Shadow

சினிமா

சாஹோ விமர்சனம்

சாஹோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சாஹோ என்றால் 'வெற்றி உனதே!' எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம். இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கே.ஜி.எஃப், லூசிஃபர் போன்ற படங்கள் தமிழ் மார்க்கெட் மீது குறி வைத்து மேக்கிங்கில் மெனக்கெட, 'பாகுபலி பிரபாஸ் நடித்த 350 கோடி ரூபாய் பட்ஜெட்டுடைய படம்' என்றால் மட்டும் போதாதா என்ற மெத்தனத்துடன் களமிறங்கியுள்ளார் இயக்குநர் சுஜீத். படத்தின் தொடக்கம் ஓர் எதிர்பார்ப்பைத் தூண்ட...
சிக்சர் விமர்சனம்

சிக்சர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆதிக்கு மாலைக்கண் நோய் உள்ளது. மாலை ஆறு மணிக்குள் டானென வீட்டுக்குள் வந்துவிடுவார். இந்தக் குறையின் காரணமாக கல்யாணம் வேண்டாம் என மறுப்பவருக்குக் கிருத்திகாவைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது. உண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவைப் படத்தில் வில்லன்களின் பாடு தான் திண்டாட்டமாய் இருக்கும். ஆர்.என்.ஆர்.மனோகரும், ஏ.ஜே.வும் அப்படியான வில்லன்கள். செம பில்டப்களுடன் அறிமுகமாகும் வில்லன்கள், அதே வேகத்தில் காமெடியன்கள் ஆகுகிறார்கள். அதே போல், கலக்கப் போவது யாரு ராமருக்கும் ஒரு கொடூரமான பில்டப். அவரும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஜி.வி.பிரகாஷுடன் குப்பத்துராஜா படத்தில் பல்லக் லல்வானி, கிருத்திகா எனும் பாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். நாயகனுடன் இரவில் இரண்டு, மூன்று வெளியில் சென்றும், அவரது குறையைக் கண்டுபிடிக்காத லூஸு ஹீரோயின் வேஷம் தான் வழக்க...
மயூரன் விமர்சனம்

மயூரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மயூரன் என்றால் 'உன்னைக் காப்பவன்' அல்லது 'வெற்றி புனைபவன்' என்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன். இவர் பாலாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். 'உன்னைக் காப்பவன்' என்ற பொருளே படத்தின் தலைப்பிற்குப் பொருந்தும். அதனால் தா  நாயகனுக்கு சேகு எனும் சே குவேரா என்று பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர். சிதம்பரத்திலுள்ள பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் நாயகனின் அறை தோழன் ஒருவன் காணாமல் போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதும், அவனைத் தேடும் நாயகனுக்கு என்ன சிக்கல் ஏற்படுகிறது என்பதும்தான் படத்தின் கதை. மயூரனாகிய நாயகனால் தன் நண்பனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியவே மிகவும் மெனக்கெடுகிறான். தனக்கு ஏதும் நிகழாமல் தன்னைத் தானே நாயகன் காப்பாற்றிக் கொள்வதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். மயூரன் தன்னைக் காப்பாற்றிக் கொள்பவனாகச் சுருங்கிக் கொள்கிறான். படத்தின் கதைக்...
இசை தான் என் ஜீவன் – அஜீஸ்

இசை தான் என் ஜீவன் – அஜீஸ்

சினிமா, திரைத் துளி
  7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசையமைப்பாளராகத் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார். 2009 சூப்பர் சிங்கர் சீசன் 2 இல் குரலால் வசீகரித்தவர். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்பொழுதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய, 'இதுவரை' பாடல் மிகவும் பிரபலம். பாபி சிம்ஹா நடித்த பாம்புசட்டை படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கின்ற சர்பத் படத்தில் ஐந்து பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், "இசை தான் என் ஜீவன்" என்கிறார். மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசையமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் இசை வெளி...
ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர்  மோத்தி.பா

ஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா

சினிமா, திரைத் துளி
மோத்தி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மோத்தி முகமது தயாரித்திருக்கும் படம் கோலா. "போதை - இந்த இரண்டெழுத்து சொல்தான் வெகுகலாமாக இந்த உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதில் பல வகை உண்டு. பணக்காரப் போதை, அதிகாரப் போதை, பெண் போதை, மது போதை, கடைசியாகப் புகழ்ப் போதை. மனிதன் தன் கடைசி மூச்சு நிற்கும் வரை புகழ்ப் போதைக்கு ஆசைப்படுகிறான். அதை அனுபவிக்கவும் செய்கிறான். உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு போதையின் அடிமைகள்தான். விளக்கின் வெளிச்சத்தைத் தேடிச் சென்று விழும் விட்டில் பூச்சிகள் போல் சிலர் போதையில் சிக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் போதை என்பதே ஒரு மாயை தான். ஒரு வித தற்காலிகமான அமைதியை, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஆழமாகவோ, ஒரு முகமாகவோ சிந்தித்து முடிவெடுக்க விடாமல் செய்வதுதான் போதையின் முக்கியமான வேலை. இதை எத்தனையோ ஞானிகளும் மகான்களும் பல விதங்களில் எடுத்துச் சொல்லியும...
இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

இயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை

சினிமா, திரைச் செய்தி
வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் 'எவனும் புத்தனில்லை'. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை கமலா திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. "எவனும் புத்தனாக முடியாது. ஆனால் எல்லாரும் மனுசனாக முடியாது. இங்கு சிறிய படம் பெரிய படம் என்றில்லை. எல்லோரும் ஒரே போல் தான் உழைக்கிறோம். ஆனால் எல்லாப்படங்களுக்கும் தியேட்டர் கிடைக்குதா என்றால் இல்லை. மற்ற மாநிலங்களில் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. நம் இண்டஸ்ட்ரி மிகவும் சிக்கலாக இருக்கிறது" என்றார் இயக்குநர் மீரா கதிரவன். இசையமைப்பாளர் மரியா மனோகர், " 'எவனும் புத்தனில்லை' என்ற தலைப்பே எல்லோரையும் ஈர்க்கக்கூடியது. எல்லோருமே அயோக்கியர்கள் தான். ஏன்னா எல்லோராலும் நல்லவனா இருக்க முடியாது. காலத்தின் கட்டாயத்தால் தான் அப்படி மாறுகிறோம். அதனாலே எவனும் புத்தனில்லை என்ற டைட்டில் மிகவும் பிடித்தத...
சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் –  உண்மையெது பொய்யெது?

சாஹோ: ஹாலிவுட்டிற்கான பாலம் – உண்மையெது பொய்யெது?

சினிமா, திரைச் செய்தி
சாஹோ படத்தில் வரும் மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களைப் பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதன் கார்க்கி, “பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், புது வரிகளுக்கு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்த இயக்குநர் சுஜீத் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் 'மழையும் தீயும்' என்ற பாடல். இதில் மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காகக் கதாநாயகனைத் தீயாகவும், கதாநாயகியைத் தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிறத்...
பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி

பத்ரி நாராயணனின் மாடி இசைக் கச்சேரி

சினிமா, திரைத் துளி
சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. அது என்ன மொட்டை மாடி இசைக் கச்சேரி? அதாவது மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. விளையாட்டுத்தனமாகச் சாதாரணமாகத் தொடங்கிய இந்த இசை ஆர்வலர்களின் புதிய முயற்சி, இன்று விஸ்வரூபமெடுத்து மாடிட்டோரியம் எப்.டி.எப்.எஸ். என்று வளர்ந்திருக்கிறது. தரமாக நிர்வகிக்கப்படும் அரங்கம், உலகத் தரம் வாய்ந்த ஒலி ஒளியமைப்புகள், உணவரங்குகள் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்கள் என்று அனைத்தையும் ஒரே வளாகத்திற்குள் அமைத்து, திரையரங்கில் படம் பார்ப்பதை எல்லா விதத்திலும் மாற்றியமைத்து மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய சென்னை சத்யம் அரங்கும், இந்த மொட்டை மாடிக் கலைஞர்களுக்கு தளம் அமைத்துத் தந்தால் எப்ப...
சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்

சல்மான் கான் – நட்புக்குத் தோள் கொடுத்த பயில்வான்

சினிமா, திரைத் துளி
பாலிவுட்டின் பேரரசன் சல்மான் கான் கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தின் விளம்பரத்திற்குத் தோள் கொடுத்துள்ளார். பயில்வான் படத்தின் பாக்ஸர் கதாபாத்திர லுக்கை, தனது சுல்தான் படத்து கதாபாத்திர போஸைத் தந்து பயில்வான் படத்தைப் பிரபலப்படுத்தியுள்ளார் சல்மான் கான். சல்மான் கானுடன் தபாங் 3 படத்தில் திரையில் இணைந்து நடித்து வரும் கிச்சா சுதீப் இது பற்றிக் கூறியபோது, “சல்மான் கானின் இந்த நட்பு ரீதியிலான, தன்னலமற்ற அன்பு விலைமதிப்பற்றது. அவர் “பயில்வான்” படத்தைப் பிரபலப்படுத்தியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையுன் தந்துள்ளது" என்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது....
மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

