Shadow

Tag: Bigg Boss Sandy

பிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா?’

பிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா?’

பிக் பாஸ்
'மரண மாஸ்' பாடலுடன் தொடங்கியது நாள். என்றும் இல்லாத திருநாளாக, 3 டான்சர்ஸ் மெயின் டோர் வழியாக வந்து ஆடிவிட்டுப் போனார்கள். ஒருவேளை ரொம்ப நாளாக உள்ளே இருப்பவர்கள், மனிதர்களைப் பார்த்து பழகவேண்டுமென ஐடியாவோ என்னவோ! (வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்). நேற்று ஷெரின் போட்டிருந்த கவுனை எடுத்து (ஆமா அந்த ட்ரெஸ்க்கு என்ன பேரு) சாண்டி மாட்டிக் கொண்டு, கூடவே ஷெரின் மேக்கப் செய்து விட, ஒரே அலப்பறை. இதன் நடுவில், பிக் பாஸ் வேற, "சந்தியா... மைக்கை மாட்டுங்க" என ஒரு சவுண்டு (சந்தியா, ஒருவேளை பிக் பாஸோட முன்னாள் காதலி பேராக இருக்குமோ?). முகின் பாட்டு பாட, சாண்டியும் ஷெரினும் அதற்கு ஆட, அந்தப் பக்கம் லாஸ் ஆக்‌ஷன் சொல்ல, ஒரே கூத்து தான் அங்கே. 98 நாள் இருந்ததுக்கு மக்களுக்குச் செய்தி சொல்லச் சொல்லி பிக் பாஸ் சொல்ல, எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, 'நான் ஃபைனலுக்கு வருவேன்' என நினைக்கவே இல்லை எனச் சொன்ன...
பிக் பாஸ் 3: நாள் 89 | “எனக்கே விபூதி அடிக்கிறீங்களா?” – கவினின் ஆழ் ஞானம்

பிக் பாஸ் 3: நாள் 89 | “எனக்கே விபூதி அடிக்கிறீங்களா?” – கவினின் ஆழ் ஞானம்

பிக் பாஸ்
லாஸின் அப்பா வந்த போது தன் மகளைப் பார்த்து, ‘நீ இங்க எதுக்கு வந்த?’ எனக் கேட்டார். இப்பொழுது அந்தக் கேள்வியை பாய்ஸ் அணியைப் பார்த்து கேட்க வேண்டும். இத்தனை வாரமும் ஒரு டீமாகச் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு ஒவ்வொருவரையாக வெளியே அனுப்பின பாய்ஸ் டீமுக்கு, இப்ப இத்தனை நாள் போட்ட ஸ்கெட்ச்சே வில்லனாக வந்து நிற்கிறது. எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து போட்ட திட்டங்களை, ‘இப்ப நமக்கே செய்யறாங்களோ?’ என சந்தேகம் வந்துவிட்டது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், நன்மைகள் ஒரு பக்கம் என்றால், தீமைகளும் ஒரு பக்கம் இருந்தே தீரும். பக்காவாக திட்டம் தீட்டி விளையாடி, நட்பை மெயின்டெயின் செய்து, இத்தனை நாள் பெரிய எதிர்ப்பே இல்லாமல் உள்ளே இருந்தது நன்மை. ஆனால் இப்பொழுது அவர்கள் முன்னாடி நிற்பது அவங்களோட நண்பர்கள். யார் கூடச் சேர்ந்து திட்டம் போட்டார்களோ, அவங்க தான் இருக்காங்க. அந்தப் பிரச்சினை தான் இப்பொழுது ஆரம்பித்துள்ளது. ...
பிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி

பிக் பாஸ் 3: நாள் 81 – ஃபேமிலி ஆடியன்ஸ்க்குப் பிடித்த சாண்டி

பிக் பாஸ்
லாஸ்லியாவின் குடும்பத்தை, "நீங்க கிளம்பலாம்" எனச் சொல்லிவிட்டார் பிக் பாஸ். அவர்களும் பிரியாவிடையுடன் கிளம்பிச் சென்றனர். கவின் - லாஸ், இருவரும் தனியாக உட்கார்ந்து பேசினார்கள். மன்னிக்க, கவின் பேசவே இல்லை. 'நலந்தானா?' மோட்ல கண்ணாலேயே பேசிக் கொண்டிருந்தார். 'இப்ப என்ன நடந்து போச்சு?' என இப்படி சீக்கு வந்த கோழி மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை நாளாகப் பக்கம் பக்கமா பாயின்ட், பாயின்டா பேசினவருக்கு, இப்போ பேசுவதற்குப் பாயின்ட்டே கிடைக்கவில்லை. கவின் - லாஸ் காதலை விமர்சித்தவர்களை வில்லன் மாதிரி பேசினவர்கள், சேரனைப் படு கேவலமாக பேசினவர்கள் எல்லோருக்கும், லாஸ் குடும்பம் சொன்ன காரணங்களுக்கு என்ன பதில் சொல்வார்களென ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் சொன்ன பின்விளைவுகளைக் கேட்டீர்களா? 'காதலே வேணாம்' என யாருமே சொல்லவில்லை. கேமிரா முன்னாடி காதலித்துத் தொலைக்காதீங்க என்று தான் சொன்...
பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ்
நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ். அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார். “சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார். லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர்ம...
பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

பிக் பாஸ்
‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி வில்லுப்பாட்டு பாடுவாராம். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் நாராசமாக இருந்தது. பேரில் "வின்" வைத்திருக்கிற கவினுக்கு "லாஸ்" தான் பிடிக்குதென லைன் எழுதிக் கொடுத்தது யாருய்யா? சட்டு புட்டுன்னு முடிந்தால் தவலையென இருந்தது. கவினிடம் விசாரணை நடந்தது. ‘நாலு பொண்ணுகளை ஒரே நேரத்துல லவ் பண்றது காமெடியா உனக்கு?’ எனச் சிரித்துக் கொண்டே ஊசி குத்திக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இதே விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உனக்குக் காமெடியா இருந்திருக்குமா?’ எனக் கஸ்தூரி கேட்ட பொழுது, கவினுக்கு மூஞ்சியே இல்லை. முடிந்து போன விஷயத்தை மறுபடியும் கிளறிக் கொண்டே இருக்கிறார். கூடிய சீக்கிரம் வெடிக்கும். கேப்டனுக்கான டாஸ்க். ஒரு பெரிய கேன்வாஸில், 3 பேரும் கலர் பெயின்ட் அடிக்கவேண்டும். எந்த கலர் பெயின்ட் அதிகமாக இருக்கோ அவங்க தான் வின்னர். ஆரம்பத்தில் சேரன் ...
பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

பிக் பாஸ்
‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி விட்டனர். உண்மையில் இது கஸ்தூரிக்கான இன்ட்ரோ பாடலாம். நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தர்ஷன் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். கவின் முட்டைகோஸ் நறுக்கிக் கொண்டிருந்தார். அது என்ன சைஸில் வேணும் என மதுமிதா சீன் போட்டுக் கொண்டிருந்தார். கவினும், சாண்டியும் சிம்புவின் குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சிம்பு படம் ட்ராப் ஆனது அதுக்குள் அங்கே தெரிந்திருக்கும் போல. படம் ட்ராப் ஆனாலும் ட்ரெண்டிங்கில் இருக்க சிம்புவால் தான் முடியும். சிம்பு வாய்ஸில், சாண்டியை விட கவின் தான் நல்லா பேசறார். இப்பொழுது விஷயம் என்னவெனில் மதுமிதாவைத் தவிர யாருக்குமே சமைக்கத் தெரியாது. வனிதா, சரவணன், ரேஷ்மா தான் இப்ப வரைக்கும் மெயின் குக்கிங். ரேஷ்மாவும் சரவணனும் ஒரே வாரத்தில் போனதால் இப்ப சாப்பாட்டுக்குத் தவிக்கின்றனர். மதுவுக்கும் ஓரளவுக்கு தான் சம...
பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

பிக் பாஸ்
நேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால் இன்று அதோட சுவடே இல்லாமல் எல்லோரும் ஜாலியாக இருந்தனர். இந்த சோஷியல் மீடியா உலகத்தில் சோகமாக இருக்கிறதுக்கோ துக்கப்படறதுக்கோ கூட இடமே இல்லை. ஏனெனில் எல்லா உணர்ச்சிகளும் சடுதியில் மாறிவிடும். நமக்கு ஆதர்சமாக விளங்கிய நபர் இறந்த செய்தியைப் படித்துவிட்டு சோகமாக ஸ்க்ரோல் செய்தால், அடுத்த பதிவே ஒரு மீம் வந்து சிரிக்க வைத்துவிடும். இந்தக் கலவையான உணர்வுகள் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இழவு வீட்டில் கூட, சாவை விசாரித்துவிட்டு வெளியே வருபவர் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிற பழக்கங்கள் சோஷியல் மீடியாவினால் பாதிக்கப்படுகிறதோ எனத் தோன்றுகிறது. நமது எந்த ஓர் உணர்வுக்கும், அது துக்கமோ, சந்தோஷமோ அதற்கான ஆயுள் ரொம்பக் க...
பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து அவரை மாதிரியே எல்லா ஆண்களும் இருப்பாங்க என நினைத்து விட்டார் போல அபி. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தால், "இல்ல மச்சா" என உட்கார்ந்து, இரண்டு மணி நேரம் பேசணும் என எதிர்பார்க்கிறார். ஆனா முகின்ல் அப்படி இல்லை. ‘கோச்சுக்கறியா, சரி கோச்சுக்கோ. நான் போய் ஃப்ரூட்டி குடிச்சுட்டு வரேன்” எனப் போய் விடுகிறார். அதே சமயம் தேவையில்லாத...
பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ்
காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும். லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்றி...