Shadow

சினிமா

“வரி ஏய்ப்பு செய்கின்றன திரையரங்குகள்” – ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

“வரி ஏய்ப்பு செய்கின்றன திரையரங்குகள்” – ராதாகிருஷ்ணன் குற்றசாட்டு

சினிமா, திரைச் செய்தி
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (30.07.2021) சென்னையில் நடைபெற்றது. அதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குறிப்பாத் திரையரங்குகள் தொடர்பாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் உரையாடினோம்.இந்தக் கூட்டம் எதற்காக? என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும், இணையத்தில் நுழைவுச்சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும், திரைப்படங்களுக்கு நடுவில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு, க்யூப், யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக் கருவ...
ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம்

ராஜாமகள் | தந்தை – மகள் பாசப்போராட்டம்

சினிமா, திரைத் துளி
க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், கன்னிமாடம் புகழ் வெலினா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, பிரமேலதா, பெராரே, திரைப்பட்டறை ராம், விஜய்பாலா ஆகியோர் நடிக்கிறார்கள். நிக்கிகண்ணன் ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார், பி.அஜித்குமார் படத்தொகுப்பில், மணி அமுதவன் பாடல் வரிகளில், சங்கர் ரங்கராஜன் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. “பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையைக் காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாகியிருக்கோம்” என்றார் இயக்குநர் ஹென்...
‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’ – கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங்

‘பீஸ்: நல்லவற்றை விதைக்கணும்’ – கிரிப்டோ நாயகன் கணேஷ் தேசிங்

சினிமா, திரைத் துளி
"எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அந்தந்தப் படிப்பைக் கற்ற நிபுணர்கள் தான் இருக்கணும், இருப்பார்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் இன்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். ஆனால் கிரிப்டோ கரன்ஸி ட்ரேடிங்கில் இருக்கிறேன்" எனும் கணேஷ் தேசிங், விருதுநகரைச் சேர்ந்த ஓர் அக்மார்க் தமிழர். பார்ப்பதற்குத் தேர்ந்த கதாநாயகன் லுக்கில் இருக்கும் இவர் சினிமாவில் வைத்திருக்கும் முதல் படி நடிகராக அல்ல தயாரிப்பாளராக. மிகச் சிறப்பான கதையம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மலையாள சினிமாவில், 'பீஸ்' என்ற படத்தில் இணை தயாரிப்பாளராகப் பங்கெடுத்துள்ளார் கணேஷ் தேசிங். இப்படத்தில் ஜோதி ஜார்ஜ் நடித்துள்ளார். இவர், சிறந்த நடிப்பிற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஷன்பீர் இயக்கியுள்ளார். கணேஷ் தேசிங், தன்னைப் பற்றியும், 'பீஸ்' படத்தைப் பற்றியும், " "உதயா ஃபார்மா (Udhaya Pharama) என்ற ஃபார்மாச...
The Great Indian Kitchen விமர்சனம்

