சினிமா

சதுரம் 2 விமர்சனம்
சைக்காலஜிக்கல் த்ரில்லர்களான ‘சா (SAW)’ தொடர் படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்தப் படத்தின் கருவை எடுத்தாண்டு, பிளான்த்ராஃபிக்கல் த்ரில்லர் (Philanthropical thriller) என்ற வகைமைக்கு சதுரம் 2 படத்தை மாற்றி உருவாக்கிள்ளனர்.
சதுர வடிவிலான அறையில் மருத்துவர் வாசுதேவனும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். அங்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு, அவ்விருவராலும் சதுரத்தில் இருந்து வெளியேற முடிகிறதா இல்லையா என்பதே படத்தின் கதை.
ஸ்லாஷர் (slasher) வகை படங்கள், தமிழுக்குத் தேவையா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது ரத்தக் களறியுடன் ஒருவரைக் கொடூரமாக அறுத்து கொலை செய்யப்படுவதாகச் சித்தரிக்கும் படங்களை ஸ்லாஷர் படங்கள் எனலாம். ஆனால், பெரும்பாலான ஹீரோயிசம் மிகுந்த (மலிந்த) மாஸ் படங்கள் கிட்டத்தட்ட ஸ்லாஷர் படங்கள் போன்றே காட்சியளிக்கின்றன. இப்படமோ மிக லாவகமாக சென்சா...

ஆண் தேவதை – படக்குழுவினர்
நடிகர்கள்:>> சமுத்திரக்கனி
>> ரம்யாபாண்டியன்
>> கவின்
>> கஸ்தூரி
>> 'பூ' ராமு
>> இளவரசு
>> ஸ்ரீநிகா
>> பிரகதீஷ்
>> அறந்தாங்கி நிஷா
>> யாழ் நிலா
>> மயில்சாமி
>> அருண்மொழி
>> திலீபன்பணிக்குழு:>> தயாரிப்பு நிறுவனம் - சிகரம் சினிமாஸ்
>> தயாரிப்பு - ஃபக்ருதீன்
>> இயக்கம் - தாமிரா
>> ஒளிப்பதிவு - விஜய் மில்டன்
>> இசை - ஜிப்ரான்
>> படத்தொகுப்பு - காசிவிஸ்வ நாதன்
>> கலை - ஜாக்சன்
>> சண்டை - ரன் ரவி
>> உடை வடிவமைப்பு - கீர்த்திவாசன் & ஷோபியா சவுரிராஜன்
>> தயாரிப்பு நிர்வாகம் - அண்ணாமலை
>> மக்கள் தொடர்பு - ஆ. ஜான்...

சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை
ஆண் தேவதையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி. பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை' எனத் தலைப்பின் மூலமாகவே யோசிக்க வைக்கின்றனர்.
இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலசந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்தவர்.
இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை.
இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்வொர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது.
இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதாரச் சூழலும், கடன் வாங்க...

பகிரி விமர்சனம்
பகிரி என வாட்ஸ்-அப்பை (WhatsApp) மொழிபெயர்த்துள்ளனர். காதலை நாயகனும் நாயகியும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றனர்; சமூக விஷயங்களை குழுவில் மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஆக, இப்படி வாட்ஸ்-அப்பில் உணர்வுகளும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதால், வாட்ஸ்-அப் ‘பகிரி’ ஆனது போலும்! (படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்தின் பெயர் ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’. உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் அந்நிறுவனத்தின் பெயர் அதேதான். பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. தகவல் பரிமாற்றச் செயலியான ‘வாட்ஸ்-அப்’-பை எல்லா மொழியிலும் அப்படியே அழைக்கப்படுவதுதான் நியாயம்).
நாஸ்மாக்கில் வேலை செய்யவேண்டும் என்பது முருகனின் லட்சியம். அதற்கு லஞ்சமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவனது இந்த உன்னத லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை.
நாஸ்மாக் (NASMAC) என்பதன் விரிவாக்கம், ‘நம்மூர் சோமபானம் மார்க்க...

விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் – எஸ்.டி.ஆர்
‘இனி என் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்படாது’ என சிம்பு ஆவேசப்பட்டதாக ஒரு தகவல் சமூக தளங்களில் வேகமாகப் பரவியது. அதனை மறுத்து விளக்கம் அளித்துள்ளார் சிலம்பரசன்.
அன்பு நண்பர்களே,
தற்போது நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.
சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் ப...

இருமுகன் விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை.
ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம்...

வாய்மையும் மரணதண்டனையும் – அற்புதம்மாள்
வாய்மை வெற்றியடைய வேண்டும்.
மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் - நிச்சயமாக
சட்டத்திலிருந்தே ஒழிக்கப்பட வேண்டும்.- அற்புதம்மாள்

வாய்மை விமர்சனம்
வாய்மை – உண்மை தவறாத நிலை
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும்.
கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், அந...

சக்காளி தக்காளி காலி – விஜய் ஆண்டனி
'லைக்கா புரொடக்ஷன்ஸ்' - ராஜு மஹாலிங்கம் தயாரித்து வரும் 'எமன்' படத்தை இயக்கி வருகிறார் 'நான்' படப்புகழ் ஜீவா ஷங்கர். விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி இருக்கும், "என் மேல கை வச்சா காலி" பாடலை ஹேமச்சந்திரா பாட, அண்ணாமலை மற்றும் சேட்டன் எம்.சி. (ராப்) ஆகியோர் பாடல் வரிகள் எழுதியுள்ளனர்.
என் மேல கை வச்சா காலி
அந்துடும்டா உன்னோட தாலிஎன் மேல கை வச்சா காலி - மகனே
அந்துடும்டா உன்னோட தாலி - கேளுமரம் செத்தா நாற்காலி
நீ செத்தா இடம் காலி
சக்காளி தக்காளி காலிஎன ஹிப் - ஹாப் பாணியில் ஆரம்பமாகிறது பாடல்.
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திருநெல்வேலியில் 'லைக்கா கோவை கிங்ஸ்' மற்றும் 'சேபாக் சூப்பர் கில்லிஸ் ' இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின் போது வெளியிடப்பட்ட "என் மேல கை வச்சா காலி" பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘நாக்க.. முக்க’ போல் இத...

குற்றமே தண்டனை விமர்சனம்
இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது.
இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு 'செக் (check)' வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி விட...

கிடாரி விமர்சனம்
சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை.
மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது.
கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்தில...





