Shadow

சினிமா

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமா, திரைத் துளி
சினிமா மீது கொண்ட காதலால், யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநர் ஆகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவரது பெயர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘முன்னோடி’ என்று தலைப்பிடப்பட்ட அப்படத்திற்கு, கதையும் திரைக்கதையும் வசனமும் அவரே! யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம். அவருடன் இணைந்து சோஹம் அகர்வால் படத்தைத் தயாரித்துள்ளார். ஒருவன் யாரை முன்னோடியாகப் பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். 'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற கருத்தை முன் வைக்கிறது படம். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்...
கொடி இசை – ஒரு பார்வை

கொடி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர். 1. பாடல் - ஏய் சுழலி பாடியவர்கள்: விஜய்நரைன் ரங்கராஜன் விவேக் வரிகளில் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்டிக் நாட்டுப்பாடல் இது. ஒரு அழகான நாட்டுப்பாடலுடன் ஜாஸை கலந்து ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார் சந்தோஷ். விஜய் நரைன் குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 2. பாடல் - சிறுக்கி வாசம் பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் சந்தோஷ் நாராயணன் இசையில் இன்ன...
தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர். க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். "க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்" என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். "இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு சவால்" என்பார் அந்நிறுவனத்தின் தலைவர். அதற்கு க்றிஸ்டியனின் அம்மா, "மற்ற குழந்தைகளுக்கு அப்படி நேரும்போது, அது சவால். உங்க குழந்தைகளுக்கு அப்படியாகும் போது அது பிரச்சனை" என்பார் மன அழுத்தத்தில். அவருக்கு க்றிஸ்டியனை அங்கேயே விட்டுவிட வேண்டுமென எண்ணம். இராணுவ அதிகாரியான க்றிஸ்டியனின்...
கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

கவலை வேண்டாம் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
நடிகர் ஜீவா காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது . ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே-வின் இயக்கத்தில் வரும் இரண்டாவது படமென்பதால் எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. வளர்ந்து வரும் இசையமைப்பாளரான லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்களை எழுதியவர் கோ சேஷா. 1. பாடல் -  காதல் இருந்தால் போதும் பாடியவர்கள்: அர்மான் மாலிக், ஷாஷா திருப்பதி அர்மான் மாலிக்கின் குரலில் ஒரு எனர்ஜெட்டிக் மெலடி. இப்பாடல் மூலம் அர்மான், தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஓர் இடத்தை நிச்சயம் பிடிப்பார். இளசுகளின் பல்ஸை லியோன் சரியாக புரிந்து வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். 2. பாடல் - என் பல்ஸை ஏத்திட்டுப் போறியே பாடியவர்கள்: இன்னொ கெங்கா, ஆண்ட்ரியா, தினேஷ் கனகரத்தினம் லியோன் இசையில் நம்மைத் துள்ள வைக்கும் ஒரு பாடல். லண்டனைச் சேர்ந்த இன்னொ கெங்காவின் குரல் புது ...
காகித கப்பல் விமர்சனம்

காகித கப்பல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் பொழுது அவமானப்படும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. தான் விசாரணைக்குப் போயிட்டு வந்தது குறித்து தன்னிடம் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் பொழுது மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார். அவரது கணக...
சாயா – படக்குழுவினர்

சாயா – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> சந்தோஷ் கண்ணா >> காயத்ரி >> சோனியா அகர்வால் >> Y.G.மகேந்திரன் >> பாய்ஸ் ராஜன் >> ஆர்.சுந்தர்ராஜன் >> பயில்வான் ரங்கநாதன் >> நெல்லை சிவா >> மனோகர் >> பாலா சிங் >> மூகாம்பிகை ரவி >> கராத்தேராஜா >> கொட்டாச்சிபணிக்குழு:>> தயாரிப்பு - V.S. சசிகலா பழனிவேல் >> கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை - V.S. பழனிவேல் >> இசை - ஜான் பீட்டர் >> சண்டை - பவர் ஃபாஸ்ட் >> நடனம் - ரமேஷ் கமல் >> தயாரிப்பு மேற்பார்வை - மதுபாலன் >> மேலாளர் - ஆத்தூர் ஆறுமுகம் >> மக்கள் தொடர்பு - A. ஜான்...
கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சாயா படம்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சாயா படம்

சினிமா, திரைத் துளி
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்தப் படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'சாயா'.  சாயா படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் ”சாயா” படம், ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குநர் V.S. பழனிவேல். இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்க...
இமைக்க விடாப் படம்

இமைக்க விடாப் படம்

சினிமா, திரைத் துளி
சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும். இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரச் செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா - நயன்தாரா - ராசி கண்ணா - பிரபல வில்லன் அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'. 'டிமான்டி காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாக இருக்கின்றது. "தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் முக்கி...
‘அறிவே பலம்’ – பலசாலி

‘அறிவே பலம்’ – பலசாலி

சினிமா, திரைத் துளி
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும், சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி படப் பாணியில் முழுக்க முழுக்கக் காமெடியாக சொல்லும் படம் தான் பலசாலி. பலமே இல்லாத ஒரு ஆள் எப்படித் தன்னை விட பலசாலிகளைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் 'பலசாலி'. சூது கவ்வும் பாணியிலான ‘ப்ளாக் ஹ்யூமர்’ படமாக உருவாகிறது 'பலசாலி'. பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவைப் பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால், பலசாலி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனை விட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்...
இன்ஃபர்நோ விமர்சனம்

இன்ஃபர்நோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'டாவின்சி கோட்' நாவல் மூலம் பெரும் புகழ் ஈட்டியவர் எழுத்தாளர் டான் ப்ரெளன். அதைப் படமாக இயக்குநர் ரோன் ஹாவர்ட் எடுத்த பொழுது, அப்படத்தை இந்தியாவில் வெளியிட கிறிஸ்துவ அமைப்புகள் 2006இல் தடை கோரியது. படத்தின் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பை அது ஒன்றே எகிறச் செய்து, தடை நீக்கப்பட்டதும் 'அப்படி என்னத்தான் படத்தில் இருக்கு?' எனத் திரையரங்கை நோக்கித் தள்ளியது. அந்த எதிர்பார்ப்பின் நீட்சி, படமாக்கப்பட்டுள்ள எழுத்தாளரின் மூன்றாவது நாவலான இன்ஃபர்நோ வரையிலுமே தொடர்வது குறிப்பிடத்தக்கது. குறியீட்டியலில் (Symbology) பேராசிரியரான ராபர்ட் லேங்டன் புதிரை விடுவிப்பதோடு, இம்முறை உலகையே காக்கும் பெரும் பொறுப்போடு களமிறங்கியுள்ளார். எத்தகைய குறியீட்டையும் கட்டுடைக்கக் கூடிய லேங்டன், 'ப்ரெளனா இருக்குமே! அதில் ஹார்ட்டின் போட்டுத் தருவாங்களே! காலையில் எழுந்ததும் மக்கள் எல்லாம் குடிப்பாங்களே!' என காஃபி என்ற ...
பல மொழியில் சீற உள்ள புலிமுருகன்

பல மொழியில் சீற உள்ள புலிமுருகன்

சினிமா, திரைத் துளி
மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதிபாபு, நமீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் புலி முருகன். வெளியிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படத்தின் மற்ற மொழி உரிமையைப் பெற பலர் போட்டியிட இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். புலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. பாகுபலி படத்திற்குப் பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்த...
எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எம் எஸ் ஜி (MSG) – ‘மெஸெஞ்சர் ஆஃப் காட்’ சீரிஸின் மூன்றாவது படமிது. இத்தொடர் படங்களின் நாயகன், தனக்கென ஒரு கூட்டத்தைக் கொண்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த துறவியான குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆவார். டி.ராஜேந்திரின் திறமையும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பையும் ஒருங்கே கொண்ட பவர் ஸ்டார் இவர் என்றே சொல்லலாம். மாயாஜாலப் படமான ‘லயன் ஹார்ட்’ அதகளக் காமெடியாய் உள்ளது. ஓர் உதாரணம்: போர்க்களத்தில் குதிக்கும் நாயகன் குர்மீத், யானையை (ஆம், யானையே தான்!) அநாயாசமாகத் தூக்கி எறிகிறார். வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பூமியை ஆக்கிரமிக்க வேண்டுமெனத் துக்கிரித்தனமான எண்ணம். நடக்குமா? முடியுமா? ராஜஸ்தான் சிங்கம் ‘ஷேர் தில்’ இருக்கும் பொழுது? பொதுவாக, இத்தொடர் படங்களுக்கு இரண்டு இயக்குநர் இருப்பார்கள். முதல் இரண்டு படங்களை ஜீத்து ஆரோராவுடன் இணைந்து இயக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங், இப்படத்தைத் தன் மூத்த மகள் ஹ...
அம்மணி விமர்சனம்

அம்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஜீ தமிழ்' சேனலில் தொகுத்தளித்த 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையால் கவரப்பட்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி. கைக்குக் கை மாறும் 'மணி (money)' இருக்கே, அம்மணி மீதே படத்தின் கதாபாத்திரங்களுக்கு கண். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உடைய ஒவ்வொரு குடும்பமும் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது அம்மணி படம். அரசு மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளியாக இருக்கும் சாலம்மாவிற்குக் கணவரில்லை. அவரது மூத்த மகனுக்கு 10 வயது இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்து விடுகிறார். மகளோ ஒரு ரெளடி எனப் பெயரெடுத்த அடாவடியான ஆளுடன் ஓடி விடுகிறாள்; மூத்த மகனோ குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்; இளைய மகனோ மனைவியின் பேச்சிற்கு ஆடும் ஆட்டோ...