Shadow

கட்டுரை

காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

சமூகம்
அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச்சுவைக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். மும்பை, இந்தியா, 3 செப்டம்பர் 2020 - அமேசான் ப்ரைம் வீடியோ இன்று காமிக்ஸ்தான் செம காமெடி பா-வின் டிரெய்லரை வெளியிட்டது, இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்தானின் தமிழ் வெர்ஷன். இந்த தொடரின் வெளியீடு தமிழில் ஒரிஜினல் கண்டெண்ட் வருவதில் ப்ரைம் வீடியோவின் ஆர்வத்தை குறிக்கிறது. இந்தப் புதிய தொடரில், தமிழ் காமெடித் துறையின் வல்லுநர்களாக இருக்கும், மூன்று பெரிய நகைச்சுவைக் கலைஞர்களா...
காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

சமூகம்
ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் விளையாட்டுகளும் சுவாரசியமானவையே. முன்னதாக இன்று, ப்ரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில் "ஹே மச்சான், ஒரு ஜோக் சொல்லட்டா. ஓப்பன் மைக்குக்கும், 2020 கிரிக்கெட் மைதானத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? ரெண்டுத்தையுமே நேர்ல பார்க்க ரசிகர்கள் வர மாட்டாங்க #OruJokeSollata 🤪 @evamkarthik @Comedy_Praveen #ComicstaanSemmaComedyPa" https://twitter.com/primevideoin/status/1300672989466304512?s=21 பல நகைச்சுவையாளர்களுக்கும், ப்ரைம் வீடியோவுக்கும் இடையே நகைச்சுவையான ஒரு உரையாடல் தொடங்கியது. நகைச்சுவையாளர் கார்த்திக் குமார் இந்த ட்வீட்டுக்கு பதில் பதிவிடுகையில், "ஐயோ, நெஞ்சுலியே அடி. ஃபீலிங்ஸ் பாதிப்பு. ஆனா இந்த ஜோக்குக்கு 4/10 தா...
ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சமூகம்
சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது. அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். 'அசுரன்', 'சூரரைப் போற்று' என இசைக்களத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜீ.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில்...
அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல்

அறத்தைப் பரிகசிக்கும் ஒற்றைச் செருப்பின் அபாய அரசியல்

கட்டுரை, சினிமா
'ஒன் மேன் ஷோ'வாய் ஒரு திரைப்படத்தில் தான் மட்டுமே திரையில் தெரியவேண்டும் என்பது பார்த்திபனின் பல்லாண்டு கனவு. திறன்மிகு தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியோடு, அக்கனவை ஒத்த செருப்பு சைஸ் -7 என்ற நேர்த்தியானதொரு படத்தின் மூலம் நனவாக்கிக் கொண்டுள்ளார். எழுதி, தயாரித்து, இயக்கி, ஒற்றை ஆளாய் நடித்ததன் மூலம், ஒத்த செருப்பு படத்தை, 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஏஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் சாதனையாக இடம்பெற வைத்துவிட்டார் பார்த்திபன். அதி அற்புத முயற்சி, தொழில்நுட்ப அதிசயம் என்ற தனித்த அடையாளத்தைப் பெற்றாலும், இப்படைப்பின் பேசுபொருள் எவ்வித அறத்தையும் பேணாதது மிக துரதிர்ஷ்டவசமானது. ஒரு படைப்பு எதைப் பேசுகிறது என்பதை வைத்து மட்டுமே அந்தப் படத்தின் கலையம்சத்தைத் தீர்மானிக்க இயலும். அன்பையோ, அறத்தையோ மையக்கருவாகக் கொள்ளாமல், மனித மனதைப் பற்றிய விசாரமும் செய்யாமல், படத்தில் நிகழும் நான...
“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

அரசியல், சமூகம், சினிமா, திரைச் செய்தி
ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார். “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, "கந்தர் சஷ்டி கவசம்" என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, ‘நம்புதல்’ என்பது அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான் மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது மிகவும் கீழ்மையானது. இந்தக் கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதாரச் ச...
மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

சமூகம்
உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயமும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது? இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? இப்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் இறுக்கத்தைப் போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொடுத்தார். இந்நிலையில் தமிழ்நாட்டைப் போலவே மும்பைத் தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மும்பை மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் படி, மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜேந்திர ராஜன் மாண்புமிகு தமிழக முதல்வரு...
காஃப்காவினால் அல்ல!

காஃப்காவினால் அல்ல!

