
அகத்தியா விமர்சனம்
திருவண்ணாமலையைச் சேர்ந்த அகத்தியன், ஒரு படத்தில், முதல்முறையாகக் கலை இயக்குநராகப் பணிபுரிய ஒப்பந்தமாகிறார். அதற்காகப் பாண்டியில் ஒரு வீட்டில், சொந்த செலவில் கடன் வாங்கி செட் போட்டுவிடுகிறார். ஆனால், படப்பிடிப்பே நடக்காமல் அப்படம் நின்றுவிடுகிறது. வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக அவ்வீட்டை ‘பேய் பங்களா’வாக மாற்றுகிறார். அமானுஷ்யமான முறையில் அதுவும் தடைப்படுகிறது. அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை உணர்கிறான் அகத்தியா. மேலும், இரத்தப் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட தன் தாயின் உடல்நலக் குறைவுக்கும், அப்பங்களாவில்தான் எங்கோ 80 வருட மருந்து மறைந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அகத்தியனுக்கும் அந்த பங்களாவுக்கும் என்ன சம்பந்தம், அந்த மருந்து அகத்தியனுக்குக் கிடைத்ததா, அம்மருந்து அப்பங்களாவிற்குள் எப்படி வந்தது என்பதுதான் படத்தின் முடிவு.
சித...











