட மருத்துவர் ராமச்சந்திரன், நாள்பட்ட வியாதிகளுக்கு ட்ரைமெட் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த மருத்துவச் சிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்திப் புகழ்ந்தார்.ஒருவரின் கை துண்டிக்கப்பட்டிருந்தாலும், மூளை அதை உணராது அந்தக் கையை அசைக்கும்படி சிக்னல் தந்து கொண்டேயிருக்கும். ஆனால், கண்கள் தரும் பிம்பமோ இல்லாத கையை எப்பட...
‘யாருக்கும் தொந்தரவு தராமல், படுத்தப் படுக்கையாக இல்லாமல், எந்த நோய்நொடியும் அண்டாமல் பட்டுன்னு போய்ச் சேர்ந்துடணும்’ என்ற பிரார்த்தனையைச் செவியுறாதவர்களே இருக்கமாட்டோம். அந்தப் பிரார்த்தனையை அடியொட்டிய மருத்துவ விவாதமொன்றினை ட்ரைமெட்டும் நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தினார்கள். முதியோர் பராமரிப்பைப் பற்றிய TriMed-இன் ‘End of Life Care’ அனுபவத்தை, சம்பந்தப்பட்டவரின் பேத்தியின் ஆடியோவை ஒலிபரப்பி, தங்களது சிகிச்சை முறையை விளக்கினார் மருத்துவர் ஸ்ரீவட்சா. ‘டிக்னிட்டாஸ் (DIGNITAS)’ எனும் நிறுவனத்தைப் பற்றி லண்டன் மருத்துவமனையில் பணி புரியும் நீரஜ் அகர்வால் விளக்கினார். அவர், ‘Oxford Textbook of Neuropsychiatry’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.End of Life Care என்பது, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு எனப் பொருள் கொள்ளலாம். அந்த ஓய்வு பெற்ற ...
இந்தியர்களுக்கு நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளின் மீது ஈடுபாடு குறையவில்லை. பெரும்பாலான அலோபதி டாக்டர்கள் மாற்று மருத்துவத்தை நிராகரிப்பதோடு, அதற்கு எதிரான அபிப்ராயத்தையே வைத்துள்ளார்கள். நியூரோ-சைக்காட்ரிஸ்ட்டான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்திக்கும் மாற்று மருத்துவத்தின் மீது அத்தகைய மனப்பான்மையே இருந்து வந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் மாற்று மருத்துவத்தின் பின்னுள்ள அறிவியலை அறிய விரும்பி ஆய்வினை மேற்கொள்கிறார்.
முடிவாக, ட்ரைமெட் (TriMed) எனும் சிறிய க்ளினிக் ஒன்றைத் தொடங்குகிறார். அலோபதியுடன் ஆயுர்வேதம், யோகா, அக்குபிரஷர், இயற்கை மருத்துவம் (Naturopathy), பிலாட்டிஸ் (Pilates) ஆகியவற்றை இனைத்து ஒருங்கிணைக்கப்பட்ட மாற்று மருத்துவத்தை உருவாக்குகிறார்.பல்வேறு மாற்று மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்ததுதான் அவர் எடுத்து வைத்த முதல் படி. “இத்தகைய ஒ...
'இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு' எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடல் இளைத்தவர்கள் எள்ளை உட்கொண்டால் உடல் தேறுவார்கள் என்றும், உடல் கொழுத்தவர்கள் (தொந்தி போட்டவர்கள்) கொள்ளினைச் சாப்பிட்டால் உடல் இளைப்பார்கள் என்பதும் இதன் பொருள்.
கொள்ளிற்கு உடலின் ஊளைச்சதை மற்றும் கொழுப்பினைக் கரைக்கும் ஆற்றல் உண்டு. இதனால் கொள்ளினை ரசமாகவோ சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவதால் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும் என்பதால் கொள்ளினைக் கொண்டு உடல் பருமனைக் குறைத்திட சூப் செய்யும் முறை ஒன்றினைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
>> கொள்ளு 50 கிராம்
>> வெங்காயம் 100 கிராம்
>> கோழி இறைச்சி 100 கிராம்
>> இஞ்சி 25 கிராம்
>> பூண்டு, உப்பு, கொத்தமல்லி இலை தேவையான அளவு
கொள்ளினை வறுத்துப் பின் நீர் ஊற்றி அவித்துக் கொள்ளவும். இறைச்சியை அவித்தெடுத்த...
பெயர்: மாரடைப்பு (Mycocardial Infarction)
தோற்றம்: இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல்காரணம்:
பிராணவாயு, குளுக்கோஸ் என்பன இதயத்தசையை அடையவிடாது பாதிப்படைவதால்..
காரணிகள்:
>> பரம்பரையில் இந்நோய் உடையவர்களைத் தாக்கும்
>> பால் அடைப்படையில் பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம்
>> வயது கூடக்கூட நாடிச்சுவர் விறைப்பு சுவர்களின் உட்புற கொழுப்பின் ஆவு கூடுவதால்..
