Shadow

கட்டுரை

இஸ்லாமிய வீட்டு திருமண நிகழ்வில் அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

இஸ்லாமிய வீட்டு திருமண நிகழ்வில் அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

அரசியல்
நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும், சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்... அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பாக்கிறார்கள்.... காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை. ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடல்களைப் பாடி மக்களை, தொண்டர்களை ரசிக்க...
இவர் யாரென்று தெரிகிறதா???

இவர் யாரென்று தெரிகிறதா???

அரசியல்
அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் மனிதன்...விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு முக்கியமான சான்றாக இருப்பவர்களில் இவரும் ஒருவர்.இந்த படம் எடுக்கும் போது வயது 15,ஒன்பதாம் வகுப்பு மாணவன்.பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் முனைப்போடு செயல்பட்டு அணித்தலைவராக கோலோச்சிய காலகட்டமது. எப்போதுமே இருக்குமிடத்தில் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளியில் படிப்பிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும், பேச்சிலும் சரி அனைத்திலுமே முதல் மாணவனாக திகழ்ந்து வந்திருக்கிறார் இந்த சிறுவன். சென்னை ராயபுரத்தில் டான்பாஸ்கோ ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ராயபுரம் கே.சி.சங்கரலிங்கம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்து வந்த காலகட்டம் மிக முக்கியமானதாக இவருக்கு...
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு; அதிரடியாக களம் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

12,000 பேருக்கு வேலைவாய்ப்பு; அதிரடியாக களம் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

அரசியல்
உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார...
ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்

சமூகம்
எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை விருட்சங்கள் எல்லாம் நிழல் தருவதில்லை... எங்களின் போதி மரமே! உங்களை வணங்குகிறேன்...வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி!வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்...மக்களால் நான்; மக்களுக்காகவே நான்... வெறும் வார்த்தையல்ல, வாழ்க்கை!"இதய தெய்வம்" உதடுகளின் வார்த்தையல்ல உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று!எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனம்; எளியோர்கள் அமரும் அரியாசனம்.கோபுரங்களைக் காட்டிலும் குடிசைகளை விரும்பியவர் நீங்கள். ஆதலால் தான் அனைவருக்கும் என்றென்றும் நீங்களே இதய தெய்வம்!மகமே! எங்கள் ஜெகமே!! உங்களை நினைக்காத நாளில்லை... மறந்தால் நாங்கள் நாங்களில்லை...நீங்கள் ஆள வேண்டுமென சொன்னதைக் காட்டிலும் இன்னமும் நீங்கள் வாழ வேண்டுமென நாங்கள் சொல்லியிருக்க வே...
“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

சமூகம், மற்றவை
உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் தினங்களில் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில், நாட்களில், மணித்திலாயங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல். ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் புதுமலராய் பூத்தவண்ணம் இருக்கிறது. இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்களும் இளைஞர்களும் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் தமிழக அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்குப் புதிய அடையாளம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். தன் பேரனைத் தோளில் சுமந்து, "ஹாப்பி வேலண்டைன்ஸ் டே" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்தப் படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், "பிப்ரவரி 14 என்பதைப் பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச...
சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!

சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!

சமூகம்
ஏறக்குறைய ஆசஷ் தொடருக்கு இணையாகப் புகழ் பெற்ற தொடர்தான் பார்டர் கவாஸ்கர் டிராஃபியும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே இருக்கும் மிகப் பெரிய வரலாறோ, சில வலிகளோ, கோபங்களோ இல்லாவிடினும், 90களின் மத்தியில் இருந்து இந்திய அணி பெற்று வந்த எழுச்சியும், மிக வலுவான அணியாக இருந்த ஆஸிக்கு, 2000 க்குப் பின்பு நெருக்கடியைக் கொடுக்கும் முக்கிய அணியாக இந்தியா மாறியதும், இந்தக் கோப்பைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது. தவிர, அதே சமயத்தில்தான் இந்தியாவுடனான போட்டியில் எப்போதும் சுவாரசியத்தைக் கொடுக்கும் பாகிஸ்தான் அணியின் திறமையும் மங்க ஆரம்பித்ததால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக ஆஸி உடனான போட்டிகள் வந்து நின்றது. சாம்பியனை வீழ்த்தினால், எப்போதும் கூடுதல் சந்தோஷம் அல்லவா? இந்த முறை, பார்டர் காவஸ்கர் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்பு, இரு அணிகளும் 3 வெற்றிகளைப...
பந்தா பண்ணாத அமைச்சர் – அதிகாரிகள் திகைப்பு

