Shadow

சினிமா

அஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்

அஜினோமோட்டோ ஆபத்தாபது எச்சரிக்கும் நடிகர் சத்யராஜின் மகள்

சினிமா, திரைத் துளி
சத்யராஜ் மகள் திவ்யா இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவர். உலகின் மிக பெரிய மதிய உணவு திட்டமான அக்ஷய பாத்திரத்தின் விளம்பரத் தூதுவர். மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வு பற்றியும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இவர் சமீபத்தில் அஜினோமோட்டோ (MSG - Mono Sodium Glutamate) கலந்துள்ள உணவுகள் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்தினார். “MSG விளைவுகள் பற்றி உலகெங்கும் பேசியுள்ளனர் எனினும், இது குறித்து அதிகாரபூர்வமான கருத்துகள் இன்று வரை வெளிவரவில்லை. FDA அஜினோமோட்டோவைப் பொதுவாக அனுமதித்தாலும், அஜினோமோட்டோ உள்ள உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக உபயோகித்தால் அடிவயிற்றில் பிரச்சனைகள், தைரொய்ட் செயல்பாட்டில் பிரச்சனைகள் ஹார்மோன் சம நிலையற்ற நிலை, சாப்பாடு அல்ர்ஜி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும்...
‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்

‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்

சினிமா, திரைத் துளி
பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ். கிருஷ்ணனின் அடியாத்தே என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி. ல்சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார். கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல துள்ளலான பாடல்களைப் பாடி ரசிகர்களை வென்ற இளம் பாடகி சுவாகதா, முதன்முறையாக ஒரு ஒற்றை வீடியோ பாடலை இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு இசை வீடியோ தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். தனது முதல் குரு திருமதி விஜயலக்ஷ்மி ராமசேஷன் எனக் கூறும் சுவாகதா, தனது சிறு வயது முதலே அவரிடம் கர்நாடக இசையைப் பயின்றிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான சுவாகதா இசையின் மீ...
மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை

மாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை

சினிமா, திரைத் துளி
போர் வீரனின் கதையை பிரம்மாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி. படத்தின் இயக்குநர் பத்மகுமார், "மம்முட்டி சாரின் பிரபல்யம், ரசிகர் வட்டம் மலையாள எல்லைகளைக் கடந்தது. இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராகப் போற்றப்படுபவர். தமிழில் அவர் பல தொடர் வெற்றிப்படங்களைத் தந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். தமிழ்ப்படங்களில் அவரது தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாக, தமிழ் மண் மனம் மாறாததாக இருக்கும். தமிழர்கள் போன்றே பேசும் அவரது தமிழ்மொழி வன்மை, மலையாள நடிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தும். “மாமாங்கம்” படத்திற்குத் தானே தமிழில் குரல் கொடுப்பதாக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்த...
இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா

இசையமைப்பாளரானார் பாடகி ஸ்வாகதா

Songs, காணொளிகள், சினிமா, திரைத் துளி
வார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்து பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா. அவரின் குரலில் காற்றின் மொழி படத்தில் 'டர்ட்டி பொண்டாட்டி', லட்சுமி படத்தில் 'ஆலா ஆலா'  பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார். தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசையமைத்து, பாடி அந்தப் பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப் பொறுப்பையும் ஏற்று "அடியாத்தே" என்ற இசை ஆல...
எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி

எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாகும் சாந்தினி

சினிமா
நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே! அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாந்தினிக்குத் தனி இடம் உண்டு. ஒரு திறமையான நடிகைக்கு தன் கண்களும் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது நடிகை சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது. அவரின் நடிப்புப் பயணத்தில் கண்களாலும் நடிப்பாலும் மிரட்டிய படங்கள் உண்டு. ‘சித்து +2’ -இல் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, சமீபத்தில் வெளியான ராஜா ரங்குஸ்கி வரை இவரின் கலைப் பயணம் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ராஜா ரங்குஸ்கி படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம் பலரின் புருவங்களை உயர்த்தியது. இவருக்கு நடிப்பில் நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இவரது நடிப்பைக் கண்டு வியந்த பாலாஜி சக்திவேல், இவரை அணுகி ஒரு கதை சொல்ல, அந்தக் கதை சாந்தினிக்கு மிகவும் பிட...
பெளவ் பெளவ் விமர்சனம்

பெளவ் பெளவ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள நேசம் பற்றிய கதை. 110 நிமிடப் படம். முதற்பாகத்தில் சிறுவனும், இரண்டாம் பாகத்தில் நாயும், கதையை நகர்த்தும் பிரதான பாத்திரங்களாக உள்ளனர். லண்டன் டாக்கீஸ் K.நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். மாஸ்டர் அஹான், அவனது தாத்தா பாட்டி, எதிர் வீட்டில் வசிக்கும் ஓர் அங்கிள் ஆன்ட்டி. அஹான் பிறந்தவுடனே அவனது பெற்றோர் இறந்துவிடுதால், அதிர்ஷ்டம் கெட்டவன் என அவனது வகுப்பில் பயிலும் ஒரு மாணவனின் அம்மாவால் முத்திரை குத்தப்படுவதால், அவனை நண்பர்களாக ஏற்க யாரும் முன் வருவதில்லை. பள்ளிக்குப் போகும் வழியிலோ, போகும் பொழுதும் வரும் பொழுதும் தெரு நாய் ஒன்றின் தொந்தரவு. இவையனைத்தும் அஹானை எப்படிப் பாதிக்கின்றன என்பதும், எதிர்வீட்டு தம்பதியின் காதல் கதையும் படத்தின் முதற்பாதி. எதிர்வீட்டு அங்கிள் - ஆன்ட்டியாகவும், காதல் திருமண...
அசுரன் விமர்சனம்

அசுரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாக மாற்றியுள்ளார் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணியின் மூலக்கதையை மிஞ்சும் அளவு, மிகச் சிரத்தையுடன் திரைக்கதை அமைத்து அசக்தியுள்ளனர் மணிமாறனும் வெற்றிமாறனும். ஒரு நாவல் திரைப்படமான முயற்சியில், இயக்குநர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' பெற்ற இடத்திற்கு நிகராக வைக்கக் கூடிய கலைப்படைப்பாக வந்துள்ளது அசுரன். நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும் பழிவாங்குதலும் தான் படத்தின் கதை என்றாலும் கூட, சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடக்குமுறைகளும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுமே படத்தின் அடிநாதம். ஹிந்திப்படமான ஆர்ட்டிகிள் 15 போல் எதையும் உடைத்துப் பேசாவிட்டாலும், இன்னது தான் பேசுகிறோம் என தனது திரைமொழியால் புரிய வைத்துவிடுகிறார் வெற்றிமாறன். அவரது படைப்புகள் தனித...
நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

நம்ம வீட்டுப் பிள்ளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததும், உடனே காதலில் விழுந்து, அந்தப் பெண்ணையே சுற்றிச் சுற்றி வந்து லவ் டார்ச்சர் செய்யும் கதாபாத்திரத்திற்கு முழுக்கு போட்டு, அரும்பொன் எனும் நல்ல பையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், பெண்ணைப் பார்த்தால் மண்ணைப் பார்க்கும் நேர்மாறான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஒரே ஆசுவாசம் இதுதான். சுற்றம் சூழ வாழ்ந்தாலும், அரும்பொன்னின் குடும்பத்தைத் தகுதி, தராதரம் பார்த்து ஒதுக்கி வைக்கின்றனர் அவனது நெருங்கிய உறவினர். அத்தகைய உறவினர்களின் வீட்டுப் பிள்ளையாக, அரும்பொன் எப்படி மாறுகின்றான் என்பதுதான் படத்தின் கதை. நடிகர் பட்டாளம் நிரம்பிய திருவிழா கோலமாக உள்ளது படத்தின் முதற்பாதி. இன்னார் இன்னின்ன சொந்தங்கள் எனச் சொல்லி முடிப்பதற்கே முக்கால் மணி நேரம் எடுத்துக் கொண்டுள்ளார் பாண்டிராஜ். கதையின் ஊடாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த முயலாமல், அதைப் பாட்டாகவே பா...
ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்

ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பழி வாங்கும் வெறியில், இறுதி ரத்தத்தைத் தாராளமாகச் சிந்த விட்டுள்ளார் ரேம்போ. அதீத வன்முறைக் காட்சிகள் உள்ளதால், A சான்றிததழ் அளித்துள்ளனர். ரேம்போவின் தோழி மரியாவின் பேத்தியான கேப்ரியல், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மெக்சிகோ கடத்தல் குழுவினரிடம் சிக்கிக் கொள்கிறார். கேப்ரியலைக் காப்பாற்ற மெக்சிகோ செல்கிறார் ரேம்போ. அந்தக் குழுவிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு வருகையில், ஓவர்-டோஸாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் வழியிலேயே கேப்ரியல் இறந்துவிடுகிறார். பழி வாங்கும் வெறியில் சிவக்கும் ரேம்போ, மெக்சிகோ கடத்தல் குழுவை, அரிசோனாவில் இருக்கும் தன் வீட்டிற்கு வர வைத்து, கொலைவெறித் தாக்குதல் தொடுத்து, அக்குழுவை நிர்மூலம் செய்வதுதான் படத்தின் கதை. சோர்வான, வயோதிக சில்வஸ்டர் ஸ்டலோன். குதிரை சவாரி செய்து காலத்தைக் கழிக்கும் அந்த முதியவரின் ஒரே நம்பிக்கையான கேப்ரியலை இழந்ததும், சீற்றமட...
காப்பான் விமர்சனம்

காப்பான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர் எனும் கதிரவன், இந்திய அரசாங்கத்தைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் ஒற்றேவல் புரியும் ரகசிய இராணுவ வீரர். அவரைத் தனது பெர்சனல் பாடிகார்டாக, ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் (SPG) அதிகாரியாக நியமித்துக் கொள்கிறார் பிரதமர் சந்திரகாந்த் வர்மா. பிரதமரைக் கொல்லும் நடக்கும் சதிகளில் இருந்து கதிர், சந்திரகாந்தைக் காப்பாற்றிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அயன் படத்தில், படைப்பாற்றல் மிக்கக் கடத்தல்காரராகவும்; மாற்றான் படத்தில், தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை அழிப்பவராகவும்; இப்படத்தில், நாாட்டின் பிரதமரைக் காப்பவராகவும் சூர்யா நடித்துள்ளார், வெற்றிகரமாக கே.வி.ஆனந்துடன் இணைந்து ஒரு ட்ரைலஜியை நிறைவு செய்துள்ளார் சூர்யா. கே.வி.ஆனந்த் படங்களில் நிலவும் ஒரு பிரச்சனை – படத்தின் நீளம். இங்கு சினிமா செய்திகளை ரசிகர்கள் தேடித் தேடிச் சேகரிக்கின்றனர். சூர்யா, SPG-ஐச் சேர...
சூப்பர் டூப்பர் திரைப்படம்

சூப்பர் டூப்பர் திரைப்படம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் என்பது விலை மதிப்புமிக்க போதைப் பொருள் ஒன்றின் பெயர். டூப்பர் என்பது, ஏமாற்றுக்காரனான தன்னைத் தானே நாயகன் அழைத்துக் கொள்ளும் ஒரு பட்டப்பெயர். நிழலுலகத்து மைக்கேலிற்குச் சொந்தமான சூப்பர், டூப்பரிடம் சிக்கிக் கொள்கிறது. மைக்கேல் சூப்பருக்காக டூப்பரைத் துரத்த, டூப்பர் மைக்கேலிடம் இருந்து தப்பித்து, பின் சூப்பர் டூப்பர் அவதாரமெடுத்து, மைக்கேலைத் தன் வழியிலிருந்து அகற்றுவதுதான் படத்தின் கதை. கோமாளி படத்தில் மனநல மருத்துவராக நடித்திருக்கும் சாரா, இப்படத்தில் இரட்டை வேடத்தில் வருகிறார். நாயகனின் மாமாவாக மீசை வைத்தும், ஐபிஎஸ் விக்ரமாக மீசை இல்லாமலும் வருகிறார். ஷிவா ஷா ரா எனத் திரையில் அவரது பெயரும் நீளம் பெற்றுள்ளது. பேசியே கொல்கிறார், ஆனால் நகைச்சுவைக்குக் கொஞ்சமும் உதவவில்லை. இந்தப் படத்தில் இவர் ஏன் இரண்டு பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அடுத்த பாகத்திற்குக் காத்த...
ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