புத்தகம்
ஃபிரான்ஸ் காஃப்கா எனும் எழுத்தாளர் செக்கோஸ்லேவேக்கியா நாட்டில் பிறந்த ஒரு ஜெர்மானிய யூதர். உலகின் மிகவும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் காஃப்கா உயிருடன் வாழ்ந்த காலம் நாற்பத்தியோரு வருடங்களேயானாலும், அந்தக் குறுகிய காலத்தினுள் அவர் இலக்கியத்தில் புரிந்துள்ள சாதனை மகத்தானது என்கிறார்கள். இவர் எழுதிய 'The Metamorphosis's (உருமாற்றம்) என்கிற கதை மிகவும் பிரபலமான கதை.ஒரு மனிதன் திடீரென ஒருநாள் ஒரு பூச்சியாக மாறி விடுதான விசேஷ கற்பனை. காஃப்காவைப் படித்தவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். தமிழில் 'தங்க ஒரு....' எனும் ஒரு சிறுகதை 1961இல் வெளிவந்தது. க.நா.சு. நடத்திய "இலக்கிய வட்டம்" எனும் பத்திரிகையில் வெளி வந்த இக்கதையை எழுதியவர் கிருஷ்ணன் நம்பி. இக்கதையில் ஒரு போலீஸ்காரனும் அவனது மனைவியும் ,உருவம் சிறுத்து 'லில்லிபுட்' என்கிறோமே அது போல் மாறி, ஒரு பூட்சின்...
ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

சமூகம்
தன்னுடைய தந்தை பழக்கடை ஜெயராமனைப் போலவே சென்னை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குக் கிடைத்த பெரும் செயல் வீரர் மறைந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன். தென்சென்னையில் கிட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்த காலம் வரையிலும், அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் கிட்டுவின் மரணத்திற்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தவரை ஓய்விலேயே சில வருடங்கள் இருக்கும்படி பணித்து, பின்பு, ‘மருத்துவர் சான்றிதழ் கொடுத்தால்தான் களப்பணியில் உன்னை இறக்குவேன்’ என்று பாசத்துடன் சொல்லி இவரை அரவணைத்தவர் கருணாநிதி. சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. செயல் வீரர்களுக்கு ஈடு கொடுக்கும்வகையில் அவர்களுடைய 'அனைத்து வகை விளையாட்டு'க்களுக்கும் எதிர் விளையாட்டை நடத்திக் காட்டி கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையில் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றியவர். கருணாநிதிய...
கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

சமூகம்
கொரோனா தொற்றுக் காரணமாக அரசு ஊரடங்கை அறிவித்த பின் அடித்தட்டு மக்கள் தான் வழக்கம் போல் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இருக்க இடம், பார்க்க வேலை, உண்ண உணவு என எதுவுமற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசின் கல்வித்துறை தற்போது ஆன்லைன் கல்வி மூலமாக ஏழைகளின் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் தொடர்விடுமுறை காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு ஆன்லைன் வழியில் கற்றுத்தர அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் ஸ்மார்ட் ஃபோனோ, லேப்டாப் வசதியோ இல்லாத வீட்டுப்பிள்ளைகள் எப்படி கல்வி பயில இயலும்? மேலும் ஒருநாளைக்குப் பாடத்தை ஆன்லைனில் முழுதும் கவனிக்க வேண்டும் என்றால் டெய்லி டேட்டா 3 GB வரை தேவைப்படும் என்கிறார்கள். இல்லாத எளியவர்கள் எப்படி ரீசார்ஜ் செய்ய பெருந்தொகை செலவு செய்யமுடியும். மேலும் சில தன்னார்வலர்கள், சிலருக்குக் கற்றலுக்காக ஃபோன், லேப்டாப் போன்றவற்றை வழங்குகிறா...
மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

சமூகம், சினிமா
தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது. கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கத் தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தந்து வந்தது. இந்தத் தொழில் மூலம்சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது. திரையரங்குகள் மூடப்பட்ட பின் 5...
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சமூகம், சினிமா, திரைத் துளி
திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், "பொன்மகள் வந்தால்" படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். "எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்குப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்குப் பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொ...
புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