பந்தா பண்ணாத அமைச்சர் – அதிகாரிகள் திகைப்பு

அரசியல்
சென்னை மெரினாவில் சென்னையின் பெருமையைக் கொண்டாடும் வகையில் 'நம்ம சென்னை' என்ற செல்ஃபி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் களைகட்டி இருந்தது மெரினா கடற்கரைச் சாலை. முதல்வர் வருகை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் அரசு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்தனர். கடற்கரைச் சாலையில் முதல்வர் வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த நேரத்தில் தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை வேட்டி சட்டை அணிந்த நபர் வேகமாக சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார். முதல்வர் வரும்போது யாரும் குறுக்கே வந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் அந்த மனிதரை அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்தது. ஆனால் அருகில் சென்ற காவலர்கள், அம்மனிதர், நபர் அமைச்சர் ஜெயக்குமார் என்றறிந்து திகைத்துப் போன...
கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

சமூகம்
இந்திய அணி, கப்பாவில் அடைந்த வெற்றியை வெறும் புள்ளிவிவரங்களால் சொல்லி விட முடியாது. உணர்வுகளால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். 325 ரன்களை ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அதுவும் இலக்கை சேஸ் செய்யும் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லயன் என்ற மிகச் சிறந்த கூட்டணிக்கு எதிராக ஆடி ஜெயிக்கும் போது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகள் சொல்லிவிடுமா என்ன? நால்வரும் ஐசிசி தர வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறார்கள். அதில் பாட் கம்மின்சும், ஹேசல்வுட்டும், முதல் மற்றும் 4ஆம் இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முண்ணனி பந்து வீச்சாளர்களோ காயம் காரணமாக வெளியே இருக்கிறார்கள். ஆஸி பந்து வீச்சாளர்களின் ஒட்டுமொத்த டெஸ்ட் அனுபவம் 250க்கும் மேல் என்றால், இந்திய பந்து வீச்சாளர்களின் அனுபவமே வெறும் 7 போட்டிகள்தான். ஆடிய வீரர்களில் ஒப்பீட்டளவில் அனுபவம் வாய்ந்த வ...
“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

கட்டுரை, சமூகம்
இந்திய அணியின் மிகச் சிறந்த வெற்றி ஏதுவெனக் கேட்டால் தயங்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாலாவது போட்டியின் வெற்றியைத் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், பெரும்பான்மையான முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்கள், Arm Chair experts எனப்படும் சமூக வலைத்தள விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும், அதுவும் சுலபமாக மிகப் பெரிய வித்தியாசத்தில் வெல்லும் என்று கணித்திருந்தனர். அதற்கேற்ப முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடி முன்னிலையில் இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது. தன் குழந்தை பிறப்பிற்கான விடுமுறையில் கோலி இந்தியா திரும்பி விட, இரண்டாவது டெஸ்டில் ரஹானே தலைமையில் களம் கண்ட இந்தியா அணி அபார வெற்றியைப் பெற்று தொடரைச் சமன் செய்தது. மூணாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா பெரும்...
ஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்

ஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்

அரசியல்
1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, உச்சிமுகர்ந்து, அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார். ஜெயவர்தன் பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். 22 ஆவது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன். படித்து முடித்த போது வயது 24 அவருக்கு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம். 2013 டிசம்பர் மா...
அமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்

அமைச்சர் ஜெயக்குமார் – அதிமுகவின் கொடிகாத்த குமரன்

அரசியல்
அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது, நேரத்திற்குs செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சென்னையின் பல்வேறு சாலைகளில் அமைச்சர் கொடியை ஏந்தியபடி செல்வத...
தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

அரசியல், சமூகம்
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி, அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார். எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எது வந்தாலும் அவற்றைப் புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரிக் காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது. தொகுதி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எதுவெ...
அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அரசியல், சமூகம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களைக் கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளைக் கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணியா...
காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

சமூகம்
பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார். சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களைச் சிரிக்க வைத்துள்ளார். அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, 'தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055 ஆம் ஆண்டு இதைப் பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் ‘செம காமெடிப்பா’ நிகழ...
அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’

அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’

சமூகம்
இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சியான காமிக்ஸ்தான் தமிழிலும் அறிமுகமாகிறது. மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களுக்குப் பிடித்த, அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சியின் அறிமுகம். இந்தப் புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவைப் பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர...