
ரெட்ரோ விமர்சனம் | Retro review
ரெட்ரோ எனும் சொல் பின்னோக்கிய காலத்தைக் குறிக்கிறது. கதையின் காலகட்டம் செல்ஃபோன்கள் பரவலாகாத தொண்ணூறுகளின் இறுதியாகும்.
தூத்துக்குடியில், ஒரு டானால் வேண்டாவெறுப்பாக வளர்க்கப்படுகிறார் பாரிவேல் கண்ணன். அடிதடியே வாழ்க்கையென வாழும் பாரிக்கு சுமார் 35 வயதானதும், அவரது காதலி ருக்மிணியின் விருப்பத்திற்கிணங்க வன்முறையைக் கைவிட முடிவெடுக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாகத் அவரது திருமண நாளன்றே, ருக்மிணியை வெட்ட வரும் வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டி விடுகிறார் பாரி. பாரி சிறைக்குச் செல்கிறார், மனம் நோகும் ருக்மிணி தலைமறைவாகிறார், மகனிடம் இருந்து எப்படியேனும் அவன் மறைக்கும் தங்கமீன் ரகசியத்தை அறியத் துடிக்கிறார் பாரியின் வளர்ப்புத் தந்தை. இது படத்தின் முதற்பாதி.
பாரியைச் சிறையில் இருந்து மீட்டு, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டியில் பங்கு பெற வைக்க முயல்கிறது ஒரு குழு. ஆனால் பாரியோ அக்...