Shadow

திரை விமர்சனம்

ஈட்டி விமர்சனம்

ஈட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை. புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் அக்குறையும் கலையப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாய் அனைவரையும் கவர்கிறார். சிறந்த துணை நடிகராய்த் தன்னை நிரூபித்து வரும் ஆடுகளம் முருகதாஸை அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ரவி அரசு. காட்சிகளின் நீளத்தை அதிகரிக்கவே அவர் பயன்பட்டுள்ளார். கதையோடு பொருந்தாமல், துருத்திக் கொண்டிருக்கும் சில காட்சிகளைக் ...
இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ என்ற லேசான நம்பிக்கையையும், ‘சைஸ் ஜீரோ’ பாடலில் தன் நடனத்தால் சுக்குநாறாக நொறுக்கி விடுகிறார் அநி. ஸ்வீட்டியான அனுஷ்காவை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளனர். அனுஷ்காவும், ஸ்வீட்டி எனும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். அதை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆர்யா முதல் இஞ்சி இடுப்பழகியான சோனல் செளஹன் வரை ...
உப்பு கருவாடு விமர்சனம்

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று. மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து...
ஸ்பெக்டர் விமர்சனம்

ஸ்பெக்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி செய்துள்ளார் சாம் மெண்டீஸ். இதுவரை பார்த்து வந்த 007 படங்களின் இலக்கணத்தை ஸ்கைஃபால் படத்தில் உடைத்திருந்தார் சாம் மெண்டீஸ் எனும் மிதவாதி. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இலக்கணத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அது அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, வழக்கமான கார் சேஸ் (chase) படத்தில் உண்டு எனினும் அந்த அதி நவீன காரை உருக்கலைக்காமலோ, வெடித்துச் சிதற விடாமலோ நீரில் மென்மையாக மூழ்க வைக்கிறார். வில்லன் ஒரு பட்டனைத் தட்டினால் உலகமே அழிந்து விடும்; அப்பொழுது பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலாக வந்து உலகைக் காப்பாற்றுவார் என்ற ஒன்-லைனை, ஸ்கைஃபால் படத்தில் உடைத்தது போலவே இப்படத்திலும் உடைத்துள்ளார் மெண்டீஸ். ‘நீ எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டாலும்.. நீ ஒரு கொலைக்காரன் என்பதுதான் ஒரே நிஜம்!’ என 007 கதாபாத்திரத்தைப் பற்ற...
ஒருநாள் இரவில் விமர்சனம்

ஒருநாள் இரவில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன், ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் மான ரோஷப் பதற்றம்தான் படத்தின் கதை. 2012 இல் வெளியான 'ஷட்டர்' எனும் மலையாளப் படத்துக்கு முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக் செய்து தமிழ்ப் படமாக வழங்கியுள்ளார் இயக்குநர் விஜய். இசை, பாகுபலியைத் தொடர்ந்து, சத்யராஜின் மற்றுமொரு பிரம்மாண்டப் பரிணாமமாக அவர் நடித்திருக்கும் சேகர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். அவரின் தவிப்பும் பதற்றமும் பார்வையாளரையும் பீடிக்கிறது. அவருக்கு ஏற்படும் கோபம், அதாவது மகள் மீதான கோபமன்று, உடனிருப்போரின் சுயரூபம் தெரிவதால் ஏற்படும் கோபம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. தளர்வான நடையையும், விரக்தி படிந்த தோற்றத்தையும் வைத்துக் கொண்டு யூகி சேது ஏகத்துக்கும் கவர்கிறார். நையாண்டி தர்பாரின் குரல் இன்னும் மாறவில்லையே தவிர்த்து, சிறந்த குணசித்திர நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். பஞ்சதந்திரம்...
தூங்கா வனம் விமர்சனம்

தூங்கா வனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை. மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்தரம...
வேதாளம் விமர்சனம்

வேதாளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு 'தல' தீபாவளி. தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை. வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், 'உனக்கு குழந்தைச் சிரிப்பு' என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார். ‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் கொ...
கூஸ்பம்ப்ஸ் விமர்சனம்

கூஸ்பம்ப்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. ஜக்காரி ஒரு புத்தகத்தைத் தெரியாத்தனமாகத் திறந்து விடுவதால், அதிலிருந்து எட்டி எனும் பனி மனிதன் வெளியில் வந்துவிடுகிறான். அதனைத் தொடர்ந்து நடக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் சம்பவங்களே படத்தின் கதை. ஸ்லாப்பி எனும் வில்லன் பொம்மை உயிர் பெற்றதும் படம் சுவாரசியமாகிவிடுகிறது. அது, அனைத்துப் புத்தகங்களிலுமுள்ள கோரமான/ பயங்கரமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதோடு, அவர்களை வழி நடத்தவும் செய்கிறது. மேடிஸன் எனும் ஊரின் தகவல் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அங்குள்ளவர்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது ஸ்லாப்பி. ஆர்.எல்.ஸ்டைன் எனும் அமெரிக்க எழுத்தாளர், 1992 இல் இருந்து 1997 வரையிலும், ‘கூஸ்பம்ப்ஸ்’ என்ற தலைப்பில் எழுதிய சிறுவர் திகில் கதைகளைத் தழுவி எடுக்கப்ப...
விரைவில் இசை விமர்சனம்

