Shadow

Author: Dinesh R

முற்பகல் செய்யின்

முற்பகல் செய்யின்

கதை, படைப்புகள்
முற்பகல் : "வணக்கம் சார் ". கேட்டும் கேட்காதது போல் ஆவணங்களை ஆவலுடன் படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் ராமசாமி .... "வணக்கம் சார் " என்று இம்முறை உரத்த குரலில் முயற்சி செய்தான் குமார் ... "வணகொம் வணக்கொம் ...என்ன ஆச்சு நான் சொன்னது " "அது வந்துங்க..... இப்போ கொஞ்சம் பணம் மொட;வேல ஆனதும் எப்பிடியாவது பொரட்டி தாரேங்க..." "அப்பிடியா .....இப்போ கொஞ்சம் வேல இருக்கு .மத்தியானமா வா பாக்கலாம் ...." "ஐயா நேத்து காலைல வரச் சொல்லியிருந்தீங்க அதான் ........" "ஓஹோ ;சரி இப்போ சொல்றேன் ;மத்தியானமா வா " "இல்லைங்க அது வந்து ......மத்தியானம் கொஞ்சம் வேற வேல இருக்கு ......" "அது சரி ஒங்களுக்கு வேல நெறைய இருக்கும் ;நான்தான் இங்க வெட்டியா ஒக்காந்திருக்கேன் " "ஐயோ அப்படி சொல்லலீங்க " "என்ன அப்பிடி சொல்லல இப்பிடி சொல்லல ;ஒரு அம்பதாயிரம் பொரட்ட முடியலன்னு சொல்ற. ; ஒம் பைல நகத்த நான் என்ன பாடு...
என் பெயர் ஹான்

என் பெயர் ஹான்

அயல் சினிமா, சினிமா
"என் பெயர் ஹான். நான் பயங்கரவாதி இல்லை." இதை அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து சொல்லத் துடிக்கும் 'ரிஸ்வாஸ் கான்' என்ற முஸ்லீம் இளைஞனை பற்றிய படம். யார் அவன்? ஏன் அப்படி சொல்ல நினைக்கிறான்? என்று கதை முன்னும் பின்னும் பயணிக்கிறது. 'அஸ்பெர்ஜர் சின்ட்ரோம்'. ரிஸ்வாஸ் ஹானுக்கு உள்ள குறை. இந்த குறை உள்ளவர்கள் மற்றவர்களின் முகத்தை பார்த்து பேச முடியாதவர்களாகவும், சமூகத்தில் சஜமாக பழக முடியாதவர்களாகவும் இருப்பர். ஆனால் மிகுந்த அறிவாளிகளாக இருப்பர். எனினும் தனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் கேட்க விழைகிறார்களா என்ற கவலையின்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய குறை உள்ள ரிஸ்வாஸ் ஹான் என்னும் இளைஞனாக படத்தில் வலம் வருகிறார் ஷாருக். நடிப்பின் முதிர்ச்சி அநாசயமாய் வெளிப்படுகிறது. தாயின் இறப்பிற்கு பின் தம்பியிடம் அமெரிக்கா வரும் ஷாருக்கிற்கு, தம்பி மனைவி தான் ஆறுதல் அளிக்க...
ஏட்டுச் சுரைக்காய் எண்ணங்கள்

ஏட்டுச் சுரைக்காய் எண்ணங்கள்

கதை, படைப்புகள்
தாம்பரம் ரயில் நிலையம்.சென்னையில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று ...வெளியூர் செல்பவர்கள்,சென்னையில் மற்ற பகுதிகளில் வேலைப் பார்ப்பவர்கள் ,படிப்பவர்கள் ,வியாபாரிகள் ,பிச்சைக்காரர்கள் என எப்போதும் கூட்டமாகவே காட்சியளிக்கும் ரயில் நிலையம் .தனிமையின் பொருள் உணரா நிலையம் அது.... அனிதா தினமும் தாம்பரத்தில் இருந்து அவள் வேலை பார்க்கும் தலைமைச் செயலகத்திற்கு மின்சார ரயிலில் செல்லும் பயணி...கூட்ட நெரிசலில் அவதிப்படுவதை தவிர்க்க அதிகாலை ஏழரை மணி ரயிலை பிடித்துவிடுவாள்...வசிப்பது மகளிர் விடுதி என்பதால் ஏழரை மணி வண்டியை பிடிப்பதொன்றும் அவளுக்கு சிரமம் இல்லை ... ஜன்னலோர இருக்கையை பிடித்தே தீரவேண்டும் என்று தினமும் இஷ்டதெய்வத்தை வேண்டிக்கொண்டே ரயிலைப் பிடிப்பாள் ...அதில் எப்போதும் வெற்றியும் அடைவாள்...ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாலும் அவளின் பார்வை முழுதும் ரயில் பயணிகளின் மீதே எப்போதும் ...
திருமூலர் நதியா என்நண்பன்

