Shadow

Author: Dinesh R

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 7போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், 'நோக்கு வர்மம்' என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் கொன்றனர் என்பது மிகவும் அருவருக்கத்தக்க அல்லது கேவலமான புனைவு. பிரதான சீடரான வெய் ஹூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு போதி தர்மர் இந்தியாவிற்கு கிளம்பி விட்டார். ஆனால் போதி தர்மர் மீண்டும் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு இரண்டுக் காரணங்கள் இருக்கலாம்.ஒன்று போதி தர்மர் இந்தியாவை விட்டு சீனாவிற்கு சென்ற ஆதாரமே நம்மிட...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 6ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் தலைமை குரு திருடர்களைப் பார்த்து, "இந்தப் புனிதமான இடத்தில் சண்டையிடக் கூடாது. புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்கிறார்.திருடர்களின் தலைவர் கேலியாக பிக்குக்களைப் பார்த்து சிரிக்கிறார். தலைமை குரு மண்டியிட்டு திருடர்களின் தலைவர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறார். மற்ற பிக்குகளும் வணங்குகின்றனர். திருடர்களின் பின்னால் போதி தர்மர்...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 5'நான் என் சீடனை தேர்வு செய்யணும்' - போதி தர்மர்.'சன் க்வாங்' என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. புத்த மதத்தைத் தழுவி துறவியாக மாறுகிறார்.படத்தில் 'சன் க்வாங்'கின் அறிமுகம் லாங் -ஃபெய் என்னும் மடத்தில் இருந்து தொடங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்கும் சன் க்வாங், தன் கைகளைப் பதற்றமுடன் கழுவுகிறார். அவர் கையில் ஏதோ அழுக்கு உள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சி ஒரு குறியீடு என படுகிறது. தன் கைகளில் படிந்த இரத்தக் கறைகளைக் கழுவ முனைகிறார். அதாவது மனதில் படிந்து விட்ட குற்றவுணர...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 4மனிதனுக்கு அதிசயங்கள் மீதும், ஆச்சரியங்கள் மீதும் அலாதி பிரியம். போதி தர்மர் ஒரு நாணலின் உதவியோடு ஆற்றைக் கடந்தார் என்ற விடயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. மக்களில் சிலர் நம்புகின்றனர். சிலர் நம்ப மறுக்கின்றனர். அதற்கு அவரின் தோலின் நிறமும் காரணமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கவனித்தவாறு வருகிறார் ஹங் சீ. அவர் அப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பெளத்த குரு."நாம் நம் மனதை லாப நஷ்டங்களோடு பிணைத்து கொள்ளக் கூடாது; புகழுக்காக ஏக்கப்பட்டால்.. அவை சுக துக்கங்களைப் பெருக்கி விடும். அதனால் தான் பிக்குகள் உலகாயுத விருப்பங்களில் இருந்து விலகி தூய்மையான மனநிலையை அடைய முனைகின்றனர்" என்று தனது சீடர்களுக்கு அறிவுரைக்கிறார் ஹங் சீ.தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதி தர்மரை தூரத்தில் நின்றவாறு மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் விலக்கியவ...
காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

காஸ்ரையிடிஸ் – அமில அபாயம்

மருத்துவம்
இன்று இளம் வயதினர் மற்றும் நடு வயதினரையும் பாதிக்கும் பிரதான ஒரு நோயாக வயிற்றில் அமிலம் சுரத்தல் நோய் (Gastritis) காணப்படுகிறது.தொண்டைக் களம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் கீறல்கள் மற்றும் புண் என்பனவும், முன் சிறுகுடல் என்பன இதற்கு காரணமாக அமைகின்றன. இந்தப் புண் பெப்டிக் அமில புண் (Pepiteutine Diseases) என்று அழைக்கப்படுகிறது.இந்நோய் இரண்டு வகைகளைக் கொண்டது. ஒன்று  பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படுவது. மற்றொன்று புகைப்பிடித்தல, மதுபானம் அருந்துதல், சில வலி நிவாரண மருந்துவகைகளை அதிகளவில் உட்கொள்ளல், மிளகாய் மற்றும் சரக்குப் பொருட்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளல், மன அழுத்தம், மன நோய், நீண்ட நாட்களாக இருக்கும் புண், சிறுநீரகத்தின் செயற்பாடு குறைவடைதல் போன்ற காரணங்களால் வயிற்றில் மற்றும் சிறுகுடல் சுவர்களில் புண் ஏற்படலாம்.காஸ்ரையிடிஸ் நோயின் அறிகுறிகள்:~வயிற்றின் மேற...
ஷட்டர்(2008) – தீராத காதல்