ஒத்த செருப்பு சைஸ் – 7 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை வழக்கு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மாசிலாமணி. அவ்விசாரணையும், அது சம்பந்தமான முழு நீள உரையாடலும் தான் படம். ஒருவரைச் சுற்றி மட்டுமே நடக்கும் கதையில்லை இது. ஒரு சுவாரசியமான த்ரில்லரில், மற்ற கதாபாத்திரங்களை வெறும் குரல்களாக்கி, மாசிலாமணியாக நடித்திருக்கும் பார்த்திபனை மட்டுமே கேமரா காட்டுகிறது. முழுப் படத்திலும், ஒரு முகம் மட்டுமே திரையில் காட்டப்பட்டாலும், படத்தின் சுவாரசியம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் பார்த்திபன். படத்தின் கால அளவு 105 நிமிடங்கள் மட்டுமே! படத்தின் ஓட்டத்திலிருந்து விலகக் கூடாது என்பதற்காக, 120 நிமிடப் படத்தில் இருந்து, சந்தோஷ் நாராயணனின் பாடலையும், சில காட்சிகளையும் நீக்கி மேலும் க்றிஸ்பாகப் படைத்துள்ளார். சிறுவன் மகேஷ், மகேஷின் அம்மா, ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் ஒரு காவலர், பெண் காவலர் ரோசி, முன் கோபியான ஏ.சி., ...
அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

அரசியல்வாதிகளை விடச் சினிமாக்காரர்களுக்குப் பொறுப்பு அதிகம் – பேரரசு

சினிமா, திரைச் செய்தி
காதல் அம்பு எனும் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் பேசிய நடிகர் ஆரி, “இப்படத்தில் நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் புதுமுகங்கள். இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும். இரண்டு மூன்று நாட்களாக, கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அந்நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது சுபஸ்ரீயின் மரணம் தான். யாருக்கோ வைத்த பேனர் அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார். இந்த விபத்திற்குப் பிறகு திமுக-வின் தலைவர் மு.க.ஸ்டாலின் இனிமேல் எங்கள் கட்சி விழாவிற்கு பேனர் வைக்கமாட்டோம் என்று கூறியிருக்கிறார்...
உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்

உலகக் கோப்பையைத் திருடும் கூட்டம்

சினிமா, திரைத் துளி
டூ மூவி பஃப் எனும் நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம். இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 27 அன்று வெளியிடுகிறது. இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கும் சுதர், “கிரிக்கெட் உலகக் கோப்பையைத் திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான். அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவத்தைப் பார்க்கிறேன் என்றால், இதில் எல்லாக் காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும். பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும். நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்தப் படத்தில் காட்சிக்குக் காட்சி புதுமை இருக்கும். ஒரு காட்சியையும் வேறு எந்தப் படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும...
ஒங்கள போடணும் சார் விமர்சனம்

ஒங்கள போடணும் சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு, அதன் பாதிப்பில் பார்வையாளர்கள் அனைவரும் ஏக மனதாகச் சேர்ந்து அந்த இயக்குநரைப் பார்த்து என்னவெல்லாம் சொல்லக்கூடும்? அவற்றில் ஒன்றாக இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது. பாடலாசிரியர் முருகன் மந்திரத்தின் குரலில், டைட்டில் கிரெடிட் வரும் பொழுது சொல்லப்படும் கதை சுவாரசியத்தைத் தூண்டுகிறது. அங்கிருந்து 'ஒரு கோடி ஒரு பேய்' என்றொரு ரியாலிட்டி ஷோவிற்குள் ஜாலியாய்ப் (!?) போகும் முதற்பாதி படம், இரண்டாம் பாதியில் சீரியசான பழிவாங்கல் கதையாக மாறுகிறது. படத்தின் ஆறுதல்களில் ஒன்று அல்லது ஒரே ஆறுதல், 116 நிமிடங்கள் எனும் படத்தின் கால அளவு தான். ஆனால், அதில் ஜித்தன் ரமேஷ்க்கு பில்டப் காட்சிகள் மட்டுமே 5 நிமிடத்துக்கு மேல் நீள்கிறது. அதுவும் கதைக்கோ, கதாபாத்திர வார்ப்பிற்கோ உதவாத காட்சி அது. அப்பொழுது வரும், 'இவனுக்கா இவ்ளோ பில்டப்?' என்ற வசனகர்த்தா முருகன் மந்திரத்தின் டைமிங் குச...