திருமூலர் நதியா என்நண்பன்

கதை, படைப்புகள்
தலை முடி நரைக்கிறதே என கவலைப்படாதவர் எவரேனும் உள்ளனரா? என்நண்பனுக்கும் அதே கவலை தான். அதுவும் சாதாரண கவலை இல்லை. மிகப் பெரும்கவலை. திருமணம் வேறு அவனுக்கு ஆகவில்லை. இப்ப புரியும் என்று நினைக்கிறேன்அவனது கவலையின் அளவு."பிறந்தா ஒரு நாள் சாக தான் போறோம். அந்த மாதிரி தலையும் நரைக்க தான்போகுது. தலை நரைச்சுடுச்சு என்று எனக்கு எந்த கவலையும் இல்ல. எங்க அம்மாவநினைச்சா தான் கவலையா இருக்கு. ஏன்னா எங்க அம்மாவுக்கு அவங்க அம்மான்னாஉசுரு. அவங்களுக்கு என் கல்யாணத்த பார்க்கனுமாம். ம்ம்.. எங்க பாட்டியோடஆசைய நிறைவேத்த முடியலையேன்னு அவங்க அழ.. அத பார்த்து நான் கண் கலங்க"என்று எனக்கு கண் கலங்கியும் காண்பித்தான். அவனை திருப்திப்படுத்த என்னால்அப்பொழுது அவனுக்கு கண் கலங்கி காட்ட முடியவில்லை.  ஆனால் அவனது திருமணம்நரையால் தடங்கல் ஆகிறது என்பதை இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவது போல்சொல்லி உயிரெடுக்கிறான் என...
இப்படிக்கு விரக்தி

இப்படிக்கு விரக்தி

கதை, படைப்புகள்
இந்த உலகத்தில் யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. ஆனால் காதலின் மிகுதி காரணமாக நான் அனைவரையும் தழுவிக் கொள்கிறேன். இப்படி தான் திருவிழாவில் குச்சி 'ஐஸ்' வேண்டும் என அடம்பிடித்த ஏழு வயது தம்பியின் தலையை தட்டி அழைத்து சென்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் சிலம்பரசன். அந்த ஏழு வயது சிறுவன் தான் எத்தனை அழகு!! உடனே அவனது வதனத்தில் போய் குடியேறி விட்டேன். தம்பியின் மீது அதிக அக்கறை சிலம்பரசனுக்கு இல்லை எனினும் எனக்கு சிலம்பரசன் மீது நிறையவே இருந்தது. அவன் வாங்கி தந்த கண்ணாடி வளையல்களை அவனது ஆள் ரெட்டை ஜடை ஜோதிலட்சுமி ஆசையாக போட்டு பார்த்து விட்டு, 'அப்பா வைவாரு' என அவனிடமே கழட்டிக் கொடுத்து விட்டாள். தம்பியை அதட்டுவது போல் ஜோதியை அதட்டுவது சிரமம் என்றபடியால் சிலம்பரசனையும் ஆட்கொள்ள எனக்கு காரணம் கிடைத்தது. தம்பிக்கு  குச்சி 'ஐஸ்'சாவது வாங்கி தந்திருக்கலாம் என்று நினைத்தான் சிலம்பரசன். காலம் கடந்த...
மனித மனம்

