Shadow

திரைச் செய்தி

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

சினிமா, திரைச் செய்தி
நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி. “திரைப்படக் கல்லூரியில் இருந்துவரும் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தை வைத்து இயக்குவதுதான் கனவாக இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும், அவர் அலுவலகம் இருக்கும் ராஜாபாதர் தெருதான் அவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கும். திரைப்பட கல்லூர் ம...
ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே நடித்திருந்தார். படத்தின் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன். இவர் பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைக்காலஜிக்கல் த்ரில்லர்’ படம் என்பதால், படத்தின் பின்னணி இசையும் இணைந்து படத்தில் கதை சொல்ல வேண்டும். அதை அற்புதமாகச் செய்துள்ளாராம் எல்.வி.கணேசன். இப்படம் வெளிவந்த பிறகு, எல்.வி.கண...
“பேய் இருக்கு!!”

“பேய் இருக்கு!!”

சினிமா, திரைச் செய்தி
சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர். பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை பலதரப்பட்ட பின்னணியுடையடவர்களுக்கு மின்னஞ்சல் செய்து, அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் “இருக்கு ஆனா இல்ல” படத்தின் இயக்குநர் கே.எம்.சரவணனைத் தேர்வு செய்துள்ளனர். 100 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயகி மனிஷா. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஷமீரையும் அப்படித...
ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

சினிமா, திரைச் செய்தி
ஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு. கன்னடத்தில் 38 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதற்படம் “பிரம்மன்”. கமல ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மம்மூட்டி என பலரை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர் இவர்தான். வாய்ப்புத் தேடிய இயக்குநர் சாக்ரடீஸின் கதை பிடித்துவிட, “ஹீரோ யார்” எனக் கேட்டுள்ளார். “சசிக்குமார்.” “அவரது கால்ஷீட் வாங்கிட்டு வாங்க. அதுவரை வெயிட் பண்றேன்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மஞ்சு. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி போன்ற படங்களில் பணியாற்றியிருந்த இயக்குநர் சாக்ரடீஸுக்கு, சசிக்குமாரைச் சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை. சசிக்குமாரின் ஆசிரியர்கள் இருவரை தூது விட்டிருக்கிறார். எடிட்டர் ராஜா முகமதுவும் சசிக்குமாரிடம் பேச 2 வருடக் காத்திருப்பு ஒருவழியாக முடிந்துள்ளது. “சசிக்குமார் ஒரு இரும்புக் கோட்டை போல! மற்றவர்களுடன...
“என் மூலதனம்” – கமல்

“என் மூலதனம்” – கமல்

சினிமா, திரைச் செய்தி
‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். “நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த ஒரு நடிகைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு லகர, ளகர உச்சரிப்பு சரியா வராது. ஆனா ஆண்ட்ரியா அச்சரம் பிசகாம உச்சரிக்கிறாங்க. முதல்முறையாக ஒரு ஆர்டிஸ்டுடன் வேலை செய்த திருப்தி கிடைத்தது. ஷூட்டிங்கின் பொழுது மொபைலில் ஏதோ கேட்டுட்டே இருப்பாங்க. என்னன்னு கேட்டப...
வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா, திரைச் செய்தி
“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா. “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் தீம் மியூசிக் படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியுள்ளதாக இயக்குநர் சிவாவும் இசையமைப்பாளருக்கு நன்றியினைச் சொல்லிக்கொண்டார்.“எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கு அஜித் சார் படத்தில் வொர்க் பண்ணணும் என்பது தான் அந்தக் கனவு. அது நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். 110 நாள் ஷூட்...
திருமணம் எனும் நிக்காஹ் – இசை வெளியீட்டு விழா

