Shadow

Tag: தினேஷ் ராம்

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, மற்றவை
ஞாநி - சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!   எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் தடைகளையும் எதிர்த்து சேர்த்து வைக்கணும். ஆனா அப்படிப்பட்டவர்கள் மிகவும் சிலரே. புதுமைப்பித்தன் கூட ஒரு கதையில் எழுதி இருப்பாரே!! குடிச்சுட்டு கிடப்பாங்களே. அப்படித்தான் ஆகிடும்.    நல்லா படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டேன். ஆனா வேலை கிடைக்கல. வேலைக்காக ஹிண்டு பேப்பர்லாம் பார்த்துட்டிருப்பேன். 'என்ன அப்ளை பண்ணிட்டியான்னு?' என...
நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

அரசியல், கட்டுரை
கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் 'பவர்' அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்திய அரசு.கருணை மனு எழுத, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சட்ட உதவியினை அரசு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த உதவியும் கசாப்பிற்கு அளிக்கப்படவில்லை. தன் கருணை மனுவை தானே எழுதுவது என்பது ஒருவனது மூளையை அவனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்று மிக அபத்தமான செயல்.நவம்பர் 5 ஜனாதி...
காக்கர்லா

காக்கர்லா

கட்டுரை, புத்தகம்
காக்கர்லாவை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு ஒரு வாரமாகவே இருந்தது. ஒரு வழியாக டிசம்பர் 11, 2011 அன்று கிளம்பி அங்கே சென்றே விட்டேன். அங்கே என்பது புக் பாயின்ட் ஹால். அந்த அங்கேவிற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை. குத்து மதிப்பாக ஸ்பென்சர் பிளாசா எதிரில் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பஸ் ஏறி விட்டேன். ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கி, சாலை சந்திப்புகளைக் கடந்து எதிர்புறம் சென்றால், அங்கே இருந்தது மாநகர காவல்துறை அலுவலகம். சரி புக் பாயின்ட் அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம் எங்கேயாவது நகர்ந்து போயிருக்கும் என இருபுறமும் தேடினேன்.  ஆனால் புக் பாயின்ட் கண்ணில் தட்டுப்படவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் நடமாட்டத்தை அங்குக் காண இயலவில்லை. ஏன் புத்தக வெளியீட்டு விழாவை ஞாயிறு அன்று வைக்கிறார்கள்?? அன்றாவது யாரேனும் வரக் கூடும் என்பதாலா!...
மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

மற்றவை
நடு நாயகமாக மனுஷ்ய புத்திரன் வீற்றிருக்க அவரின் இரு பக்கமும் 16 காலி நாற்காலிகள் மேடையில் இருந்தது. உயிர்மையின் ஆதர்ச தொகுப்பாளர் ரோகினி நாற்காலிகளை நிரப்ப ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வெள்ளை பைஜாமாவில் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவை மேடைக்கு அழைத்தார். அரங்க விதிமுறையின் படி மேடையில் எவரேனும் ஏறினால் கை தட்டல் ஒலி எழுந்தது. அப்படியே நாற்காலிகள் கை தட்டலின் ஊடே நிரம்பத் தொடங்கியது. எழுத்தாளர் இமையம் என்று ரோகினி அழைத்ததும், யாராவது எழுகிறார்களா என அனைவரையும் போல அரங்கைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரோ ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையோடு எழுந்து மேடைப் பக்கமாக நடந்தார். சரி அவர் தான் இமையம் போலும் என மெல்ல கை தட்டத் தொடங்கினார்கள். ஆனால் அவரோ தனக்கும் அந்த விழாவிற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தலையைக் குனிந்து கொண்டு மிக அசிரத்தையாகவும், நிதானமாகவும் நகர்ந்தார். மெல்ல எழுந்த கை தட்டல் அ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 7போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், 'நோக்கு வர்மம்' என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் கொன்றனர் என்பது மிகவும் அருவருக்கத்தக்க அல்லது கேவலமான புனைவு. பிரதான சீடரான வெய் ஹூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு போதி தர்மர் இந்தியாவிற்கு கிளம்பி விட்டார். ஆனால் போதி தர்மர் மீண்டும் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு இரண்டுக் காரணங்கள் இருக்கலாம்.ஒன்று போதி தர்மர் இந்தியாவை விட்டு சீனாவிற்கு சென்ற ஆதாரமே நம்மிட...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 6ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் தலைமை குரு திருடர்களைப் பார்த்து, "இந்தப் புனிதமான இடத்தில் சண்டையிடக் கூடாது. புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்கிறார்.திருடர்களின் தலைவர் கேலியாக பிக்குக்களைப் பார்த்து சிரிக்கிறார். தலைமை குரு மண்டியிட்டு திருடர்களின் தலைவர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறார். மற்ற பிக்குகளும் வணங்குகின்றனர். திருடர்களின் பின்னால் போதி தர்மர்...
ஜொள்ளன்