மனித மனம்

கதை, படைப்புகள்
நான்கு ரவுடிகள் தீபாவை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர் ....எதேச்சையாக அந்த தெரு பக்கம் வந்த சுரேந்தர் பார்த்த மாத்திரத்திலேயே துரத்தப்படுவது தன்னுடன் வேலை பார்க்கும் தீபாதான் என்பதை தெளிந்து அந்த ரவுடி கும்பலை விரட்டிப்பிடித்து அடித்து துவைக்கையில் கேட்டது அலாரம் டைம் பீஸின் மணியொலி ...கலைந்தது கனவு.... அலாரத்தை ஆப் செய்ய முயன்றபோதுதான் கௌரி முனங்கினாள் ,"ஏங்க அலாரம் அடிக்கல போன் அடிக்குது ..ஏந்தான் இப்டி இருக்கீங்களோ "என்று அந்த உறக்கத்திலேயும் தெளிவாக கடிந்து விட்டு மீண்டும் உறங்கிவிட்டாள் ... "அட ஆமா போன் அடிக்குது " "ஹலோ....." "டேய் சுரேந்தரு அப்பா பேசுறேன் டா " "என்னப்பா இந்த நேரத்ல என்ன ஆச்சு ?" "ஒண்ணுமில்ல ....அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல...நீ கொஞ்சம் வந்தா தேவலைன்னு தோனுச்சு ..இப்போவே சொன்னாதான நாளைக்காவது வரமுடியும் ...அதான் சொன்னேன்..." "சரிப்பா வரேன் ...அம்மாவ அத...
தீராத பசி

தீராத பசி

கவிதை, படைப்புகள்
நட்சத்திர உணவகத்தில் மிடுக்காக அமர்ந்து மெதுவாக சாப்பிட்டேன் அக்கம் பக்கம் உள்ளவர்களைப் பார்த்து நானும்அந்தஸ்து காரணமாக கொள்ள இடமிருந்தும் மீதி வைத்தேன் எதற்கென்று தெரியவில்லை அப்படித்தான் செய்கிறார்கள் அங்கு வந்த அனைவரும்என் எதிரிலேயே வேண்டுமென்றே நான் வைத்த மிச்சமுள்ள தட்டு அசுத்தமடைந்ததினால் சுத்தம் செய்ய எடுத்து செல்லப்படுகிறது மற்றவர்களின் பாத்திரத்துடன் கழுவப்பட்டு மறுபடியும் வரும் உணவேந்தி என் போன்றவர்களுக்காகடிப்ஸ் கொடுத்ததற்காக நன்றி ஒன்று கிடைத்தது என்னை விட வயதில் மூத்தவரும் ஏனோ அண்ணனென என்னை அழைத்தது ஏனோவெளியே வந்ததும் பச்சிளம் குழந்தைதாங்கி பரட்டை தலையுடன் பிச்சை கேட்ட அவளுக்கு நான் கடன்பட்டுத்தான் வந்தேன் சில்லறையில்லாததால்- இராஜப்ரியன்...
சூழ்நிலைக் கைதிகள்

சூழ்நிலைக் கைதிகள்

கதை, படைப்புகள்
பொழுது சாய்ந்திருந்தது...அர்ச்சனாவிற்கு சுஜா ஞாபகமாகவே இருந்தது...பள்ளி விட்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது....வீட்டில் தனியாக என்ன செய்கிறாளோ என்று யோசனையாகவே இருந்தது...பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டாள் அர்ச்சனா .. "சுஜா குட்டி என்ன பண்றீங்க " "வீடியோ கேம் ஆடுறேன் மம்மி " "ஹோம் வொர்க் பண்ணீங்களா?" "பண்ணிட்டேன் மம்மி.பசிக்குது.பிஸ்கட் தீந்துடுச்சு " "அம்மா பேக்ல கேக் இருக்கு ...சாப்பிடுங்க ..அதுக்குள்ள மம்மி டிபன் ரெடி பண்ணிடுறேன் என்ன ?" "ஓகே மம்மி " சப்பாத்தி குருமா தயார் செய்து முடிக்கும்போது சுந்தர் வந்தான்... "அர்ச்சனா சாப்பாடு ரெடியா?" என கூப்பாடு போட்டான் ... "ரெடி ரெடி" என கூறிய வாறே சப்பாத்தியையும் குருமாவையும் டைனிங் டேபிளில் வைத்தாள்... "அர்ச்சு பேசாம நம்ம ஒரு ஹுண்டாய் சான்ட்ரோ வாங்கலாமா ?" "காரா ?இப்போ எதுக்கு ?" "சுஜாவ டெய்லி ஸ்கூட்டர்ல உக்கா...
இசை

இசை

கதை, படைப்புகள்
நானும் அவளும் எப்பொழுதுமே ஒன்றாகத்தான் விளையாடுவோம் எங்களுக்குள் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நானும் அவளும் உள்ளாடைகளுடன் பலதடவை எங்கள் ஊர் மோட்டர் பாம்பு தண்ணீர் இறைக்க, ஒரே தொட்டியில் குளிப்போம். யார் அதிக நேரம் நீரில் மூச்சடக்கி மூழ்கி இருக்கிறார்கள் என பந்தயம் அவ்வப்பொழுது நடேந்தேரும். அதில் பலமுறை ஜெயிப்பது நான்தான் ஆனால் உண்மையில் ஜெயிப்பது அவள்தான். நான் நீரில் மூழ்கியுடன் உடனே வெளியே தலையை நீட்டி கொஞ்சநேரம் கழித்து நான் மீண்டும் மூழ்குவேன் அது அவளுக்கு தெரியாது. சின்ன வயதில் நாங்களிருவரும் விளையாடாத விளையாட்டே கிடையாது. அப்பா அம்மா (நீங்க நினைப்பது மாதிரியான விளையாட்டு இல்லைங்க) விளையாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அப்பொழுதுதானே நாங்கள் மற்றவர்களை அதிகாரம் பண்ண முடியும். நான்தான் அப்பா, எங்களுக்கு மூன்று குழந்தைகள், அந்த மூன்று குழைதைகளும் நாங்கள் வசிக்கு...
கடிவாள மனசு

கடிவாள மனசு

கதை, படைப்புகள்
"பதினோராம் வகுப்புக்கு போறேன் .சுப்புலாபுரத்து பள்ளிகொடத்லதான் பதினொனாப்பு இருக்கு ...அதுக்கு ஐநூறு ரூவா வேணும்" .... மிகுந்த பயத்துடனும் பணம் கிடைக்குமா என்ற ஐயத்துடனும் பணம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் தன் தந்தை வேலுச்சாமியிடம் பேசினான் கோவாலு.... "ஐநூறு ரூவா வேணும்னு பொசுக்குனு கேட்டா எப்பிடி கொடுக்க...நான் என்ன பணத்த கக்கத்துல வச்சுக்கிட்டு அலஞ்சுகிட்டா இருக்கேன்", என்றான் வேலுச்சாமி... அவன் அப்போதைய கவலை தன்னை நம்பி இருக்கும் ஆறு உசிர்களுக்கு மூணு வேளையும் அர வயித்து கஞ்சியாவது ஊத்தணும் என்பதுதான் .... " எப்பா நான் நானூறு மார்க்கு எடுத்திருக்கேன். வாத்தியார், மேல படிச்சா கண்டிப்பா டாக்டர் ஆயிருவேனாரு அதான்" .... "அப்ப அந்த வாத்தியார்ட்டயே போயி கேளு ராசா ..வந்துட்டான் ..எனக்கு இருக்ற வெளத்துக்கு கட்ட வெலக்கமாரு பிஞ்சு போகும் பாத்துக்க...நான் இன்னிக்கு என்ன செய்ய ...நாளைக்க...
சட்டாம்பிள்ளை

சட்டாம்பிள்ளை

கதை, படைப்புகள்
"ச்சே.. எத்தன தடவ சொன்னாலும் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை."வெள்ளைச் சட்டையை நீலமாக்கி விடுவதால் உடன் படிக்கும் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேருகிறது.'கான்வென்ட்ல படிக்கிற தொர வர்றான் பாருங்கடா.'அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை கான்வென்ட்ல படிக்கிற பசங்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள். குண்டு அடிப்பது, வயலில் நண்டு பிடிப்பது, ஆலமர விழுதுகளில் தலைக்கீழாக தொங்குவது, பள்ளிக்கு வரும் வழியில் இருக்கும் மாந்தோப்பில் திருட்டு மாங்காய்களை பறிப்பது போன்ற வேலைகளில் கான்வென்ட் மாணவர்களுக்கு நிபுனுத்துவம் போதாது. அப்படிப்பட்டவர்களுடன் தன்னை ஒப்பிடுவது ஞானசம்பந்தனுக்கு எரிச்சலாக இருந்தது.. இதற்காகவே மாந்தோப்பில் இருந்து மற்றவர்களை விட  நிறைய மாங்காய்களை பறித்துக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பான். எப்படி குட்டிக் கரனம் அடித்தாலும் 'கா...
இது தான்டா போலீஸ்!!