விரைவில் இசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுசி எனும் சுதந்திர சேகரனும், ஏ.ஆர்.ராமன் எனும் ஏ.ரங்கராமானும் நண்பர்கள். சுசிக்கு இயக்குநராகவும், ராமனுக்கு இசையமைப்பாளராகவும் திரைப்பட உலகத்தில் பரிணமிக்க வேண்டுமென்பது கனவு. கிராமத்திலிருந்து ஓடி வந்த அவர்களின் கனவு நனவானதா இல்லையா என்பதே படத்தின் கதை. மறைந்த நடிகர், தமிழகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றழைக்கபடும் ஜெய் ஷங்கர் அவர்களின் மகன் சஞ்சய் ஷங்கர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிவுள்ளார். நாற்பது வயதில் நடிப்பாசை ஏன் வந்தது என்ற சுய எள்ளலோடு கலகலப்பாக அறிமுகமாகியுள்ளார். எனினும், தனித்த அடையாளங்களோடு கவனத்தை ஈர்க்க, தோதான காட்சிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. வருகின்ற காட்சிகளிலும், ஜெய் ஷங்கரை நினைவுபடுத்திய வண்ணமே உள்ளார். காதல் வசமாக இளைஞர்கள் தலைகீழாய் நின்று முட்டி மோதி மண்டை உடைத்துக் கொள்ளும் இக்காலத்தில், நாயகர்கள் இருவருக்கும் எத்தகைய சிரமுமில்லாமல் காதல் கனி தானாய்க் கனி...
நானும் ரெளடிதான் விமர்சனம்

நானும் ரெளடிதான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை ரெளடி என நம்பும் ஒருவனிடம், அவனது காதலி ஒரு கொலை செய்யச் சொல்கிறாள். பின் என்னாகிறது என்பதுதான் கதை. தனி ஒருவன், மாயா முதலிய படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் கோலேச்சியுள்ளார் நயன்தாரா. காது கேளாத காதம்பரியாகக் கலக்கியுள்ளார். பொதுவாக, இது போன்ற படங்களில் அல்லது பெரும்பாலான தமிழ்ப் படங்களில் நாயகியை ஊறுகாய் போலவே உபயோகப்படுத்துவார்கள். இப்படத்தின் வெற்றி, நாயகிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், கதாபாத்திரத் தேர்வுகள். விஜய் சேதுபதி, பார்த்திபன் என நீங்கள் யாரை எப்படி திரையில் காண விரும்புவீர்களோ, அவர்களை அப்படியே திரையில் கொண்டு வந்துள்ளார் விக்னேஷ் சிவன். அதே போல், வேதாளம் பட டீசரில் வரும் ‘தெறிக்க விடலாமா?’, புலி இசை வெளியீட்டில் டி.ஆர். பேசியது, தனுஷின் ‘இல்ல?’ என மக்களின் கவனத்தை ஈர்த்தவைகளை சாதுர்யமாக ‘ட...
10 எண்றதுக்குள்ள விமர்சனம்

10 எண்றதுக்குள்ள விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின் நாயகன். அதைக் கேட்டு, ‘ஐய்யய்யே.!’ என அரை லூஸு நாயகியே உதட்டைச் சுழிக்கிறார். படம், மிக முக்கியமான சமூக அவலத்தில் இருந்து தொடங்குகிறது. நாயகனாகப்பட்டவர் அதில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க எப்படி அதை மேலும் தீ மூட்டித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நாயகியின் பெயரை ஷகீலா என வைத்ததில் தொடங்கி, சமந்தாவின் கதாபாத்திரத்தை அதிக கவனமுடன் லூஸுத்தனமாகவே உருவாக்கியுள்ளனர். சீரியசான படத்துக்கு, மிக மிக இடைஞ்சலாய் உள்ளார் சமந்தா. அவரை விடவும் படத்தின் பாடல்கள், மிகப் பெரிய வேகத்தடையாக உள்ளது. ‘என் கடமை உயிரை விட்டு நடிப்பது’ என விக்ரம், இந்தப் படத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்கிறார் விக்ரம். வயோதிகம் லேசாக முகத்தில் எட்டிப் பார்த்தாலும், ஆடல் பாடல் சண்டைக் காட்சிகளில் ஒரு குறையும் வைக்காமல் இளமை துள்ள திரையில் வலம் வருகிறார். ...
க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

