Shadow

சினிமா

போதை ஏறினால் புத்தி மாறும்

போதை ஏறினால் புத்தி மாறும்

சினிமா, திரைத் துளி
சில மனிதர்களின் வாழ்வில், போதை மயக்கம் முக்கிய பங்கினை வகிக்கிறது. அது அம்மனிதர்களின் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் திசை திருப்புகிறது. இந்த மாதிரி விஷயங்களை தீவிரமாகப் பேசும் ஒரு படம் தான் 'போதை ஏறி புத்தி மாறி'. 'ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ்' சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே பி இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள். படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக இது இருக்கும். குறும்படங்களில் நாயகனாகக் கலக்கிய தீரஜ் இந்தப் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். "தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாகப் பணியாற்றினோ...
சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் "மிஸ்டர் லோக்கல்". "இந்தப் படத்துக்காக பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு "மிஸ்டர் லோக்கல்" என்கிற தலைப்பு தான் பொருத்தும் என்பது எங்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாகும். எங்கள் கதாநாயகன் சிவகார்த்திகேயன் திரையில்தரும் சக்தி மிகவும் பாசிடிவ் ஆனது. அவரது எனர்ஜியைப் பார்க்கும் போது, அவருடன் போட்டிப் போடவேண்டும் என்கிற ஆசை ஒரு இயக்குநராக எழுந்தது. கதாநாயகி நயன்தாரா ஒரு அதிசயம். திரையில் அவர் அற்புதங்கள் செய்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களுக்கு ஒரு மிகப் பெரிய தூண். அவரது செயல் திறனும், ஒரு கடை நிலை தொழில்நுட்பக் கலைஞரிடம் கூட அவர் வைத்து இருக்கும் தொழில் ரீதியான உறவு அவரது வெற்றிக்கு விதை என்றால் மிகை ஆகாது. 'மிஸ்டர் லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் ...
இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர்

இளையராஜா 75இல் எல்.கே.ஜி. ட்ரெய்லர்

சினிமா, திரைத் துளி
நகைச்சுவை யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டிப் படங்களை எடுக்க நல்ல கதை தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களைச் சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான "எத்தனை காலம் தான்" பாடல் நம்பமுடியாத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது யூ-ட்யூப் பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களைக் கொண்டிருந்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.  இது குறித்து இயக்குநர் கே.ஆர்.பிரபு கூறும்போது, "ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், ட்ரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்த...
மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'Queen of Scots: The True Life of Mary Stuart' என்ற ஜான் கை-யின் (John Guy) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம் இது. 15 வது வயதில் கல்யாணமாகி, 16 வது வயதில் தாய்நாடான ஃபிராண்ஸின் மகாராணியாகி, 18 வயதில் விதவையாகி, மறுமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனது தந்தை நாட்டிற்குத் திரும்பி, ஸ்காட்லாந்தின் ராணியாகப் பதவியேற்கிறார் மேரி ஸ்டூவர்ட். அவரது சகோதரி முறையுடைய மணமாகாத எலிசபெத் I, இங்கிலாந்தின் ராணியாக உள்ளார். மேரியின் வரவால், எலிசபெத்தின் அரியணைக்கு ஆபத்து வரலாமென எச்சரிக்கப்படுகிறார். ஏனெனில் மேரிக்கும் அதற்கான உரிமையுண்டு. கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மேரியை, ஸ்காட்லாந்து ப்ரொடஸ்டன்ட்ஸ் ராணியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், ஒரு பெண் ஆள்வதா என்றும் உள்ளுக்குள் புகைச்சலோடு உள்ளனர் ஆண்கள். எனவே மேரிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து கலகங்களை உருவாக்கி வருகிறார...
எஸ்கேப் ரூம் விமர்சனம்

எஸ்கேப் ரூம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பைக் கொண்டே படத்தின் கதையைச் சுலபமாக யூகித்துவிடலாம். ஜோ, பென், அமாண்டா, மைக், ஜேசன், டேனி ஆகிய ஆறு பேரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கின்றனர். அங்கு ஒரு க்ளூ கிடைக்கும். அதை உபயோகித்துத் தப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மரணம் உறுதி. அதிலிருந்து எத்தனை பேர் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. நெருப்பைக் கக்கும் ஓவனாக மாறும் அறை, உறைய வைக்கும் பனியைக் கொண்ட அறை, நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறை, விஷ வாயு பரவும் அறை, புத்தியைப் பேதலிக்க வைக்கும் அறை, ஆளை நசுக்கும் சுவர்கள் கொண்ட அறை எனப் படத்தில் வரும் ஒவ்வொரு அறையும் மரண பயத்தைக் காட்டுவன. குறிப்பாக நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறையின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைக்கும் நேர்த்தியும் அழகும் கொண்டது. அங்கு அனைத்துமே தலைகீழாக இருக்கும். மின்விசிறி தரையிலும், மேஜை நாற்காலிகள் அந்தரத்தில் தொங்கியவண்ணமும் இருக்கும். பனிவெள...
நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

நெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்

சினிமா, திரைத் துளி
ஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் K.ஜோதிபிள்ளை, சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "நெஞ்சில் ஒரு ஓவியம்". கதாநாயகனாகத் தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் K.ஜோதிபிள்ளை, "இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது. இந்தப் படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரைச் சுற்றித்தான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும். ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெயின்ட்டிங் துறையில் மிகப்பெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண...
அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி

சினிமா, திரைத் துளி
ஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க, பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “அர்ஜுன் ரெட்டி". தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.படத்தைப் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி, "தெலுங்கில் 'துவாரகா' என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படத்தைத்தான் தமிழில் 'அர்ஜுன்ரெட்டி' என்ற பெயரில் தயாரித்துள்ளோம். அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே! நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின்...
சகா விமர்சனம்

சகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ். சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஷபீரின் இசையில், 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆரோஹ...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வ...
பேரன்பு விமர்சனம்

பேரன்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பனிமூட்டம் நிறைந்த அந்தப் பரிசல் பயணத்தில் மம்மூட்டி தன் கனத்த குரலில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று சொல்லி தனது கதையைச் சொல்லத் துவங்கி இயற்கை பேரன்பாலானது என்று முடிக்கும் போது உண்மையில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று புலனாகிறது. மூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண்ணை தனி ஆளாக தகப்பனாக நின்று தாங்குகின்ற ஒரு மனிதனின் பெருங்கதை தான் பேரன்பு. ஒரு பதின்ம வயதுப் பெண்ணிற்கு அவளது மாதவிலக்கின்போது 'பேட்' மாற்றுவதிலிருந்து, மூளை முடக்குவாதமே வந்தாலும் உடல் தினவுகள் அவர்களையும் விட்டு விடுவதில்லை என்றறிந்து தன் மகளின் உடல்பசியைத் தீர்க்க எவரேனும் கிடைப்பார்களா என்று ஒரு தகப்பனாக யாசிப்பதென்று பேசாப்பொருளைப் பேசும் படம் உலுக்கி விடுகிறது ஆன்மாவை. 'மூளை முடக்கு வாதம் வந்த அல்லது உடல் குறைபாடுள்ள மனிதர்களிடம் இனியாவது பேரன்போடு நடந்து கொள்ளுங்கள் பதர்கள...
கண்ணே கலைமானே  – மனித உறவுகளைப் பற்றிய படம்

கண்ணே கலைமானே – மனித உறவுகளைப் பற்றிய படம்

சினிமா, திரைத் துளி
'கண்ணே கலைமானே' படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகிறது. நடிகரும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இந்தப் படத்தின் எல்லா கிரெடிட்டும் இயக்குனர் சீனு ராமசாமியைத்தான் சாரும். நாம் கிராமப்புறத்தை, மக்களை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ நேட்டிவிட்டி திரைப்படங்களைப் பார்த்திருக்கிறோம். என்றாலும், சீனு ராமசாமி சார் தனது தனித்துவமான கதைக்களத்தால் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் மோதல்கள் உண்மையான வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. எதிர்காலத்தில் சீனு சார் படங்களில் நடிக்கிறேனோ இல்லையோ, ஆனால் அவரது ஸ்கிரிப்டை முதல் ஆளாக கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் அதுவே ஒரு அழகான செயல்முறை. அவர் மெதுவாக அவரது உலகிற்குள் நம்மைக் கடத்தி விடுகிறார். அவரது கதாபாத்திரங்கள் உடன் நாம் பயணித்த அனுபவத்தை அளிக்கிறது" என்றார். மேலும் அவர் கூறும்போது, "ஆரம்பத்தில், சீனு ராமசாம...
அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

சினிமா, திரைத் துளி
யூட்யூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூட்யூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் திரைப்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஆர்வா-விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்வா, இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்தத் திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகரும் ஹரிஷ் ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர். இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர். அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர், 'சிகரம் தொடு' திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக வ...
‘ரீல்’ – காதல் படம்

‘ரீல்’ – காதல் படம்

சினிமா, திரைத் துளி
கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும், அதன் வார்ப்புமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தைத் தீர்மானிக்கிறது. கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களைத் தமிழ் சினிமா நிறையக் கண்டுள்ளது. இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேரத் தயாராகயிருக்கிறது "ரீல்". "காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்குப் புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றைத் தனித்துக் காட்டுகிறது. இப்படத்தின் தலைப்பான "ரீல்" என்பது எதற்காக என்று கேள்விக்குப் படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜும் அவந்திகாவும் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர நடிகராகவும் தன் திறமையை வெளிபடுத்தியுள்ளார். படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும்...
சிவபக்த அகோரியாக ஜாக்கி ஷெராப்

சிவபக்த அகோரியாக ஜாக்கி ஷெராப்

சினிமா, திரைத் துளி
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப். "இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். இயக்குநர் கஸ்தூரிராஜா கதையைச் சொன்னவுடன் இது எனக்குப் புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓகே சொன்னேன். ஆரண்ய காண்டம், மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும். இயக்குநர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்தக் கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை ட்ரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார். சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நி...