இது தான்டா போலீஸ்!!

கட்டுரை, சமூகம்
1973, சிதம்பரம்..சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, "நீங்க போகலாம் சார்" என்று பம்முகிறார்."இவன் என் பையன்" என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, "இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க" என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். "சரிங்க சார்."1989, கடலூர்..வேகமாக சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வண்டியை நிறுத்துகிறார் காவல்காரர்."எங்கடா போற?" "சகாயம் சார் ட்யூஷனுக்கு." "துரை ஏன் இவ்ளோ வேகமா போறீங்க? லைசென்ஸ் இருக்கா?" "இல்ல சார்." "ஓ.. துரைக்கு லைசென்ஸ் வேற இல்லையா?" என்று மீசை கீழ் நான்கு பற்கள் தெரிவது போல் நமுட்டு சிரிப்பை உதிர்ந்த...
வெள்ளை மனசு

வெள்ளை மனசு

கதை, படைப்புகள்
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் .. வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை.. வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். அம்மாவின் அருகில் சென்றான், "எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3 மாசம் " என்றான்... இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் .. உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்.. எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார், "உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்".. அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தா...
இது வேற மாதிரி

இது வேற மாதிரி

கதை, படைப்புகள்
எல்லோர் கண்களும் அவர்கள் மேலயே இருந்தது. ஒன்றாய் வந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்த நானும் அவர்கள் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஒட்டி உரசாமல் காற்று நுழையும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அந்த பெண் தலையில் துப்பட்டா சுற்றப்பட வில்லை. இடைவெளியில் மட்டும் இரண்டு வார்த்தைகள் மற்றும் ஒரு புன்னகையினை பகிர்ந்துக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாதி கூட புரிந்து விடும் போலிருந்தது. இவர்கள் கதை தான் புரியவில்லை. திரையரங்கு கலாச்சாரம் தெரியாத அப்பாவி கிளிகள் போல.இவர்கள் எப்பவும் இப்படி தான். எனது கல்லூரி கடைசி ஆண்டின் பொழுது இவர்கள் பள்ளியின் பால் வாசம் மாறாமல் கல்லூரியில் கால் எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்த சில நாட்களிலியே இவர்கள் ஐந்து வருட காதல் கல்லூரி முழுவதிற்கும் தெரிந்த ஒரு விஷயமாக...
கள்ளநோட்டு

கள்ளநோட்டு

கவிதை, படைப்புகள்
சூரியன் வரும் முன்பே சுருக்காகப் புறப்பட்டு அவிழ்த்துப்போட்ட அனைத்தையும் அவசரமாக அள்ளி போட்டுக்கொண்டே பொத்தானை மாற்றி மாற்றிப் பூட்டினான் மேலுக்குக் கீழ்.. கீழுக்குக் கீழென..அடுத்து வேறொரு அறையில் மீண்டும் மற்றொன்றுடன் படுக்கையில் நான், விடுதியில் நுழைந்த காவல்காரர் கைதுசெய்தார் என்னைமட்டும் அன்று என்னுடன் இருந்ததை மறந்து, விட்டுவிடுகிறேன் "எனக்கு வேண்டியதை கொடு"வென சரியாகக் கேட்டார். சலித்துக்கொண்டே நேற்றிரவு வந்ததை இன்றிரவு பிடித்துவிடலாமென கொடுத்தால்.. " இந்த வேலை என்றிலிருந்தென?" ஏதுமறியாத என்னை அறைந்தார். எந்த வேலையென எனக்கென்னத் தெரியும்? தெரிந்தாலும், சிறை மீட்க ராமனேது?இன்றிரவும் வழக்கம்போல் கோரைப் பாயாவேன் என் மீது புரண்டுபடுக்க காக்கிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கிறது நான் நீயென நாயென.கள்ளம் எங்கே இங்கு நான் கொடுத்த பணத...