ஷட்டர்(2008) – தீராத காதல்

அயல் சினிமா, சினிமா
உலகம் முழுவதும் பேய்கள் பற்றியப் பார்வை பெரும்பாலும் ஒரே மாதிரியே இருந்து வருகின்றன. தீராத ஏக்கங்களுடன் தற்கொலை செய்துக் கொண்டாலோ அல்லது அசாம்பாவிதங்களால் நிகழும் துர்மரணங்களாலோ தான் உயிர் பிரிந்தவுடன் ஆவியாக அலைய நேருகிறது. ஆனால் உலகில் உலவும் 90% சதவிகித பேய்கள் பெண்களாகவே பதியப்பட்டுள்ளது. திரைப்படத்தில் வரும் பேய்களும் அதிகபட்சமாக பெண்களாகவே உள்ளனர். இந்த விஷயத்தில் உலகத் திரைப்படங்களுக்குள் தான் எத்தனை ஒற்றுமை!? இதற்கு என்னக் காரணமாக இருக்கும்? பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களின் குற்றவுணர்ச்சியாக இருக்குமோ!? பென்னும், ஜேன்னும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். பென் ஒரு புகைப்படக் கலைஞன். திருமணம் முடிந்ததும் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு செல்கின்றனர். விமான நிலையத்தில் இறங்கி ஒரு சிவப்பு நிறக் காரில் பயணிக்கின்றனர். இரவு நேரம். ஜேன் கார் ஓட்டிக் க...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 3போதி தர்மரைக் காண சீன மாமன்னர் வூ விழைகிறார். செருப்பு கூட வாங்க முடியாத அளவு வறுமையில் உள்ளவர்களா இந்தியப் பிக்குகள் என வியந்து போதி தர்மருக்கு ஓர் இணை செருப்பினை அளிக்கின்றனர். போதி தர்மர் அரண்மனை நோக்கி செல்கிறார்.போதி தர்மரும், மாமன்னரும் எதிர் எதிரே அமர்ந்து உள்ளனர். சுவரில் புத்தரின் படம் பெரிதாக வரையப்பட்டுள்ளது. காற்று மெலிதாக வீச, கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகள் ஒலிக்கிறது. மாமன்னர் புன்னகைத்தவாறு ஒலிக்கும் மணியைப் பார்க்கிறார்."காற்று மணிகளை ஒலிக்கச் செய்கிறது.""மாட்சிமைப் பொருந்திய மன்னரின் மனம் அமைதியற்று உள்ளது என நினைக்கிறேன்" என்கிறார் போதி தர்மர்."நீங்கள் சொல்வது சரி தான். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.""தாங்கள் பெளத்தத்தைத் தழுவிய மாமன்னர் என ரொம்ப காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டுள்ளேன். அதனாலேயே பெள...
கடவுளும் கணிப்பொறியும்

