Shadow

Tag: Amazon Prime

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

OTT, Web Series, சினிமா, திரை விமர்சனம்
முதல் முறையாகச் சசிகுமார் காவல்துறை அதிகாரியாகவும், ஓர் ஓடிடி தொடரில் நாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு நிலங்களைக் கையகப்படுத்தி எட்டு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை வைக்கிறது. அப்பொழுது அடிக்கல் நாட்டத் தோண்டும்பொழுது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரிக்க துணை ஆய்வாளர் மூசா ராசா நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையின் முடிவால், 'முடக்கத்தான்' மணி என்பவர்க்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மணி அந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டான் என நம்பும் மூசா ராசா மிகுந்த சிரமங்களுக்கு இடையில், அவ்வழக்கை மீண்டும் திறக்கிறார். மணியின் மீது மூசா ராசா வைத்த நம்பிக்கை பொய்த்ததா, வென்றதா என்பதே தொடரின் முடிவு. முந்தைய சீசன் போலவே கலகலப்பிற்கு உதவியுள்ளார், தேநீர் பிரியான துணை ஆய்வாளர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக...
“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

“வதந்தி சீசன் 2: நிரபராதியைக் காப்பாற்றும் போலீஸ் நான்” – சசிகுமார்

சினிமா, திரைச் செய்தி
ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல், வால்வாட்ச்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' எனும் இணைய தொடர் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி, ''இந்த இணைய தொடர் மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாகப் பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூ, 'ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதையைச் சொன்னவுடன் எங்களுக்குப் பிடித்தது. அதிலும் அந்தக் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலு...
“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

OTT, Web Series
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள 'வதந்தி சீசன் 2 - தி மிஸ்ட்ரி ஆஃப் மணி' தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி இணை தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக உருவாகியுள்ள வதந்தி சீசன் 2, ஆகஸ்ட் 7 அன்று வெளியாகிறது. மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேஸான் ப்ரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழு...
EXAM விமர்சனம் | Amazon Prime Video

EXAM விமர்சனம் | Amazon Prime Video

OTT, Web Series, இது புதிது, திரை விமர்சனம்
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் - காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் கடத்தினார் என கதை நீள்கிறது. டி.எஸ்.பி.யாகத் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரனாக அப்பாஸ் நடித்துள்ளார். அவருக்கும் ஜான்சிக்கும் என்ன உறவு என்ற அத்தியாயம் ரசிக்க வைக்கிறது. மரமல்லியாக அதிதி பாலன் நடித்துள்ளார். அதிகாரச் செருக்கு, கோபம்...
கூலி – செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்

கூலி – செப்டம்பர் 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில்

OTT, சினிமா, திரைத் துளி
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய கூலி படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, செளபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரச்சிதா ராம், கண்ணா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 11 முதல் கூலி படத்தைத் தமிழ் மொழியில், மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி பதிப்புகளிலும், ப்ரைம் வீடியோவில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.விசாகப்பட்டினம் துறைமுகத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், முன்னாள் கூலியாக இருந்த தேவா (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்), தனது நண்பனின் சந்தேகத்திற்கிடமான மரணத்தை ஆராயும் போது கொடிய கடத்தல் கும்பலை எதிர்கொள்கிறார். அந்த விசாரணை அவரை ஒரு ரகசிய மின்சார நாற்காலி, புதைந்த உண்மைகள், உள்ளார்ந்த துரோகங்களை வெளிப்படுத்த...
அஷ்டகாளி திருவிழா | சூழல் – தி வோர்டெக்ஸ் 2

