
முற்பகல் செய்யின்
முற்பகல் :
"வணக்கம் சார் ".
கேட்டும் கேட்காதது போல் ஆவணங்களை ஆவலுடன் படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் ராமசாமி ....
"வணக்கம் சார் " என்று இம்முறை உரத்த குரலில் முயற்சி செய்தான் குமார் ...
"வணகொம் வணக்கொம் ...என்ன ஆச்சு நான் சொன்னது "
"அது வந்துங்க..... இப்போ கொஞ்சம் பணம் மொட;வேல ஆனதும் எப்பிடியாவது பொரட்டி தாரேங்க..."
"அப்பிடியா .....இப்போ கொஞ்சம் வேல இருக்கு .மத்தியானமா வா பாக்கலாம் ...."
"ஐயா நேத்து காலைல வரச் சொல்லியிருந்தீங்க அதான் ........"
"ஓஹோ ;சரி இப்போ சொல்றேன் ;மத்தியானமா வா "
"இல்லைங்க அது வந்து ......மத்தியானம் கொஞ்சம் வேற வேல இருக்கு ......"
"அது சரி ஒங்களுக்கு வேல நெறைய இருக்கும் ;நான்தான் இங்க வெட்டியா ஒக்காந்திருக்கேன் "
"ஐயோ அப்படி சொல்லலீங்க "
"என்ன அப்பிடி சொல்லல இப்பிடி சொல்லல ;ஒரு அம்பதாயிரம் பொரட்ட முடியலன்னு சொல்ற. ; ஒம் பைல நகத்த நான் என்ன பாடு...
















