
புன்னகை மன்னன் டூ மகாமுனி: ஜி.எம்.சுந்தரின் திரைப்பயணம்
கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர, அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை. அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம்.சுந்தர்.
இவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் ' புன்னகை மன்னன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். கமலின் 'சத்யா' படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சத்யராஜ் நடித்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு ' படத்திலும் மு...















