Shadow

சமூகம்

விஜய் சேதுபதி | ஒரு லட்சம் குடும்பம் பலனடையக் காரணமான VVSI

விஜய் சேதுபதி | ஒரு லட்சம் குடும்பம் பலனடையக் காரணமான VVSI

சமூகம்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளாலாரின் ஒற்றை வரியை உயிர்நாதமாகக்கொண்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ’கடைசி விவசாயி’ என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் நற்காரியம் சிலிர்ப்பை ஏற்படுத்தும்வண்ணம் உள்ளது. இது லட்சம் குடும்பங்களின் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அச்செயல் இன்னும் பல்கிப் பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது? அவரது பெயர் இ.பா.வீரராகவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ஆம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸாப் குழுக்கள் மூலம் தனது சின்ன சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள...
ராமன், எத்தனை ராமனடி?

ராமன், எத்தனை ராமனடி?

ஆன்‌மிகம், சமூகம்
ஆந்திரத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று. அடுத்ததாக ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை. வியப்பு. வாத்சல்யம். எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள் என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம். ஒரு பக்கம் தெலுங்கானா பிரச்சினை. நக்சலைட் நெருப்பு. இதற்கு நடுவில் ராம பக்தி. எந்த ராமன்? தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும், நடந்தும், கிடந்தும் என வருகிற ராமன். மனித குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன். இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றிய இடம், சீதை இருந்த இடம், அனுமன் தாவிய இடம் என்று குருதிக்கோட்டுடன் வரும் தொன்மங்கள் ஊற்றெடுக்கும் ராமன். நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன். சீதையின் பிரிவுக்க...
22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

22 நொடி – 8 வயது சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை

சமூகம்
சிறு பிராயத்திலேயே உலகசாதனை படைத்துள்ளான் 8 வயது சிறுவனான ஹேம்தேவ். சென்னை வேளச்சேரி 4A, DAV பப்ளிக் பள்ளியில் படித்து வரும் சிறுவன் ஹேம்தேவ் படிப்பைப் போலவே விளையாட்டிலும் படு சுட்டி. சிறுவயதிலே உடல் சார்ந்த பயிற்சியில் அதி தீவிரமாக இயங்கி வரும் ஹேம்தேவ் 22 நொடியில் நான்கு கால் ஓட்டத்தில் 100 மீட்டர் ஓடி உலகசாதனைப் படைத்துள்ளார். இச்சிறுவனை அமைச்சர் அன்பரசன் நேரில் பாராட்டி விருதை வழங்கியுள்ளார். ஹேம்தேவ் அடைந்த இந்தப் பெருமை மிகு புகழால் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் ஹேம்தேவ் பெற்றோரான சக்திவேல் தமிழ்செல்வி. மேலும், ஹேம்தேவ் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகேயுள்ள வேதாஸ்ரீனி குங்பூ கிளாஸில் மாஸ்டர் வேதகிரி அவர்களிடம் தீவிரமாக குங்பூ கற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ...
“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

சமூகம்
தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாளன்று, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதளப் பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாகச் சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்தத் தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாதிப...
பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

சமூகம்
உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான டோஸ்ட்மாஸ்டர், 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட்மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம், கல்வியியல் துறையில் ஆக்கபூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர். உதாரணமாக்க் ...
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...
கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சமூகம், சினிமா
சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது. 97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது "பெயர்" கொண்ட பேருந்தில் ஏறமாட்டோம் என மாற்று சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் கட்டுக்கு அடங்காததாலும், பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு எட்டாததாலும், பல்லவன், கட்டபொம்மன் முதலிய போக்குவரத்துக் கழங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் என பொதுப்பெயர் இடப்பட்ட்து. படத்தின் கதை நிகழும் காலம் இதுவே! கண்ணபிரானாக வரு...
தமிழகமும் தாமரையும்

தமிழகமும் தாமரையும்

சமூகம்
தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாகக் கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் திரு.செல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராமலிங்கம், திரு.கு.க. செல்வம், திரு.ஆர்.கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், திருமதி. கண்மனி, திரு. பிரமீட் நடராஜன், திருமதி. டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்து...
“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

சமூகம், சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்த...
சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி

சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி

சமூகம்
எழும்பூரில் உள்ள பழைய கமிஷ்ணர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தப்படுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் திரு. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது. கௌரவ செயலர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, "துப்பாக்கிச் சுடுதலை கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. இந்த மாணவர் பயிற்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, துப்பாக்கிச் சுடுதல் என்பது ஒரு எட்டாக்கனி என்ற கருத்தை மாற்றத்தான். இந்த விளையாட்டை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக ஆக்குவதே இந்தப் ...
TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

சமூகம்
TNWAA – Tamil Nadu Women Achievers Awards . பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, ‘தி பிராண்ட் ரீபப்ளிக்’ எனும் நிறுவனம் விருதுகள் வழங்கிக் கெளரவித்தன. இந்நிகழ்வு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’டன் தொடங்கியது. TNWAA வின் குறிக்கோள் என்பது, ‘வாழ்த்து, ஊக்கமளி, வல்லமை கொள்ளச் செய்’ என்பதேயாகும். சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பினைத் தங்கள் துறைகளில் செய்திடும் பெண்களை அடையாளம் கண்டு கெளரவிப்பதன் மூலம், அதனால் மேலும் பல பெண்கள் ஊக்கம் பெற்று, தத்தம் துறைகளில் வல்லமையோடு முன்னேறுவார்கள். இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள பெண்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் டிஜிட்டல் செயற்பாட்டுத்தளமாக TNWAA விளங்குமென ‘தி பிராண்ட் ரீப்ப்ளிக்’கின் இயக்குநர் ஆதித்யா அறிவித்தார். வெவ்வேறு துறையினைச் சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 1. Woman in Social Services - Dr. Renuka Ramakrish...
‘பெண்’ – குறும்படப் பாடல்

‘பெண்’ – குறும்படப் பாடல்

சமூகம், சினிமா
பெண்கள் தினத்தை முன்னிட்டு "பெண்" என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது. வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி 2, திமிரு புடிச்சவன், கொலைகாரன், களவாணி 2, கபடதாரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.  தனது நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அருண்பாரதி, "பாடலுக்குப் பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாகப் பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன். தொடர்ந்து சமூகத்திற்குப் பயன்படும் நல்ல படைப்புகளைக் கொடுப்பது என் கடமை" என்று கூறினார். இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க, P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்....
ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்

சமூகம்
எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை விருட்சங்கள் எல்லாம் நிழல் தருவதில்லை... எங்களின் போதி மரமே! உங்களை வணங்குகிறேன்...வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி!வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்...மக்களால் நான்; மக்களுக்காகவே நான்... வெறும் வார்த்தையல்ல, வாழ்க்கை!"இதய தெய்வம்" உதடுகளின் வார்த்தையல்ல உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று!எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனம்; எளியோர்கள் அமரும் அரியாசனம்.கோபுரங்களைக் காட்டிலும் குடிசைகளை விரும்பியவர் நீங்கள். ஆதலால் தான் அனைவருக்கும் என்றென்றும் நீங்களே இதய தெய்வம்!மகமே! எங்கள் ஜெகமே!! உங்களை நினைக்காத நாளில்லை... மறந்தால் நாங்கள் நாங்களில்லை...நீங்கள் ஆள வேண்டுமென சொன்னதைக் காட்டிலும் இன்னமும் நீங்கள் வாழ வேண்டுமென நாங்கள் சொல்லியிருக்க வே...
“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

“ஆதலால் காதல் செய்வீர்!” அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி மந்திராலோசனை

சமூகம், மற்றவை
உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் தினங்களில் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில், நாட்களில், மணித்திலாயங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல். ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் புதுமலராய் பூத்தவண்ணம் இருக்கிறது. இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்களும் இளைஞர்களும் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நம் தமிழக அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்குப் புதிய அடையாளம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். தன் பேரனைத் தோளில் சுமந்து, "ஹாப்பி வேலண்டைன்ஸ் டே" என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்தப் படம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், "பிப்ரவரி 14 என்பதைப் பலரும் காதலர்களுக்கு மட்டுமே சொந்தமானது அப்படின்னு நினைச...
சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!

சென்றார்கள்! வென்றார்கள்! வந்தார்கள்!

சமூகம்
ஏறக்குறைய ஆசஷ் தொடருக்கு இணையாகப் புகழ் பெற்ற தொடர்தான் பார்டர் கவாஸ்கர் டிராஃபியும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே இருக்கும் மிகப் பெரிய வரலாறோ, சில வலிகளோ, கோபங்களோ இல்லாவிடினும், 90களின் மத்தியில் இருந்து இந்திய அணி பெற்று வந்த எழுச்சியும், மிக வலுவான அணியாக இருந்த ஆஸிக்கு, 2000 க்குப் பின்பு நெருக்கடியைக் கொடுக்கும் முக்கிய அணியாக இந்தியா மாறியதும், இந்தக் கோப்பைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது. தவிர, அதே சமயத்தில்தான் இந்தியாவுடனான போட்டியில் எப்போதும் சுவாரசியத்தைக் கொடுக்கும் பாகிஸ்தான் அணியின் திறமையும் மங்க ஆரம்பித்ததால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக ஆஸி உடனான போட்டிகள் வந்து நின்றது. சாம்பியனை வீழ்த்தினால், எப்போதும் கூடுதல் சந்தோஷம் அல்லவா? இந்த முறை, பார்டர் காவஸ்கர் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்பு, இரு அணிகளும் 3 வெற்றிகளைப...