Shadow

Tag: Winsun C.M.

ஜோதி விமர்சனம்

ஜோதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது படம். மேலும், படத்தின் முதல் ஏழு நிமிட வீடியோவையே படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அருள்ஜோதி எனும் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, ஒரு மர்ம நபர் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்கிறார். அந்தப் பெண்ணின் எதிர் வீட்டில், சக்தி சிவபாலன் எனும் காவல்துறை அதிகாரி வசிக்க, அவர் உடனே விசாரணையை மேற்கொள்கிறார். குழந்தை எப்படிக் கிடைத்தது, யார் கடத்தியது என்பதுதான் படத்தின் கதை. அருள்ஜோதியின் கணவர் அஷ்வினாக, ராட்சசனில் க்றிஸ்டோஃபராக அசத்திய நான் சரவணன் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. படத்திலேயே மிக மோசமான நடிப்பை வழங்கியிருப்பது இவர் மட்டுமே. எதிர் வீட்டுப் பெண்ணாகவும், காவல்துறை அதிகாரி சக்தி சிவபாலனின் மனைவி ஜானகியாக க்ரிஷா குரூப் நடித்த...
ஜோதி திரைப்படம் –  அரசாங்கத்துக்கு ஒரு மனு

ஜோதி திரைப்படம் – அரசாங்கத்துக்கு ஒரு மனு

Press Meet, காணொளிகள், சினிமா
"குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ஜோதி" படத்தை, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த அரசாங்கத்திற்கு வைக்கும் ஒரு கோரிக்கை மனுவாகப் பார்க்கிறேன்" என்றார் படத்தின் தயாரிப்பாளர் SP ராஜா சேதுபதி. SPR ஸ்டுடியோஸ் சார்பாகத் தயாரிப்பட்டிருக்கும் இப்படம் ஜூலை 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ஜீவி நாயகன் வெற்றியும், திரெளப்தி நாயகி ஷீலா ராஜ்குமாரும் இப்படத்தில் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ...
ஜோதி – 10800 குழந்தைகள் எங்கே?

ஜோதி – 10800 குழந்தைகள் எங்கே?

சினிமா, திரைச் செய்தி
சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவமாகிய குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள எமோஷ்னர் த்ரில்லர் படம் ‘ஜோதி.’ இந்தப் படத்தை எஸ்.பி.ஆர். ஸ்டூடியோ புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல படத்தொகுப்பாளரான எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக வெற்றி நடிக்கிறார். மேலும் ஷீலா ராஜ்குமார், கிருஷா குரூப், மைம் கோபி, எஸ்.பி.ராஜா சேதுபதி, இளங்கோ குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோதி படத்தை டிக்-டாக் பிரபலமான ஜி.பி.முத்து பார்த்துவிட்டு படத்தையும், படக் குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.“படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் கடைசி வரையிலும் நீடித்திருக்கிறது. எதிர்பாராத சில திருப்பங்களும் படத்தைக் கடைசி வரையிலும் பார்க்க வைக்கிறது. இதுவரையிலும் நம் நாட்டில் 11 ஆயிரம் குழந்தைகளைக் கடத்தியிருக்கிறார்கள். அதி...
“ஜோதி – நம்பிக்கையை அளிக்கும் டீம்” | ஆர்.வி.உதயகுமார்

“ஜோதி – நம்பிக்கையை அளிக்கும் டீம்” | ஆர்.வி.உதயகுமார்

சினிமா, திரைத் துளி
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஜோதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபோரம் மாலில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவரான R.K.செல்வமணி, செயலாளர் R.V.உதயகுமார், நடிகர் ரவி மரியா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோருடன் படக் குழுவினரும் கலந்து கொண்டனர். விழாவில், ‘ஜோதி’ படத்தில், பத்மபூஷன் KJ.ஜேசுதாஸ் பாடிய ‘அன்பின் வழி’, பல்ராம் பாடிய ‘ஆரிராரோ’, கார்த்திக் பாடிய ‘போவதெங்கே’ மற்றும் ‘ருத்ரம்’ ஆகிய பாடல்களை வெளியிட்டனர். மால் முழுவதும் நிறைந்திருந்த பார்வையாளர்கள் திரையிடப்பட்ட பாடல் காட்சிகளைக் கண்டு களித்து, கை தட்டி உற்சாகப்படுத்தினர். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் R.V.உதயகுமார், “திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த ‘ஜோதி’ படத்...
ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர்

