Shadow

சினிமா

விழித்திரு நாயகன் ராகுல் பாஸ்கரன்

விழித்திரு நாயகன் ராகுல் பாஸ்கரன்

சினிமா, திரைத் துளி
மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விழித்திரு' வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு ஆன்த்தாலஜி (Anthology) படமாகும். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் பல உயரங்களைத் தொடத் திறமையுள்ளவர். மத்திய அரசின் ஊழியரான இவரது தந்தையின் ட்ரான்ஸ்ஃபர் நிறைந்த வேலையால், இந்தியா முழுவதும் பயணம் செய்து வாழ்ந்தவர். ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பைப் பார்த்து மீரா கதிரவனும் பாராட்டும் விதமாகத் தட்டிக் கொடுத்துள்ளார். விழித்திரு படத்தில் தானேற்ற கதாபாத்திரம் குறித்து நடிகர் ராகுல் பாஸ்கரன் பேசுகையில், ''இப்படத்தில் பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன். பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூடத் தெரியாத ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன். பல கதைகள் ஒன்று சேரும் ...
“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்

சினிமா, திரைத் துளி
சித்தார்த்தின் சினிமா மீதான காதல் தான் அவரை ஏடாகி எண்டர்டெயின்மென்ட் எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது. முதல் தயாரிப்பான ஜில் ஜங் ஜக் படத்திலேயே, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைத் தொட்டுச் சோதனை முயற்சி செய்தார். அத்தகைய தைரியமான முயற்சி தான், நவம்பர் 3 வெளியாகவுள்ள "அவள்" திரைப்படமும்! இப்பட இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தில் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். 'வயாகாம் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார். விக்ரம் வேதா போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கெனப் பெரும் பெயரையும் மதிப்பையும் சம்பாதித்திருக்கும் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் 'அவள்' படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடவுள்ளார். 'அவள்' குறித்து சித்தார்த் பேசுகையில், ''திகில் படங்களின் தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்...
களத்தூர் கிராமம் விமர்சனம்

களத்தூர் கிராமம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திடீரென்று ஒரு படம் நல்லதொரு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு படம் தான் ‘களத்தூர் கிராமம்’. பழி வாங்கும் கதை என மூன்றே வார்த்தையில் படத்தின் கதையைச் சுருக்கி விடலாம். ஆனால், எந்தச் சமயத்தில் யார் யாரைப் பழி வாங்குகிறார்கள் என்பதும், கதைக்களமும் காலமும் தான் படம் ஏற்படுத்தும் ஆச்சரியத்திற்குக் காரணம். ஒரு மகன் தனது தந்தையைக் கொல்ல நினைக்கின்றான்; தந்தையின் மரணத்தித்திற்காக ஓர் ஊரையே காவு வாங்க நினைக்கின்றான் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மகன்; தனது திருமணம் நின்றதற்குக் காரணமாக இருந்ததால் நண்பனைப் பழி வாங்குகிறான் சபலன் ஒருவன்; தனக்கொரு பிரச்சனை என வந்த பொழுது உதவாதவனை நேரம் பார்த்துச் சிக்கலில் மாட்டி விடுகிறான் பூசாரி; மகன் சாவிற்குக் காரணமான ஒருவனை அவனது மகனைக் கொண்டே கொல்லத் துடிக்கும் ஒரு முதிய தம்பதி; தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க நினைக்கும் பண்ணையார் மகன் எனப் படத்தில் அத்த...
ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

ஜாக்கி சானின் தி ஃபாரீனர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜாக்கி சானின் ஆக்ஷன் படம் ஒன்று ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘தி ஃபாரீனர்’. இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், இப்படத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து, 007 ஆகக் கலக்கிய பியர்ஸ் பிராஸ்னனும் நடித்துள்ளார். ஸ்டீஃபன் லெதர் எழுதிய 'தி சைனா மேன்' எனும் நாவலைத் தழுவித் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் டேவிட் மார்கோனி. பிரபல ஹாலிவுட் இயக்குநர் இயக்குநர் மார்டின் கேம்பெல் படத்தை இயக்கியுள்ளார். 2006இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'கேசினோ ராயல்' படத்தை இயக்கியவர் கேம்பெல் என்பது குறிப்பிடத்தக்கது. பியார்ஸ் பிராஸ்னன் 007 ஆக நடித்த 'கோல்டன் ஐ' படத்தை இயக்கியவரும் இவரே! 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பியர்ஸ் பிராஸ்னனுடன் இணைகிறார். க்வான் (Quan) என்பவர் லண்டனைச் சேர்ந்த தொலிழதிபர். அவரது பதின் வயது மகள் ஒரு வெடி விபத்தில் இறந்து விடுகிறாள். அரசியல் கா...
மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது. படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்யா...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்கி...
சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு மாற்றலாகும் சென்னையில் ஒரு நாள் படத்தின் கதாபாத்திரமான காவல்துறை உயரதிகாரி சுந்தரபாண்டியனைச் சுற்றி கதை நிகழ்கிறது. ஆனால் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியோ நீட்சியோ இல்லை. இப்படம் துருவங்கள் பதினாறு போல் ஒரு க்ரைம் த்ரில்லர். அந்தப் படத்தின் தாக்கத்தையும் படத்தில் உணர முடிகிறது. 'ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?' எனக் கோவை முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏஞ்சல் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் காவல் அதிகாரி சுந்தரபாண்டியன் வீட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து கோவை வரும் ஏஞ்சல் எனும் பெண் கடத்தப்படுகிறாள். இது மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா யார் எனத் துப்பு துலக்குவது தான் படத்தின் கதை. ராஜேஷ்குமாரின் நாவலொன்றினைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் என கிரெடிட் கொடுத்திருப்பது சிறப்பு. படம் முழுவதும் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கும் சரத்குமார்...
100 தொட்ட சிம்பு

100 தொட்ட சிம்பு

சினிமா, திரைத் துளி
நடிகர், பாடகர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு, "என் ஆளோட செருப்பக் காணோம்" படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையைப் பெற்றிருக்கிறார். 1999இல் வெளியான "மோனிஷா என் மோனோலிசா" படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பம்சம். 100 பாடல்கள் என்ற மைல் கல்லை எட்டியிருக்கும் சிம்பு அதைப் பற்றிக் கூறும்போது, "பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம். என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களைப் பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன...
இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

இந்திரஜித் – ஆக்ஷன் சாகச படம்

சினிமா, திரைச் செய்தி
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்திரஜித் படத்தைக்கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சக்கரக்கட்டி படத்தை இயக்கிய அவரது இளைய மகன் கலாபிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். கெளதம் கார்த்திக் நாயகனாகவும், சோனாரிகாவும் அஷ்ரிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். அக்டோபர் 15 அன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் ட்ரெயிலர் திரையிடப்பட்டது. சாகசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுமென்ற நம்பிக்கையை ட்ரெயிலர் ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் ஒளிப்பதிவும், VFX-உம் உள்ளதென மகிழ்ச்சியில் உள்ளார் தயாரிப்பாளர் தாணு. ‘இந்தப் படம் கண்டிப்பாகக் காலத்தின் கல்வெட்டாக இருக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்கு இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தான் காரணமெனப் பார்க்கும் பொழுதே தெரியும்படி உள்ளது’ எனப் புகழ்ந்தார். கவிஞர் அறிவுமதியின் மகன் இராசாமதி தான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாண்டிச்சேரியில் ...
விக்டோரியா & அப்துல் விமர்சனம்

விக்டோரியா & அப்துல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ். இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, இப்படத்தை நோக்கினால் எழும் பிரம்மாண்ட பிரமிப்பைத் தவிர்க்கவே முடியவில்லை. படத்தின் முதற்பாதி அங்கதம் மிகவும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு, அப்துலும் மொஹமதும் இங்கிலாந்து துறைமுகத்தில் காலடி வைத்ததும், அவர்களை வரவேற்கும் ஆங்கிலேயர், “நாகரிகத்திற்கு வரவேற்கிறோம்” என்கிறார். பின்னணிய...
சோலோ இசை – ஒரு பார்வை

சோலோ இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
'வாயை மூடி பேசவும்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மானின் நேரடி மூன்றாவது தமிழ்த் திரைப்படம் "சோலோ". தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அக்டோபர் 5 அன்று உலகெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். சோலோ - ஒரு ரொமான்டிக் த்ரில்லர் படம். இதில் துல்கர், ருத்ரா (பூமி), சிவா (நெருப்பு), சேகர் (நீர்), திரிலோக் (காற்று) என நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 11 இசையமைப்பாளர்களை பிஜாய் நம்பியார் நாடியுள்ளார் என்பது இன்னொரு சிறப்பு. தமிழில் அவர் இயக்கத்தில் வெளியான டேவிட் படத்திலும் இத்தகைய முறையையே கையாண்டார். துல்கரின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப "சிவாவின் உலகம்", "சேகரின் உலகம்", "ருத்ராவின் உலகம்" என்று பிரிக்கப்பட்டு பாடல்கள் வெளியிட்டு உள்ளனர். W...
சோலோ – டப்பிங் படம் இல்லை

சோலோ – டப்பிங் படம் இல்லை

சினிமா, திரைச் செய்தி
“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ். “ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிகர்...