Shadow

Tag: நிகில்

ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review

ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapaadanum review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திருமலை புரொடக்ஷன் தயாரிப்பில், சுகவனம் எழுதி இயக்கியிருக்கும் படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' ஆகும். கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் ஓர் உலக சினிமாவாக உருவாகியுள்ளது இந்தப் படம். சிறுவயதில் கிணற்றில் விழுந்த தன் மகன் உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை ஒண்டிமுனிக்கு நேர்ந்து விடுகிறார் நல்லபாடன். ஆனால் இரு பண்ணாடிகளின் அதிகார மோதலால் பல வருடங்களாக அந்த ஒண்டிமுனி கோவில் திருவிழா நடக்காமலே இருக்கிறது. காலம் உருண்டோட அந்த மகன் இளைஞனாகிப் படித்து முடித்து வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்த நேர்ந்து விட்ட ஆட்டை ஒண்டிமுனிக்குப் படைப்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் அந்த ஆட்டை ஒண்டிமுனிக்கு படைத்தாரா, அந்தப் பண்ணாடிகள் மோதல் ஊரை எப்படி பாதிக்கிறது, திருவிழா நடந்ததா என்பதே மீதிக்கதை. பல படங...
நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

நிர்வாகம் பொறுப்பல்ல – மோசடி பேர்வழிகளிடம் உஷார்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும் நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர். மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்விழாவில் பேசிய நடிகர் பிளாக் பாண்டி, ''நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்குக் கட்டணம் செ...
கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் | Christina Kathirvelan review

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் | Christina Kathirvelan review

சினிமா, திரை விமர்சனம்
கும்பகோணம் நிலப்பரப்பில் நடக்கும் கதை. கதையின் நாயகன் கெளசிக், நாயகி பிரதீபா இருவருக்கும் ஒருவர் மீது ஒவருக்கு சின்னதாக ஈர்ப்பு இருக்கிறது. ஆனாலும் இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பிரதீபா, தமது குடும்பச் சூழலுக்கு காதல் செட்டாகாது என முடிவு செய்து நாயகனை விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார். இச்சூழலில் கெளசிக்கின் நண்பனுக்கும், பிரதீபாவின் நண்பிக்கும் காதல் திருமணம் நடக்கிறது. இந்தக் காதல் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்வதில் ஒரு குளறுபடி ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் குளறுபடி என்ன என்பதும், அதன்பிறகு நாயகன் நாயகிக்கு காதல் மலர்ந்ததா என்பதுமே படத்தின் திரைக்கதையாக பயணிக்கிறது. பார்ப்பதற்குத் தென்மேற்கு பருவக்காற்று விஜய் சேதுபதி சாயலில் இருக்கிறார் நாயகன் கெளசிக். இயல்பான நடிப்பும் அவருக்கு கை கொடுக்கிறது. எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் திண்டாடுகிறார்...
“படையாண்ட மாவீரா: அறம் சுமந்த ஒருவனது வரலாறு” – கெளதமன்

“படையாண்ட மாவீரா: அறம் சுமந்த ஒருவனது வரலாறு” – கெளதமன்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், “தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு ...
“சினிமா: ரத்தமும் கண்ணீரும் வியர்வையும் கலந்த பிம்பம்” – வைரமுத்து

“சினிமா: ரத்தமும் கண்ணீரும் வியர்வையும் கலந்த பிம்பம்” – வைரமுத்து

சினிமா, திரைச் செய்தி
இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ''கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், ...
படையாண்ட மாவீரா – தயாரிப்பாளர்களின் குரல்

படையாண்ட மாவீரா – தயாரிப்பாளர்களின் குரல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ''செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக வெளியிடுகிறோம். இந்...
“காடுவெட்டி குரு என்பவர் யார்?” – பாலமுரளி வர்மா | படையாண்ட மாவீரா

“காடுவெட்டி குரு என்பவர் யார்?” – பாலமுரளி வர்மா | படையாண்ட மாவீரா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ''ஒரு திரைப்படம் வெள்ளைத்தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்தத் திரைப்படத்தின் பணிகளைத் தொடங...
“குமார சம்பவம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்” – கே.ஜி.கணேஷ் | Venus Infotainment

“குமார சம்பவம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன்” – கே.ஜி.கணேஷ் | Venus Infotainment

சினிமா, திரைச் செய்தி
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார். நடிகர் குமரவேல், ''இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள் என அவரிடம் கேட்டேன் அவர் 'யாத்திசை' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் என்று சொன்னவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில் அந்தத் திரைப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி...
Lokah Chapter 1: Chandra விமர்சனம்

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி நாச்சியப்பா கெளடாவிற்குச் சந்திரா மீது சந்தேகம் வருகிறது. மனித உடலுறுப்புகளை விற்கும் அமைப்பினர், சந்திராவையும் சன்னியையும் துரத்துகின்றனர். அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே படத்தின் முடிவு. இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கெளடாவாக சாண்டி மாஸ்டர் மிரட்டியுள்ளார்...
அர்ஜுன் – அபிராமி – ப்ரீத்தி முகுந்தன் | AGS 28