புற்றுநோயியல் நிபுணரின் லாக்டவுன் நேரச்சேவை

சமூகம்
பா.ஜ.க.வின் மருத்துவக் கிளை உறுப்பினரான புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் அனிதா ரமேஷ், வட சென்னை கிழக்கு பகுதியின் தலைவர் திரு. கிருஷ்ண குமார் மற்றும் மத்திய சென்னை மேற்கு பகுதியின் தலைவர் திரு. தனசேகரன் மூலமாக, ஏழ்மையில் வாடும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு, மளிகைப் பொருட்களை (Modi kit) வழங்கினார். இந்நிவாரணப் பணியை, பா.ஜ.க.வின் மாநில தலைவர் டாக்டர் L. முருகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, சென்னை மண்டலத்தின் பொறுப்பாளரான திரு. காளிதாஸ் முன்னின்று ஒருங்கிணத்தார். நிவாரணப் பொருட்கள்: 1. 10 கிலோ அரிசி 2. 400 கிராம் சத்து மாவு பொடி 3. ½ கிலோ சர்க்கரை 4. ½ கிலோ துவரம் பருப்பு 5. ½ லிட்டர் எண்ணெய் 6. ½ கிலோ ரவா 7. 100 கிராம் சீரகம் 8. 100 கிராம் மஞ்சள் பொடி 9. 100 கிராம் மிளகாய் தூள் 10. 1 கிலோ உப்பு பேராசிரியரும் மருத்துவருமான அனிதா ரமேஷ், லாக்டவுன் தொடங்கிய காலகட்டத்திலேயே ஏழைகளுக்...
மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி

மற்றபடி மனிதர்கள் – வெ.த. புகழேந்தி

கட்டுரை, புத்தகம்
அன்ன சத்திரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்பதுதான் இந்த நாவலின் அடிநாதம். எத்தனை பேர் இந்த நாவலை படித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இந்தப் புத்தகம் கிடைத்ததே என் கிராமத்து ஊரிலுள்ள அந்தக் குட்டி நூலகத்தின் மூலமாய்த்தான். அங்கே ஒரு நாள் க்ரைம் கதைகளைத் தேடித் தேடிக் களைத்துப் போய், விதியே என்று நொந்த படியே கையில் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதுதான் இந்த "மற்றபடி மனிதர்கள்". "வெ.த.புகழேந்தி" என்பவரால் எழுதப் பட்ட ஒரு சமூக நாவல் இது. எனக்குத் தெரிந்து நான் படித்த முதல் சமூக நாவலும் இதுதான். என்ன காரணத்தினாலோ அந்தக் கதை என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது. 1981 இல் மீனாட்சி புரம் எனும் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக இஸ்லாமிற்கு மாறியதைப் பிண்ணணியாகக் ...
பெர்முடா | நாவல் விமர்சனம்

பெர்முடா | நாவல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
கேபிள் சங்கரின் பெர்முடா நாவல், மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. மூன்று ஜோடிகளிலுமே ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் உள்ளார். பெர்முடா எனும் தலைப்பினை ஒரு குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பொருந்தாக் காமம் எனும் கவர்ச்சியான ஈர்ப்பில் அந்த ஜோடிகள் சிக்குகின்றனர். அந்தப் பொல்லாத ஈர்ப்பு அவர்களைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிறதா அல்லது அந்த ஈர்ப்பிலிருந்து லாகவமாய் வெளியேறி விடுகின்றனரா என்பதுதான் நாவல். பொருந்தாக் காமத்திற்குத் தொல்காப்பியர் சூட்டும் பெயர் “பெருந்திணை.” அதை மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். அதில், இரண்டாம் வகையான ‘இளமைதீர் திறம்’ என்பதில்தான் நாவலின் அச்சாணி சுழல்கிறது. இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் என்பதே ‘இளமை தீர் திறம்’ ஆகும். ஆனால் ஒருவரின் வயதைக் கொண்டு இளமை தீர்ந்தது என எப்படிச் சொல்ல முடியும்? வயதைக் கொண்டு பருவ நிலை...
அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
அண்ணாதுரை படத்தில் கோதண்டம் பாத்திரத்திற்கு அற்புதமான ஜீவனை அளித்திருப்பார் பத்திரிகையாளரும் நடிகருமான சு. செந்தில் குமரன். அவர், தனது அம்மாவின் மரணத்தைத் தாங்க முடியாதவராகத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள, அம்மாவின் நினைவாக 67 கவிதைகளை இயற்றியுள்ளார். மரணித்த பொழுது அவரது அம்மாவின் வயது 67. பெண்ணென்றால் பேயென்றே விண்ணதிரச் சொன்ன பட்டினத்தான் அன்னையென்ற உறவை மட்டும் அள்ளிக்கொண்டான் - ஆங்கே அழுதழுது புரண்டபடி கொள்ளி வைத்தான். அப்படிப் பட்டினாத்தானே மூழ்கிய பாசத்தாய்ப் பெருங்கடலைத் தன்னால் எப்படி நீந்திக் கடக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார். மரணச் செய்தி கேட்ட நொடி ஏற்பட்ட அதிர்வு முதல் அம்மாவின் நினைவு எழுந்து வாட்டும் ஒவ்வொரு தருணத்திலும், அம்மா இருந்தால் என்ன செய்திருப்பார் என, அம்மாவின் நினைவுகளில் புதைந்து ஆறுதல் காண முற்படுகின்றன அவரது கவிதைகள். செந்தில் குமரனின் அம்மா...