ஜொள்ளன்

கதை, படைப்புகள்
மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை.'இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல' என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார்.திண்ணையை ஒட்டிய சாளரம் வழியாக உள்ளே பார்த்தார். அவர் மனைவி சாளரத்திற்கு முதுகைக் காட்டியது போல் கட்டில் மேல் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்தார்."தூங்கிட்டியா?""இல்ல. ஏன்?""உள்ள புழுங்கல? திண்ணைக்கு வாயேன். பேசிட்டிருப்போம்.""இப்ப அது மட்டுந்தான் குறைச்சல். உங்க கூட சேர்ந்து திண்ணைய தேய்க்க ஆள் யாரும் இன்னிக்கு...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 5'நான் என் சீடனை தேர்வு செய்யணும்' - போதி தர்மர்.'சன் க்வாங்' என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. புத்த மதத்தைத் தழுவி துறவியாக மாறுகிறார்.படத்தில் 'சன் க்வாங்'கின் அறிமுகம் லாங் -ஃபெய் என்னும் மடத்தில் இருந்து தொடங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்கும் சன் க்வாங், தன் கைகளைப் பதற்றமுடன் கழுவுகிறார். அவர் கையில் ஏதோ அழுக்கு உள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சி ஒரு குறியீடு என படுகிறது. தன் கைகளில் படிந்த இரத்தக் கறைகளைக் கழுவ முனைகிறார். அதாவது மனதில் படிந்து விட்ட குற்றவுணர...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 4மனிதனுக்கு அதிசயங்கள் மீதும், ஆச்சரியங்கள் மீதும் அலாதி பிரியம். போதி தர்மர் ஒரு நாணலின் உதவியோடு ஆற்றைக் கடந்தார் என்ற விடயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. மக்களில் சிலர் நம்புகின்றனர். சிலர் நம்ப மறுக்கின்றனர். அதற்கு அவரின் தோலின் நிறமும் காரணமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கவனித்தவாறு வருகிறார் ஹங் சீ. அவர் அப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பெளத்த குரு."நாம் நம் மனதை லாப நஷ்டங்களோடு பிணைத்து கொள்ளக் கூடாது; புகழுக்காக ஏக்கப்பட்டால்.. அவை சுக துக்கங்களைப் பெருக்கி விடும். அதனால் தான் பிக்குகள் உலகாயுத விருப்பங்களில் இருந்து விலகி தூய்மையான மனநிலையை அடைய முனைகின்றனர்" என்று தனது சீடர்களுக்கு அறிவுரைக்கிறார் ஹங் சீ.தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதி தர்மரை தூரத்தில் நின்றவாறு மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் விலக்கியவ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 3போதி தர்மரைக் காண சீன மாமன்னர் வூ விழைகிறார். செருப்பு கூட வாங்க முடியாத அளவு வறுமையில் உள்ளவர்களா இந்தியப் பிக்குகள் என வியந்து போதி தர்மருக்கு ஓர் இணை செருப்பினை அளிக்கின்றனர். போதி தர்மர் அரண்மனை நோக்கி செல்கிறார்.போதி தர்மரும், மாமன்னரும் எதிர் எதிரே அமர்ந்து உள்ளனர். சுவரில் புத்தரின் படம் பெரிதாக வரையப்பட்டுள்ளது. காற்று மெலிதாக வீச, கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகள் ஒலிக்கிறது. மாமன்னர் புன்னகைத்தவாறு ஒலிக்கும் மணியைப் பார்க்கிறார்."காற்று மணிகளை ஒலிக்கச் செய்கிறது.""மாட்சிமைப் பொருந்திய மன்னரின் மனம் அமைதியற்று உள்ளது என நினைக்கிறேன்" என்கிறார் போதி தர்மர்."நீங்கள் சொல்வது சரி தான். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.""தாங்கள் பெளத்தத்தைத் தழுவிய மாமன்னர் என ரொம்ப காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டுள்ளேன். அதனாலேயே பெள...
அடையாளங்கள்