மல்லி – ராஜா ராணி ஃபேன்டசி படம்

சினிமா, திரைத் துளி
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க, ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் 'மல்லி'. ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிஃபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார். "பெற்றோரின் காதல் எதிர்ப்பிற்குப் பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள். மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி அப்படி ஆனார்கள்? உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு எப்படி அரசாட்சி செய்கிறார்கள்? அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும். இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் ...
“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

“1000 கோடி சினிமா வர்த்தகம் முடக்கம்” – ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்

சினிமா, திரைச் செய்தி
'தண்டகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ல்இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "சினிமா இன்று எப்படி இருக்கிறது? இன்று ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? அதை வெளியிடுவது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? இன்று எல்லாப் படங்களும் வெளியிட முடிகிறதா? பல புதிய பெரிய படங்கள் வெளியாகின்றன. சிறிய படங்கள் வெளியாகின்றன. வசூல் தான் வரமாட்டேன் என்கிறது. அண்ணா, கலைஞர், புரட்சித்தலைவர், அம்மா என்று பல சினிமா ஆளுமைகள் இருந்த துறை இது. சினிமா அழியக்கூடாது. ஒரு டிக்கெட் 100 ரூபாய் விற்கிறது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் 30 ரூபாய். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 30 ரூபாய் என்றும் 40 ரூபாய் தியேட்டர்காரர்களுக்கும் சேருமாறு முறைப்படுத்த வேண்டும். ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் 10 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு 90 லட்சத்தை வசூலில் இருந்து எட...
‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

‘செளந்தர்யா: ஒரு அண்ணனின் நினைவுகள்’ – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சினிமா, திரைச் செய்தி
'தண்டகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், மேகா பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும் போது அப்பா என்று அழைத்தார். அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. உலகம் சினிமாவைப் பற்றி தவறாகப் பேசும் போது ஒரு நடிகை இயக்குநரை அப்பா என்று அழைப்பது எவ்வளவு பெரிய விஷயம்? எவ்வளவு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்திருந்தால் இப்படிக் கூறி இருப்பார்? சினிமா ஒரு நல்ல அருமையான தொழில். இங்கே ஒரே குடும்பம் என்ற உணர்வு இருக்கிறது. இங்கு அன்பும் பாசமும் இருக்கிறது. அது பலருக்கும் தெரிவதில்லை. நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கே பதிவு செய்ய வ...
கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

சினிமா
மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, விழாவில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர்  ஜாக்குவார் தங்கம், "கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா அவர்களுக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லியிருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவு செய்து நல்ல பழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும்" என்றார்.  இயக்குநர் மோத்...
பயில்வான் – டீசர்

பயில்வான் – டீசர்

Teaser, காணொளிகள், சினிமா
கிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின் செல்லப்பிள்ளை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் கிச்சா சுதீப் குஸ்தி வீரராக எதிரிகளை வேட்டையாடி மிரட்டுகிறார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனான திகழ்ந்த சுனில் ஷட்டி இப்படத்தில் சுதீப்பின் பயிற்சியாளராக நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை, ஸ்டன்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஸ்மன், Dr.ரவி வெர்மா, லார்னல் ச்டோவல் (பாக்சிங்), A. விஜய்(குஸ்தி) ஆகியோர் இயக்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தைக் கிருஷ்ணா இயக்கியுள்ளார். “ஹெபுல்லி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சுதீப் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா இருவரும் இணையும் இரண்டாவது படம் இந்த “பயில்வான்”. RRR மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்வப்ன க...
மெய் விமர்சனம்

மெய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெய் - உடல். மனித உடலுறுப்புகளை இல்லீகலாக மருத்துவச் சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படுவதை மையப்படுத்திய மெடிக்கல் க்ரைம் வகை படம். அமெரிக்க மருத்துவரான அபினவ், தாயின் இழப்பை மறக்க இந்தியா வருகிறார். சென்னையில் நடக்கும் உடலுறுப்புக் குற்றக் குழுவின் வலையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. நாயகனான நிக்கி சுந்தரம், டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப்பேரன் ஆவார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த நிக்கி சுந்தரம், முறையாகத் தமிழும் நடிப்பும் பயின்று இப்படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கான டெய்லர்-மேட் படமாகத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.ஏ.பாஸ்கரன். கதைக்கு அவர் பொருந்தினாலும், அவரது நடிப்பு படத்திற்குக் கொஞ்சம் பின்னடைவே! ஓர் அந்நியத்தன்மையை அவரது தோற்றம் ஏற்படுத்துகிறது. தன் மகளைக் காணாமல் தேடித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சார்லி இயல்பாக நடித்துள்ள...