Shadow

சமூகம்

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

சமூகம்
இந்திய அணி, கப்பாவில் அடைந்த வெற்றியை வெறும் புள்ளிவிவரங்களால் சொல்லி விட முடியாது. உணர்வுகளால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். 325 ரன்களை ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அதுவும் இலக்கை சேஸ் செய்யும் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லயன் என்ற மிகச் சிறந்த கூட்டணிக்கு எதிராக ஆடி ஜெயிக்கும் போது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகள் சொல்லிவிடுமா என்ன? நால்வரும் ஐசிசி தர வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறார்கள். அதில் பாட் கம்மின்சும், ஹேசல்வுட்டும், முதல் மற்றும் 4ஆம் இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் முண்ணனி பந்து வீச்சாளர்களோ காயம் காரணமாக வெளியே இருக்கிறார்கள். ஆஸி பந்து வீச்சாளர்களின் ஒட்டுமொத்த டெஸ்ட் அனுபவம் 250க்கும் மேல் என்றால், இந்திய பந்து வீச்சாளர்களின் அனுபவமே வெறும் 7 போட்டிகள்தான். ஆடிய வீரர்களில் ஒப்பீட்டளவில் அனுபவம் வாய்ந்த வ...
“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

கட்டுரை, சமூகம்
இந்திய அணியின் மிகச் சிறந்த வெற்றி ஏதுவெனக் கேட்டால் தயங்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாலாவது போட்டியின் வெற்றியைத் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், பெரும்பான்மையான முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்கள், Arm Chair experts எனப்படும் சமூக வலைத்தள விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும், அதுவும் சுலபமாக மிகப் பெரிய வித்தியாசத்தில் வெல்லும் என்று கணித்திருந்தனர். அதற்கேற்ப முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடி முன்னிலையில் இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது. தன் குழந்தை பிறப்பிற்கான விடுமுறையில் கோலி இந்தியா திரும்பி விட, இரண்டாவது டெஸ்டில் ரஹானே தலைமையில் களம் கண்ட இந்தியா அணி அபார வெற்றியைப் பெற்று தொடரைச் சமன் செய்தது. மூணாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா பெரும்...
தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

அரசியல், சமூகம்
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி, அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார். எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எது வந்தாலும் அவற்றைப் புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரிக் காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது. தொகுதி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எதுவெ...
அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அரசியல், சமூகம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களைக் கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளைக் கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணியா...
காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

காமிக்ஸ்தான் போட்டியாளர்கள்

சமூகம்
பகலில் ஐடி ஊழியராகவும், மாலையில் ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் இருக்கும் மாயாண்டி கருணாநிதி, நகைச்சுவைத் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர். பெங்களூருவைச் சேர்ந்த மாயாண்டி, மெதுவாக, உறுதியாக தனது லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறார். சென்னை, கோவை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் 300க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை மாயாண்டி நடத்தியிருக்கிறார். பல்வேறு கார்ப்ரேட் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் பார்ட்டிகளிலும் மக்களைச் சிரிக்க வைத்துள்ளார். அடிப்படையில் மாயாண்டி ஒரு சோம்பேறி நபர். தற்போது, 'தள்ளிப் போடுவதை நிறுத்தி இன்றே கடின உழைப்பு செய்யுங்கள்' என்ற புத்தகத்தை எழுதி வருகிறார். 2055 ஆம் ஆண்டு இதைப் பிரசுரிக்கும் திட்டம் வைத்துள்ளார். இப்போதைக்கு இவரது திட்டம், அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் ‘செம காமெடிப்பா’ நிகழ...
அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’

அமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’

சமூகம்
இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட்-அப் காமெடி நிகழ்ச்சியான காமிக்ஸ்தான் தமிழிலும் அறிமுகமாகிறது. மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களுக்குப் பிடித்த, அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது. ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சியின் அறிமுகம். இந்தப் புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவைப் பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர...
காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