அர்ஜுன் – அபிராமி – ப்ரீத்தி முகுந்தன் | AGS 28

சினிமா, திரைத் துளி
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, 28 ஆவது படைப்பாகக் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை, பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 'ஏஜிஎஸ் 28' என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்க...
“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie

“கணக்கு எப்படி இருக்க?” – உதயா உற்சாகம் | Accused movie

சினிமா, திரைச் செய்தி
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான திரைப்படம் அக்யூஸ்ட் ஆகும். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக் குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழாவினை வடபழனி பரணி ஸ்டூடியோவில் நடத்தினர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என்.பன்னீர்செல்வம், ”படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது உதயாதான். இந்தப் படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும் உதயாவிற்கும் நன்றி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையத் திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவ...
பேய் கதை – குதூகல த்ரில்லர்

பேய் கதை – குதூகல த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. நடிகை ஆஷ் மெலோவிற்குத் தமிழில் வெளியாகும் முதற்படம் இது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, படத்தின் இசை & முன்னோட்டத்தை வெளியிடப் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். படத்தின் இயக்குநர் ஜீன் மோசஸ், '''பேய் கதை' கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். த்ரில்லர், காமெடி, சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு த்ரில்லிங்கான தருணமாக இருக்...
Chennai Files முதல் பக்கம் விமர்சனம்

Chennai Files முதல் பக்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் எனப் பொருள்படும். க்ரைம் நாவல் எழுத்தாளரின் வாழ்க்கையைப் பற்றி ஒரு பத்திரிகையில் தொடராக எழுத முடிவு செய்யப்படுகிறது. அதற்கு உதவுவதற்காக எழுத்தாளரின் மகனான பிரபாகரன் சென்னைக்கு வருகிறார். சூளைமேட்டு காவல் நிலைய ஆய்வாளரான ராமையாவிற்கு வழக்குகளில் உதவுகிறார். சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளின் சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க உதவுகிறார் வெற்றி. சிங்கப்பூர் ஆணழகன் பட்டத்தை வென்ற மகேஸ்வரன் தேவதாஸ், இப்படத்தை இயக்கி வில்லனாக நடித்துள்ளார். சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற குறை எழுந்தாலும், வில்லனுக்கான கம்பீரமான உடற்தோற்றத்தால் சமாளித்துவிடுகிறார். பிரபாகரன் பாத்திரத்தில் நடித்த வெற்றி நாயகனாக இருந்தாலும், ஆய்வாளர் வேடத்தில் நடித்துள்ள தம்பி ராமையா படத்தை நகர்த்திச் செல்பவராக உ...
அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

அக்யூஸ்ட் விமர்சனம் | Accused review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கணக்கு என்றழைக்கப்படும் கனகு சுப்புரத்தினத்தைப் புழல் சிறைச்சாலையில் இருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் காவலர்கள். கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் கணக்கை வழியிலேயே கொல்வதற்கு ஒரு கூலிப்படையும், என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் முயற்சி செய்கிறது. யாரிந்தக் கணக்கு, அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா என்பதே படத்தின் கதை. குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, உடன் செல்லும் காவலர்களில் ஒருவராகச் செல்லும் வேந்தன் பாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார். உயரதிகாரிகளின் அழுத்தத்தையும் மீறி எப்படியாவது கனகை உயிருடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நினைக்கிறார். பயணத்தில், ஏதோ ஒரு புள்ளியில், மலர் என பச்சை குத்திக் கொண்டிருக்கும் கனகு மீது ஒரு சாஃப்ட் கார்னர் வேந்தனுக்கு உருவாகி விடுகிறது. கனகுவின் காதல் மீதும் சிறு அபிமானம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல்,...
தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review

தலைவன் தலைவி விமர்சனம் | Thalaivan Thalaivi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆகாச வீரன் எனும் பரோட்டா மாஸ்டர், தன் மனைவி பேரரசிக்கும், அம்மாவான பொட்டுக்கும் இடையில் சிக்கிப் படாதபாடுபடுகிறான். அவனது பாடு, அல்லது எந்தவொரு கணவனின் பாடும், ஒரு முடிவே இல்லாத பயணம் என்பதைப் படம் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. படம் முழுவதும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றது. அவ்வளவு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். அத்தனை பேருக்கும் படத்தில் ஒரு தனித்த அடையாளமும், திரைக்கதையில் ஒரு சின்ன பங்கும் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ்க்கு, மனிதர்களைக் கூட்டி, அவர்கள் மூலமாக உறவுகளைப் பற்றிப் பேசுவது கைவந்த கலையாகிவிட்டது. இப்படத்தின் குறை, ஆகாச வீரனாக வரும் விஜய் சேதுபதி நிறையப் பேசுகிறார், அதையும் சத்தமாகப் பேசிக் கொண்டே உள்ளார். பேரரசியாக நித்யா மேனன் கலக்கியுள்ளார். அவர்களது மகள் குட்டிச் சிறுமியாக நடித்திருக்கும் மகிழினி ஷோ-ஸ்டீலராக அசத்தியுள்ளார். பாதி மொட்டைய...