Shadow

சினிமா

ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

சினிமா, திரைத் துளி
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வித்தியாசமான படங்களுக்குத் தமிழ்த் திரையுலகு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது 'ஆலம்பனா' படக்குழு. இந்தப் படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். இது ஒரு ஃபேண்டஸி படம் என்பதை மட்டுமே தகவலாகப் படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்தி 'ஆலம்பனா' உருவாகியுள்ளது. இப்படத்தில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ் மற்றும் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெ...
டெடி விமர்சனம்

டெடி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே! OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின்...
தீதும் நன்றும் விமர்சனம்

தீதும் நன்றும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா கணியன் பூங்குன்றனாரின் மிகச் சிறப்புமிக்க இவ்விலக்கியச் செவ்வியல் வரிகளைத் தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் ராசு ரஞ்சித். அதற்காக அவருக்கு ஓர் எக்ஸ்ட்ரா பாராட்டுகள். ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும், அவரவரே காரணம் அன்றி, பிறரால் அது நிகழாது என்பதே கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்குப் பொருள். படத்தின் மையக் கதாபாத்திரங்களான ஈசனும், சிவாவும் தனக்கான தீமையை அவர்களே தேடிக் கொள்கின்றனர். மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஈசனும், சிவாவும் நண்பர்கள். மாறன் எனும் நண்பன் ஊருக்கு வரும் நாட்களில், முகமூடி அணிந்து கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். அதனால் ஈசனும் சிவாவும் சிறைக்குச் செல்ல நேருகிறது. வெளியில் வந்த பின்னும், சூழ்நிலை காரணமாகக் கடைசியாக ஒருமுறை திருடலாம் என முடிவெடுக்கின்றனர். மாறனோ, கொள்ளையடிக்க என நண்பர்களை அழைத்து, ஒரு கொலை ச...
“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

சமூகம், சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்த...
நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நாயகனும் தயாரிப்பாளருமான அருண்குமார் பேசும்போது, " எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை. எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க...
பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

சினிமா, திரைத் துளி
பல வெற்றி படங்களைத் தயாரித்தவரும், விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாகத் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்: >> தயாரிப்பு - R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்) >> இணை தயாரிப்பு - கல் ராமன் >> இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன் >> ஒளிப்பதிவு - பிரவீன் குமார் >> இசை - போபோ சசி >> படத்தொகுப்பு - ராகுல் >...
காமமா? காதலா? – ‘பூம்பூம் காளை’யின் தேநிலவுச் சண்டை

காமமா? காதலா? – ‘பூம்பூம் காளை’யின் தேநிலவுச் சண்டை

சினிமா, திரைத் துளி
ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’. இந்தப் படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.காதல் பொய், காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள். ஆனால் நிதானமாக யோசித்துப் பார்த்தால், இக்கூற்றிலுள்ள உண்மையின் சதவிகிதம் அதிகம் என்பது புரியும் என்கிறார் இயக்குநர் R.D.குஷால் குமார். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்.நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேநிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாகப் பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்தபின், இனி அடுத்தது கலவியின்பம் தானே, அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான். இப்படி எதிர் கருத்து கொண்டவர்களின் தேநிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவ...
பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
காதலை மையமாக வைத்து தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று, இளவயது காதல். இரண்டாம் வகை, முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் எதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாகத் திரைக்கதையில் அமர்த்தி, சுவைப்பட, துளி கூட விரசமின்றி இக்காதல் கதையை வழங்கியுள்ளார். புதுமுக அறிமுகங்களான மீரானும் மேகனாவும் காதல் ஜோடிகளாகப் படத்தில் வலம் வந்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி, வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார். திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளி...
எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

எடிட்டர் பி. லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் ‘கட்டில்’

சினிமா, திரைத் துளி
மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பெளண்டேசன் இணைந்து நடத்தும் 19ஆவது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்குக் “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது, "வருடந்தோறும் மகாராஷ்ட்டிரா அரசாங்கம் நடத்தும் புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் எடுக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்வு செய்து சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு எனது கட்டில் திரைப்படத்திற்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இத்தருணத்தில் புதுமுயற்சியாக, 'கட்டில் திரைப்பட உருவாக்கம்' என்ற நூலை வெளியிடுகிறேன். சினிமா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வாரிவழங்கிய சாதனையாளர்கள் சிலர் “கட்டில்” திரைப்படத்திலும் தங்களது பங்களிப்பைத் தனிச்சிறப்ப...
டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் வெளியாகும் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் வெளியாகும் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’

சினிமா, திரைத் துளி
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்டப் பெரும் திருப்பத்தின் பொழுது வெளியான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வைத் துவங்கிய பின், அக்கட்சி கொடியுடன், இப்படம் வெளியானது. இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்குப் பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். எதிரிகளின் இந்த சதித்திட்டத்தை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை. முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகியர். நாடு, நாடாகப் பயணிக்கும் சர்வதேசக் கதையைத் திறமையாகக் கையாண்டு இருப்பார் இயக்குநர் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் இசையில்,...
‘பெண்’ – குறும்படப் பாடல்