The Great Indian Kitchen விமர்சனம்

OTT, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ எனும் மலையாளப் படத்தை ஓடிடி தளங்களான அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் முதலியவை வாங்க மறுத்த நிலையில், நீஸ்ட்ரீம் எனும் தளத்தில், அப்படம் ஜனவரி 21, 2021, அன்று வெளியானது. ஒரு படத்தை வாங்குவதும் வாங்காததும், ஓடிடி தளங்களது தனிப்பட்ட நிர்வாக முடிவே எனினும், அவை வாங்க மறுப்பதற்குச் சுட்டிக் காட்டிய ஒரு காரணமே இப்படத்தின் மீது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வசனம், ‘உச்சநீதி மன்றத்தினுடைய சபரிமலைத் தீர்ப்பு என்பது பெண்களின் கோயில் நுழைவு பற்றியது மட்டுமில்லை, அது பெண்களின் விடுதலையைக் கூறும் பிரகடனம்’ என்றொரு வசனம் வருகிறது. படத்தின் மையக்கருவாகக் கூட இல்லாமல், வலதுசாரி நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் ஒரே ஒரு வசனம் வந்தாலும் கூட, அப்படைப்பு சர்ச்சைக்குள்ளாகும் போக்கு ஆரோக்கியமற்றது. வணிக சமரசமற்ற கலை முயற்சிகளை மேற்கொள்வதில் மலையாளத் திரையுலகம் முன்னோடியாகத் திகழ்கிறது...
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...
கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சமூகம், சினிமா
சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது. 97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது "பெயர்" கொண்ட பேருந்தில் ஏறமாட்டோம் என மாற்று சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் கட்டுக்கு அடங்காததாலும், பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு எட்டாததாலும், பல்லவன், கட்டபொம்மன் முதலிய போக்குவரத்துக் கழங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் என பொதுப்பெயர் இடப்பட்ட்து. படத்தின் கதை நிகழும் காலம் இதுவே! கண்ணபிரானாக வரு...
கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?" என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் வீரம் என சுதந்திர தினம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. முன்னோர் பெருமையைப் பழங்கதையாகப் புறக்கணிக்காமல், வாட்ஸ்-அப்பில் ஃபார்வேர்ட் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு சமூகத்திற்கு, முன்னோர்கள் அனுஷ்டித்த சமூக அநீதியைப் பற்றித் தெரிந்து ...
ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

ஆலம்பனா – குழந்தைகளை மகிழ்விக்க வரும் பூதம்

சினிமா, திரைத் துளி
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வித்தியாசமான படங்களுக்குத் தமிழ்த் திரையுலகு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும் என்பதால், அவர்களைக் கவர்வது மிகவும் கடினம். இந்தக் கவரும் யுக்தியை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகவே செய்திருக்கிறது 'ஆலம்பனா' படக்குழு. இந்தப் படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். இது ஒரு ஃபேண்டஸி படம் என்பதை மட்டுமே தகவலாகப் படக்குழு தெரிவித்தது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் மூலமாகக் குழந்தைகள் முதல் முதியோர் வரை குஷிப்படுத்தும் பூதத்தை மையப்படுத்தி 'ஆலம்பனா' உருவாகியுள்ளது. இப்படத்தில் பூதமாக நடித்து அனைவரது மனதைக் கொள்ளைக் கொள்ளவுள்ளார் முனீஸ்காந்த். நாயகன் வைபவ் மற்றும் முனீஸ்காந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெ...
டெடி விமர்சனம்

டெடி விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனின் ஐந்தாவது படம் டெடி. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்: டிக்: டிக் என அவரது அனைத்துப் படங்களுமே ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வித்தியாசமான கரு கொண்ட படங்கள். டெடியும் அப்படியே! OBE – Out of Body Experience. உடலுக்கு வெளியே நிகழும் அனுபவத்தை அழகான புனைவுக்கு உபயோகித்துக் கொண்டுள்ளார் சக்தி செளந்தர் ராஜன். அவ்வனுபவத்தில் உடலை விட்டு உயிர் வெளியேறி விடும். அவ்வுயிருக்கு ஏற்படும் அனுபவங்களையே OBE என அழைப்பார்கள். புனைவின் சுவாரசியத்திற்காக, கோமாவில் உள்ள ஸ்ரீயின் உயிர், டெடி எனும் கரடி பொம்மைக்குள் புகுந்துவிடுகிறது. அதாவது ஸ்ரீயின் உயிர் ஒரே சமயம் அவரது உடலிலும் இழையோடுகிறது, கரடியின் உடலிலும் இருக்கிறது. மாயாஜாலம் போல! அது புனைவிற்கு சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. அழகான சயிஷா, படத்தில் டெடியாக மட்டும் வலம் வருவது சற்றே வருத்தமான விஷயம். எனினும் டெடியின்...
தீதும் நன்றும் விமர்சனம்

