Shadow

கட்டுரை

மழையில் கரைந்த கனவு

மழையில் கரைந்த கனவு

சமூகம்
லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் முதலாவது அரையிறுதியில் மோதின. டாஸ் வென்ற வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப்புக்குப் பதில் சஹோல் சேர்க்கபட்டார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, மற்ற ஆட்டங்களில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது. ஆட்டத்தின் முதல் பந்தை புவனேஷ்வர் வீச, குப்தில் எதிர்கொண்டார். பந்து பேடில் பட, LBW கேட்டனர். களநடுவர் மறுக்க, இந்தியா DRS கேட்டது, ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்வது தெரிய, இந்தியா தனது ரீவீயூ வாய்ப்பை இழந்தது. புவனேஷ்வர், பும்ரா இருவரும் தத்தம் முதல் ஓவரை மெய்டினாக வீச, ஆட்டத்தின் 17வது பந்தில் நியூசிலாந்து முதல் ரன்னை எடுத்தது, குப்தில் ஏன் அந்த ரன்னை எடுத்தோம் என அடுத்த ஓவரில் நினைத்திருப்பார். பும்ரா வீசிய பந்தில் கோலி...
முதலிடத்தில் இந்தியா

முதலிடத்தில் இந்தியா

சமூகம்
 அரையிறுதிக்கான அணிகள் முடிவாகிவிட்டாலும், முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இந்தியா -இலங்கை , ஆஸ்திரேலியா தென் ஆஃப்ரிக்கா போட்டிகள் அமைந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா அணியில் ஷமி, சஹோலுக்கு பதில் ஜடேஜா, குல்தீப் சேர்க்கபட்டனர்.கருணரத்னே, குஷால் பெரேரா களமிறங்க புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இலங்கைக்கான முதல் பவுண்டரியை குஷால் அந்த ஓவரில் அடித்தார். அடுத்த ஓவரை பும்ரா மெய்டினாக வீச, அடுத்து புவனேஷ்வர் குமார் ஓவரில் 12 ரன் அடித்து ரன்ரேட் உயர்த்திக் கொண்டணர். நான்காவது ஓவரில் பும்ரா கருணரத்னேவை வீழ்த்தினார். 10 ரன்னில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேற, ஓரு நாள் சர்வதேச போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய சாதனையை பும்ரா புரிந்தார். குறைந்த போட்டியில் 100 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது இந்தியா வீரர் என...
காமோற்சவம்

காமோற்சவம்

சமூகம், சினிமா
‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும். இந்தக் காமாண்டி வழிபாடு என்பது பெரும் வரலாறு கொண்டது. கிளியை வாகனமாகக் கொண்டு, கரும்பு வில்லேந்தி, சந்தனம் பூசி வரும் மன்மதனும், அவனுக்கு இணையாக வரும் ரதிதேவியும், காமாண்டி வழிபாட்டின் கடவுள்கள். தமிழில் அப்படித்தான். மாயாண்டி, விருமாண்டி, சிவனாண்டி என்றுதான் கடவுள்கள் எல்லாம் குறிக்கப்படுவர். இப்பொழுது இதையெல்லாம் புதியதாகக் கேட்பவர்களுக்க...
உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

சமூகம்
இந்தியா - வங்கதேசம் மோதும் போட்டிகள் என்றாலே இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டாம் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இல்லாத குறையை இந்தியா - வங்கதேசம் தான் தீர்த்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் அவ்வப்போது இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர்கள். 2016 டி20யில் இந்தியா அரையிறுதியில் தோற்றவுடன், இன்று நிம்மதியாகத் தூங்குவேன் என் முஸ்தபிஷர் ரஹிம் ட்வீட் போட்டது, ரன் ஓடும்போது குறுக்க வந்த முஸ்தபிஷர் ரஹ்மானை தோனி இடித்து தள்ளியது என பல ரகளையான சம்பங்கள் கடந்த சில வருடங்களாக நடக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2007 உலகக்கோப்பையில் பெற்ற வெற்றிக்குப் பின் எந்த ஐ.சி.சி. போட்டிகளிலும் வங்கதேசம் இந்தியாவை வென்றதில்லை.  கடந்த சில போட்டிகளில் ரசிகர்களின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த இந்திய அணியில் இரண்டு மாற்றாம் செய்யப்பட்டது. ஜாதவிற்கு பதில் தினேஷ் கார்த்திக...
இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

