Shadow

Author: Dinesh R

நீ மட்டும்தானழகு

நீ மட்டும்தானழகு

கவிதை, படைப்புகள்
டுளிப்ஸ் மலர்களின் தோட்டத்திலொருநாள் நீயும் நானும் கைகோர்த்து நடந்தோம் நினைவிருக்கிறதா உனக்கு?எல்லாமே நிறம் மாறியது உன் அழகைக்கண்டு பூக்களெல்லாம் அழகாயிருக்கிறது எனச் சொன்னாய் உன்னைவிட எதுவும் அழகில்லை இவ்வுலகத்தில் என நான் சொன்னேன் வெட்கத்தில் நீயென் தோளில் சாய்ந்தாய் நானும் மலரானேன் உன்கரம் பற்றியதால்.ஆண்டுகள்தான் கடந்தன அப்படியே இருக்கிறது அந்த நினைவுகள் ஒருமுறை உன்விரல்நகம் கீறி தழும்பாய் என்னுடன் ஒட்டிக்கொண்ட உன் தீண்டல்போலவேஅன்று பூக்களின் நடுவில் நீ நின்று எடுத்துக்கொண்ட புகைப் படத்தினை இன்று பார்க்கிறேன் நீ இன்றும் அன்று பார்த்து போலவே இருக்கிறாய் இப்பொழுதாவது ஒத்துக்கொள் நான் அடிக்கடி சொல்வது உண்மைதானென நீயழகு. நீ மட்டும்தானழகுஅந்த பூக்கள் அன்று நீ சொன்னது போலவே அழகாய் இருந்திருக்கலாம் உன்னை பார்த்த சந்தோஷத்தில் நீ வந்த...
கணினி ஆய்வில் தமிழ் – 03

கணினி ஆய்வில் தமிழ் – 03

தொடர், தொழில்நுட்பம்
கணினி ஆய்வில் தமிழ் - 02சென்ற கட்டுரையில் "மார்பாலஜிகல் அனாலிசிஸ்" பற்றி பார்த்தோம். 'நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசெசிங்'கில் பெரும்பாலான ஆய்வுகளின் முதல் படி மார்பாலஜிகல் அனாலிசிஸ் ஆகவே இருக்கும். ஏனெனில் எழுத்துக்களின்/வார்த்தைகளின்  உருவ அமைப்பை பற்றி முழுமையாக அறிந்து விட்டால் அதை உபயோகப்படுத்துவதற்கான வழிகளை எளிதில் ஆராய முடியும். இக்கட்டுரையில் வாக்கிய அமைப்பை பற்றி பார்ப்போம். இது மார்பாலஜிகல் அனாலிசிஸிற்கு அடுத்த படி ஆகும். கூகுளில் உள்ள மொழிபெயர்ப்பு வசதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதனை மெஷின் ட்ரான்ஸ்லேஷன் என்று கூறுவார்கள். அதாவது கணினிக்கு கொடுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் கணினியே மொழிபெயர்ப்பதால் மெஷின் ட்ரான்ஸ்லேஷன் என சொல்கிறோம். நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் ஆய்வில் மிக கடினமான ஆய்வு மெஷின் ட்ரான்ஸ்லேஷன் தான். இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆய்வுகள் நடந்துக் ...
தி ஹர்ட் லாக்கர்

தி ஹர்ட் லாக்கர்

அயல் சினிமா, சினிமா
  ஒவ்வொரு வேலை உணவிற்கும் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆதி மனிதனிடம் போர்க் குணங்கள் நிரம்பி இருந்தது. தற்காப்பிற்காகவோ, உணவிற்காகவோ வேட்டையாடி பழக்கப்பட்ட மனிதனிடம் நாகரீகம் என்ற பெயரில் சாத்வீக குணங்கள் கொஞ்சம் தோன்றினாலும் மிருக குணங்கள் முற்றிலும் விடைப் பெறவில்லை. உள்ளிருக்கும் மிருகம் அடிக்கடி தனது பலத்தை சோதித்து பார்த்துக் கொள்ள துடித்த வண்ணம் உள்ளன. அந்த துடிப்பு தரும் போதை காரணமாக இராணுவத்தில் சிலர் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். அப்படி வந்தவர்களையும்.. எங்கிருந்தோ தாக்கும் நவீன ஆயுதங்களின் முன் தன் முழு வீரத்தையும் வெளிப்படுத்த முடியாத சோர்வும், மறைந்திருந்து தாக்குபவர்களால் ஏற்படும் எரிச்சலும், கண் முன் சக மனிதர்கள் சிதறும் கோரமும் தளர்வுற செய்யும். ஒரு வெடிகுண்டு அகற்றும் குழுவில் ஏற்படும் இத்தகைய தளர்வுறல்களை அழகாக சொல்லியிருக்கும் படம்'. வியட்னாம் போரில் வெடிகுண்...
ஒரே கூத்து தான் போங்க