அடையாளங்கள்

கதை, படைப்புகள்
'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!''எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.' 'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வ...
எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

கட்டுரை, புத்தகம்
Exile- அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்ற வெறுப்பு சாருவிற்கு. சாரு நிவேதிதா இதை பலமுறை புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி விட்டார். போன ஆண்டை விட இந்த முறை காமராஜர் அரங்கில் கூடிய கூட்டம் அதிகம். ஆனா சாருவிற்கு வந்தவர்களை விட வராதவர்களைப் பற்றியே அக்கறை. இதுவே கேரளமாக இருந்தால் அவ்வளவு பேர் வந்திருப்பாங்க. இங்க சினிமாக்காரன் பின்னாடி தான் போவீங்க என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். எ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 2'ஜென்' போதனையற்ற 'புத்தம்'. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும்போதிப்பதில்லை. ஜென் என்பது ஒரு தத்துவ விசார முறைமையோ அல்லது வாழ்வியல் நடைமுறைகளைச் சொல்லும் சித்தாந்தமோ அன்று. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே ஜென். அது தனித்துவமான மனோதளத்தை நம்முள்உருவாக்கும். ஆனால் அது பிறர் சொல்லக் கேட்டு உருவாகாது.  பூ மலர்வது போன்று அனிச்சையாக உள்ளுக்குள் நிகழும் அக விழிப்பு அது. எப்படி ஜென்னில் போதனைகள் இல்லையோ அதே போல் வழிபாட்டுச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கிடையாது. எனவே ஜென் மதம் கடந்தது என சொல்லலாம்.போதி தர்மர் ஒருமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருக்கிறார். சின் மோன் சில பிக்குகளுடன் அம்மரம் அருகே வருகிறான். போதி தர்மர் தியானத்தில் இருப்பதைப் பார்த்தவாறே, "உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். தாமரை சேறுநிறைந்த குளத்தில் மலர்கிறது....
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா: மாஸ்டர் ஆஃப் ஜென் - 167 வருடங்களுக்குப் பிறகு, குருவின் கட்டளையை நிறைவேற்ற போதி தர்மர் சீனா கிளம்புகிறார். அவரது வயோதிகத்தைக் காரணம் காட்டி அவரது பயணத்தை ரத்து செய்யும் படி, அப்போதைய மன்னரான போதி தர்மரின் அண்ணன் மகன் வேண்டுகோள் விடுக்கிறார்."நான் என் சீடனை தேர்வு செய்யணும்" என்று நிறுத்தி விட்டு, "சீனாவில் ஜென்னைப் பரப்ப வேண்டியது என் கடமை" என்று மன்னனின் வேண்டுகோளை மறுக்கிறார் போதி தர்மர்.தர்க்கப்படி போதி தர்மர் 'ஜென்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. 'ஜென்' என்பது 'சேன் (Chan)' என்ற சீன வார்த்தையின் ஜப்பானிய உச்சரிப்பு ஆகும். Chan என்ற வார்த்தையோ 'தியான(ம்)' என்ற சமஸ்கிருத வார்த்தையின் தழுவல். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் பதஞ்சலி என்பவர் இயற்றிய யோக சூத்திரத்தில் வரும் அட்டாங்க யோகத்தின் 8 படிநிலைகளுள் ஏழாவது தான் தியானம் ஆகும். ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான "ஜென்"னைத் தோற்றுவித்தவர். 'தனித்திரு; பசித்திரு; விழித்திரு' என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான் போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத் தொற்றுநோயையும் தடுக்க அன்று.1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட 'மாஸ்டர் ஆஃப் ஜென்' என்ற படம் போதி தர்மரை நெருக்கமாக உணர உதவுகிறது. உண்மையிலேயே போதி தர்மரைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம். படத்தின் தலைப்பு தோன்றும் முன்பே.. போதி தர்மரைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஷவோலின் மட பிக்குகளுக்கு 'குங் ஃபூ' கற்று தந்தார் என்றாலும், போதி தர்மரின் தனித்துவம் ஜென் கோட்பாடுகளைப் போதித்ததிலியே இருந்தது என்கிறது வாய்ஸ்-ஓவர். சீன ப...