>> கீழைத்தேயத்தவர்கள் உணவில் கொழுப்பு அதிகம் சேர்ப்பதால்
>> நீரிழிவு வியாதி உடையவர்களுக்கு
அறிகுறிகள்:
>> நெஞ்சை இறுக்குவது போன்ற வலி
>> மூச்சுக் கஷ்டம்
>> மயக்கம்
>> வாந்தி
>> களைப்பு
>> உடல் வெளிறல்
>> குருதி அமுக்கம் குறைதல்
>> வியர்த்தல்
>> இதயத்துடிப்புக் கூடல்
>> நாடித்துடிப்பு கனவளவு குறைதல்
>> சிறுநீர் க...
பாலில் பெரும்பாலும் பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாக ஆட்டின் பாலையும் அருந்துகின்றனர்.
பாலைப்போல் சத்துள்ள உணவு வேறொன்றும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்பால். பசும்பால் எளிதில் ஜீரணமாகும். எனவே குழந்தைகளுக்கு பசுவின் பாலே சிறந்ததாகும். பல ஆயுர்வேத மருந்து உண்பவர்களுக்கு பசும்பாலே பரிந்துரைக்கப்படுகிறது.
நமது உடலுக்குத் தேவையான புரதம், கனிய உப்புக்கள், கொழுப்பு, கேல்சியம், உயிர்ச்சத்து வகைகள் என்பன அனைத்தும் பாலில் அடங்கியுள்ளன. அதனால் அனைவரும் நாள்தோறும் பிரதான உணவு வகைகளுக்கு மேலதிகமாகக் குறைந்தது ஒரு கோப்பை பாலாவது அருந்த வேண்டும்.
உடலின் சூட்டைப் பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது.
பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா? அதுதான் க...
பாராம்பரிய சீனத்து உனவுகள் நோய்களைத் தடுக்கும், ஆற்றலுடையன.
சிட்டக்கிவகை காளான்களினால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தவை. கிசகா மோரி (Kisaka mori) என்னும் ஜப்பானிய அறிஞர் சிட்டக்கி காளான்களினது நோய் தீர்க்கும் இயல்பை வெளிக்காட்டினார்.
சிட்டக்கி காளான்களிலுள்ள எரிட்ரீன் (Eritasenina) என்னும் பதார்த்தம் குருதிக் கொலஸ்ட்ரோலின் அளவை மிக விரைவாகக் குறைக்கக் கூடியது. இதனைத் தவிர சிட்டக்கி காளான்களின் மருத்துவத்தன்மையான பல்வேறு பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு நோய்களைத் தடுப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
லென்டினன் (Lentinan) என்னும் பதார்த்தம் புற்று நோயைத் தடுக்கக்கூடிய ஆற்றலுள்ளதா எனத் தீவிரமாக ஆராயப்படுகிறது. அதனைவிடக் கொர்டினெலின் (Cortinelin) என்னும் பதார்த்தம் நுண்ணுயிர் கொல்லியாகத் தொழிற்படக்கூடியது. எனவே சிட்டக்கி காளான் உணவுகள், உடல...
மூலிகை என்பது எங்கோ காட்டில் மட்டுமே கிடைக்கும் அபூர்வ வஸ்து என்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை எல்லாம் நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை கவனிப்பதில்லை என்கிறார் திரு.குப்புசாமி அவர்கள்.
"மூலிகை வளம்" குப்புசாமி ஐயா என இணையவெளியில் பிரபலமான திரு.குப்புசாமி அவர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. தற்போது முழுநேரமாக அரிய மூலிகைகளை தேடி சேகரித்து தன் தோட்டத்தில் வளர்த்து வருகிறார். மூலிகைகள் தொடர்பான தன்னுடைய ஆய்வுகளையும் அனுபவங்களையும் அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக நம்முடைய 'இது தமிழ்' வாசகர்களுக்காக மூலிகைகளைப் பற்றிய அறிமுகத்தை "தினம் ஒரு மூலிகை" என்னும் தலைப்பில் தொடராக அளிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் அரிய தகவல்களுடன் "தினம் ஒரு மூலிகை"....
இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:~வயிற்றின் மேற...
சிலர் உடல் பருத்து சதைகள் தொங்கி நடக்கக் கூட சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதே போல் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதை தான் ஊளைச்சதை (Obesity) என்கிறோம்.மேலை நாடுகளில் இது ஒரு சமூக நோயாகக் காணப்படுகிறது. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதால் இது ஓர் சமூக நோயாகக் கருதப்படுகிறது. ஆனால், கீழை நாடுகளில் இது போன்ற பாதிப்புகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படாததால் இதை ஒரு சமூக நோயாகப் பார்ப்பதில்லை. எனினும் இந்நோய் அதிகரிக்காமல் காக்க வேண்டும். எனவே மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப்பட்...