அஷ்டகாளி திருவிழா | சூழல் – தி வோர்டெக்ஸ் 2

OTT, Web Series
சுழல் - தி வோர்டெக்ஸ் முதல் சீசனில் மயானக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்தத் திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா. இதில் பக்தர்கள் எட்டு தேவியர்களை வழிபடும் தெய்வீக நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. திருவிழாவுக்குப் பின்னணியில் உள்ள எட்டு தேவிகளின் விசித்திரமான அம்சங்களைச் சின்னமாகக் காட்டும் எட்டு சிறுமிகள் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சிறுமிகள் ஒவ்வொரு தேவியின் ஆற்றலையும் குணாதிசயங்களையும் ஆழமாகவும் சிறப்பாகவும் பிரதிபலிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தேவியின் தெய்வீக சக்திகளைக் கதையில் உயிர்ப்பிக்கின்றனர். தமிழின் முக்கிய படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி எழுத்தில் இந்தப் படைப்பு உருவாகியுள்ளது. தமிழ்த...
சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

OTT, Web Series, இது புதிது
முதல் சீசனின் தொடர்ச்சியாக, கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர். சக்கரவர்த்தியாக வரும் கதிரும், கொலை குற்றவாளி நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவ்விருவர் சார்பாகவும், மக்கள் நல வழக்குகளை எடுத்து சமூக நீதிக்காகப் போராடும் வக்கீல் செல்லப்பா வாதாடுகிறார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவரது பண்ணை வீட்டில் கொல்லப்படுகிறார் செல்லப்பா. அவரது வளர்ப்பு மகனான சக்கரை எனும் சக்கரவர்த்தி, அக்கொலையைப் புலனாய்வு செய்ய நியமிக்கப்படுகிறார். சிறைக்குள் இருந்தவாறே, சக்கரைக்கு உதவுகிறாள் நந்தினி. முதல் சுழலில் எப்படி மயான கொள்ளை பின்னணியில் கதை நகர்ந்ததோ, இத்தொடரில், அஷ்ட காளி திருவிழா பின்னணியில் கதையின் ஓட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் முதல் சூரசம்ஹாரம் வரை, திருவிழாவை (குலசை தசரா) ஒட்டித் தொடரின் முக்கியமான நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர்...
பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2

பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2

OTT, Web Series, இது புதிது
பணம், புகழ், அதிகாரம் இவற்றுக்கு ஆசைப்படாத, தான் நம்பும் நேர்மையும் கொள்கையுமே முக்கியம் என்று செயல்பட்டு, பிரச்சனைகளில் மாட்டி இழப்புகளைச் சந்தித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு தனது வழியிலேயே வாழ்வதற்கு போதை தருவது எதுவாக இருக்கும்? குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மதித்தாலும், பிழைக்கத் தெரியாதவன் என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனாலும் உண்மை ஒன்றுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் இலட்சியவாத மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை கதைநாயகராக வைத்து வெளிவந்த ஹிந்தி சீரிஸ் "பாதாள் லோக் (பாதாள உலகம்)" ஆகும். பொதுவாக ஹிந்தி சீரிஸ்களில் முதல் பாகம் வெற்றி பெற்றதும் அடுத்த பாகத்தைத் திணித்து எடுப்பார்கள். சேக்ரட் கேம்ஸ், மிர்ஸாபூர், பஞ்சாயத் போன்றவை அப்படித் தான் அமைந்தன. அதனால் பாதாள் லோக் சீரிசின் இரண்டாம் சீஸன் வெளிவந்திருக்கிறது என்று அறிந்தும் அதைப் பார்ப...
தலைவெட்டியான் பாளையம் மக்களைக் கவருவதற்கு ஜி.பி. முத்தான யோசனைகள்

தலைவெட்டியான் பாளையம் மக்களைக் கவருவதற்கு ஜி.பி. முத்தான யோசனைகள்

OTT, Web Series
தலைவெட்டியான் பாளையம் முன்னோட்டத்தைத் தொடர்ந்து, இந்தத் தொடர் மீது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்தத் தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஒட்டி ஒரு அட்டகாசமான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜி.பி. முத்து, அபிஷேக்குமாருக்கு தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங்காக மாற ஐந்து அருமையான யோசனைகளைத் தருகிறார். 1. எப்போதும் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது. 2. சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்தக் கிராமத்தில் யாரும் புதியவரில்லை. 3. இயல்பாகப் பழக வேண்டும். அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும். 4. பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இருக்கவேண்டும். 5. முக்கியமாக பேய் மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இருக்கவேண்டும் 'இதையெல்லாம் ஒழுங்காகப் பின்பற்றினால், தலைவெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்குப் பிட...
தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

தலைவெட்டியான் பாளையம் – ட்ரெய்லரும் பேட்டியும்

OTT, Trailer, காணொளிகள்
இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அசல் தமிழ் இணையத் தொடரான 'தலைவெட்டியான் பாளையம்' எனும் தொடருக்கு பாலகுமாரன் முருகேசன் கதை எழுத, தி வைரல் ஃபீவர் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இனிமையான மற்றும் ஆழமான கதைச் செழுமையுள்ள இந்த இணையத் தொடருக்கு எம். எஸ். கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். ‘தலை வெட்டியான் பாளையம்’ இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டத்தை செப்டம்பர் 13 அன்று வெளியிட்டது பிரைம் வீடியோ. எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நகைச்சுவை இணைய தொடர், தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலைவெட்டியான் பாளையத்திற்குச் செல்லும் மாநகரத்தைச் சேர்ந்த ஒருவரின் பயணத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. இந்த இணைய தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சா...
தலைவெட்டியான் பாளையம் | செப்டம்பர் 20 தேதி முதல்

தலைவெட்டியான் பாளையம் | செப்டம்பர் 20 தேதி முதல்

OTT, Web Series
எட்டு அத்தியாயங்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடரை ‘தி வைரல் ஃபீவர் (TVF)’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. ‘தலைவெட்டியான் பாளையம்’, இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது. தன் மனதுக்கு மிகவும் பிடித்த வசதியான சூழலை விட்டுச் செல்ல மனமில்லாத, சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான சித்தார்த் (அபிஷேக் குமார்), வேறு வழியின்றி தொலைதூரத்திலுள்ள கிராமமான தலைவெட்டியான் பாளையத்தில் ஒரு செயலாளர் பணியில் சேர்வதிலிருந்து இந்த நகைச்சுவை இணையத் தொடர், அவரைப் பின் தொடர்கிறது வ...
ஒன்பது நாடுகளில் டிரெண்டிங்  ஆகும் “கேப்டன் மில்லர்”

ஒன்பது நாடுகளில் டிரெண்டிங் ஆகும் “கேப்டன் மில்லர்”

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களைக் கடந்தும், உலகளவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்" ஆகும். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நட...
அமேசான் 2024: ப்ரைம் வீடியோவின் புது வெளியீடுகள்

அமேசான் 2024: ப்ரைம் வீடியோவின் புது வெளியீடுகள்

OTT
ப்ரைம் வீடியோ, 2023 ஆம் ஆண்டை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 2024 இற்கான, கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டது ப்ரைம் வீடியோ. அவற்றில் பெரும்பாலானவை அடுத்த 2 ஆண்டுகளில் வெளியிடப்படும். 40 ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 29 திரைப்படங்களுடன் கூடிய இந்தப் புதிய பட்டியல் இந்தியாவின் தலைசிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கு உத்திரவாதமளிக்கிறது. வெளியிடப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்கள் குறித்த விவரங்கள்:ப்ரைம் வீடியோவின், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஹெட் ஆப் ஒரிஜினல்ஸ், அபர்ணா புரோஹித், "பிரைம் வீடியோவில், மொழியியல் மற்றும் புவியியல் எல்லைகளுக்கும் அப்பால் பயணிக்கும், ஒரு மாறுபட்ட, உண்மையான ...
இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்

இன்ஸ்பெக்டர் ரிஷி – இயற்கை அமைதி மர்மம்

OTT, Web Series
மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது.இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. ஆனால் சூழல், இன்ஸ்பெக்டர் ரிஷி மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், (அய்யனார் மற்றும் சித்ரா,) காட்டின் ரகசியங்களை வெளிக்கொணரும் மற்றும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டறியும் சவாலை ஏற்கின்றனர். மூவரும் தங்களுட...