க்ரிம்ஸன் பீக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
க்ரிம்ஸன் பீக் என்றால் செவ்வண்ண முகடு எனச் சொல்லலாம். எடித் சிறுமியாக இருக்கும்பொழுதே, அவளது இறந்த தாயின் ஆவியால், ‘செவ்வண்ண முகடு’க்குப் போகாதே என எச்சரிக்கப்படுகிறாள். யுவதியாக வளர்ந்த பின்பாகவும், எடித்தை அவளது தாயின் ஆவி மீண்டுமொரு முறை எச்சரிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்யாணமாகிச் செல்லுமிடம் செவ்வண்ண முகடெனத் தெரியாமலேயே அங்குப் போய் விடுகிறார். பின் என்னானது என்பதே படத்தின் கதை. ‘அலேர்டல் ஹால்’ என்ற தனித்து நிற்கும் மாளிகையை, உள்ளூர் மக்கள் செவ்வண்ண முகடு என அழைக்கின்றனர். செம்மமண் நிறைந்த தரை மீது பனி பொழியும் கலவையான இடத்தில் அமைந்த மாளிகையை அவர்கள் அப்படி அழைக்கின்றனர். இந்த உண்மை எடித்துக்குத் தெரிய வரும் முன்பே, எல்லாம் கை மீறிப் போய்விடுகிறது. போதிய பணமின்றி செப்பனிடாத காரணத்தால், தாமஸ் ஷார்ப்பின் மாளிகையான க்ரிம்ஸன் பீக்கின் தோற்றமே அச்சுறுத்தும் விதமாய் விசித்திரமாய்...
மசாலா படம் விமர்சனம்

மசாலா படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விமர்சனம் என்ற பெயரில், தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் முடியும் முன்பாகவே, கிழிக்கிழி எனக் கிழிக்கும் பதிவர்களையும் (Bloggers), ஃபேஸ்புக் பயனர்களையும், ட்வீட் போடுபவர்களையும் பகடி செய்வது போல் தொடங்குகிறது படம். இணைய விமர்சகர்களைக் கலாய்த்து ஒரு படமா? அடடே.. ‘செத்தான்டா சேகர்’ என விமர்சகர்களுக்காக உச்சுக் கொட்டும்போது ட்விஸ்ட் வைத்து விடுகின்றனர். அங்கே ‘கட்’ செய்தால் இடைவேளை. படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே இடைவேளை வந்துவிட்டதே என ஆச்சரியப்பட வைக்கிறது. படத்தின் மொத்த நீளமே 110 நிமிடங்கள்தான். ஆறு மாதத்துக்குள் ஒரு கதை சொல்லவேண்டும் என விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர் ஒரு சவால் விடுக்கிறார். அந்தக் கதையை, பெரிய ஹீரோ பெரிய இயக்குநர் வைத்து தயாரிப்பதாகவும் ஒத்துக் கொள்கிறார். இரண்டாம் பாதியில், விமர்சகர்களின் கதைத் தேடலில் படம் தொடங்குகிறது. கதையில் எதார்த்தம் வேண்டுமென...
தி வாக் விமர்சனம்

தி வாக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சில அடி உயரத்தில், இரண்டு கம்பங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மேல் நடப்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவாக, கழைக்கூத்து அல்லது சர்க்கஸ் வித்தை என்போம். இல்லவே இல்லை.. ‘அது ஒரு கலை’ என்கிறார் பிலிப். அந்தக் கலைஞன், தன் 24வது வயதில் செய்த மயிர்க்கூச்செறியும் சாகசம்தான் ‘தி வாக்’ திரைப்படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிக அற்புதமான படம். இயக்குநர் ராபர்ட் ஜெமெக்கிஸ் மிரட்டியுள்ளார். பிலிப்பாக நடித்துள்ள ஜோசஃப் கோர்டான்-லெவிட்டின் அறிமுகமே அமர்க்களம். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் உச்சியில் நின்று கொண்டு, நியூ யார்க்கிலுள்ள இரட்டைக் கோபுரங்களை ஆர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டே தன் லட்சியத்தையும் அதை எப்படி அடைந்தேன் என்றும் சொல்ல ஆரம்பிக்கிறார். இரட்டைக் கோபுரங்களை கயிற்றால் இணைத்துவிட்டு, அதில் நடக்க வேண்டுமென்பது அவர் கனவாகிறத...
புலி விமர்சனம்

புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் சுதீப் மட்டும் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பைத் தவற விடாமல் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஸ்ரீதேவியோ ஒப்புக்கு வில்லியாக்கப்பட்டுள்ளார். ஒரு நீள ஃபேன்டஸி படத்துக்கு முயற்சி செய்துள்ளார் சிம்புதேவன். வைரநல்லூர் கிராமம், வேதாளபுரக் கோட்டை, குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன் எனப் பார்த்து...