சமூகம்
உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தோல்வி இது. நிச்சயமாக தனி ஒருவர் இந்தத் தோல்விக்கு காரணமில்லை. ஓர் அணியாகத் தோற்றிருக்கிறோம். யாரேனும் ஒருவரைச் சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்வதானால் அணித்தலைவர் கோலியைச் சொல்லலாம். இன்னமும் கேதார் ஜாதவ் என்ற கூடுதல் சுமையைச் சுமந்து கொண்டு இருப்பது ஒரு முக்கிய காரணம். வெற்றி பெறும் இணையை மாற்றக் கூடாது என்ற பழமையான மனநிலை வேறு! அதே மாதிரி பார்த்தால் ஜடேஜா மாதிரியான ஸ்லோ லெஃப் ஆர்ம் பந்து வீச்சாளர்களை, இடக்கை மட்டையாளார்கள் பிட்சில் இருந்தால் உபயோகிக்கவே மாட்டார்கள். பொறுப்பாகப் புள்ளிகள் வரட்டும் என்று காத்துக் கொண்டே இருப்பார்கள். வின்ஸ் என்ற ஒரே ஒரு பிளேயர் இருந்ததாலேயே படு மொக்கை அணியாகக் காணப்பட்ட இங்கிலாந்து அணி, ராய் வந்த பின்பு முரட்டுத்தனமான அணியைப் போல ஒரு தோற்றத்தைத் தருகிறது. உங்களை மாதிரி நான் லூசு இல்லைடா என்று மோர்கன் செய்த மிக முக...
20000 ரன்கள் – விராத் கோலியின் சாதனை

20000 ரன்கள் – விராத் கோலியின் சாதனை

சமூகம்
இந்தியாவிற்கு அடுத்து இந்திய ரசிகர்களுக்குப் பிடித்த அணி என்றால் அது மேஏகு இந்தியத் தீவுகள் அணிதான். முதல் மூன்று உலகக்கோப்பையில் கோலாச்சிய மேற்கு இந்தியத் தீவுகள், இந்த முறை நேரடியாகத் தகுதி பெற முடியாமல், தகுதி சுற்றின் மூலமாக இடம் பெற்றது, அதுவும் இரண்டாவது அணியாக. விவியன் ரிச்சார்ட்ஸ், வால்ஷ், லாரா, என ஐ.பி.எல் முன்னரே மேற்கு இந்தியத் தீவு வீரர்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இந்தியாவில் உண்டு. ஐ.பி.எல்.க்கு பின்னர் இது இன்னும் பலமடங்கு பெருகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் உலகக்கோப்பையில் சந்தித்த முதல் தோல்வி, இந்தியாவிற்கு எதிராக தான் 1983 லீக் சுற்று நடந்தது. பெரிய அணிகளுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் பெற்ற முதல் வெற்றியும் இது தான். இந்த உலகக்கோப்பையில் தன் முதலாட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சால் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள், அதன் பிறகு தொடர்ச்சியாக...
ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

ஹாட்ரிக்கால் கனிந்த வெற்றிக்கனி

சமூகம்
87 ரிலையன்ஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் சேத்தன் ஷர்மா எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுக்களில் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. முதலில் அவுட் ஆன ரதர்ஃபோர்டு, மிடில் ஸ்டம்ப் பெயர போல்டு ஆகிவிடுவார். அடுத்து வந்த நியூசியின் விக்கெட் கீப்பர் ஸ்மித், ஆஃப் ஸ்டம்ப் பெயர் போல்டு ஆகிவிடுவார். அப்பொழுது டிவியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது, அடுத்த பந்தில் லெக் ஸ்டம்ப் போல்டு ஆகி ஹாட் ட்ரிக் எடுத்தால் எப்படி இருக்கும் என. நினைத்தபடியே அடுத்து வந்த சாட்ஃபீல்டின் மட்டையைத் தாண்டிக் கொண்டு போன பந்து லெக் ஸ்டம்பைப் பெயர்த்து எடுத்து விடும். இன்று சற்று நேரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் மேட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய 20-20 பரபரப்பில், கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுப்பது எல்லாம் ஜுஜுபி விஷயமாச்சே என ஆஃப்கானிஸ்தானின் சேஸிங்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அந்த மாயாஜாலம் மீண்டு...
இந்தியாவின் திணறலான  50வது வெற்றி

இந்தியாவின் திணறலான 50வது வெற்றி

சமூகம்
இந்த உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத இந்திய அணியும், இதுவரை வெற்றியை ருசிக்காத ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில், முதல் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றிருந்தாலும், பின்னர் வீறுகொண்டு எழுந்து, தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று, இறுதியாட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது ஆஃப்கானிஸ்தான். 2018 ஆசிய கப்பிலும் பங்களாதேஷ், இலங்கையுடன் வெற்றி, இந்தியாவுடன் 'டை' என நம்பிக்கையை அளித்தது. ஆனால் இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, இலங்கைக்கு எதிரான போட்டியைத் தவிர, ஏனைய போட்டிகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாகவே இருந்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம், அவர்களின் சுழற்பந்து வீச்சு. ஆனால் இந்த உலகக்கோப்பையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, அதிலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்...
மழை சாரல் – இசை ஆல்பம்

மழை சாரல் – இசை ஆல்பம்

Songs, காணொளிகள், சமூகம்
மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டென்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இப்பொழுது, "மழை சாரல்" எனும் புது ஆல்பமாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். 'காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே' என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன. ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில்  ஒரு படத்திற்கு பாடல்களை  உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம் எனப் ...
மாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி

மாணவி உதயகீர்த்திகாவின் கனவை நனவாக்கிய விஜய் சேதுபதி

சமூகம், சினிமா
தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர் . தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / 'A " கிரேடு). 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் 'இஸ்ரோ" " சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் . தற்போது, போலந்து நாட்டில் உள்ள விண்வெளி "Analog austronaut training centre" என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் ASTRONAUT பயிற்சி பெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிக் கட்டணம், தங்குமிடம் கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகிய வகையில், இப்பயிற்சிக்கு, எட்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் தேவைப்படுகிறது. மாணவியின் பறிச்சிக்காக...
7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி

7-0: உலகக்கோப்பையில் தொடரும் இந்தியாவின் வெற்றி

சமூகம்
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ரசிகர்களுக்கு இனம் புரியாத உற்சாகமும் மகிழ்ச்சியும் வந்துவிடும். அதுவும் உலகக்கோப்பைப் போட்டி என்றால் இந்திய ரசிகர்களுக்கு டபுள் தமாகா தான்! இரு அணிகளுக்குள்ளும், இது வரை நடந்த உலகக்கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே வென்றிருக்கிறது. இம்முறையாவது வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாகிஸ்தானும், வெற்றியைத் தொடர வேண்டும் என்று இந்தியாவும் களம் கண்டனர். ஆஸிக்கு எதிராக போட்டியில் காயமடைந்த ஷிகார் தவான், மூன்று வார ஓய்வில் இருப்பதால் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களம் கண்டார். பாகிஸ்தான் அணியில் ஷாதப் கானும், இமம் வாசிமும் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் அகமது, பௌலிங்கைத் தேர்தெடுத்தவுடன் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது, காரணம் இந்த உலகக்கோப்பை டாஸ் வென்று பௌலிங்கைத் தேர்தெடுத்த அணிகள் எல்லாம் 300+ ரன்களை வழங்கிய...
ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா

கட்டுரை, சமூகம்
இந்தியா தன் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்ற தெம்போடும்; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது ஆட்டத்தில் முதலில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து, மே.இ.தீவுகளை வென்ற தெம்போடும் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.. இதுவரை உலகக் கோப்பையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய பதினொரு ஆட்டங்களில், ஆஸ்திரேலியா எட்டு முறையும், இந்தியா மூணு முறையும் வெற்றி பெற்றிருந்தது. கடந்த ஓராண்டாக தடுமாறி வந்த ஆஸி, உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று திரும்பவும் ஃபார்முக்கு வந்தது. இத்தனைக்கும் அந்தத் தொடரில் காயம் காரணமாக வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தடை காரணமாக வார்னர், ஸ்மித் பங்கேற்றவில்லை. இன்றைய போட்டியில் இவர்களும் அணியில் இருப்பதால் ஆஸி அணி நம்பிக்கையுடன் களமிறங்கினார். டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக ரோகித், த...
ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

