
என்ன மரியாதை! என்ன மரியாதை?
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. உண்மையாக என்னுடன் படித்த, நண்பன் பாபுவை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை..
உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்.இவரு எதிர்ல நடந்து வந்தா அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்.இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு..
பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேலை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான்.
தெலுங்கான பிரச்சன...
