தீதும் நன்றும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா கணியன் பூங்குன்றனாரின் மிகச் சிறப்புமிக்க இவ்விலக்கியச் செவ்வியல் வரிகளைத் தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் ராசு ரஞ்சித். அதற்காக அவருக்கு ஓர் எக்ஸ்ட்ரா பாராட்டுகள். ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும், அவரவரே காரணம் அன்றி, பிறரால் அது நிகழாது என்பதே கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்குப் பொருள். படத்தின் மையக் கதாபாத்திரங்களான ஈசனும், சிவாவும் தனக்கான தீமையை அவர்களே தேடிக் கொள்கின்றனர். மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஈசனும், சிவாவும் நண்பர்கள். மாறன் எனும் நண்பன் ஊருக்கு வரும் நாட்களில், முகமூடி அணிந்து கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். அதனால் ஈசனும் சிவாவும் சிறைக்குச் செல்ல நேருகிறது. வெளியில் வந்த பின்னும், சூழ்நிலை காரணமாகக் கடைசியாக ஒருமுறை திருடலாம் என முடிவெடுக்கின்றனர். மாறனோ, கொள்ளையடிக்க என நண்பர்களை அழைத்து, ஒரு கொலை ச...
“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

சமூகம், சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்த...
நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

நீ சுடத்தான் வந்தியா – டிக்டாக் புகழ் இலக்கியா நாயகியாக அறிமுகமாகும் படம்

சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், நாயகனும் தயாரிப்பாளருமான அருண்குமார் பேசும்போது, " எனக்குச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோ கனவோ சிறிதும் கிடையாது. ஆனால் நான் இந்த சினிமா தொழில் தொடங்க வேண்டும் என நினைத்த போது வேறு ஒருவரை வைத்து படம் எடுத்தேன். அது சரியாக வரவில்லை. எடுத்த படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு வேறு படமாக எடுக்க முடிவு செய்தேன். பலரிடமும் கேட்டும் யாரும் நடிக்கச் சம்மதிக்கவில்லை. எனவே வேறுவழி இல்லாமல்தான் நான் நடித்தேன். நடிப்பது என்று முடிவு செய்தபின் அப்படியே நான் வந்து விடவில்லை. அதற்கு ஒரு முன் தயாரிப்பாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். அங்கு எனக்கு பொன்ராஜ் என்பவர் எனக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். பிறகுதான் நடிக்க...
பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

சினிமா, திரைத் துளி
பல வெற்றி படங்களைத் தயாரித்தவரும், விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாகத் தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் “ஹாஸ்டல்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழு இறங்கியுள்ளது. தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்: >> தயாரிப்பு - R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்) >> இணை தயாரிப்பு - கல் ராமன் >> இயக்கம் - சுமந்த் ராதாகிருஷ்ணன் >> ஒளிப்பதிவு - பிரவீன் குமார் >> இசை - போபோ சசி >> படத்தொகுப்பு - ராகுல் >...
காமமா? காதலா? – ‘பூம்பூம் காளை’யின் தேநிலவுச் சண்டை

காமமா? காதலா? – ‘பூம்பூம் காளை’யின் தேநிலவுச் சண்டை

சினிமா, திரைத் துளி
ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’. இந்தப் படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.காதல் பொய், காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள். ஆனால் நிதானமாக யோசித்துப் பார்த்தால், இக்கூற்றிலுள்ள உண்மையின் சதவிகிதம் அதிகம் என்பது புரியும் என்கிறார் இயக்குநர் R.D.குஷால் குமார். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்.நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேநிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாகப் பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்தபின், இனி அடுத்தது கலவியின்பம் தானே, அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான். இப்படி எதிர் கருத்து கொண்டவர்களின் தேநிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவ...
பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

சினிமா, திரைத் துளி
காதலை மையமாக வைத்து தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று, இளவயது காதல். இரண்டாம் வகை, முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் எதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாகத் திரைக்கதையில் அமர்த்தி, சுவைப்பட, துளி கூட விரசமின்றி இக்காதல் கதையை வழங்கியுள்ளார். புதுமுக அறிமுகங்களான மீரானும் மேகனாவும் காதல் ஜோடிகளாகப் படத்தில் வலம் வந்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி, வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார். திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளி...