Shadow

கட்டுரை

ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

கட்டுரை, சமூகம்
இந்தியா தன் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்ற தெம்போடும்; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது ஆட்டத்தில் முதலில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து, மே.இ.தீவுகளை வென்ற தெம்போடும் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.. இதுவரை உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய பதினொரு ஆட்டங்களில், ஆஸ்திரேலியா எட்டு முறையும், இந்தியா மூணு முறையும் வெற்றி பெற்றிருந்தது. கடந்த ஓராண்டாக தடுமாறி வந்த ஆஸி, உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று திரும்பவும் ஃபார்முக்கு வந்தது. இத்தனைக்கும் அந்தத் தொடரில் காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தடை காரணமாக வார்னர், ஸ்மித் பங்கேற்றவில்லை. இன்றைய போட்டியில் இவர்களும் அணியில் இருப்பதால் ஆஸி அணி நம்பிக்கையுடன் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக ரோகித், த...
ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

சமூகம்
கோலகலமாகத் தொடங்கிக் கொண்டாட்டமாக முடிந்திருக்கிறது இந்தியாவின் கோடைத் திருவிழாவான ஐ.பி.எல். மூன்று முறை சாம்பியனான இரு அணிகளும், நாலாவது முறை சாம்பியனாக வென்று சாதனை படைக்கக் காத்திருந்தனர். ஒன்பது முறை இறுதியாட்டத்தில் விளையாடும் ஒரே வீரரைத் தலைவராகக் கொண்ட அணி Vs நாலு முறை இறுதியாட்டத்தில் விளையாடி நாலு முறையும் வெற்றி பெற்ற ஒரே வீரரைத் தலைவராக கொண்ட அணி. 'Odd years-ஆன 2011, 2013, 2017இல் நாங்க தான் சாம்பியன்ஸ், அதனால 2019இல் நாங்க தான் சாம்பியன்ஸ்' என மும்பை ஃபேன்ஸ் புஜத்தைத் தூக்க, 'நாங்க இதுவரை பைனல் வராத ரெண்டு வருஷமும் இந்தியா பொது தேர்தல் நடந்த 2009, 2014 தான் (தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர), அதையே மாத்திட்டோம், இதை மாத்த மாட்டோமா?' என சென்னை ரசிகர்கள் பதிலுக்குத் தொடை தட்டினர். நடப்பு தொடரில் மோதிய மூன்று ஆட்டங்களிலும், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர்கிங்ஸை வென்றிருந்...
தறி – நெசவுக்கலை பற்றிய தொடர்

தறி – நெசவுக்கலை பற்றிய தொடர்

சமூகம்
தைரியமும் மனஉறுதியும் கொண்டு, துன்பங்களில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அவர்கள் வாழுகிற சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான நேர்மறையான சவாலுக்கு உட்படுத்துவதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நமது தமிழ்நாட்டில் மிகவும் இளைய பொதுபொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதைத் தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையைத் தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்திக் கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளைப் பின்தொடரும் வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு, “தறி” புத்தம்புது மெகாதொடர் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஒளிபரப்பட இருக்கிறது. மெதுவாக மறைந்து வரும் நமது பாரம்பரிய நெசவுதொழிலுக்கு உயிரூட்டி, அதை மீட்சிபெறச் ...
சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சமூகம்
நாளை நடைபெறும், இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி. பங்குபெறும் ஆறு அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிஇன் உரிமையாளர்கள், கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும்,  ஸ்ரீ  ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் ஆகும்.  ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. . சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவில்...
சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை

சேவல்களம் – ஒழுக்கத்தைத் தரும் ராஜபோதை

புத்தகம்
சுபமாய் அல்ல, பரம சுபமாய் முடிகிறது சேவல்களம் நாவல். அந்நிறைவைப் புறந்தள்ளி, மனம் குறையைத் தேடத் துவங்கி விடுகிறது. அகத்தின் நிலைகுலைவு, வாழ்வு தரும் ரணம் என கண் மூடி அனுபவிக்க நாவலில் ஏதுமில்லாமல் போவதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு வெறுப்போ, கசப்போ, வன்முறைச் செய்கையோ மனித மனதிற்குத் தேவைப்படுகிறது. ‘சமூகக் கட்டுப்பாடுகளாலும், நாகரீகத்தினாலும் தற்காத்துக் கொள்ளும் மனித மனம், தனது ஆழ்மன வன்முறை உணர்ச்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்களைத் தேடிக் கொள்ளும்’ என்கிறது உளவியல். இதையே தான் காலந்தொட்டு செய்தி ஊடகங்கள் செய்து வருகின்றன. இதை, எழுத்தாளர் சுஜாதா தன் பாணியில், “நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்துவிடும்” எனச் சொல்லியுள்ளார். அதுவும் இன்றைய நேரடி விவாதக்களக் காலத்தில், மனிதர்கள் மீதான அவநம்பிக்கையைப் பரப்புவது என்பது முற்றிய நிலையில் இருக்கிறது. அதன் வெ...
1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

புத்தகம்
1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.      என்பதே அதே! ஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது 'ராமானுஜன் - ஹார்டி எண்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்!? 80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், "பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து வ...
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

சினிமா, புத்தகம்
'திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன். "சரிகமபதநி" எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புத்தகம் ஒரு 'சினிமா அறிவியல் (Cinema Science)' புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது. சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சேரக...
“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

சமூகம், சினிமா
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள் பொது சேவை மையங்கள் மூலம் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு புயலால் பாதிக்கப்பட்டு, மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளைக் கண்டடைந்து பேராவூரணி, அறந்தாங்கி பகுதியைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, மிகவும் முறையாக அந்தந்த குடும்ப ஆவணங்களைக் கொண்டு, தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் - தார்பாய் - சோலார் லைட்- கொசுவலை - போர்வை - மருந்துகள்-மற்றும் உணவு பொருட்களை 1-12-2018 அன்று வழங்கினர். மேலும், "அங்கு சென்று பார்த்ததில், நினைத்ததை விட மிகப் பெரிய பேரிடருக்கும் ஆளாகியுள்ளனர் என்பது வேதனை தருகித்ச்து. இதிலிருந்து அம்மக்கள் மீளவும், விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும், அனைவரும்...
நுரை பீர்க்கன் குழம்பு

நுரை பீர்க்கன் குழம்பு

சமையல்
வணக்கம்,  அட எங்கயோ கேள்விபட்ட மாதிரி இருக்குங்களா:-)... தோட்டத்தில் வேலி ஓரத்தில் படந்திருக்கும்... நல்லா பிஞ்சு காயை கொண்டுவந்து நல்லா காரசாரமா குழம்பு வச்சு சாப்பிட்டா...  அருமையா இருக்கும்....தேவையான பொருட்கள்:நுரை பீர்க்கன் காய் -2தக்காளி- 1சீரகம் – 1 ஸ்பூன்கொத்துமல்லி – 1/2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 1 கப்மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்மிளகாய் – 2கறிவேப்பிலை – கைப்பிடி செய்முறை:Step 1: பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.Step 2:நறுக்கிய பீர்க்கன்காயை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கொத்தமல்லி போட்டு வதக்கவும். தேவையான அளவு நீர் விட்டு, மூடி போட்டு வேக விடவும். நன்கு வெந்ததும், மத்தால் கடைந்து, எடுத்து பறிமாறவும். சாதம், ...
டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

காணொளிகள், சமூகம்
தமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும், பொருளாதார சேதங்களையும் செய்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில், தங்கவும் பொங்கவும் வழியின்றித் தவித்து வருகின்றனர். அறுந்து விழுந்த மின் கம்பங்கள்; அழிந்துபோன கால்நடைகள்; உடைந்துபோன ஓடுகள்; சிதிலமடைந்த குடிசைகள்; இடிந்துபோன வீடுகள்; சிதைந்துபோன செல்வங்கள் என விவசாய பூமியான டெல்டாவைச் சுரண்டியெடுத்துள்ளது கஜா புயல். சென்னையைப் போல் பெருநகரங்களில் மரபு சாரா மாதச் சம்பள வேலைகளைப் பணிபுரிபவர்கள், சென்னை வெள்ளத்திற்கு பிறகு இழந்தவற்றை கொஞ்சமேனும் மீட்டெடுத்ததைப் போல, பல வருடங்களாக வளர்த்த வாழை, தென்னை, வெளிநாடு போய் பல வருடங்கள் சம்பாதித்துச் சேர்த்த பொன் பொருட்களை முறையான மாதவருவாய் இல்லாத, எப்போதாவது சாகுபடி சமயத்தில் ஓரிரண்டு முறை பொருள் ஈட்டும் குடிமக்களால் மீட்டெடுக்க முடிவது அத்தனை சுலபம் அல்ல. ம...
அமுக்கிரான் பழக்குழம்பு

அமுக்கிரான் பழக்குழம்பு

சமையல்
வணக்கம், அமுக்கிரான் பழம், நல்ல சிறுநீர் பெருக்கியாகவும், தூக்கமின்மையை போக்கவும் உபயோகபடுத்த படுகிறது. இந்த அமுக்கிரான் பழத்தை வைத்து, சுவையான குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வைரல் காய்ச்சல் வந்த பிறகு, உடம்பெல்லாம் சத்தே இல்லாம், மூட்டெல்லாம் வலிக்கும். இந்த காய் குழம்பு வச்சு குடுப்பாங்க. சீக்கிரம் சரியாகிடும்.தேவையான பொருட்கள்: அமுக்கிரான் காய் – 1 கப்சின்ன வெங்காயம் – 1 கப்பூண்டு – 1 கட்டிகறிமசாலா தூள் (கொத்துமல்லி தூள்) – 1 1/2 கரண்டிதக்காளி – 1கரிவேப்பிலை – கைப்பிடிமஞ்சள் தூள் – 1 சிட்டிகைஎண்ணெய்- 2 ஸ்பூன் + 1 ஸ்பூன் செய்முறை:Step 1:    பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். வதக்கிய பின், ஆற விடவும். அமுக்கிரான் பழத்தை எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.Step 2: ...
நாட்டு கோழி குழம்பு

நாட்டு கோழி குழம்பு

சமையல்
வணக்கம், மழை பெய்யுது,,,, குளிரும் சேர்ந்திருச்சே.. நல்லா காரசாரமா, நாட்டுகோழி குழம்பு சாப்பிட்டா எப்படி இருக்கும்???? தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி – 1 கிலோதக்காளி – 1 (நறுக்கியது)பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்) + 2 பூண்டுகறிவேப்பிலை – கைப்பிடிசின்ன வெங்காயம் – 1 கப் + 1 கப்கறி மசாலா தூள் – 2 கரண்டிநல்லெண்ணெய் – 2 கரண்டி + 2 ஸ்பூன்மிளகாய் – 2 செய்முறை:Step 1:    பாத்திரத்தில், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு,  2 பூண்டு போட்டு வதக்கவும்.  1 கப் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பிறகு, மிக்சியில் வதக்கிய வெங்காயம், கறிமசாலா தூல் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்Step 2:  பாத்திரத்தில், 2 கரண்டி நல்லெண்னெய் விட்டு, தட்டி வைத்த பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, 1 கப் வெங்காயம், கற...
முருங்கை இலை பொரியல்

முருங்கை இலை பொரியல்

சமையல்
வணக்கம், முருங்கை கீரையில் இல்லாத சத்துக்களே இல்லீங்க..சிக்கன் குனியா, டெங்கு வந்தவங்களுக்கு இருக்கும் உடம்பு, மூட்டு வலி,,, அனுபவச்சவங்களுக்குதாங்க தெரியும். அந்த வலி போக, ஒரு அருமையான, ருசியான ஒரு (மருந்து) கீரைதான் இந்த முருங்கை கீரை, வெந்து கெட்டது முருங்கை, வேகாம கெட்டது அகத்தின்னு ஒரு பழமொழி உண்டு… முருங்கை கீரையை அதிக நேரம் வேகவைக்க கூடாதுங்க.. தேவையான பொருட்கள்:முருங்கை இலை- 1 கட்டுபெரிய வெங்காயம் -1மிளகாய் – 2கறிவேப்பிலை -  கைப்பிடிதேங்காய் – சிறிதளவுமஞ்சள் தூள் – 1 ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்ப செய்முறை:Step 1:முருங்கை இலையை, கோல் நீக்கி, நல்ல இலையாக எடுத்து தண்ணீரில அலசி வைக்கவும்.Step 2: பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு வதக்கவும்.Ste...
உருளை கிழங்கு பொடிமாஸ்

உருளை கிழங்கு பொடிமாஸ்

சமையல்
வணக்கம்,உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி, ரொட்டிக்கும் நல்லாருக்கும். ரசம் சாப்பாட்டுக்கு செம்ம காம்பினேஷன்,,,,,தேவையான பொருட்கள்:உருளைகிழங்கு – 3 பெரியவெங்காயம் (நறுக்கியது) -1 மிளகாய் – 2 கறிவேப்பிலை – கைப்பிடி மஞ்சள் தூள் -1 சிட்டிகை மிளகாய் தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கு. செய்முறை:Step 1: உருளைகிழங்கை குக்கரில், தண்ணீர் விட்டு 3 விசில் வரை வேக வைத்து, எடுத்து, தோலுரித்து வைக்கவும். பிறகு, அதை ஒன்றிரண்டாக மசித்து, உப்பு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் தூவி வைக்கவும். Step 2: பாத்திரத்தில், எண்ணெ ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், கடலை பருப்பு, உளுந்து...
சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

சர்கார் விவகாரத்தில் அதிமுகவினரின் அடாவடி கண்டிக்கத்தக்கது – கருணாஸ் காட்டம்

சமூகம், சினிமா
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு வழக்கம் போல் சர்ச்சையைக் கிளப்பித் திரையரங்கப் பதாகையைக் கிழித்துப் போராட்டம் செய்து வருகின்றனர் ஆளுங்கட்சி அ.தி.மு.க.,வினார். இது வன்முறையான கண்டிக்கத்தக்க அநாகரிகச் செயலாகும்.   சர்கார் திரைப்படம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டுத் தணிக்கைக் குழுவின் ஆட்சேபணையின்றி வெளிவந்த வேலையில் அத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லிப் போராடுவது சட்டவிரோதச் செயலாகும். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் விரும்பியடிதான் படம் எடுக்க வேண்டுமென்றால், அதைத் தணிக்கைக்குழு விரும்பாத படமாகத்தான் படம் எடுக்க முடியும். இவர்கள் யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, “வீட்டுக்குள் புருஷங்காரன் பொண்டாட்டிய அடிக்கத் திண்னையில் கிடக்கிறவன்...