சமூகம்
கோலகலமாகத் தொடங்கிக் கொண்டாட்டமாக முடிந்திருக்கிறது இந்தியாவின் கோடைத் திருவிழாவான ஐ.பி.எல். மூன்று முறை சாம்பியனான இரு அணிகளும், நாலாவது முறை சாம்பியனாக வென்று சாதனை படைக்கக் காத்திருந்தனர். ஒன்பது முறை இறுதியாட்டத்தில் விளையாடும் ஒரே வீரரைத் தலைவராகக் கொண்ட அணி Vs நாலு முறை இறுதியாட்டத்தில் விளையாடி நாலு முறையும் வெற்றி பெற்ற ஒரே வீரரைத் தலைவராக கொண்ட அணி. 'Odd years-ஆன 2011, 2013, 2017இல் நாங்க தான் சாம்பியன்ஸ், அதனால 2019இல் நாங்க தான் சாம்பியன்ஸ்' என மும்பை ஃபேன்ஸ் புஜத்தைத் தூக்க, 'நாங்க இதுவரை பைனல் வராத ரெண்டு வருஷமும் இந்தியா பொது தேர்தல் நடந்த 2009, 2014 தான் (தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர), அதையே மாத்திட்டோம், இதை மாத்த மாட்டோமா?' என சென்னை ரசிகர்கள் பதிலுக்குத் தொடை தட்டினர். நடப்பு தொடரில் மோதிய மூன்று ஆட்டங்களிலும், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர்கிங்ஸை வென்றிருந்...
தறி – நெசவுக்கலை பற்றிய தொடர்

தறி – நெசவுக்கலை பற்றிய தொடர்

சமூகம்
தைரியமும் மனஉறுதியும் கொண்டு, துன்பங்களில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அவர்கள் வாழுகிற சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான நேர்மறையான சவாலுக்கு உட்படுத்துவதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட நமது தமிழ்நாட்டில் மிகவும் இளைய பொதுபொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தனது ஓர் ஆண்டையும் தாண்டிய வெற்றிப் பயணத்தில் மனதைத் தொடும் கதையம்சம், மனஉறுதி கொண்ட பெண்களின் சக்தியை, அவர்களின் திறமையைத் தனது நிகழ்ச்சிகளின் மூலம் காட்சிப்படுத்திக் கொண்டாடி வருகிறது. இந்த குறிக்கோளைப் பின்தொடரும் வகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு, “தறி” புத்தம்புது மெகாதொடர் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் ஒளிபரப்பட இருக்கிறது. மெதுவாக மறைந்து வரும் நமது பாரம்பரிய நெசவுதொழிலுக்கு உயிரூட்டி, அதை மீட்சிபெறச் ...
சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சென்னை Vs கொச்சி – புரோ கைப்பந்து லீக் அரையிறுதிப் போட்டி

சமூகம்
நாளை நடைபெறும், இந்தியாவில் நடைபெறும் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி. பங்குபெறும் ஆறு அணிகளில் ஒன்றான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிஇன் உரிமையாளர்கள், கல்ஸ் குரூப் என்ற நிறுவனமும்,  ஸ்ரீ  ப்ராகரசிவ் புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனமும் ஆகும்.  ப்ரோ கைப்பந்து லீக் என்ற கைப்பந்து போட்டியை பேஸ்லைன் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டிக்கு 6 அணிகள் தேர்வாகியுள்ளன. அந்த ஆறு அணிகளும் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லீக் போட்டிகளில் மோதுகின்றன. . சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மிகவும் திறமையான, இளமையான, அனுபவமிக்க வீரர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவமும் பெற்றவர்கள். இவர்களுடன் இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தன்னுடைய குழுவில்...