திருமணம் எனும் நிக்காஹ் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
‘திருமணம் எனும் நிக்காஹ்’ நகைச்சுவை கலந்த காதல் படம். இந்து மத மற்றும் இஸ்லாம் மத திருமணச் சடங்குகளும் கலாச்சாரங்களும் படத்தில் அதன் அழகியலோடு பதியப்பட்டுள்ளதாம்.“படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப.. ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற வீட்டிலிருந்த இன்விடேஷனில் பார்த்தேன். கொஞ்சம் உல்டா பண்ணி ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என மாத்திட்டேன். இந்தப் படத்தில் ஒரு அரசியல் வச்சிருக்கோம். அதாவது சகோதரத்துவத்துடன் இருவரும் இருக்கலாம் என்பதை.. ரொம்ப சிக்கலாக புனித நூல் கொண்டுலாம் சொல்லாமல் திருமணத்தில் வைக்கப்படும் உணவை வச்சியே சொல்லியிருக்கோம் ” என்றார் இயக்குநர் அனிஸ்.“இரண்டு கலாச்சாரங்களை இசையால் பிரதிபலிக்க ரீ-சர்ச் பண்ணி இந்தப் படத்திற்கு மியூசிக் பண்ணியிருக்கேன். அதனால இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான லோகநாதனைப் பரி...
“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக்

“தூம்: 3” – அமீர், காத்ரீனா, அபிஷேக்

சினிமா, திரைச் செய்தி
டிசம்பர் 20 அன்று உலகெங்கும் 4800 ஸ்க்ரீனில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 200 ஸ்க்ரீன்களுக்கு படம் திரையிடப்படுகிறது. தமிழில் ‘டப்’ செய்யப்படும் முதல் அமீர்கான் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி தமிழ்ப்படங்களான ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘பிரியாணி’யுடன் களத்தில் இறங்குகிறது. படத்தின் பிரமோஷனுக்காக நேற்று சில மணி நேரங்கள் சென்னை வந்து சென்றனர் படக்குழுவினர்.காத்ரீனா கைஃப் மற்றும் அபிஷேக் பச்சனுடம் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் அமீர்கான். ‘கஜினி, 3 இடியட்ஸ்’ போன்ற முழு கமர்ஷியல் படங்கள், பின் சமூக அக்கறையுள்ள படங்கள் என தான் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறும் அவர், ‘நான் எதையும் திட்டமிடுவதில்லை. இந்த நொடி வாழ ஆசைப்படுறேன். எனக்கு தூம்:3 இல் இந்த பாத்திரம் பிடிச்சிருந்தது பண்றேன். வித்தியாசமான பாத்திரங்களில் பண்ணணும் என தேடிப் பண்ணுவதில்லை. ஆனால் ஒரே மாதிரி கதாபாத்த...
பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா

பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
விழா தொடங்கும் முன், ஃபியட் கார் வைத்திருப்பவர் சிலரின் அனுபவங்களைக் காணொளியாகப் போட்டனர். ‘ஃபியட் கார்களுக்கு உயிருண்டு. நம்முடன் அவை ஒரு பந்தத்தை உருவாக்கி விடும்’ என காரின் மீதுள்ள காதலோடு அவர்கள் கண்கள் மலரப் பேசினார்கள்.படத்தில் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்களை கவிஞர் வாலியும், மீதி இரண்டு பாடல்களை படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் எழுதியுள்ளனர். இசையமைப்பாளரைப் பார்க்க பள்ளி மாணவனைப் போல உள்ளார். அடுத்த படத்திற்கும் தன்னை வந்து பார்க்கச் சொன்ன கவிஞர் வாலியை மிகவும் மிஸ் செய்வதாக விழாவில் சொன்னார் ஜஸ்டின்.‘உனக்காகப் பிறந்தேனே  எனதழகா பிரியாமல் இருப்பேனே  பகல் இரவா’ எனத் தொடங்கும் ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். பண்ணையாரான ஜெயபிரகாஷுக்கும், அவரது மனைவியான துளசிக்கும் இடையே உள்ள காதலையும் அன்னியோன்னியத்தையும் பிரதிபலிக்கும் பாடலாகப் பிரமாதமாக உள...
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை விட்டுட்டார்” என்றார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.“செல்வராகவன் படம் ஒவ்வொன்னும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருக்கு அவரே தான் போட்டி. இந்தப் படத்தில் என்னப் பண்ணியிருக்கார்னு பார்க்க.. சினிமாவை சேர்ந்த டெக்னிஷீயன்ஸே ஆவலாக வெயிட் பண்றாங்க. ஆர்யா.. இப்ப தான் ‘நான் கடவுள்’ பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் இன்னொரு பெரிய கேரக்டர். அவரை நீங்க தினமும் காலை மகாபலிபுரத்தில் பார்க்கலாம். உடலை ஃபிட...
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.“எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான். ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். என்னமோ குறையுதே சார்ன்னு நான் கேட்டேன். ஃபைனல் எடிட்டிங் பண்ணிட்டா நல்லா இருக்கும். ஒரு முக்கியமான ஆளுக்காக வெயிட் பண்றேன்.. அவர் வர ரெண்டு நாள் ஆகும் என்றார். அப்புறம் ஃபைனல் எடிட்டிங் முடிஞ்சு நானும், ரஜினி சாரும் கேட்டோம். அட்டகாசமாக இருந்தது. யாரந்த முக்கியம...
“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழாபூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான படமிது. தமிழர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவங்க. நான் பெங்களூரில் ஒரு நண்பரிடம், “தனியா இருக்கீங்களா கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா!?” எனக் கேட்டேன். “கூட்டுக் குடும்பமா...
“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் தனுஷ். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது பதிமூன்று வருட காத்திருப்பு என்கிறார். 50 அடி ஆழக் கடலினுள் நடப்பது, நமீபியா பாலைவனங்களில் வெறும் காலுடன் நல்ல வெயிலில் நடப்பது என தனுஷை இயக்குநர் பரத்பாலா சக்கையாகப் பிழிந்துள்ளார்.    “எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல சிறுத்தை வரும். அது எப்படி எடுத்தாங்கன்னா.. சிறுத்தை ஓடிடக் கூடாதுன்னு பெரிய கூண்டு ஒன்னுப் போட்டுட்டாங்க. ஒன்னு இல்லை மூனு சிறுத்தை. சும்மா கொஞ்ச நேரம் எடுக்கல. காலையில் தொடங்கி மாலை வரை, ரொம்ப கஷ்டம். ‘சீக்கிரம் மறைஞ்சுடுப்பா’ என நான் சூரியனை வேண்டிக்கிட்டேன்.    கேமிராவைக் கூண்டுக்கு வெளில வச்சுட்டாங்...
சேட்டை – இசை வெளியீட்டு விழா

சேட்டை – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
"எனக்கு மொழி தெரியாததால் இங்க என்ன நடக்குதுன்னு புரியலை. ஆனா இந்தப் படத்தை எப்படி ஃபேமிலி சினிமாவாக மாத்த முடிஞ்சதுன்னு தெரியலை" என ஆச்சரியமாகக் கேட்டார் 'டெல்லி பெல்லி' படத்தின் கதாசிரியர் அக்ஷத் வெர்மா.சம்பிரதாய நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த விழா கானா பாலா கையில் மைக் கிடைத்ததும் கலகலப்படைந்தது. "எனக்கு இந்தப் படத்தில் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் பெயர் கூட சரியா வாயில நுழையலை. ஏதோ ஸ்குரூவாலான்னு சொல்றாங்க. தமண் அண்ணன் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதணும்னு சொல்லி லேப்டாப்பைத் திறந்து காண்பிச்சார். நிறைய கெட்டவார்த்தைங்க இருக்கிற படமாச்சேன்னு நான் திற்க்கவே வேணாம்னு சொல்லிட்டேன். நானே இப்ப தான் சினிமால பாட்டு எழுத ஆரம்பிச்சிருக்கேன். கெட்ட வார்த்தைல பாட்டு எழுதி.. எனக்கும் தடைப் போட்டாங்கன்னா நான் என்னப் பண்ணுவேன்? அப்புறம் சீன் சொன்னாங்க. காதலிச்சு பொண்ணு ஏமாத்திட...