‘பெண்’ – குறும்படப் பாடல்

சமூகம், சினிமா
பெண்கள் தினத்தை முன்னிட்டு "பெண்" என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது. வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி 2, திமிரு புடிச்சவன், கொலைகாரன், களவாணி 2, கபடதாரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.  தனது நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அருண்பாரதி, "பாடலுக்குப் பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாகப் பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன். தொடர்ந்து சமூகத்திற்குப் பயன்படும் நல்ல படைப்புகளைக் கொடுப்பது என் கடமை" என்று கூறினார். இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க, P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்....
மிருகா விமர்சனம்

மிருகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருகமாகிவிட்ட ஒரு மனிதனைப் பற்றிய படம். பணக்கார விதவைகளைக் குறி வைத்து, அவர்களை அணுகி நற்பெயர் எடுத்து, பணத்திற்காக அவர்களைக் கல்யாணம் செய்து, அவர்களைக் கொன்றுவிடும் சைக்கோ தான் படத்தின் எதிர்நாயகன். அவனிடமிருந்து நாயகி தப்பினாரா என்பதுதான் படத்தின் கதை. கதை ஊட்டியில் நடக்கிறது. எஸ்டேட்டில், man-eater ஆக மாறிவிடும் புலி ஒன்று முக்கிய ரோலில் வருகிறது. புலி வரும் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கணினி வரையியல் (CG) காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. க்ளைமேக்ஸின் த்ரில்லிங் அனுபவத்திற்குப் புலி பொறுப்பெடுத்துக் கொள்கிறது. படத்தின் எதிர்நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். படம் இவரது வில்லத்தனத்தைச் சுற்றியே நகர்கிறது. ஆனால், ஸ்ரீகாந்தின் மிதமான நடிப்பு, கதாபாத்திரத்தின் சீரியஸ்தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது. பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய கதாபாத்திரத்திலும், பாந்தமாகத் தோ...
மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

மோகன்தாஸ் – ஓர் எமோஷனல் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். 'மோகன்தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அறிமுக டீஸர் கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே வெளியிடப்பட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர்களின் அறிவிப்புகள் என அனைத்திலுமே எதிர்பார்ப்பை அதிகரித்து வந்தது. 'மோகன்தாஸ்' படத்தைக் 'களவு' படத்தின் மூலம் ஆச்சரியப்படுத்திய முரளி கார்த்திக் இயக்கவுள்ளா...
தருணத்தில் சிக்கிய தம்பதிகள்… மர்ம உருவத்தால் நேர்ந்த கொடுமை!

தருணத்தில் சிக்கிய தம்பதிகள்… மர்ம உருவத்தால் நேர்ந்த கொடுமை!

சினிமா
அகஸ்தியா கிரியேஷன்ஸ் சார்பில் டெல்லி பஞ்சாப் ரோட் லைனர் நிறுவனர் வெங்கட் செல்லப்பா தயாரிக்கும் படம் ‘தருணம்’. கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது. புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கும் அறையில் ஒரு கருமையான உருவம் அவர்களை மிரட்டுகிறது. தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வருகின்றனர். ஆனால், தம்பதிகள் வருவதற்கு முன்பே அந்த உருவம் ஊருக்கு வந்து விடுகிறது. அதை பார்த்து மிரளும் தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கும் அந்த கருப்பு உருவம் வந்து நிறுகிறது. இந்த தம்பதிகள் எங்கு சென்றாலும் அந்த உருவம் துரத்திக் கொண்டே செல்கிறது. அந்த உருவத்திடம் இருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா..? என்பதே படத்தின் மீதிக் கதை. இதுவரை வெளியான பேய் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ளது ...
அன்பிற்கினியாள் விமர்சனம்

அன்பிற்கினியாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை வசீகரமான தலைப்பு? படமும் அப்படியே! மலையாளத்தில் அன்னா பென் நடித்த ‘ஹெலன்’ எனும் வெற்றிப்படத்தைத் தன் மகள் கீர்த்தி பாண்டியனுக்காகத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் அருண்பாண்டியன். மகள் மீது பாசம் கொண்ட அன்பிற்கினியானான அருண் பாண்டியன், படத்திலும் கீர்த்திக்குத் தந்தையாக நடித்துள்ளார். சிக்கன் ஹப் எனும் கடையில் பணி புரியும் அன்பிற்கினியாள், ஓர் இரவு அக்கடையின் ஃப்ரீஸர் அறையில் சிக்கிக் கொள்கிறார். -15 டிகிரிக்குக் கீழ் செல்லும் அந்த ஃப்ரீஸர் அறையில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பதுதான் படத்தின் கதை. ஆனால், படத்தின் கிளைக் கதைகளான தந்தை – மகள் உறவு; கடனிலுள்ள அன்பிற்கினியாளுக்கும், வாழ்க்கையைச் சீரியசாகப் பாவிக்காத சார்லஸ் செபஸ்டியனுக்கும் உள்ள காதல்; அனைவர் மீதும் எரிந்து விழும் சிக்கன் ஹப்பின் மேனஜர்; அலட்சியமே உருவான போலீஸ் அதிகாரி; சிறையிலிருக்கும் மனிதாபிமானமுள்ள கைதி; சிரித்த முகமா...