Shadow

Author: Dinesh R

சுயம்வரம் – 1

சுயம்வரம் – 1

கதை, தொடர், படைப்புகள்
வழக்கம் போல் அன்று காலை "The Hindu" நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன்.திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,"டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி  டா " என்றார்."இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க??  இப்போ நான் இருக்கும் கம்பெனிநல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்" என்றான் குழப்பத்துடன்.ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroomInterested candidates can forward their details to crazy....gal@gmail.com   Shortlisted profiles will be called up for selection procedure which comprises of following rounds 1. Written test 2. Group Discussion   Can...
இணங்கி இருக்கும் கலை

இணங்கி இருக்கும் கலை

கட்டுரை, மற்றவை
    அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.   மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும...
இரத்த வைரம்

இரத்த வைரம்

அயல் சினிமா, சினிமா
ப்ளட் டைமன்ட் - சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் முக்கியமாக வைரம், தங்கம், டைட்டானியம், பாக்ஸைட் (bauxite), ருட்டைல் (rutile) போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால் உள்நாட்டுப் போரை தீர்மானித்தப் பொருள் அங்கு கிடைத்த வைரங்களே. ஒரு நாட்டின் வளமே அந்நாட்டிற்கு சாபமாய் மாறும் கொடுமை, கொழுத்த வல்லரசுகளின் பார்வையில் அவை விழும் பொழுதே!!உலகின் மூன்றாவது மிக நீளமான இயற்கை துறைமுக...
பூக்காரி

பூக்காரி

கதை, படைப்புகள்
"பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்..""ஆமாங்க""தர்ம சம்ஸ்தா பனார்த்தாய சம்பவாமி யுகே!! யுகே!!""சரி தானுங்க.""என்ன சரி?""நீங்க சொல்றதுங்க.""நான் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா?""தெரியாதுங்க.""அப்புறம் ஏன் சரின்னு சொன்னே!!""நீங்க எது சொன்னாலும் சரியா தான் இருக்குமுங்க.""இது தான் நம்மகிட்ட இருக்கிற தவறான போக்கு. எதையும் கேள்வி கேட்கனும். எதுவா இருந்தாலும் தீர விசாரிக்கனும். அப்ப தான் நமக்கு நிறைய தெரிய வரும். இனிமே நீ கேள்வி நிறைய கேட்கனும் புரியுதா?""கேட்கிறேனுங்க. நீங்க சொன்னதுக்கு என்னங்க அர்த்தம்?""அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு கேள்வி.. தவறுகள் எங்க ஆரம்பிக்குது?""வயித்துல தான் சாமி. பசியில தான் எல்லாம் ஆரம்பிக்குதுங்க.""உன்னால அப்படி தான் யோசிக்க முடியும். ஆனா உண்ம அது இல்ல. சொத்து இருக்கிறவன் சொத்து இல்லாதவன் மேல் பண்ற வன்முற...
காதல் செய்வீர்!!

காதல் செய்வீர்!!

கவிதை, படைப்புகள்
அன்பு என்பார் காதல் என்பார் ஆனந்தம் கொண்டே உவகை உறுவார் - பின் அல்லல் என்பார் கவலை என்பார் ஆத்திரம் கொண்டே அழுது தீர்ப்பார்.கனவு என்பார் கவிதை என்பார் கடல் நீரும் இனிக்குது என்பார் - பின் காயம் என்பார் கசக்குது என்பார் கடுப்பில் நொந்து வலிக்குது என்பார்.காம இச்சையில் கண்களும் இழப்பார் கண்டதும் வந்ததோ காதலே என்பார் - சிறிதும் தன்னை அறியவோ முயற்சியும் பேணார் தவறில் உழன்றேதம் கொள்கையும் மறப்பார்.மையலில் மயங்கி நெஞ்சம் மகிழ்வார் மன்மத எண்ணமே உன்னதம் என்பார் - பின் ஓர்வழிக் காதலில் விழுந்து புரண்டு வையம் பொய்யென வருந்திப் புலம்புவார்.அழுது தீர்க்காமல், கொள்கை மறக்காமல் வருந்தி புலம்பாமல், நொந்து வேகாமல் - உலகம் அன்புமயமாய் மலரவே காதல் செய்வீர் அனைத்து உயிரினையும் காதல் செய்வீர்.- தினேஷ் ராம்...
கணினி ஆய்வில் தமிழ் – 10

கணினி ஆய்வில் தமிழ் – 10

தொடர், தொழில்நுட்பம்
கணினி ஆய்வில் தமிழ் - 9இந்த வாரம் ஒரு நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் சம்பந்தப்பட்ட ஒரு பயன்பாட்டினை உருவாக்க தேவையான டேட்டா என்ட்ரி வேலைகள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம். உதாரணத்திற்கு ஒரு தேடு பொறியை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு தேவையான ஆவணங்கள்/ வலைத்தளங்களில் உள்ள வார்த்தைகளையும் அதன் பல்வேறு அர்த்தங்கள் மற்றும் அவ்வார்த்தையினோடு என்ன வார்த்தைகள் வரக்கூடும் என்பன போன்ற தகவல்களை நாம் டேட்டா பேசில் முன்னமே பதிவு செய்து வைத்தல் வேண்டும். இப்படி செய்யும் பொருட்டு அத்தேடு பொறி மிகுந்த அர்த்தமுள்ளதாகவும் பயனரின் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் அமையும். நாம் முன்னரே பார்த்தது போல், "திருநெல்வேலி" என்று வினா கொடுத்தால் திருநெல்வேலி என்கிற வார்த்தை பெரும்பாலும் சேர்ந்து வரக்கூடிய வார்த்தைகளான "அல்வா", தாமிரபரணி" மற்றும் அங்குள்ள கல்லூரிகள், வழிப்பாட்டுத் தலங்கள் ஆகியவை இ...
கவிதை

கவிதை

கவிதை, படைப்புகள்
உன்னால் என்னை எழுதுகிறேன் என்னால் உன்னை வாசிப்பாயா "காதல்"உனக்குத் தெரியாது உன்னுடம்பில் இன்னொரு உயிராய் நானிருக்கிறேன் பாரம் தாங்கமாட்டாய் என்பதற்காக உருவமற்று உன்னோடு மட்டுமே வசிக்கும் 'உன் நான்'- சே.ராஜப்ரியன்
இயல்பிழந்த நிலை

இயல்பிழந்த நிலை

கவிதை, படைப்புகள்
இயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் உன்னோடு என்னை சேர்த்த காதலால்இயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் நடிக்க வேண்டிதானிருக்கிறது அம்மாவின் பாசத்திலிருந்து நண்பர்களின் ஆறுதலிருந்து மற்றவர்களின் அனுதாபத்திலிருந்து அவளின் ஏளன பார்வையிலிருந்து மறைவாய் அழுதுதீர்த்த கண்ணீரிலிருந்து நம்பிக்கை துரோகிகளின் போலிசிரிப்பிலிருந்து ஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத உபதேசவான்களின் அறிவுரையிலிருந்து தப்பிக்கஎப்பொழுதும் போலவே சிரிக்கிறேன் பேசுகிறேன் எல்லாமும் செய்கிறேன் கண்களை வற்ற செய்து- சே.ராஜப்ரியன்...
என் கொலை

என் கொலை

கவிதை, படைப்புகள்
என்னை நானே கொலை செய்கிறேன் என்னை விரும்பாதவளை நான் நேசிப்பதால்தற்கொலை யாகாது படிமுறைகள் பலவுண்டு இந்த என்கொலைக்குஆகவேதான் இப்பொழுதும் அவள் மட்டும் கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள் சாட்சியாக குற்றவாளி யார் எனச்சொல்ல- சே.ராஜப்ரியன்
கணினி ஆய்வில் தமிழ் – 09

கணினி ஆய்வில் தமிழ் – 09

தொடர், தொழில்நுட்பம்
கணினி ஆய்வில் தமிழ் - 08கடந்த சில வாரங்களாக ஒரு தேடு பொறியின் செயல்பாட்டினைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் நம் பண்டைய இலக்கண நூலான, நன்னூல் மற்றும் சமஸ்கிருத நூல்களான நியாயா, மீமாம்சா போன்ற நூல்கள் எப்படி நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் ஆய்வுகளிற்கு பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதை பற்றிப் பார்ப்போம்.கடந்த எட்டு வாரங்களாக நாம் பார்த்த நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங் செயல்முறைகள் யாவும் மேற்கத்திய செயல்முறைகள் ஆகும். நமது இந்திய பாரம்பரியத்தில் வந்த இலக்கண நூலான நன்னூல் பல அறிய கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. உதாரணத்திற்கு அர்கியூமேன்டேட்டிவ் அனாலிசிஸ் (Argumentative Analysis) என்று ஒரு துறை நேட்சுரல் லாங்குவேஜ் ப்ராசசிங்கில் உண்டு. அதாவது இரண்டு கணினிகள் தானாகவே மனிதர்களைப் போல் உரையாட வைத்தலுக்கு அர்கியூமேன்டேட்டிவ்  அனாலிசிஸ் சமமாகும். இவ்வாய்வில் ஆராய்ச்சியாளர்கள், ...
சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

கவிதை, படைப்புகள்
டிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது கறுத்துப்போன காபிக் கொட்டைகளும் இனிக்குது சர்க்கரை கட்டியே கொஞ்சம் என்னிடம் பேச்சு சூப்பர் வைசர் வயிறு எரியட்டும் அதில் பால் காய்ச்சுவோம்வெண்டைக்காய் பச்சடியில் ஒழிந்திருக்கும் வெங்காயம் போல சுண்டைக்காய் கிச்சடியில் கலந்திருக்கும் வெந்தயம் போல வாழக்காய் பொறியலில் வெந்திருக்கும் கடலைப் போல வாழ்வோம் சைடிஷ்ஷிக்கு நான் கேரண்டிமைதாவின் வழுவழுப்பில் அடுப்புக்கல்லின் கதகதப்பின் ஆயிரம் பரோட்டாக்கள் குருமாவுக்காக பிறந்திருக்கலாம் ஆனால் இந்த ப்ரோட்ட மாஸ்டர் உனக்காக பிறந்தவன்அரிசி மாவில் கலந்த வெள்ளை உளுந்தே சாம்பாரில் விழுந்த கொத்த மல்லிக் கொழுந்தே எண்ணெய்யில் பொறிந்த துவரம் பருப்பே என்னையும் பொறித்ததடி உந்தன் சிரிப்பேபஞ்சாப் கோதுமையும் பண்ரொட்டி நெய்யும் சேர்ந்து செஞ்சது இந்த மைசூர் பாக்கு ருசித்துப்பாரடி என் பர்மா த...
அலை பேசிக்கவிதைகள்

அலை பேசிக்கவிதைகள்

கவிதை, படைப்புகள்
நீ அனுப்பிய குறுஞ்செய்தியெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது என்குட்டி அலைபேசியில்நீ கடைசியாக பேசிய வார்த்தை இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என் காதினுள்எவ்வளவு வெப்பம் நாமிருவரும் பேசுவதால் செல்லமாய் சுடுகிறது உன் கோவத்தைப்போலமுத்தம் கொடுத்தே நம்முடைய கைபேசி கரைந்துபோகிறதுநான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நீ கூப்பிடும்பொழுது மட்டும் அழைகிறதென்னை உனக்கு பிடித்த பாடலுடன்இரவுகள் நீளக்கூடாதா இப்படி சீக்கிரம் முடிந்துபோகிறதே நம் பேச்சைக்கேட்டு பொறாமையில் தேய்கிறது இருட்டென்னும் இரவுநிலாவை பார்த்துக்கொண்டே உன்னுடன் பேசுவது நீரினுளிருந்து கொண்டே பனிக்கட்டி கரைப்பதுபோல்நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு உன்னுடன் பேசுகிறேன் உன் வார்த்தைப்போலவே எல்லாம் மின்னுகிறது அழகாய் சிரிக்கிறது என்னைப் பார்த்துஎன் கண்களில் இப்பொழுது உன் வார்த்த...
அன்பானவர்களுகாக

அன்பானவர்களுகாக

கவிதை, படைப்புகள்
என்னுடைய பலவீனங்களின் மீது யாரும் கல்லெறியாதீர்கள் கோபத்தில் நான் வசைகளை அடுக்கியே பழக்கப் பட்டவன். அதனால் உங்கள் செயல்களுக்கு ஈடாக என்னால் வேறெதையும் தரமுடியாதுசன்மானம் பெற நீங்கள் தயாரென்றால் பிரதியுபகாரமாக கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறேன் எந்நேரமும் எந்த இடத்திலும்எனக்கு அன்பானவர்களும் அதில் சிலநேரம் மாட்டிக்கொள்வதை என் மனம் எப்படி ஏற்கும் பதிலுக்கு நான் உங்களுக்காகவே வார்த்தையொன்று தயாரித்து வைத்திருக்கிறேன் உங்களிடம் தனியாக சொல்கிறேன் இப்பொழுது வேண்டாம் நேரம் வரட்டும்- சே.ராஜப்ரியன்...
கணினி ஆய்வில் தமிழ் – 08

கணினி ஆய்வில் தமிழ் – 08

தொடர், தொழில்நுட்பம்
கணினி ஆய்வில் தமிழ் - 07 சென்ற வாரம் ஒரு தேடு பொறியில் ஆஃப்லைன் செயல்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் ஒரு தேடு பொறியில் பயனர் வினா (க்வெரி: query) கொடுத்தவுடன் அளிக்கப்படும் வலைப்பக்கங்கள் எவ்வாறு வரிசைப்படுத்தப் படுகின்றன என்பதை பற்றிப் பார்ப்போம்.உதாரணத்திற்கு "அண்ணா பல்கலைக்கழகம்" என்று வினாவைக் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அண்ணா பல்கலைக்கழக வலைத்தளமான "www.annauniv.edu" முதலில் வரிசைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் பற்றிய தகவல்களைக் கொண்ட பிற வலைத்தளங்கள் வரிசையில் பின்னர் வர வேண்டும்.வியாபார நோக்கம் இல்லாமல் செயல்படும் தேடு பொறிகள், பயனர் அளிக்கும் வினாவையும் டேட்டா பேசில் (data base) உள்ள வலைப் பக்கங்களையும் நன்கு ஆராய்ந்து, மேத்தமாட்டிக்கல் மாடல் (Mathematical model) மூலமாக ராங்கிங் அல்காரிதத்தை (Ranking alogorithm) வகுத்து செயல்படுகின்ற...
அவர்களை என்ன செய்யலாம்?

அவர்களை என்ன செய்யலாம்?

கவிதை, படைப்புகள்
நான் எப்பொழுதும் சாத்தியமில்லாதவைகளின் மீதே என் பிரியங்களை விதைப்பவன் அறுவடைக்காக காத்திருப்பது தவறுதான்ஆதலினால் என்காதல் செத்துப்போகும் என ஒருவன் சவப்பெட்டி செய்கிறான் இன்னொருவன் புதைப்பதற்கு குழி வெட்டுகிறான் மற்றொருவன் கொல்லிக் கட்டையுடன் அலைகிறான் அவன்கள் மனிதரூபத்தில் உலவிக் கெடுக்கிறார்கள்என்னறுவடை காலம் முன்பே இடையில் அருத்தெடுக்க வேண்டாத உறவில் நுழைந்து என் நேசப்பயிரின் ஆயுளை கெடுத்தழிக்கிறார்கள்அவர்களை என்ன செய்யலாம்?- சே.ராஜப்ரியன்...