ஒரே கூத்து தான் போங்க

கதை, படைப்புகள்
மார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி .அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம்.ஏனுங்க இந்தாங்க என்று  3000 ரூபாய் எடுத்து நீட்டினாள். யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம்,"ம.மு.க  கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல  அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க" என்றால்.பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி, "எப்போ வந்தாங்க வீட்டுக்கு" என்று கேட்டான் கோவமாக.கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி.தட்டில் இருக்கும் உணவை கூட கண்டுகொள்ளாமல், பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியில் வெளியே புறபட்டான் நல்லதம்பி.நாலு தெரு தாண்டி ஒருவரிடம், "ம.மு.க  கட்சி ஆளுங்க இந்த பக்கம் வந்தாங்களா" என்று கேட்டான்.அவரும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.சிறுது நேரத்தில் அவர்களை கண்டுபிடித்த நல்லதம்பி,...
மின்மினிப் பூ

மின்மினிப் பூ

கவிதை, படைப்புகள்
இரவில் மட்டும் பூக்கிறது அந்த மரம் அதுவும் மின்மினிப் பூக்களாய்!விடியலில் ஒரு பூ கூட இருப்பதில்லை மொட்டுகள் இருக்கிறதா என தேடிப்பார்த்தேன் அதுவும் பார்ப்பதற்கில்லைஇருட்டில் மட்டும் தெரிகிறது வெளிச்சம் வருவதற்கு முன்னே மறைகிறது யார் பறிக்கிறார்களோ தினம் தினம்- சே.ராஜப்ரியன்
தீராத விளையாட்டுப் பையன்

தீராத விளையாட்டுப் பையன்

கவிதை, படைப்புகள்
       கண்ணே, மணியே யென்றான் உன்னையல்ல என்னை உனக்காக தூதுபோகஅரசமரப்பூக்கள் தலைகீழாய் தவமிருக்குமென்பான் அர்த்த ராத்திரியில் பசிக்கிறதென்பான் மொட்டை மாடியில் நிலா வசிக்கிறதுயென்பான்புரியாத கவிதைகளையெல்லாம் புரிந்த மாதிரிச் சிரிக்கிறான் தெரியாத தெருவுக்கெல்லாம் சென்றுத் தவிக்கிறான்அன்றொருநாள் நீ மறந்துவிட்டுப் போன கைக்குட்டையுடன் மாதக்கணக்கில் வாழ்ந்துவருகிறான்திருமணத்திற்குப் போனால் செருப்பைக் கழட்டிவிடாதே! அதைக்கூட அபகரித்துவிடுவான்நீ கிறுக்கிப்போட்ட காகிதத்தை கிறுக்கனாய் தேடுகிறான் கடைசியில் அதுதான் கவிதையென்று அடம்பிடிக்கிறான்முழுமதி உனக்காகப் பேசியதாம் நீரோடை உனக்காக சிலிர்த்ததாம்அம்மாவின் சமையலில் குறைகள் கண்டுபிடிக்கிறான் அதை நீ பரிமாறினால் காதல் கத்திரிக்காய்கள் கண்டுபிட...
கணினி ஆய்வில் தமிழ் – 02

கணினி ஆய்வில் தமிழ் – 02

தொடர், தொழில்நுட்பம்
கணினி ஆய்வில் தமிழ் - 01முந்தைய கட்டுரையில் தமிழ் மொழியை கணினியில் பயன்படுத்துவதில் உள்ள 'எழுத்துரு' பிரச்சனைகளை பார்த்தோம். ஒரு மொழியை எழுத்து வடிவத்திலோ ஒலி/ஒளி வடிவத்திலோ ஆராய்வதை "நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசெசிங்" என்பார்கள். இதில் பல்வேறு வகையான ஆய்வுகள் அல்லது பயன்பாடுகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு..    * இன்ஃபர்மேஷன் ரெட்ரீவல் (கூகுள் தேடு பொறி)     * இன்ஃபர்மேஷன் எக்ச்டிராக்ஷன் (கூகுள் தேடு பொறியில் உள்ள இமேஜ் சர்ச் வசதி)     * மெஷின் ட்ரான்ஸ்லேஷன் (கூகுளில் உள்ள மொழிபெயர்ப்பு வசதி)     * ட்ரான்சிலரேஷன் (கூகுளில் உள்ள ஆங்கிலம் மூலம் தமிழ் தட்டச்சு செய்யும் முறை)தகவல்கள் சேகரித்தல், எடுத்தல், மொழிபெயர்த்தல், ஆங்கிலத்தில் தமிழை எழுதி தமிழ் சொற்கள் பெறுதல் என இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். இம்முறைகளை பற்றி...
சினிமா, மற்றவை
இது நான் எழுதும் விமர்சனமல்ல ஒரு ரசிகனாக நான் உணர்ந்ததை உங்களிடம் சொல்கிறேன் அவ்வளவுதான்.திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் திரு.சுஜாதா அவர்கள் இப்படி சொல்லியிருப்பார்  எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கும் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் பிரச்சினையே, அதாவது வெற்றியா தோல்வியா என்று. அந்த வகையில் பார்த்தால் இந்த படம் பல நல்ல கதைகளை கொண்டுள்ளது நல்லவிதமாகவும் சொல்லியுள்ளது.ஒரு சிறந்த படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  உண்டான எல்லா தகுதி தராதரங்களுடன் வெளிவந்து வெற்றிப்  பெற்றுள்ள படம் அங்காடித் தெரு. அதாவது  ஓர் ஓவியம் எப்படி தனக்குள் அனைத்தையும் வைத்துக்கொண்டு பார்க்கும் பலரின் மனதில்  பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ, உணர்வுகளை சுண்டி எழுப்புகிறதோ அதேபோலான ஒரு படைப்புத்தான் அங்காடித் தெரு. பிரச்சாரமில்லாமல் பல உன்னத கருத்துக்களை மக்கள் மனதில் தூவுகின்றது. எந்த ஒரு சிறந...
புதிர் கோணங்கள்

புதிர் கோணங்கள்

கதை, படைப்புகள்
ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள்.யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள். பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள். இறைவன் அழகிலும் குறை வைக்கவில்லை. கால் நூற்றாண்டை நெருங்கும் வயது இருக்கும்.        எதிர் வீட்டு மாடியில் விளக்கு இரண்டு முறை ஒளிர்ந்து, மீண்டும் காரிருள் பரப்பியது. இதைக் கண்ட லிண்டாவின் முகம் பிரகாசித்தது. லிண்டா கையுறையை தேடி அணிந்து, பனி படர்ந்த இருளில் இறங்கி நடந்தாள். எதிர் வீட்டில் இ...
நல்ல கடவுள்!!

நல்ல கடவுள்!!

கதை, படைப்புகள்
"தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்?" "இதோ வந்துடும். போயிடலாம்" "போங்க தாத்தா. இதையே தான் ரொம்ப நேரமா சொல்றீங்க." "சரி, நீ கடவுள்கிட்ட வேண்டிக்கோ. அவர் உடனே பஸ் அனுப்பி வைப்பார்" என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே சிறுவனை சமாதானப்படுத்தினார். கண்களை மூடிய சிறுவன் தனக்கு தெரிந்த மழலை மொழி எல்லாம் பிரயோகித்து கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் ஒலிப்பான் ஒலி கேட்டது. கண்களைத் தெரிந்த சிறுவன், "தாத்தா.. தாத்தா பஸ் வந்துடுச்சு" என்று முக்கில் திரும்பும் பேருந்தை கை காட்டி குதித்து மகிழ்ந்தான். பேரனை தூக்கி பேருந்தின் முதல் படியில் வைத்துக் கொண்டே, "நல்ல மனசோடு எது சாமிகிட்ட வேண்டிக்கிட்டாலும் அது கண்டிப்பா நடக்கும்" என்று சொன்னார். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை அணைத்தவாறு அமர்ந்திருந்தவர் பயணச்சீட்டு எடுத்த சில நிமிடங்களில் ந...
முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்தினம் பார்த்தேனே - கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத் தாண்டும் ஞாலங்கள் அடங்கும் முன் அவரிடம் துணை இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி தனது பயணத்தை தொடங்கி விட்டார். சுவரொட்டிகளில் தெரியும் அழகும், தமணின் பாடல்களும் எதிர்பார்ப்பின் ஏனைய காரணிகள். சஞ்சய். ஐ.டி.யில் வேலை செய்யும் சாமான்யன்களில் ஒருவன். நண்பர்கள், வேலை, கிசுகிசு என செல்லும் வாழ்க்கையில் காதல் வராதா என ஏங்குபவன். நிச்சயமானவள் எனத் தெரியாமல் ஒரு பெண்ணிடம் பழகி அவள் விலக, பலரால் தூற்றப்படும் ஆர்த்தி எனும் பெண்ணின் மீது மீண்டும் மிக மெதுவாக காதல் மல்ர்கிறது. அவளது கடந்த காலம் சஞ்சயை சிறிது சலனப்படுத்தும் சமயத்தில் ஆர்த்தியின் மீதான பலரின் வதந்தி உண்மை என சஞ்சயிற்கு தெரிய வருகிறது. அந்த குழப்பத்திலேயே தன் மேல் ஈர்ப்புள்ள அனு எனும் உடன் பணி புரியும் பெண்ணிடம் அவசர அவசரமாக காதலை வெளிப்படுத்துகிறான். இதனிடையில் ஆர்த்தி நல்லவள் என தெ...
சிக்கன் பிரியாணி…

சிக்கன் பிரியாணி…

கதை, படைப்புகள்
 முதலாளியின் பிறந்தநாளைமுன்னிட்டு அன்று அலுவலகத்தில் அணைவருக்கும்  சிக்கன் பிரியாணியும் வெஜிடபுள் பிரியாணியும் அளிக்கபட்டது.   அந்த அழுவலகத்தில் வேலைசெயும் மூன்று சக்கர கூட்ஸ் வண்டியின் ஓட்டுனர் ஒருவர், "சரியான உணவில்லாமல் வீட்டில் தவிக்கும் மனைவியை எண்ணி,அந்த  பிரியாணியை உண்ணவும் முடியாமல்  தவிர்க்கவும் முடியாமல் வேதனையில் திண்டாடினார்". மறுபக்கம் அதே அலுவலகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் பெண், "வீட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்காக ஒன்றுமே செய்துதரமுடியாமல் அவர்கள் பசியில் தவிக்க, தான் மட்டும் அந்த பிரியாணியை  உன்ன மனமில்லாமல் இருந்தார்." இவர்களின் கவலை ஒருபக்கமிருக்க,அங்கு வேலை செய்யும் மேல்நிலை ஊழியர்களில் ஒருவர் அந்த உணவை பார்த்து "இது என்ன சார், பிரியாணி..... நான்  2 நாட்களுக்கு முன் 5 ஸ்டார் ஹோட்டல்லில்  சாப்டேன் பாருங்க அது த...
நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு

கதை, படைப்புகள்
மேடம்....உங்களுக்கு லெட்டர் வந்துருக்கு...என்று சொல்லி  போஸ்ட்மேன் சசியிடம் லெட்டரை கொடுத்தார்... சசி : அம்மா... லெட்டர், நேதாஜி மேல் நிலை பள்ளியிலிருந்து வந்துருக்கு... மா...           நான் டீச்சர் வேளைக்கு அப்பளை  பண்ணதுக்கு பதில் அணுப்பி இருங்காங்க....           டீச்சர் வேளைக்கு நேர்முக தேர்வுக்கு வரும் புதன்கிழமை வரசொல்லிருகாங்க.... அம்மா :  சசி, என்னனு போட்டுருக்கு அந்த லெட்டர்ல... சசி : நேர்முக தேர்வுல பல ரவுண்ட்ஸ்  இருக்கும் போல இருக்கு, மா....          எனக்கு முதல் ரவுண்டே பயமா இருக்கு மா... அம்மா : அப்படி என்ன ரவுண்டு மா... சசி... சசி : இப்போ டீச்சர் வேளைக்கு புதிய விதமா தேர்வு நடத்த போராங்கலாமா.. மா.... அம்மா : அது என்ன பு...