காமிக்ஸ்தான்: தமிழ் ரசிகர்களுக்காகத் தமிழில் செப்டம்பர் 11 முதல்

சமூகம்
அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் 8 எபிசோடுகளுக்கு போட்டியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் நடுவர்களாகவும் இருந்து அடுத்த சிறந்த ஸ்டேண்ட் - அப் நகைச்சுவைக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பார்கள். மும்பை, இந்தியா, 3 செப்டம்பர் 2020 - அமேசான் ப்ரைம் வீடியோ இன்று காமிக்ஸ்தான் செம காமெடி பா-வின் டிரெய்லரை வெளியிட்டது, இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த அமேசான் ஒரிஜினல் தொடரான காமிக்ஸ்தானின் தமிழ் வெர்ஷன். இந்த தொடரின் வெளியீடு தமிழில் ஒரிஜினல் கண்டெண்ட் வருவதில் ப்ரைம் வீடியோவின் ஆர்வத்தை குறிக்கிறது. இந்தப் புதிய தொடரில், தமிழ் காமெடித் துறையின் வல்லுநர்களாக இருக்கும், மூன்று பெரிய நகைச்சுவைக் கலைஞர்களா...
காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

காமிக்ஸ்தான்: அமேசான் Vs ட்விட்டர் காமெடியன்ஸ்

சமூகம்
ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் விளையாட்டுகளும் சுவாரசியமானவையே. முன்னதாக இன்று, ப்ரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில் "ஹே மச்சான், ஒரு ஜோக் சொல்லட்டா. ஓப்பன் மைக்குக்கும், 2020 கிரிக்கெட் மைதானத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? ரெண்டுத்தையுமே நேர்ல பார்க்க ரசிகர்கள் வர மாட்டாங்க #OruJokeSollata 🤪 @evamkarthik @Comedy_Praveen #ComicstaanSemmaComedyPa" https://twitter.com/primevideoin/status/1300672989466304512?s=21 பல நகைச்சுவையாளர்களுக்கும், ப்ரைம் வீடியோவுக்கும் இடையே நகைச்சுவையான ஒரு உரையாடல் தொடங்கியது. நகைச்சுவையாளர் கார்த்திக் குமார் இந்த ட்வீட்டுக்கு பதில் பதிவிடுகையில், "ஐயோ, நெஞ்சுலியே அடி. ஃபீலிங்ஸ் பாதிப்பு. ஆனா இந்த ஜோக்குக்கு 4/10 தா...
ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சமூகம்
சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது. அதையும் இப்போது ஒருவர் செய்து முடித்துள்ளார். ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார் ஜீ.வி.பிரகாஷ். 'அசுரன்', 'சூரரைப் போற்று' என இசைக்களத்தில் அசுரப் பாய்ச்சலில் இருக்கும் ஜீ.வி.பிரகாஷ், இப்போது இந்த ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து புதிய பயணத்தைத் தொடங்குகிறார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில்...
“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

அரசியல், சமூகம், சினிமா, திரைச் செய்தி
ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார். “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, "கந்தர் சஷ்டி கவசம்" என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, ‘நம்புதல்’ என்பது அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான் மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது மிகவும் கீழ்மையானது. இந்தக் கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதாரச் ச...
மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

மும்பைத் தமிழ் மாணவர்கள் 100% தேர்ச்சி – அம்மா பேரவைச் செயலாளர் திரு.ராஜேந்திர ராஜனின் முன்னெடுப்பு

சமூகம்
உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விஷயமும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி தயாராவது? இப்போதிருக்கும் இறுக்கமான மனநிலையில் தேர்வை எப்படி எதிர்கொள்வது? இப்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் மனச்சிக்கலில் இருந்தார்கள். இந்நிலையில் மாணவர்களின் இறுக்கத்தைப் போக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவித்து மாணவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைக் கொடுத்தார். இந்நிலையில் தமிழ்நாட்டைப் போலவே மும்பைத் தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மும்பை மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் படி, மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜேந்திர ராஜன் மாண்புமிகு தமிழக முதல்வரு...
ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

