Shadow

கவிதை

சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

கவிதை, படைப்புகள்
டிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது கறுத்துப்போன காபிக் கொட்டைகளும் இனிக்குது சர்க்கரை கட்டியே கொஞ்சம் என்னிடம் பேச்சு சூப்பர் வைசர் வயிறு எரியட்டும் அதில் பால் காய்ச்சுவோம்வெண்டைக்காய் பச்சடியில் ஒழிந்திருக்கும் வெங்காயம் போல சுண்டைக்காய் கிச்சடியில் கலந்திருக்கும் வெந்தயம் போல வாழக்காய் பொறியலில் வெந்திருக்கும் கடலைப் போல வாழ்வோம் சைடிஷ்ஷிக்கு நான் கேரண்டிமைதாவின் வழுவழுப்பில் அடுப்புக்கல்லின் கதகதப்பின் ஆயிரம் பரோட்டாக்கள் குருமாவுக்காக பிறந்திருக்கலாம் ஆனால் இந்த ப்ரோட்ட மாஸ்டர் உனக்காக பிறந்தவன்அரிசி மாவில் கலந்த வெள்ளை உளுந்தே சாம்பாரில் விழுந்த கொத்த மல்லிக் கொழுந்தே எண்ணெய்யில் பொறிந்த துவரம் பருப்பே என்னையும் பொறித்ததடி உந்தன் சிரிப்பேபஞ்சாப் கோதுமையும் பண்ரொட்டி நெய்யும் சேர்ந்து செஞ்சது இந்த மைசூர் பாக்கு ருசித்துப்பாரடி என் பர்மா த...
அலை பேசிக்கவிதைகள்

அலை பேசிக்கவிதைகள்

கவிதை, படைப்புகள்
நீ அனுப்பிய குறுஞ்செய்தியெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது என்குட்டி அலைபேசியில்நீ கடைசியாக பேசிய வார்த்தை இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என் காதினுள்எவ்வளவு வெப்பம் நாமிருவரும் பேசுவதால் செல்லமாய் சுடுகிறது உன் கோவத்தைப்போலமுத்தம் கொடுத்தே நம்முடைய கைபேசி கரைந்துபோகிறதுநான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நீ கூப்பிடும்பொழுது மட்டும் அழைகிறதென்னை உனக்கு பிடித்த பாடலுடன்இரவுகள் நீளக்கூடாதா இப்படி சீக்கிரம் முடிந்துபோகிறதே நம் பேச்சைக்கேட்டு பொறாமையில் தேய்கிறது இருட்டென்னும் இரவுநிலாவை பார்த்துக்கொண்டே உன்னுடன் பேசுவது நீரினுளிருந்து கொண்டே பனிக்கட்டி கரைப்பதுபோல்நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு உன்னுடன் பேசுகிறேன் உன் வார்த்தைப்போலவே எல்லாம் மின்னுகிறது அழகாய் சிரிக்கிறது என்னைப் பார்த்துஎன் கண்களில் இப்பொழுது உன் வார்த்த...
அன்பானவர்களுகாக

அன்பானவர்களுகாக

கவிதை, படைப்புகள்
என்னுடைய பலவீனங்களின் மீது யாரும் கல்லெறியாதீர்கள் கோபத்தில் நான் வசைகளை அடுக்கியே பழக்கப் பட்டவன். அதனால் உங்கள் செயல்களுக்கு ஈடாக என்னால் வேறெதையும் தரமுடியாதுசன்மானம் பெற நீங்கள் தயாரென்றால் பிரதியுபகாரமாக கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறேன் எந்நேரமும் எந்த இடத்திலும்எனக்கு அன்பானவர்களும் அதில் சிலநேரம் மாட்டிக்கொள்வதை என் மனம் எப்படி ஏற்கும் பதிலுக்கு நான் உங்களுக்காகவே வார்த்தையொன்று தயாரித்து வைத்திருக்கிறேன் உங்களிடம் தனியாக சொல்கிறேன் இப்பொழுது வேண்டாம் நேரம் வரட்டும்- சே.ராஜப்ரியன்...
அவர்களை என்ன செய்யலாம்?

அவர்களை என்ன செய்யலாம்?

கவிதை, படைப்புகள்
நான் எப்பொழுதும் சாத்தியமில்லாதவைகளின் மீதே என் பிரியங்களை விதைப்பவன் அறுவடைக்காக காத்திருப்பது தவறுதான்ஆதலினால் என்காதல் செத்துப்போகும் என ஒருவன் சவப்பெட்டி செய்கிறான் இன்னொருவன் புதைப்பதற்கு குழி வெட்டுகிறான் மற்றொருவன் கொல்லிக் கட்டையுடன் அலைகிறான் அவன்கள் மனிதரூபத்தில் உலவிக் கெடுக்கிறார்கள்என்னறுவடை காலம் முன்பே இடையில் அருத்தெடுக்க வேண்டாத உறவில் நுழைந்து என் நேசப்பயிரின் ஆயுளை கெடுத்தழிக்கிறார்கள்அவர்களை என்ன செய்யலாம்?- சே.ராஜப்ரியன்...
அழகிய பிரியங்கள்

அழகிய பிரியங்கள்

கவிதை, படைப்புகள்
என் பிரியங்களில் படிந்துள்ள அழகினை நான் பார்த்து வியக்கிறேன்மற்றவர்களின் வெளிப்பாட்டிலிருந்து என்னுடையதில் மட்டும் ஒரு தனித்துவமிருப்பதால்வழித்தெடுக்க வந்தவர்களுக்கும் அதையே கொடுத்தேன் மாறாக எனக்களித்து சென்றார்கள் அவர்களுக்கு யாரோ கொடுத்த வெறுமைகளை- சே.ராஜப்ரியன்
கடைக்கண்

கடைக்கண்

கவிதை, படைப்புகள்
அந்த காலத்தில் அவள் பார்வைக்காகவே உயிர் வாழ்ந்தேன் நம்பவில்லை ஆனாலும் அப்படி நடக்கும் என்ற நிரந்தரமில்லா நம்பிக்கை சகவாசியை கட்டாயப்படுத்தி உடன்வசிக்க சொன்னேன்.பிற்பாடு உறுதிசெய்தால் சிரிப்பு என்ற ஆயுதத்தாலும் ஒன்றாக சேர்த்தென்னை வீழ்த்திஇந்த நிகழ்காலத்தில் அவளே மறுபடியும் என்னை சிதிலமாக்குகிறாள் விஷம்கொட்டும் பேச்சு வேண்டா வெறுப்பு பார்வை ஒவ்வாத கசக்கும் மருந்தாய் உதட்டசைவு ஒற்றையிலக்கத்தின் முதல்எண் தடவைஎன்னுடய இறக்கும் இந்தகாலம் அவளுக்கு புதியவனொருவனுடன் நல்ல தொடக்கம் தந்திருக்க நான் என்ற ஒரு ஆள் நடுவில் நிற்பது போ என்றொரு அவள் வார்த்தைகாகமறக்காத ஆசை ஒரே ஒருமுறையாவது பார்ப்பாள் உன்னிடமிருந்து விடைபெறும் முன்பு என கண்ணுக்கு ஆறுதல் சொல்லி கையால் துடைக்கிறதுஅதற்காகத்தான் காத்திருக்கிறது எதற்கும் உதவாத என் உடம்புக் கூடு- சே.ராஜ...
நிலா ஏன் தேய்கிறது?

நிலா ஏன் தேய்கிறது?

கவிதை, படைப்புகள்
நிலா வந்து போகிறது வானம் நட்சத்திரங்களைக் கொட்டி மீண்டும் பொறுக்கி எடுக்கிறது சூரியன் தோன்றி மறைகிறது மழை நனைத்துப் போகிறது மின்னல் மீண்டும் வானிற்கே போனது இடி சத்தமிட்டு சாகிறது பனித்துளி பூத்துக் கரைகிறது பூக்கள் மலர்ந்து உதிர்கிறது பலகவிதை எழுந்து விழுகிறது இசை ஒலித்து ஓய்கிறது வண்ண விளக்குகள் எரிந்து அணைகிறது குயில் கூவிச் சோர்கிறது மயில் ஆடி முடிக்கிறது அலைகள் கரையைத் தொட்டு விளையாடி செல்கிறது இன்னும் என்னென்னவோ நடக்கிறது எதுவும் முழுமையடையவில்லை சந்தோஷங்களைப் பெறவில்லை வீட்டிற்குள்ளே இருக்காதே வெளியில் வந்து உன் முகம்கட்டு விவரம் அறியாது சோகத்திலிருக்கிறது எல்லாம் என்னைப் போலவே!!- சே.ராஜப்ரியன்...
தணல் நெஞ்சம்

தணல் நெஞ்சம்

கவிதை, படைப்புகள்
என் இதயம் தீப்பிடித்து எரிகிறது கண்ணீர்விட்டு அணைத்துக் கொண்டிருக்கிறேன் எந்நேரமும்முன்பு போலில்லை நீ நான் பார்த்தால் முகம் சுளிக்கிறாய்வார்த்தைகளில் வெறுப்பள்ளி வீசுகிறாய்நான் சிரித்தால் பதிலுக்கு என்னை சிலுவையில் அறைகிறாய் முகம் திருப்பிநான் செய்தபாவம் என்னவோ?- சே.ராஜப்ரியன்...
காதல் மழை

காதல் மழை

கவிதை, படைப்புகள்
மண்ணில் விழுந்த மழைத்துளி மீண்டும் தெறித்தது சிறு சிறுத்துளிகளாய் உன்மேல் படுவதற்கென்றே!நீ கதவுகளை பூட்டியே வை மழையை ரசிக்கிறேன் என ஜன்னலோரத்தில் போகாதே சாரலென்றபெயரில் சட்டென நுழையும் மழை உன்மேல் கொண்ட ஆசையால்.- சே.ராஜப்ரியன்
நானும் அவளும்

நானும் அவளும்

கவிதை, படைப்புகள்
நானும் அவளும் காதலித்தோம். நானும் அவளும் பேசிக்கொள்வோம். நானும் அவளும் ஒரே தட்டில் உணவு உண்போம். நானும் அவளும் ஒன்றாக ஒரே படுக்கையில் துயில் கொள்வோம்.நானும் அவளும் எங்கள் உடையை மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வோம். நானும் அவளும் ஒரே இருக்கையில் இறுக்கமாக அமர்ந்துக் கொள்வோம். நானும் அவளும் எழுதுகோல் விரல்களால் காகித கட்டுடலில் கவிதை எழுதுவோம்.நானும் அவளும்.. 'நீயும் நானும் கல்யாணம் செய்துக் கொள்வோம்' என பேசினோம். நானும் அவளும் இப்படி எத்தனையோ ஒன்றாக செய்தோம். கல்யாணமும் செய்துக் கொண்டோம். நான் வேறோறொரு அவளை அவள் வேறொரு அவனை.எங்கள் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய சாதி, மதம், பணம் மற்றும் வாட்டும் நினைவுகள் என சகலத்திற்கும் என் நன்றி.- சே.ராஜப்ரியன்...
பறவையின் ஒலிகேட்டு

பறவையின் ஒலிகேட்டு

கவிதை, படைப்புகள்
என்னை மறந்து உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறேன் எப்படிப் போனேன் தெரியவில்லை பூமியின்மீது பார்வை படர்ந்திருக்கிறதுஎல்லாமே எனக்கு கீழேதான் நானும் வானத்தோடு சேர்த்து அதிலிருப்பதையும் தவிர இவ்வளவு சிறியதா இந்தபூமி? ஏமாந்திருக்கிறேன். யாரோ சொல்லிக் கொடுத்ததைக்கேட்டுசட்டென தெளிகிறேன் எந்த பறவையின் பார்வையிலிருக்கிறேனோ!! அதன் இறக்கையின் ஒலிகேட்டு விழித்துப் பார்க்கிறேன் வழக்கம் போல கனவுதான்.. விழுந்துவிடவில்லை.- சே.ராஜப்ரியன்...
வராத கடிதத்திற்கு பதிலாக

வராத கடிதத்திற்கு பதிலாக

கவிதை, படைப்புகள்
இதுவரை யாரும் எனக்கு எழுதாத காதல் கடிதத்தை படிக்கப் போகிறேன் கதவை தாழிட்டு இருள் நிரம்பி வழியும் அறையினுள் ஒற்றை விளக்கின் ஒளிதனில்...வார்த்தைகள் என்னவாகயிருக்கும் என பதட்டத்தில் கடிதத்தை பிரிக்கிறேன் கைகள் நடுங்குகிறது வியர்வையால் குளித்துக்கொண்டிருக்கிறேன் அதனால் நான் போட்டிருக்கும் ஆடையினாலே என்னுடம்பு துவட்டிகொள்கிறது.ஈரமாகிப்போனது கடிதத்தின் சிலபகுதிகள் எத்தனை முறைப்படித்தாலும் புரியவில்லை முடிவில் வெறு(ம்)மைதான் மிச்சம்.இனிமேலெனக்கு யாரும் கடிதம் எழுதாதீர்கள் தயவுசெய்து.- சே.ராஜப்ரியன்...
நீ மட்டும்தானழகு

நீ மட்டும்தானழகு

கவிதை, படைப்புகள்
டுளிப்ஸ் மலர்களின் தோட்டத்திலொருநாள் நீயும் நானும் கைகோர்த்து நடந்தோம் நினைவிருக்கிறதா உனக்கு?எல்லாமே நிறம் மாறியது உன் அழகைக்கண்டு பூக்களெல்லாம் அழகாயிருக்கிறது எனச் சொன்னாய் உன்னைவிட எதுவும் அழகில்லை இவ்வுலகத்தில் என நான் சொன்னேன் வெட்கத்தில் நீயென் தோளில் சாய்ந்தாய் நானும் மலரானேன் உன்கரம் பற்றியதால்.ஆண்டுகள்தான் கடந்தன அப்படியே இருக்கிறது அந்த நினைவுகள் ஒருமுறை உன்விரல்நகம் கீறி தழும்பாய் என்னுடன் ஒட்டிக்கொண்ட உன் தீண்டல்போலவேஅன்று பூக்களின் நடுவில் நீ நின்று எடுத்துக்கொண்ட புகைப் படத்தினை இன்று பார்க்கிறேன் நீ இன்றும் அன்று பார்த்து போலவே இருக்கிறாய் இப்பொழுதாவது ஒத்துக்கொள் நான் அடிக்கடி சொல்வது உண்மைதானென நீயழகு. நீ மட்டும்தானழகுஅந்த பூக்கள் அன்று நீ சொன்னது போலவே அழகாய் இருந்திருக்கலாம் உன்னை பார்த்த சந்தோஷத்தில் நீ வந்த...
மின்மினிப் பூ

மின்மினிப் பூ

கவிதை, படைப்புகள்
இரவில் மட்டும் பூக்கிறது அந்த மரம் அதுவும் மின்மினிப் பூக்களாய்!விடியலில் ஒரு பூ கூட இருப்பதில்லை மொட்டுகள் இருக்கிறதா என தேடிப்பார்த்தேன் அதுவும் பார்ப்பதற்கில்லைஇருட்டில் மட்டும் தெரிகிறது வெளிச்சம் வருவதற்கு முன்னே மறைகிறது யார் பறிக்கிறார்களோ தினம் தினம்- சே.ராஜப்ரியன்