ஜோதி – குழந்தைக் கடத்தலுக்குத் தீர்வளிக்கும் எமோஷ்னல் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜோதி.’ இந்த ‘ஜோதி’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஆரிராரோ’ என்ற பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சி Radio City FM இல் சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநரான A.V.கிருஷ்ண பரமாத்மா பேசும்போது, “சென்ற வாரம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘போவதெங்கே’ என்ற காதல் பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘ஆரிராரோ’ என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவைச் சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா வரிகளாலும், பல்ராம் சாரோட குரலாலும் மிகவும் அழகாக வந்திருக்கிறது. குழந்தைகளைப் பெற்ற அப்பாக்களும், அப்பாக்களைப் போற்றும் குழந்தைகளுக்கும் இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்கக் கூடியத...
ஜோதி திரைப்படம் – மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்

ஜோதி திரைப்படம் – மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்

சினிமா, திரைச் செய்தி
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடங்களில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து உருவான திரைப்படம் ‘ஜோதி.’ இந்தப் படத்தின் முதல் பாடலான ‘போவதெங்கே’ என்ற பாடல் நேற்று S.R.M. மருத்துவக் கல்லூரியில் ஆயிரம் மருத்துவ மாணவ, மாணவியர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி, இயக்குநர் A.V.கிருஷ்ண பரமாத்மா, நாயகி ஷீலா ராஜ்குமார், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, துணை நடிகர் ஹரி க்ரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, ‘Let’s launch Povathengea from JOTHI’ என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது. “இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை...
குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்

குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்

மற்றவை
பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை. டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நீதிபதி திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தாலம் செல்வம், கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதி ஹேமலதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்தைக் கண்டு வியந்து போனார்கள். நடிகை சுலக்ஷனா பேசுகையில், "சிறுவயதில் நானும் நாட்டியம் கற்றுக்கொண்டேன். மதுமிதா மேடையில் ஆடும் போது தானாக எனது கால்க...
பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடுகிறது. நாயகிக்காகச் செங்குட்டுவனும் எம்.எல்.எம்.-இல் சேர்கிறான். அந்த எம்.எல்.எம். எபிசோட், எப்படி இளைஞர்களை ஏமாற்றுகிறது என அழகாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஐயப்பன். இளைஞர்களுக்கு ட்ரெயினிங் தரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் காளி வெங்கட். பாலசரவணனிடம் மாட்டி அவர் குட்டு உடையும் காட்சி ரசிக்க வைக்கிறது. ...
காதல் கசக்குதய்யா விமர்சனம்

காதல் கசக்குதய்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலைச் சித்தரிக்கும் படங்கள், குறிப்பாக பதின் பருவத்துப் பெண்ணின் முதிர்ச்சியற்ற துணிகரமான காதலைச் சொல்ல முற்படுகையில், கதாநாயகியைக் கவர்ச்சியாகக் காட்டி ஒப்பேத்துவார்கள். ஆனால், குறும்பட இயக்குநரான துவாரக் ராஜா அந்தளவுக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லும் பதின் பருவ மாணவிக்கு, இருபதுகளின் மத்தியில் இருக்கும் நாயகனின் மீது ஈர்ப்பு. பார்வையாளர்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத வகையில் காட்சிகள் அமைத்ததற்காகவே அறிமுக இயக்குநரைப் பாராட்டலாம். அர்ஜூனாக துருவா நடித்துள்ளார். படம் முழுவதுமே தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளார். கோமாவிலுள்ள தன் தாயின் பரிதாப நிலையை எண்ணி உடையும் பொழுது, அவரது நடிப்புக் கவனிக்க வைப்பதாக உள்ளது. பதின் பருவ காதலியுடனான ஊடலின் பொழுதும், உள்ளுக்குள் அமைதியாக மருகும் காட்சியில் நன்றாக நடித்துள்ளார். ஆனால், படம் நெடுகேவும் நாயகனைச் ‘செயின் ஸ்மோக்’கராகக் கா...
நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

நாகேஷ் திரையரங்கம் – வழக்கு தொடர்ந்த ஆனந்த் பாபு

சினிமா, திரைத் துளி
சமீபத்தில், நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர எம். ராஜன் தயாரித்துள்ளார். நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். 'என்னுடைய தந்தை நாகேஷ், 1958ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச் சிறந்த நகைச்சுவை நடிகர். அவர் சென்னை தியாகராய நகரில், நாகேஷ் தியேட்டர் என்ற ஒரு திரையரங்கைச் சொந்தமாக நடத்தினார். டிரான்ஸ் இந்தியா நிறுவன தயாரிப்பில், ஐசக் என்ற முகமது இசாக் என்பவர் இயக்கத்தில், 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திகில் ...