ஜெ. அன்பழகன் – கொரோனா காலத்து வரலாற்று நாயகன்

சமூகம்
தன்னுடைய தந்தை பழக்கடை ஜெயராமனைப் போலவே சென்னை மாநகரில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குக் கிடைத்த பெரும் செயல் வீரர் மறைந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன். தென்சென்னையில் கிட்டு சிட்டாகப் பறந்து கொண்டிருந்த காலம் வரையிலும், அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர் கிட்டுவின் மரணத்திற்குப் பிறகே லைம்லைட்டுக்கு வந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தவரை ஓய்விலேயே சில வருடங்கள் இருக்கும்படி பணித்து, பின்பு, ‘மருத்துவர் சான்றிதழ் கொடுத்தால்தான் களப்பணியில் உன்னை இறக்குவேன்’ என்று பாசத்துடன் சொல்லி இவரை அரவணைத்தவர் கருணாநிதி. சென்னையில் இருக்கும் அ.தி.மு.க. செயல் வீரர்களுக்கு ஈடு கொடுக்கும்வகையில் அவர்களுடைய 'அனைத்து வகை விளையாட்டு'க்களுக்கும் எதிர் விளையாட்டை நடத்திக் காட்டி கடந்த 15 ஆண்டுகளாகச் சென்னையில் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றியவர். கருணாநிதிய...
கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

கல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி

சமூகம்
கொரோனா தொற்றுக் காரணமாக அரசு ஊரடங்கை அறிவித்த பின் அடித்தட்டு மக்கள் தான் வழக்கம் போல் இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். இருக்க இடம், பார்க்க வேலை, உண்ண உணவு என எதுவுமற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசின் கல்வித்துறை தற்போது ஆன்லைன் கல்வி மூலமாக ஏழைகளின் கல்விக்கே வேட்டு வைத்துள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் தொடர்விடுமுறை காரணமாகப் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு ஆன்லைன் வழியில் கற்றுத்தர அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் ஸ்மார்ட் ஃபோனோ, லேப்டாப் வசதியோ இல்லாத வீட்டுப்பிள்ளைகள் எப்படி கல்வி பயில இயலும்? மேலும் ஒருநாளைக்குப் பாடத்தை ஆன்லைனில் முழுதும் கவனிக்க வேண்டும் என்றால் டெய்லி டேட்டா 3 GB வரை தேவைப்படும் என்கிறார்கள். இல்லாத எளியவர்கள் எப்படி ரீசார்ஜ் செய்ய பெருந்தொகை செலவு செய்யமுடியும். மேலும் சில தன்னார்வலர்கள், சிலருக்குக் கற்றலுக்காக ஃபோன், லேப்டாப் போன்றவற்றை வழங்குகிறா...
மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

மத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

சமூகம், சினிமா
தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றைத் தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது. கொரானோ தொற்றுப் பரவலைப் பொறுத்து, சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என எல்லாத் தொழில்களையும் நடத்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதலில் மூடப்பட்ட தனித்திரையரங்குகள், மால், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்கத் தொழில் மூலம் அரசுக்கு வருவாய் தந்து வந்தது. இந்தத் தொழில் மூலம்சுமார் 50,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது. திரையரங்குகள் மூடப்பட்ட பின் 5...
“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

“சினிமாவின் அடுத்த கட்டம் ஓடிடி (OTT)” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

சமூகம், சினிமா, திரைத் துளி
திரையரங்கு உரிமையாளர்களின் கடும் அதிருப்திக்கும், கோபத்திற்கும் இடையில், "பொன்மகள் வந்தால்" படம் அமேசான் ப்ரைமில் மே 29 அன்று வெளியாகவுள்ளது. ஓடிடி என்பது சினிமாவிற்கு மாற்றா, இல்லை சினிமா என்பதே தியேட்டரில் பார்த்து மகிழும் ஓர் அனுபவம், அதற்கு எந்தப் பாதிப்பும் மாறாது என விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோதிகா தனது படத்தைப் பற்றியும், ஓடிடி பிளாட்ஃபார்ம் குறித்தும் பேசியுள்ளார். "எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்குப் பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்குப் பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொ...