Shadow

Tag: Fahadh Faasil

மாரீசன் விமர்சனம் | Maareesan review

மாரீசன் விமர்சனம் | Maareesan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாரீசன் என்பது ராமாயணத்தில் வரும் பொன்னிற மாயமானைக் குறிக்கிறது. எப்படி மாரீசன் ராமனை ஏமாற்றித் தன் மாயத்தில் விழ வைக்கிறாரோ, அப்படி வேலாயுதம் பிள்ளையை ஏமாற்றி அவரது பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார் சிறையிலிருந்து விடுதலையாகும் தயாளன். மாரீசனின் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. படத்தின் நாயகன், வேலாயுதம் பிள்ளையாக நடித்துள்ள வடிவேலு தான். திரையில் அவரது பெயர்தான் முதலில் வருகிறது. வடிவேலுவின் குணசித்திர நடிப்பை, மாமன்னனில் மாரி செல்வராஜ் அழகாக வெளிக் கொண்டு வந்திருப்பார். நடிப்புப் பேரரக்கனான ஃபகத் ஃபாசிலையும், வடிவேலுவையும் முழுப் படத்திலும் காட்சிகளில் ஒன்றாகக் கொண்டு வந்தால் எப்படியிருக்கும் என்ற புள்ளியில்தான் மாரீசன் தொடங்கியதாக இயக்குநர் சுதிஷ் சங்கர் கூறியுள்ளார். அவர்கள் சந்திக்கும் புள்ளியில் தொடங்கும் சுவாரசியம், இடையில் கொஞ்சம் திகட்டுமளவு மெல்ல நிதா...
மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

மாரீசன் – திருடனும், அல்சைமர் பயணியும்

Trailer, காணொளிகள், சினிமா
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியுள்ள 'மாரீசன்' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, 'ஃபைவ் ஸ்டார்' கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தைக் கவனித்திருக்கிறார். கிராமியப் பின்னணிய...
நிலை மறந்தவன் விமர்சனம்

நிலை மறந்தவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் கதை. ட்ரான்ஸ், அமேசான் ப்ரைமில் காணக் கிடைத்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய திரையில் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும் ...
தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும் (2017) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'திருட்டுப்பொருளும் சாட்சியும்' என்பதே தலைப்பின் பொருள். ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை. இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள். ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, 'மகேஷின்டே பிரதிகாரம்' என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, 'தொண்டிமுதலும் த்ரிக்சா...
ட்ரான்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம். மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது. போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ரான...
கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது அல்ல. அன்பின் நிறைவு மட்டுமே ஒரு வீட்டை வீடாக மாற்றவல்லது. 'கும்பளாங்கி நைட்ஸின்' கதையை இப்படி ஒற்றை வரி 'க்ளிஷே'வுக்குள் அடக்கி விடலாமா என்றால்... கூடாது. இந்தத் திரைப்படம் சொல்லும் பல்வேறு அடுக்குகளில் அதுவுமொன்று என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எண்ணற்ற மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஆனந்தமும் கண்ணீரும் வீழ்ச்சியும் உயர்ச்சியும், வலியும் இறுமாப்பும், காதலும், பொறாமையும், வியப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அவைகளை இணைக்கும் ஒற்றை இழையாக அன்பும் நிறைந்து தளும்பும் அபாரமான உணர்வெழுச்சியென்றும் அடையாளப்படுத்தலாம். சமூகத்தில் உதிரிகளாக வாழ்ந்து முடிக்கும், இலக்கற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும் சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட அடித்து உருளும் சகோதரர்களுக்கிடையே வாழ்க்கை எப்படி வ...
மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

மலையாள சினிமாவின் ‘டேக் ஆஃப்’

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மையத்தை நோக்கி சோம்பலாக நீந்தும் பம்மாத்துக்கள் எதுவும் இல்லாத நேரடியான கதை. ஏற்கெனவே ஏசியாநெட்டிலும் இன்ன பிற தொலைக்காட்சிகளிலும் அலசப்பட்ட கரு. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஈராக்கில் பணிபுரிந்து ஐஎஸ் தீவிரவாதிகளின் பிணைக்கதிகளாகச் சிக்கி மீட்கப்பட்டவர்களின் கதைதான் இது என்று தெளிவாகக் கதையின் க்ளைமாக்ஸையே சொல்லி விட்டுத் தொடங்கும் படம். வெறும் செய்தியாக மட்டுமே இந்த நிகழ்வுகளைப் பார்த்தவர்களுக்கு அந்தச் செய்திகளுக்குப் பின்னால் இருக்கும் உறைந்து போன நிமிடங்களை, அதிலிருந்த பயத்தை, அந்த நாட்களின் வேதனையை, விட்டு வருவதா அங்கேயே இறப்பதா என்ற ஊசலாட்ட மனநிலையின் வலியை ஆழமாகக் கடத்துவதில்தான் ஒரு தேர்ந்த இயக்குநர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். பல படங்களுக்கு எடிட்டராகப் பணிபுரிந்து முதன்முறையாக இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ் நாராயணன், தன் முதல் படத்திலேயே தன்னைத் தேர்ந்த இயக்கு...