கடவுளும் கணிப்பொறியும்

கட்டுரை, சமூகம்
'தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(!?) உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்.''கடவுள் மனிதனை மண்ணில் இருந்து தான் படைத்தாரா? சரி.. கடவுள் தான் மனிதனைப் படைத்தாரா?' இது போன்று சிக்கலான கேள்வியை எல்லாம் தொல்லியல் துறையினரிடம்  விட்டு விடுவோம். ஆனால் மனிதன் தன் சொந்த முயற்சியிலும், கடின உழைப்பிலும் இன்று உலகில் அனைவருக்கும் பயனை அள்ளித் தரும் கணிப்பொறியை மண்ணில் இருந்து தான் உருவாக்கி இருக்கிறான். சுமேரியர்கள் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பொறியை உருவாக்கினார்கள். இன்றைய எலக்ட்ரானிக் கணிப்பொறியின் வளர்ச்சியை, சார்லஸ் டார்வினின்  பரிணாமக் கொள்கையினோடு ஒப்பிட்டு சொல்லலாம். அதாவது எப்படி உயிரினங்களின் தோற்றம் படிப்படியாக ஒரு செல் உயிரில் இருந்து ஊர்வன, பறப்பன என தொடங்கியதோ, அதே போல் சிலிக்கா எனும் மண்ணில் இருந்து...
அடையாளங்கள்

அடையாளங்கள்

கதை, படைப்புகள்
'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!''எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.' 'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வ...
அந்தி நேர சாயை – 3

அந்தி நேர சாயை – 3

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 2என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். நான், எங்கம்மா.. இவ்ளோ தான் என் உலகம். ஆனா உலகம் ரொம்ப பெருசு இல்ல!! அப்ப என்னோட அழகான சின்னக் கூடுன்னு சொல்லிக்கலாம் தான? இந்தக் கூட்டுல யாரோ கல் எறிஞ்ச மாதிரி எங்கம்மாக்கு கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு. அவங்க காலுலாம் வீங்க ஆரம்பிச்சுது. பெருசா அவங்க கண்டுக்கல. நாள் ஆக ஆக சோர்வு அதிகமாயி உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டே இருந்தாங்க. உள்ளூர் வைத்தியர் மருந்துக்கு சரி படல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒரு கிட்னி சுத்தமா செயலிழந்துடுச்சுன்னும், இன்னொன்னு பலவீனமா இருக்குன்னு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு சொன்னாரு. உடனே தனியார் ஆஸ்பத்திரில சேர்த்தோம். பலவீனமா இருக்கிற கிட்னி கொஞ்ச நாள் தான் தாங்கும் என சொல்லிட்டாங்க. எவ்ளோ சீக்கிரம் முட...
அந்தி நேர சாயை – 2

அந்தி நேர சாயை – 2

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 1முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன? மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும்? அதுவும் 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து இந்த ஊர்ல தான் கொல்லணுமா?ஊருக்குள்ள வர்றப்பவே கேசவ் சொன்ன மரம் எதுன்னு சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சது. ரொம்ப பெரிய மரம் தான். நின...
அந்தி நேர சாயை – 1

அந்தி நேர சாயை – 1

கதை, படைப்புகள்
எப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? கப்பூரார் அப்படித் தான். கப்பூரார எங்க வீட்டு சமையற்காரர்னு சொல்லலாம். ஆனா அவர் என்னோட சமையற்காரர் மட்டும் தான். என்னோட 4 வயசுல நான் சாப்ட்டது ஏதோ பாய்சன் ஆகி சாகற ஸ்டேஜுக்கு போயிட்டேனாம். அதுக்கு அப்புறம் என் சாப்பாடு மாறிடுச்சு. ஏகப்பட்ட பத்தியம். எது சாப்டாலும் சுத்த பத்தமா இருக்கணும்னுட்டு.. கலப்படம் இல்லாத சமையல் பொருள வாங்க ஒரு ஆளுயும், அதை சமைக்கறதுக்கு கப்பூராரயும் தாத்தா புதுசா வேலைக்கு வச்சாரு. இப்ப தாத்தா இல்ல. ஆனா அந்தக் குறை எனக்கில்லாததுக்கு கப்பூரார் தான் காரணம். அப்பாவ விட பத்து பதினைஞ்சு வயசு அதிகமா இருக்கும். அவரோட பெயர் நாராயணன்னு நினைக்கிறேன். அவர் ஊர்ப் பெயரைச் சொல்லி சொல்லி.. அதே பழக்கம் ஆயிடுச்சு எங்க வீட்டுல.கப்பூராருக்கு எங்கள விட்டா யாரும் இல்ல. அவருக்கு பதினேழு பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. ...
ஆனா.. எம திருடனுங்க!!

ஆனா.. எம திருடனுங்க!!

கட்டுரை, சமூகம்
இது தான்டா போலீஸ்!!ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம்.காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி 'லிஃப்ட்' கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க.ஹெல்மட் போடாமல் போய் அவர்களிடம் சிக்கினால்.. எங்கப்பா காசை நான் வீணா செலவழிச்சு கெட்டுப் போறேன்னு எம்மேல இருக்கிற  அக்கறையில் காசைப் பிடுங்கி வச்சுக்கிறாங்க. மாமாக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை!? நான் ப்ரென்ட்ச எல்லாம் மாமான்னு தான்னு கூப்பிடுவேன். நீங்க பாஸூ!? அதான் 'போலீஸ் உங்கள் நண்பன்'னு விவேக் ஏதோ படத்துல சொல்வாரே!! அத பாத்ததில் இருந்து தான்.எல்லா டாக்குமென்ட்சும் சரியா இர...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 2'ஜென்' போதனையற்ற 'புத்தம்'. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும்போதிப்பதில்லை. ஜென் என்பது ஒரு தத்துவ விசார முறைமையோ அல்லது வாழ்வியல் நடைமுறைகளைச் சொல்லும் சித்தாந்தமோ அன்று. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே ஜென். அது தனித்துவமான மனோதளத்தை நம்முள்உருவாக்கும். ஆனால் அது பிறர் சொல்லக் கேட்டு உருவாகாது.  பூ மலர்வது போன்று அனிச்சையாக உள்ளுக்குள் நிகழும் அக விழிப்பு அது. எப்படி ஜென்னில் போதனைகள் இல்லையோ அதே போல் வழிபாட்டுச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கிடையாது. எனவே ஜென் மதம் கடந்தது என சொல்லலாம்.போதி தர்மர் ஒருமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருக்கிறார். சின் மோன் சில பிக்குகளுடன் அம்மரம் அருகே வருகிறான். போதி தர்மர் தியானத்தில் இருப்பதைப் பார்த்தவாறே, "உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். தாமரை சேறுநிறைந்த குளத்தில் மலர்கிறது....
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா: மாஸ்டர் ஆஃப் ஜென் - 167 வருடங்களுக்குப் பிறகு, குருவின் கட்டளையை நிறைவேற்ற போதி தர்மர் சீனா கிளம்புகிறார். அவரது வயோதிகத்தைக் காரணம் காட்டி அவரது பயணத்தை ரத்து செய்யும் படி, அப்போதைய மன்னரான போதி தர்மரின் அண்ணன் மகன் வேண்டுகோள் விடுக்கிறார்."நான் என் சீடனை தேர்வு செய்யணும்" என்று நிறுத்தி விட்டு, "சீனாவில் ஜென்னைப் பரப்ப வேண்டியது என் கடமை" என்று மன்னனின் வேண்டுகோளை மறுக்கிறார் போதி தர்மர்.தர்க்கப்படி போதி தர்மர் 'ஜென்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. 'ஜென்' என்பது 'சேன் (Chan)' என்ற சீன வார்த்தையின் ஜப்பானிய உச்சரிப்பு ஆகும். Chan என்ற வார்த்தையோ 'தியான(ம்)' என்ற சமஸ்கிருத வார்த்தையின் தழுவல். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் பதஞ்சலி என்பவர் இயற்றிய யோக சூத்திரத்தில் வரும் அட்டாங்க யோகத்தின் 8 படிநிலைகளுள் ஏழாவது தான் தியானம் ஆகும். ...