Shadow

சினிமா

பொய் சொன்னால் மரணம்

பொய் சொன்னால் மரணம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
விளையாட்டாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு மரணத்தைக் கொணரும் வினையாகிவிட்டால்? ‘ட்ரூத் ஆர் டேர் (Truthu or Dare)’ படத்தின் கதைக்கரு வினையாகும் அத்தகைய விளையாட்டைக் குறித்துத்தான். இந்த உயிர் போகும் விளையாட்டில், பத்தொன்பது வயதே நிரம்பிய மூன்று மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். பொதுநலனை மையமாகக் கொண்டு யூ-ட்யூப்பில் வீடியோ ப்ளாக்கிங் செய்யும் ஒலிவியாவும், தன் தந்தையின் தற்கொலையில் இருந்து மீள முடியாமல் அவள் தோழி மார்கியும், தங்களைத் துரத்தும் மரணத்தில் இருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சூப்பர் நேட்சுரல் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்தது இப்படம். ஏப்ரல் 20ஆம் தேதி, ஹன்ஸா பிக்சர்ஸ் ‘ட்ரூத் ஆர் டேர்’ படத்தை வெளியிடுகிறது....
ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்

ஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
எந்தப் புதுமுக நடிகருக்கும் கிடைக்காத பெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்குக் கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனைப் பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவிப் பகுதியில் சுற்றித் திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்தப் படத்தில் தாராவிப் பகுதியைச் சேர்ந்த பையனாக நடிக்க வேண்டியதிருந்ததால், இஷான் கட்டார், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபனாக அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படத்தி...
வெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

வெல்வெட் நகரம் – பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

சினிமா, திரைத் துளி
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டைப்பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, “கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற...
ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

ஹெச்.ராஜாவின் கிண்டலுக்குப் பதிலளித்த செளந்தர்ராஜா

சினிமா, திரைத் துளி
சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ், ‘இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம்’ என்றார். அதனைத் தொடர்ந்து தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்ட அன்றும், ‘தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர்கொள்ள தயங்கமாட்டோம்’ என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், R.K. செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர்ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பிக் கொண்டிருந்த போட்டோவை வைத்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம்’ என கிண்டல் செய்து உள்ளார். அதற்கு சௌந்தர்ராஜா, “என்ன சொல்ல, இது மெரினா போர...
பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள். தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...
இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

சினிமா, திரைத் துளி
தனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார். "நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம். தமிழில் சசிகுமார் நடிக்கும் "நாடோடிகள் 2" , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே,சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்...
கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

சமூகம், சினிமா
வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு ‘ஸ்கீம்’என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது. கிளி என்றாலும் கிள்ளை என்றாலும் ஒன்றுதான். ‘ஸ்கீம்’ என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றத்த...
ப்ரித்வியின் தொட்ரா

ப்ரித்வியின் தொட்ரா

சினிமா, திரைத் துளி
தொட்ரா படத்தின் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ. வெங்கடேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தாக கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்தை...
பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே! கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது வந்து செல்லும் வழியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பான்-பசிஃபிக் டெஃபன்ஸ் கார்ப்ஸ் (PPDC - Pan Pacific Defence Corps). ஜேகர்கள் எனும் பெரும் ரோபோக்களைக் கொண்டு பி.பி.டி.சி., கைஜுக்களை எதிர்க்கும். ஆனால், கைஜுவின் மூளையை ஜேகர்களில் இணைத்து பி.பி.டி.சி.யையே நிர்மூலம் செய்து விடுவார் நியூட் கெய்ஸ்லர் எனும் விஞ்ஞானி (அவ...
மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

சினிமா, திரைத் துளி
எந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலோடு செயல்பட்டு வருகிறது. இந்தப் படத்தை BOFTA Media works India Private Limited சார்பில் 'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , ''படத்தின் எல்லாக் கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்...
சோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்

சோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்

சினிமா, திரைத் துளி
பேட்மேன் (PadMan) படத்தினைத் தொடர்ந்து, 'சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ப்ரொடெக்ஷன்ஸ் (Sony Pictures International Productions)' நிறுவனம், ஜிந்தியில் ‘102 நாட் அவுட்’ எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு, 102 நாட் அவுட் படத்தில் அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, சோனி பிக்சர்ஸ் முதன்முறையாக ஒரு தென்னிந்தியா சினிமாவைத் தயாரிக்கவுள்ளது. மலையாள நடிகர் பிரித்விராஜ், தனது மனைவியுடன் இணைந்து தொடங்கியுள்ள “பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ்” நிறுவனத்துடன் சோனி பிக்சர்ஸ் கைகோர்க்கவுள்ளது. ஏப்ரல் மத்தியில் தொடங்கவுள்ள இப்படமே, பிரித்விராஜ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. “வேகமாய் வளர்ந்து வரும் பிராந்தியச் சந்தையில் நுழைய நல்லதொரு தருணத்தை எதிர்பார்த்துக் க...